என் மலர்tooltip icon

    கார்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் 7 சீட்டர் வெர்ஷனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Tatamotors #harrier



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் 7 சீட்டர் காரை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியானது. எனினும், சமீபத்திய தகவலை டாடா பிராண்டு தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மூலம் வெளியாகியிருக்கிறது.

    இதுவரை 7 சீட்டர் டாடா H7X பற்றி அதிகப்படியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் லேண்ட் ரோவரின் டி8 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கும் என தெரிகிறது. 

    புதிய டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.



    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    எஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிசான் கிக்ஸ் காரின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Nissan #Car
    நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் நிசான் நிறுவனத்தின் டெரானோ காருக்கு மாற்றாக அமையவிருக்கிறது. இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி.க்கான முன்புதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் நிசான் கிக்ஸ் முன்பதிவு கட்டணம் ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.


    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய நிசான் கிக்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Nissan #Car
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் நிலையில், புதிய கார் விற்பனையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. #tatamotors #harrier



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எஸ்.யு.வி. கார் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது.

    டாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEGARC பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.



    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    எஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய எர்டிகா கார் மாடல் இந்தியாவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #MarutiSuzuki



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய எர்டிகா கார் மாடலை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.7.44 லட்சம் விலையில் அறிமுகமான புதிய எர்டிகா கார் இந்தியாவில் ஒரே வாரத்தில் 10,000 முன்பதிவுகளும் முதல் மாதத்தில் மட்டும் சுமார் 23,000-க்கும் அதிக முன்பதிவுகளை பெற்றது.

    அந்த வகையில் புதிய எர்டிகா கார் தற்சமயம் முன்பதிவு செய்வோர் காரை பெற அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு காத்திருக்க வேண்டும் என தெரிகிறது. புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா முந்தைய மாடல்களைவிட நீளமாகவும், அகலமாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது.
     
    முற்றிலும் புதிய வடிவமைப்புடன், முந்தைய மாடல்களை விட அதிக உபகரணங்களை கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிரில் டிசைன், ஸ்போர்ட் பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்களும், பக்கவாட்டில் 16-இன்ச் அலாய் வீல்கள், ஸ்விஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே கோடுகள் இடம்பெற்றிருக்கிறது.



    புதிய மாருதி எர்டிகா மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்கள்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. புதிய பெட்ரோல் என்ஜின் 1.3 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய எர்டிகா எம்.பி.வி. மாடல் புதிய பியல் மெட்டாலிக் ஆபன் ரெட், மெட்டாலிக் மேக்மா கிரே, பியல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு புளு, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் மெட்டாலிக் சில்க்கி கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன வாகன விற்பனை டிசம்பர் 2018 இல் மட்டும் சுமார் 10% அதிகரித்துள்ளது. #toyota



    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை டிசம்பர் மாதத்தில் மட்டும் 10% வரை அதிகரித்துள்ளது. 2018 டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 11,830 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

    இதுதவிர 653 யூனிட்கள் எடியோஸ் சீரிஸ் கார்களை டொயோட்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா மொத்தம் 12,483 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    டிசம்பர் 2017 ஆம் ஆண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மொத்தம் 10,793 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இத்துடன் 812 எடியோஸ் சீரிஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 



    2016 ஆம் ஆண்டு டொயோட்டா அறிமுகம் செய்த இன்னோவா க்ரிஸ்டா கார் கணிசமான விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இந்திய சந்தையில் இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. 

    இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன இணை நிர்வாக இயக்குனர் என். ராஜா கூறும் போது,

    "ஆண்டு இறுதியில் அதிகளவு விற்பனையை பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஐ.எம்.வி. ரக கார்களில் அதிகளவு விற்பனையை டொயோட்டா பதிவு செய்திருக்கிறது. டொயோட்டா வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி." 

    என்று கூறினார். 
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. #MahindraXUV300 #ElectricVehicle



    மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாட்டின் முதல் எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலை தழுவி உருவாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. 300 அறிமுகம் செய்யப்படலாம். 

