என் மலர்
கார்
ரெனால்ட் நிறுவனத்தின் வாகனங்களில் விரைவில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Renault #AppleCarPlay #Android Auto
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் என்ட்ரி-லெவல் மாடல்களிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. மாருதி சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த 2019 வேகன் ஆர் மாடலில் புதிதாக ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதோபோன்று ஹூன்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 2018 சான்ட்ரோ மாடலில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டது. இவற்றில் ஸ்மா்ட்போன் கனெக்டிவிட்டி அம்சம் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் ரெனால்ட் நிறுவனமும் தனது வாகனங்களில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை வழங்க இருப்பதாக கார்அன்ட்பைக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் க்விட் மாடலில் துவங்கி அனைத்து கார்களிலும் புதிதாக கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதுதவிர 2019 ரெனால்ட் கார்களில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. ரெனால்ட் டாப் எண்ட் மாடல்களில் புதிய வசதிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் அப்டேட் செய்யப்படும் என கூறப்படுகிறது.
தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் வசதி கொண்ட முதல் என்ட்ரி-லெவல் மாடலாக ரெனால்ட் க்விட் இருந்தது. எனினும் இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படாமல் 7-இன்ச் தொடுதிரை, ப்ளூடூத், யு.எஸ்.பி. மற்றும் ஆக்ஸ் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டிருக்கிறது.
ரெனால்ட் மாடலில் புதிய வசதிகள் வழங்கப்படுவதால் காரின் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் க்விட், டஸ்டர், கேப்டுர் மற்றும் லாட்ஜி உள்ளிட்ட கார்களின் டாப்-எண்ட் மாடல்களில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #TataMotors #Car
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது அடுத்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலின் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
டாடா 45X கான்செப்ட் மாடலை தழுவி உருவாகியிருக்கும் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் மயான்க் பரீக் தெரிவித்தார்.
ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்த X451 கார் தான் எங்களது அடுத்த அறிமுகமாக இருக்கும். ஹேரியர் மற்றும் X451 கார்கள் இந்த ஆண்டு அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அந்த வகையில் ஏற்கனவே ஹேரியர் காரை அறிமுகம் செய்துவிட்டோம். அடுத்த ஆறு மாதங்களில் மற்றொரு புதிய காரை அறிமுகம் செய்வோம் என அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் டாடாவின் புதிய ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். டாடாவின் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் மாருதி பலேனோ, ஹோன்டா ஜாஸ், ஹூன்டாய் i20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா 45X கார் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி டாடா 45X மாடலின் இன்ஸ்ருமென்ட் கிளஸ்டரில் அனலாக் டையல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ஏ.சி. வென்ட்கள் டேஷ்போர்டின் இருபுறம் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது.
இதன் சென்டர் கன்சோலில் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் மற்றும் டேஷ்போர்டு முழுக்க கருப்பு நிற தீம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் டாடா 45X மாடல் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இம்பேக்ட் டிசைன் 2.0-வை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஸ்போர்ட் தோற்றத்தில் பெரிய சக்கரங்கள் மற்றும் வீல் ஆர்ச்களை கொண்டிருக்கிறது. #TataMotors #Car
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைந்த நானோ காரின் விற்பனை 2020 ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. #Tatamotors #nano
உலகின் விலை குறைந்த கார் மாடலாக டாடா நானோ அறிமுகமானது. இந்தியாவில் பத்து ஆண்டுகளாக விற்பனையாகி வரும் டாடா நானோ விற்பனை விரைவில் நிறுத்தப்படுகிறது.
நானோ காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு பெரும் முதலீடு தேவைப்படும் என்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நான்கு அல்லது ஐந்து கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக நானோ கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் நானோ வெறும் ரூ.1 லட்சம் விலையில் உலகின் விலை குறைந்த கார் மாடலாக இருந்தது.

பின் பொறியாளர்களின் கடும் முயற்சியில் உருவான டாடா நானோ உலகின் விலை குறைந்த கார் என்ற பெருமையை பெற்றது. எனினும், காரின் பாதுகாப்பு குறித்து அதிகளவு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில நானோ கார்களின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. துவக்கத்தில் நானோ கார் மாதம் வெறும் 100 யூனிட்களே விற்பனையானது.
இதுகுறித்து டாடா செய்தி தொடர்பாளர் கூறும் போது, அடுத்த ஆண்டு முதல் நானோ கார் பாதுகாப்பு விதிமுறைகள் எதிர்கொள்ள இருப்பதால் இதன் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்தார். #Tatamotors #nano
நானோ காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு பெரும் முதலீடு தேவைப்படும் என்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நான்கு அல்லது ஐந்து கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக நானோ கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் நானோ வெறும் ரூ.1 லட்சம் விலையில் உலகின் விலை குறைந்த கார் மாடலாக இருந்தது.

டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடாவின் முயற்சியால் நானோ கார் உருவானது. இந்தியாவில் பெரும்பாலானோர் வாங்கும் படி பட்ஜெட் விலையிலான கார் ஒன்றை வெளியிட அவர் விரும்பினார். இந்தியாவில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அவற்றுக்கு மாற்றாக புதிய நானோ காரை வாங்குவர் என ரத்தன் டாடா நம்பினார்.
பின் பொறியாளர்களின் கடும் முயற்சியில் உருவான டாடா நானோ உலகின் விலை குறைந்த கார் என்ற பெருமையை பெற்றது. எனினும், காரின் பாதுகாப்பு குறித்து அதிகளவு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில நானோ கார்களின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. துவக்கத்தில் நானோ கார் மாதம் வெறும் 100 யூனிட்களே விற்பனையானது.
இதுகுறித்து டாடா செய்தி தொடர்பாளர் கூறும் போது, அடுத்த ஆண்டு முதல் நானோ கார் பாதுகாப்பு விதிமுறைகள் எதிர்கொள்ள இருப்பதால் இதன் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்தார். #Tatamotors #nano
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 45X பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #TataMotors #Car
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை டாடா நிறுவனம் தனது புத்தம் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் (டாடா 45X) மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
டாடா 45X கான்செப்ட் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹேரியர் கான்செப்ட் காருடன் அறிமுகமானது. சமீபத்தில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் புதிய ஹேரியர் எஸ்.யு.வி. காரின் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டாடா 45X பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால் டாடா 45X கார் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

டாடா 45X மாடலின் இன்ஸ்ருமென்ட் கிளஸ்டரில் அனலாக் டையல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ஏ.சி. வென்ட்கள் டேஷ்போர்டின் இருபுறம் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது. இதன் சென்டர் கன்சோலில் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் மற்றும் டேஷ்போர்டு முழுக்க கருப்பு நிற தீம் செய்யப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் டாடா 45X மாடல் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இம்பேக்ட் டிசைன் 2.0-வை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஸ்போர்ட் தோற்றத்தில் பெரிய சக்கரங்கள் மற்றும் வீல் ஆர்ச்களை கொண்டிருக்கும்.
டாடா கான்செப்ட் ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின்களில் நெக்சனை விட சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேரியர் கார் அறிமுகமானது. #TataHarrier
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் கார் இந்தியாவில் அறிமுகமானது. புதிய ஹேரியர் காரின் XE வேரியன்ட் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா ஹேரியர் கார் டாடாவின் OMEGA பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த பிரிவில் வெளியாகி இருக்கும் பெரிய கார்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாக்கயிருக்கும் டாடா நிறுவனத்தின் முதல் கார் டாடா ஹேரியர் ஆகும்.
காரின் முன்புற லைட்டிங் பிரத்யேகமாக காட்சியளிக்கிறது. எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் கார் பொனெட்டின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் பம்ப்பர் அருகில் பொருத்தப்பட்டுள்ளது. ஹேரியர் காரில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று 17-இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் எளிய டெயில்-லேம்ப் வடிவமைப்புடன் ஹேரியர் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது மிக அழகாக காட்சியளிக்கிறது. காரின் உள்புறம் லெதர், அலுமினியம், கிளாஸ் பிளாக் பேனல்கள் மற்றும் மரத்தாலான பாகங்களை கொண்டு உருவாகியிருக்கிறது. இதில் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் ரேப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.
டாடா ஹேரியர் கார் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் ஜீப் காம்பஸ் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடலான XZ விலை ரூ.16.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. #NissanKicks
நசான் இந்தியா நிறுவனம் இந்தி்யாவில் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. கார் விலை ரூ.9.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளது.
இந்தியாவில் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் முன்பதிவு செய்ய ரூ.25,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. இந்தியாவில் XL, XV, XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் பிளஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் XV பிரீமியம் பிளஸ் வேரியன்ட் விலை ரூ.14.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் விற்பனை செய்யப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. இந்தியாவில் பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கின்றது. புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. கார் நிசான்-ரெனால்ட் பி0 ஃபிளாட்பாமில் உருவாகி இருக்கிறது.

