என் மலர்
கார்
- ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் கியா செல்டோஸ், கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் தனது புதிய எஸ்யுவி மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு இருந்தது. புதிய எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில் ஹோண்டா மீண்டும் களமிறங்குவது பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகின்றன.
தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை மட்டும் 50 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. ஹோண்டா நிறுவனத்தின் WRV மாடலின் விற்பனை இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட இருக்கிறது.

முன்னதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் CRV மற்றும் BRV மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா தற்போது இரண்டு புதிய எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை அமேஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
புதிய சப்-காம்பேக்ட் யுவி மாடல் PF-2 என்றும் மற்றொரு காம்பேக்ட் யுவி மாடல் PF2S என்றும் குறியீட்டு பெயர்களை கொண்டுள்ளன. சிறிய காரில் அமேஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இரு கார்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஹோண்டா எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களில் உள்ள எஸ்யுவி மாடலில் மல்டி-ஸ்போக் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், முன்புறம் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய எஸ்யுவி-இல் மெஷ்-டைப் லோயர் கிரில், சன்ரூஃப் இடம்பெற்று இருக்கிறது.
Photo Courtesy: AutoCarIndia
- சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் புதிய சிட்ரோயன் eC3 விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் டாப் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய சிட்ரோயன் eC3 கார் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் பிரீமியம் ஹேச்பேக் C3 மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் டாடா டியாகோ EV மாடல் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிட்ரோயன் C3 பெட்ரோல் வெர்ஷன் விலை இந்தியாவில் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி, அதிகபட்சம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்து. அதன்படி இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விலை ரூ. 4 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை மாற்றியமைக்கிறது.
- எம்ஜி கார்களின் புதிய விலை எப்போது மாற்றப்பட வேண்டும் என்ற தகவல் விற்பனை மையங்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆண்டு துவக்கத்தில் தங்களின் வாகன விலையை உயர்த்துவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகனங்கள் விலையை உயர்த்தின. தற்போது கடுமையான RDE விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், இந்தியாவில் மீண்டும் வாகனங்கள் விலை உயரும் சூழல் உருவாகி இருக்கிறது.
ஜனவரி மாத விலை உயர்வை அடுத்து எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது. அதன்படி இந்தியாவில் எம்ஜி கார்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. புதிய விலை ஏற்கனவே கார்களை முன்பதிவு செய்தவர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

விலை உயர்வின் படி எம்ஜி ஹெக்டார் மாடல் தற்போது ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்கிறது. இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்த எஸ்யுவி வாகனங்கள் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு டீசல் மாடல் ஆகும். ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் எம்ஜி மோட்டார் நிறுவனம் 2023 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்தது.
எம்ஜி குளோஸ்டர் மாடல் விலை ரூ. 60 ஆயிரமும், எம்ஜி ஆஸ்டர் மாடல் விலை ரூ. 30 ஆயிரமும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எம்ஜி ZS EV மாடலின் விலை ரூ. 40 ஆயிரம் உயர்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே எம்ஜி கார்களின் புதிய விலை இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய சியாஸ் மாடல் ESP மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் வசதிகளை கொண்டுள்ளது.
- மாருதி சியாஸ் மாடல் மூன்று டூயல் டோன் நிறங்கள், மேனுவல், ஆட்டோமேடிக் வெர்ஷன்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது சியாஸ் செடான் மாடலின் டூயல் டோன் வெர்ஷன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சியாஸ் விலை ரூ. 11 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய நிறங்கள் மட்டுமின்றி சியாஸ் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மாருதி சுசுகி சியாஸ் மாடலை வாங்குவோர் தற்போது மூன்று டூயல் டோன் நிற ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். இவைதவிர மாருதி சியாஸ் மாடல் ஏழு மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில்- பியல் மெட்டாலிக் ஒபுலண்ட் ரெட் மற்றும் பிளாக் ரூஃப், பியல் மெட்டாலிக் கிராண்டியர்கிரே மற்றும் பிளாக் ரூஃப், டிக்னிட்டி பிரவுன் மற்றும் பிளாக் ரூஃப் உள்ளிட்டவை அடங்கும்.