    வடிவமைப்பு ரீதியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 அதன் எலெக்ட்ரிக் வேரியன்ட் உடன் ஒற்றுப் போகும் படி காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காருக்கான பேட்டரிகளை மஹிந்திரா நிறுவனம் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது.



    இதற்கென மஹிந்திரா நிறுவனம் எல்.ஜி. செம் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. எல்.ஜி. செம் நிறுவனம் இந்தியாவில் பயன்படுத்த ஏதுவாக பேட்டரி செல்களை விநியோகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. மாடல் நீண்ட தூரம் மற்றும் குறைந்த தூரம் என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சிறப்பம்சங்கள் மற்றும் உபகரணங்களும் எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. மற்றும் வழக்கமான எக்ஸ்.யு.வி. 300 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். மேலும் இந்த காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் / கேமரா, சன்ரூஃப், ஏழு ஏர்பேக் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம். 
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #MarutiSuzuki #WagonR



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய வேகன் ஆர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் புதிய வேகன் ஆர் காரின் விற்பனை ஜனவரி 23 ஆம் தேதி துவங்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் புதிய கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    ஸ்பை படங்களின் படி புதிய கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும் வேகன் ஆர் காரின் பாரம்பரிய டால்பாய் ஃபிரேம் மாற்றப்படாமல் உள்ளது. புதிய காரில் ராப்-அரவுண்டு ஹெட்லேம்ப்கள், லைசிங் விண்டோ-லைன், ஃபுளோட்டிங் ரூஃப், பெரிய வீல் ஆர்ச்கள் மற்றும் செங்குத்தான டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    புதிய வேகன் ஆர் உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: GaadiWaadi

    புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #WagonR
    ஹூன்டாய் நிறுவனத்தின் i20 பிரீமியிம் ஹேட்ச்பேக் மாடல் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Hyundai #Car



    இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களில் ஹூன்டாய் i20 நிலையான விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூன்டாய் i20 இன்றும் கணிசமான விற்பனையை பெற்று வருகிறது. 

    இந்தியாவில் மட்டும் ஹூன்டாய் i20 ஹேட்ச்பேக் 8.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. அந்த வகையில் சர்வதேச சந்தையில் ஹூன்டாய் i20 இதுவரை சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் இருவித வடிவமைப்புகளில் கிடைக்கும் ஹூன்டாய் i20 இரு கதவுகள் மற்றும் நான்கு கதவுகள் கொண்ட வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நான்கு கதவுகள் கொண்ட வேரியன்ட் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கதவுகள் கொண்ட ஹூன்டாய் i20 குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.



    2008 ஆம் ஆண்டில் முதல் தலைமுறை ஹூன்டாய் i20 வெளியான நிலையில், இரண்டாவது தலைமுறை மாடல் 2014 ஆம் ஆண்டு அறிமுகமானது. ஹூன்டாய் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 ஹேட்ச்பேக் மாடலை இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹூன்டாய் i20 மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்-பில்ட் நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. டீசல் மற்றும் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் ஹூன்டாய் i20 விற்பனை செய்யப்படுகிறது.
    இந்தியாவில் மாருதி சுசுகி புதிய வேகன் ஆர் மாடலின் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #WagonR



    மாருதி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய வேகன் ஆர் மாடல் 2019, ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய வேகன் ஆர் மாடல் எர்டிகா மாடலின் கீழ் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் குறித்து மாருதி சுசுகி எவ்வித தகவலும் வழங்காத நிலையில், புதிய வேகன் ஆர் மாடலில் ஏழு பேர் வரை அமரக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    இந்திய சோதனையின் போது எடுக்கப்பட்ட படங்களில் காரின் விவரங்கள் வெளியானது. அதன்படி புதிய தலைமுறை சுசுகி சோலியோ ஏற்கனவே ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.

    காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது. சோலியோ மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.



    அதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது. 

    புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #WagonR
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலான ஹேரியர் காரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #TataHarrier #Car



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை ஜனவரி 23 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஐந்து பேர் அமரக்கூடிய டாடா ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடாலாக இருக்கிறது.

    டாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEGARC பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

    டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் என்ஜின் வழங்கப்படுகிறுது. இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த என்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.



    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இது இருக்கும் என தெரிகிறது.

    எஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ.16 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.21 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ-க்கு ரூ.99 லட்சம் டாலர்களை அபராதமாக விதிக்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது. #BMW



    தென்கொரியாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சுமார் 40 கார்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்த ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த கார்களில் கோளாறு இருந்து வந்தது.

    இது தொடர்பாக தென்கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. ஆய்வில் காரில் உள்ள இ.ஜி.ஆர். எனும் பாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனங்களில் தீபிடித்து எரிந்ததும், பிரச்சனையை மூடி மறைக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் முயற்சித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


    பி.எம்.டபுள்யூ. கார்களின் இ.ஜி.ஆர். (எக்சாஸ்ட் கியாஸ் ரீசர்குலேஷன்) பாகத்தில் கண்டறியப்பட்ட கோளாறு, கார் தொடர்ச்சியாக அதிவேகத்தில் இயக்கப்படும் போது, தீப்பிடிக்க காரணமாக அமைந்தது.

    கார்களில் ஏற்பட்ட கோளாறை விரைந்து சரி செய்யாத காரணத்தால் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்திற்கு சுமார் ரூ.99 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக பி.எம்.டபுள்யூ. கொரியாவின் அதிகாரி கூறியதாவது:-

    போக்குவரத்து அமைச்சகம் தங்கள் நிறுவனம் மீது நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றும் இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.  #BMW
    இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. கார்களின் விநியோகம் துவங்கியது. #Tatamotors #Cars
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. கார்களின் விநியோகம் துவங்கியது.

    இந்தியாவில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. கார் மாடல்களின் விலை முறையே ரூ.6.39 லட்சம் மற்றும் ரூ.7.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஜெ.டி.பி. என்பது ஜெயம் டாடா பெர்ஃபார்மன்ஸ் என்ற விரிவாக்கம் கொண்டுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் மற்றும் கோயமுத்தூரை சென்ற ஜெயம் ஆட்டோமேட்டிவ்ஸ் நிறுவனங்கள் இணைந்து புதிய கார் மாடல்களை வெளியிட்டுள்ளன. இந்த கார் மாடல்கள் ஜெயம் டாட்டா ஸ்பெஷல் வெயிகில்ஸ் (JTSV - Jayem Tata Special Vehicles) என அழைக்கப்படுகிறது.

    புதிய டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்கள் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வடிவமைப்பை பொருத்த வரை காரின் முன்பக்கம் அதிரடி தோற்றம் கொண்ட பம்ப்பர், டூயல்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பொனேட்டில் ஏர் ஸ்கூப் மற்றும் முன்பக்க கிரிலின் மீது ஜெ.டி.பி. பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இரு ஜெ.டி.பி. மாடல்களிலும் 15-இன்ச் டைமன்ட் கட் டூயல்-டோன் அலாய் வீல்கள், முன்பக்க ஃபென்டர் வென்ட்கள், சைடு ஸ்கர்ட்களில் ஜெ.டி.பி. பேட்ஜ் கொண்டிருக்கிறது.


    காரின் பின்புறம் கிளாஸ் பிளாக் ஸ்பாயிலர், எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர், டுவின் பேரெல் எக்சாஸ்ட் மற்றும் ஜெ.டி.பி. பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப் கொண்டிருப்பதோடு காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க ஸ்டான்டர்டு மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

    உள்புறத்தில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் முழுமையான பிளாக் தீம், சிவப்பு நிற அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. சீட்களிலும் ஸ்போர்ட் ஹெக்சாகோனல் கிராஃபிக்ஸ் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. காரின் ஸ்போர்ட் தன்மையை அதிகப்படுத்த உள்புறத்தில் மெஷின்டு அலுமினியம் பெடல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கேபினில் கனெக்ட்நெக்ஸ்ட் (ConnectNext) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, 8-ஸ்பீக்கர் ஹார்மன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் 1.2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 112 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. #Tatamotors #Cars
    ×