என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது.



    இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் அதிக பிரபல மாடலாக இருக்கிறது. விற்பனை துவங்கிய சில மாதங்களில் ஹூண்டாய் எஸ்.யு.வி. கார் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    இந்தியாவில் தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருவதால் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை பெறுவதற்கான காத்திருப்பு காலம் 15 வாரங்கள் வரை அதிகரித்துள்ளது. இது என்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷனிற்கு ஏற்ப வேறுபடும்.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. வென்யூ கார்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ

    ஹூண்டாய் வென்யூ எஸ் 1.0 டி.சி.டி. மாடலை பெற வாடிக்கையாளர்கள் 15 வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. 1.0 லிட்டர் மாடலை பெற அதிகபட்சம் எட்டு வாரங்களும், டீசல் மாடலை பெற ஆறு வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு மே மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ காரின் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 350 டி கார் விற்பனை துவங்கிய மூன்றே வாரங்களில் விற்று தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கென நிர்ணயித்த ஜி 350 டி யூனிட்களும் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பென்ஸ் ஜி 350 டி வெறும் மூன்றே வாரங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.

    இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணண் செய்யப்பட்டுள்ளது. ஜி கிளாஸ் சீரிசில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஆஃப்-ரோடர் மாடல் இந்தியாவில் என்ட்ரி லெவல் சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

    பென்ஸ் ஜி350டி மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி

    இதே என்ஜின் எஸ் கிளாஸ் 350டி மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடல் மணிக்கு 199 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதிலேயே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் லெதர் இருக்கைகள், பவர் முன்புற சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கென மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் மொத்தம் எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
    இந்தியாவில் விற்பனைக்கு வந்த இரண்டு மாதங்களில் ரெனால்ட் டிரைபர் கார் புதிய மைல்கல் கடந்துள்ளது.



    ரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. கார் இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் முற்றிலும் புதிய வாகனமாக அறிமுகமான எம்.பி.வி. மாடல் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்தியாவில் விற்பனைக்கு வந்து இரண்டு மாதங்களில் ரெனால்ட் டிரைபர் மாடல் புதிய மைல்கல் கடந்துள்ளது. ரெனால்ட் டிரைபர் விற்பனையின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 10,000 யூனிட்களை கடந்துள்ளது. டிரைபர் விற்பனை இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 2019 அக்டோபர் மாத விற்பனையில் ரெனால்ட் நிறுவனம் 63 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்ட காலக்கட்டத்தில் ரெனால்ட் விற்பனை வளர்ச்சியடைந்து இருக்கிறது.

    ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    இத்துடன் 7.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய விற்பனையில் அசத்தி வருகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனம் எஸ் பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியுச்சர் எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாகி இருக்கிறது.

    முதல் மாத விற்பனையில் மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் 10,634 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகியின் பிரபல விட்டாரா பிரெஸ்ஸா மாடலை விட அதிகம் ஆகும்.

    விட்டாரா பிரெஸ்ஸா

    மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் முதல் மாத விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸாவை முந்தியுள்ளது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா இருந்தது.

    மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் அக்டோபர் மாதத்தில் 10,227 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன. 

    அந்த வகையில் எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன. 
    ஹோண்டா விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹோண்டா விற்பனையாளர்களில் சிலர் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளன. இதன் விலை விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், சில விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் டிசம்பர் மாத வாக்கில் விநியோகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கின்றன. 

    முன்னதாக வெளியான தகவல்களில் பி.எஸ். 6 சிட்டி மாடலில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் பிஎஸ். 4 வெர்ஷனை போன்று 119 ஹெச்.பி. திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 பெட்ரோல் மாடல் விலை பி.எஸ். 4 மாடலை விட ரூ. 35,000 முதல் ரூ. 40,000 அதிகமாக இருக்கும்.

    ஹோண்டா சிட்டி

    ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 மாடலில் டூயல் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 15-இன்ச் அலாய் வீல், ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர் மற்றும் விண்டோக், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2020 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
    அக்டோபர் 2019 மாத விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



    அக்டோபர் 2019 மாத காலத்தில் மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இது முந்தைய மாத்தை விட 4.5 சதவிகிதம் அதிகம் ஆகும். 

    முந்தைய மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1.53 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 1.41 லட்சம் யூனிட்கள் உள்நாட்டிலும், 9,158 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனையில் யு.வி. பிரிவு 11.3 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    யு.வி. பிரிவில் விடாரா பிரெஸா, எர்டிகா எம்.பி.வி., எக்ஸ்.எல்.6 பிரீமியம் எம்.பி.வி. மற்றும் எஸ் கிராஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனைக்கு தீபாவளி பண்டிகை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் பல்வேறு தள்ளுபடி மற்றும் சலுகைகளும் வழங்கப்பட்டன.

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

    மாருதி நிறுவனம் கடந்த மாதம் எஸ் பிரெஸ்ஸோ மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் அறிமுகமான முதல் இரு மாதங்களில் 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மாருதி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 ரக வாகனமாக எஸ் பிரெஸ்ஸோ இருக்கிறது. 