அம்சங்களை பொருத்தவரை மேம்பட்ட சியாஸ் மாடலில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம் (ESP) உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி சியாஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் முறையே லிட்டருக்கு 20.46 கிலோமீட்டர் மற்றும் 20.04 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறைகிறது.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் GLS மற்றும் AMG G63 மாடல்களுக்கு அதிக மாதங்கள் காத்திருப்பு காலம் இருந்து வந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரு டாப் எண்ட் மாடல்களின் முன்பதிவு துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. இரு கார்களின் உற்பத்தி கூடுதலாக அதிகரிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் வாரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்கள் மட்டும் பிரத்யேகமாக கார்களை முன்பதிவு செய்ய முடியும். அதன் பின் மற்ற வாடிக்கையாளர்கள் புதிய பென்ஸ் கார்களை வாங்க முன்பதிவு செய்யலாம்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் CBU மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 உள்ளிட்டவைகளுக்கு அதிக யூனிட்கள் ஒதுக்கீடு மற்றும் வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் டாப் எண்ட் மாடல்களாக AMG E53 கேப்ரியோலெட், மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63, மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS, மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மேபேக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS EV உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்த பிரிவில் 69 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது. கடந்த ஆண்டு அதிக வளர்ச்சியை பதிவு செய்த இந்த பிரிவில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டும் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முழுக்க மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்யும் கார்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த பிரிவை சேர்ந்தவைகளாக இருக்கும்.
ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப இந்த வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் ஆறில் இருந்து அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறையும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 மாடலுக்கான காத்திருப்பு காலம் 24 முதல் 36 மாதங்களில் இருந்து 12 முதல் 16 மாதங்களாக குறைந்து இருக்கிறது. இதே போன்று மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 காரின் ஒற்றை நிற வேரியணட்டுக்கான காத்திருப்பு காலம் எட்டு மாதங்களாகவும், டூயல் டோன் வேரியண்டிற்கு எட்டு முதல் பத்து மாதங்களாகவும் குறைந்து இருக்கிறது.
"பல மாதங்களாக இந்த வாகனங்களுக்காக காத்திருக்கும் எங்களின் வாடிக்கையாளர்களுக்காக முன்பதிவை மீண்டும் பிரத்யேகமாக துவங்குகிறது. இது போன்ற டாப் எண்ட் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் குளோபல் தொகுப்பில் இருந்து புதிய மாடல்களை இந்த பிரிவில் தொடர்ந்து அறிமுகம் செய்வோம்." என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ சந்தோஷ் ஐயர் தெரிவித்தார்.
- ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
- புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலின் விலை ரூ. 51 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் டெக்னாலஜி + S லைன் என அழைக்கப்படுகிறது.
டிசைனை பொருத்தவரை புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் கூப் ரூஃப்லைன், ஐந்து ஸ்போக்குகள் கொண்ட 18 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹை-கிலாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், எல்இடி டெயில் லைட்கள், S-லைன் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டர்போ புளூ, கிளேசியர் வைட், க்ரோனோஸ் கிரே, மிதோஸ் பிளாக் மற்றும் நவரா புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இண்டீரியர்கள் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், நான்கு வித லம்பர் சப்போர்ட், ஆடி டிரைவ் செலக்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட், குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று ஸ்போக் வீல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆறு ஏர்பேக், TPMS, பார்கிங் ஏய்ட் பிளஸ் ரியர் வியூ கேமரா, ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆடிடோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுடன் ஐந்து ஆண்டுகளுக்கு RSA சர்வீஸ், 2+3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறுகிய காலக்கட்டத்திற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.
- புதிய மஹிந்திரா XUV400 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி, XUV400 மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. மேலும் இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி துவங்கியது. குடியரசு தின வார இறுதி வரையிலான காலக்கட்டத்திற்குள் புதிய எலெக்ட்ரிக் காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், அறிமுகமான 13 நாட்களில் புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார்களை வினியோகம் செய்ய அதிகபட்சம் ஏழு மாதங்கள் வரை ஆகும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.

புதிய மஹிந்திரா XUV400 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் EL வேரியண்ட் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் XUV400 EC வேரியண்ட் வினியோகம் துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் 34.5 கிலோவாட் ஹவர் மற்றும் 39.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 மற்றும் 456 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.
இத்துடன் 3.3 கிலோவாட் மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இதன் 39.4 கிலோவாட் ஹவர் வேரியண்டிற்கு 7.2 கிலோவாட் சார்ஜர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் டாடா நெக்சான் EV, எம்ஜி ZS EV, ஹூண்டாய் கோனா மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரு கார்களின் விலையை மாற்றி இருக்கிறது.
- டியாகோ EV அனைத்து வேரியண்ட்களுக்கும் புதிய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களுக்கு பொருந்தும். இந்த முறை நெக்சான் விலை ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக நெக்சான் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருக்கிறது.
விலை உயர்வின் படி டாடா நெக்சான் புதிய விலை ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 95 ஆயிரம் என மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மொத்தத்தில் 25-க்கும் அதிக வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த முறை நெக்சான் மாடல் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

நெக்சான் மாடலை தொடர்ந்து டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வின் படி டாடா டியாகோ EV விலை தற்போது ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.
டியாகோ EV புதிய விலை விவரங்கள்:
டாடா டியாகோ EV XE 19.2kWh 3.3KW AC ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம்
டாடா டியாகோ EV XT 19.2kWh 3.3KW AC ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம்
டாடா டியாகோ EV XT 24kWh 3.3KW AC ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம்
டாடா டியாகோ EV XZ+ 24kWh 3.3KW AC ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம்
டாடா டியாகோ EV XZ+ Tech Lux 24kWh 3.3KW AC ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம்
டாடா டியாகோ EV XZ+ 24kWh 7.2KW AC ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம்
டாடா டியாகோ EV XZ+ Tech Lux 24kWh 7.2KW AC ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ EV மாடல் அறிமுக சலுகையாக ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 79 ஆயிரம் ஆகும். இது இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
- ஜீப் நிறுவனத்தின் புதிய கிளப் எடிஷன் கார் அதன் பேஸ் வேரியண்டை விட குறைந்த விலை கொண்டிருக்கிறது.
- கிளப் எடிஷன் காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எஸ்யுவி காம்பஸ் மாடலின் புதிய கிளப் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் மெரிடியன் காரின் கிளப் எடிஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு எஸ்யுவி மாடல்களும் அதன் எண்ட்ரி லெவல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
இவை குறைந்த எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது காம்பஸ் ஸ்போர்ட் டீசல் மேனுவல் வேரியண்டை விட ரூ. 10 ஆயிரம் விலை குறைவு ஆகும். எனினும், இதன் என்ஜின் அம்சங்கள் மற்றும் டியூனிங்கில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
காஸ்மடிக் மாற்றங்களை பொருத்தவரை டூயல் டோன் ரூஃப், பொனெட்டில் புதிய கிராஃபிக், டெயில்கேட்டில் "Club Edition" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ரிஃப்லெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, பார்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டில் உள்ள அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய வெர்னா மாடல் பெட்ரோல் என்ஜின், ADAS தொழில்நுட்பம், டூயல் ஸ்கிரீன் செட்டப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலின் உற்பத்தி பணிகள் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியில் பெரும்பாலான யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் வெர்னா யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது. இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1600 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை பொருத்தவரை ஹூண்டாய் நிறுவனம் ஆண்டிற்கு 70 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான யூனிட்கள் ஏற்றுமதிக்காகவே பயன்படுத்தப்படும். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக உதிரிபாகங்கள் இல்லாததால், கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆலையில் வெர்னா மாடல் உற்பத்தியை ஹூண்டாய் நிறுத்தியது. தற்போதைய வெர்னா மாடல் ரஷ்ய ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
எனினும், அடுத்த தலைமுறை வெர்னா மாடலின் உற்பத்தியை இந்திய ஆலைகளுக்கு மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு புதிய தலைமுறை வெர்னா மாடல் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களில் புதிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
- மாருதி கார்களில் தற்போது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக இருக்கும் மாருதி சுசுகி, தனது பலேனோ, XL6 மற்றும் எர்டிகா கார் மாடல்களை அப்டேட் செய்து கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்கி இருக்கிறது. புதிய மாடல்கள் அனைத்திலும் தற்போது ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் புதிய கார்களில் ஸ்பீடோமீட்டர் எம்ஐடி-யில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பலேனோ வாடிக்கையாளர்களுக்கு ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கூடுதலாக XL6 மற்றும் எர்டிகா மாடல்களில் சரவுண்ட் சவுண்ட் அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் புதிய கனெக்டிவிட்டி அம்சங்களை ஒவர்-தி-ஏர் அப்டேட் முறையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன் அல்லது மாருதி சுசுகி வலைதளம் மூலம் அப்டேட் செய்து கொள்ளலாம்.
சமீபத்தில் மாருதி சுசுகி தனது 40 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வமகையில் பிளாக் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் பியல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
- ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் புதிய Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது.
- சர்வதேச சந்தையில் Q3 ஸ்போர்ட்பேக் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஆடி Q3 விலை ரூ. 44 லட்சத்து 90 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 50 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிது.
புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடல் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 எஸ்யுவி-யை விட புதிய Q3 ஸ்போர்ட்பேக் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புது ஸ்போர்ட்பேக் மாடலில் ஹனி-காம்ப் கிரில், பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

இத்துடன் அலாய் வீல்கள், காரின் பின்புறம் டுவீக் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய Q3 ஸ்போர்ட்பேக் டிசைன் மற்றும் ஸ்டைலிங் அதிக கவனமுடன் உருாக்கப்பட்டு இருப்பது அதன் தோற்றத்திலேயே அறிந்து கொள்ள முடிகிறது. காரின் கேபின் பகுதியில் Q3 ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்ற தோற்றம், ஸ்போர்ட் அக்செண்ட்கள் உள்ளன.
இத்துடன் ஆடியின் டிஜிட்டல் காக்பிட், 8.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்டம், MMI நேவிகேஷன், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஆடி ஸ்மார்ட்போன் இண்டர்ஃபேஸ், ஆடி சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இந்தியாவில் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 45 TFSI வெர்ஷன் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 241 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 233 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.