புதிய நிசான் கிக்ஸ் நான்கு வேரியன்ட்களிலும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டோ டோர் லாக் / அன்லாக், பின்புற கேமரா / சென்சார்கள், என்ஜின் இம்மொபிலைசர், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, இகோ மோட், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் H4K பெட்ரோல் என்ஜின் 106 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் K9K DCi டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் பியல் வைட், பிளேட் சில்வர், பிரான்ஸ் கிரே, ஆம்பெர் ஆரஞ்சு, டீப் புளு பியல், நைட் ஷேட், ஃபியர் ரெட், பியல் வைட்/ஆம்பெர் ஆரஞ்சு, பியல் வைட் / ஆனிக்ஸ் பிளாக், பிரான்ஸ் கிரே / ஆம்பெர் ஆரஞ்சு மற்றும் ஃபியர் ரெட் / ஆனிக்ஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. #NissanKicks #Car
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ கார் 8 சீட்டர் வேரியன்ட இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #Mahindra #Marazzo
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ காரின் 8-சீட்டர் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய மராசோ M8 8-சீட்டர் வேரியன்ட் விலை ரூ.13.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வழக்கமான 7 சீட்டர் வேரியன்ட்டை விட ரூ.8000 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 17-இன்ச் அலாய் வீல், டி.ஆர்.எல்., ஃபாக்ஸ் லெதர் சீட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சில மஹிந்திரா விற்பனையாளர்கள் ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டன.

மஹிந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காரின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வெளியாகியுள்ளது. #mahindra
மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.8 - ரூ.12 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது.
எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.
இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra
நிசான் இந்தியாவின் புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. கார் இன்னும் சில தினங்களில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இதன் விநியோக விவரங்கள் வெளியாகியுள்ளது. #NISSAN #NissanKicks
நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி.க்கான முன்புதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நிசான் கிக்ஸ் முன்பதிவு கட்டணம் ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. இம்மாத இறுதியிலேயே விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் ஏற்கனவே விற்பனையகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர புதிய காரை முன்பதிவு செய்வோரில் 500 பேருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிசான் தேர்வு செய்யும் 500 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியும். எனினும் தேர்வு முறை மற்றும் இதர விதிமுறைகள் நிசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய நிசான் கிக்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NissanKicks #Car
விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. இம்மாத இறுதியிலேயே விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் ஏற்கனவே விற்பனையகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர புதிய காரை முன்பதிவு செய்வோரில் 500 பேருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிசான் தேர்வு செய்யும் 500 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியும். எனினும் தேர்வு முறை மற்றும் இதர விதிமுறைகள் நிசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய நிசான் கிக்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NissanKicks #Car
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன்ஆர் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம் மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #WagonR
மாருதி சுசுகி நிறுவனம் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியது. 2019 வேகன்ஆர் கார் முன்பதிவு செய்ய ரூ.11,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆர் மாடல் 2019, ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் வேகன்ஆர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது.
வேகன்ஆர் மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #WagonR
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்.பி.வி. ரக வாகனங்களின் விற்பனையில் டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #Toyota #Car
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்.பி.வி. ரக வாகனமாக இருக்கிறது. டிசம்பர் 2018இல் மட்டும் இன்னோவா க்ரிஸ்டா காரை வாங்க சுமார் 11,200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் சுமார் ரூ.2200 கோடிக்கும் அதிகளவு வியாபாரம் செய்திருக்கிறது.
இந்தியாவில் எம்.பி.வி. வாகனங்களுக்கான சந்தை அதிகளவு போட்டி ஏற்பட்டுள்ளது. புதுவரவு வாகனங்களான மஹிந்திரா மராசோ, மாருதி எர்டிகா போன்ற வாகனங்கள் அதிகளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் ரெனால்ட் என்.பி.சி. உள்ளிட்ட வாகனங்கள் சந்தையில் அதிகளவு போட்டியை ஏற்படுத்தியிருக்கின்றன.

விற்பனையை பொருத்த வரை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு டிசம்பரில் இருமடங்கு அதிகளவு இன்னோவா க்ரிஸ்டா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த விற்பனையை பொருத்த வரை இன்னோவா க்ரிஸ்டா கார் சுமார் 80,000 அதிக யூனிட்களை கடந்துள்ளது.
இன்னோவா க்ரிஸ்டா கார் இருவித டீசல் என்ஜின்கள்: 2.4 லிட்டர் (5-ஸ்பீடு மேனுவல்) மற்றும் 2.8 லிட்டர் (6-ஸ்பீடு ஆட்டோமேடிக்) ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் 150 பி.ஹெச்.பி. பவர், 343 என்.எம். டார்க் மற்றும் 174 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
2016 ஆண்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் ரூ.13.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.20.78 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. #MahindraXUV300
மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது.
இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.8 - ரூ.12 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது.
எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.
இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra