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஆல்டோ கே10 மாடலில் வழங்கப்பட்டதை விட மேம்பட்ட என்ஜின் ஆகும். இதே என்ஜின் மற்ற என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹோண்டா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 10,000-க்கும் அதிக கார்களை விற்பனை செய்திருக்கிறது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 இல் மட்டும் 10,010 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4,177 யூனிட்கள் குறைவு ஆகும். அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 633 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

    "ஆட்டோமொபைல் துறையின் மந்த நிலையை பண்டிகை காலம் மாற்றியமைத்துவிட்டது. அதிக தள்ளுபடி மற்றும் பண்டிகை கால சலுகைகள் காரணமாக வாகன விற்பனை அதிகரித்தது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது கடந்த மாத விற்பனை ஹோண்டாவிற்கு சாதகமாக அமைந்தது. இதே நிலை வரும் மாதங்களிலும் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்" என ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார். 
    ஹோண்டா அமேஸ்

    தற்சமயம் ஹோண்டா கார்ஸ் இந்தியா - ப்ரியோ, அமேஸ், ஜாஸ், டபுள்யூ.ஆர்.-வி, சிட்டி, பி.ஆர்.-வி, சிவிக், சி.ஆர்.-வி மற்றும் அக்கார்ட் என மொத்தம் ஒன்பது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் புதிய வேரியண்ட்டை டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.

    இத்துடன் சர்வதேச சந்தைக்கான ஹோண்டா சிட்டி மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின. இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் புதிய செடான் மற்றும் ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்யலாம்.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்.யு.வி. கார் கடந்த மாதம் மட்டும் சுமார் 3500 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 மாதத்தில் எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. மாடல் மொத்தம் 3500 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 3536 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

    இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 26 சதவிகிதம் அதிகம் ஆகும். செப்டம்பர் மாதத்தில் 2608 எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி.க்கள் விற்பனை செய்யப்பட்டன. அக்டோபர் மாதத்தில் பண்டிகை காலம் என்பதால் வாகன விற்பனை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. 

    எம்.ஜி. ஹெக்டார்

    இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகமான எம்.ஜி. ஹெக்டார் அமோக வரவேற்பு காரணமாக ஒரே மாதத்தில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. பின் செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டது. அக்டோபர் 11 ஆம் தேதி வரை சுமார் 8000 பேர் எம்.ஜி. ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

    அக்டோபரில் எம்.ஜி. ஹெக்டார் உற்பத்தி எண்ணிக்கை 10,000 யூனிட்களை கடந்ததது. இதுவரை எம்.ஜி. மோட்டார் இந்தியா சுமார் 700 எம்.ஜி. ஹெக்டார் யூனிட்களை ஒரே நாளில் விநியோகம் செய்தது.
    ஃபோர்டு மஸ்டாங் மாடலை தழுவி உருவாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    ஃபோர்டு மஸ்டாங் சார்ந்து உருவாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறம் மஸ்டாங் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய காரில் சர்வதேச சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மஸ்டாங் மாடல்களில் உள்ளதை போன்று ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக ஃபோர்டு நிறுவனம் மேக் 1 மாடலின் டீசரையும் வெளியிட்டது.

    மேக் 1 டீசர்

    டீசரில் ஃபோர்டு ரேஞ்சர் எஸ்.யு.வி. மற்றும் மஸ்டாங் கார்கள் டெட்ராயிட்டில் உள்ள ஃபோர்டு தலைமையகத்திற்கு செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலாக உருவாகும் இந்த கார் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் பின் இந்த கார் எல்.ஏ. ஆட்டோ விழாவிலும் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 எஸ்.யு.வி. கார் இந்தியாவில் மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்7 கார் இந்தியாவில் வெளியான மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்தக் கட்ட மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இவற்றுக்கான விநியோகம் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மாடல்: எக்ஸ்டிரைவ் 30டி டிசைன் பியூர் எக்சலென்ஸ் டீசல், எக்ஸ்டிரைவ் 40ஐ பெட்ரோல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டீசல் வேரியண்ட் மாடல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. பெட்ரோல் வேரியண்ட் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 40ஐ மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் எடிஷனில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7

    இந்த என்ஜின் 260 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மாடல்: மினரல் வைட், பைடோனிக் புளு, பிளாக் சஃபையர், டெரா பிரவுன், ஆர்க்டிக் கிரெ பிரிலியன்ட் எஃபெக்ட் மற்றும் கார்பன் பிளாக் என மொத்தம் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. எக்ஸ்டிரைவ் 40ஐ மாடல் மட்டும் ஆல்பைன் வைட், வெர்மாண்ட் பிரான்ஸ் மற்றும் சொஃபிஸ்டோ கிரே பிரிலியன்ட் எஃபெக்ட் போன்ற கூடுதல் நிறங்களில் கிடைக்கிறது.
    மெர்சிடிஸ் பென்ல் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. கார் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடலின் விலை பிப்ரவரி 2020 வாக்கில் அறிவிக்கப்படும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

    நான்காம் தலைமுறை ஜி.எல்.இ. மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும், இதன் வெளிப்புற தோற்றம் முதல் தலைமுறை எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக நீலமாகவும், வீல்பேஸ் 80 மில்லிமீட்டர் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

    காரின் உள்புறம் இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற அம்சம் சமீபத்தில் அறிமுகமான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களிலும் வழங்கப்படுகிறது.

    2020 மெர்சிடிஸ் பென்ல் ஜி.எல்.இ.

    இந்தியாவில் புதிய ஜி.எல்.இ. மாடலில் பி.எஸ். 6 ரக டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பேஸ் மாடலான ஜி.எல்.இ. 400டி காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும். இந்த என்ஜின் 330 ஹெச்.பி. @3600-4000 ஆர்.பி.எம். செயல்திறனையும் 700 என்.எம். டார்க் @1200-3000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும்.

    இதைத் தொடர்ந்து ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 245 ஹெச்.பி. @4200 ஆர்.பி.எம். செயல்திறனையும் 500 என்.எம். டார்க் @1600-2400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். ஜி.எல்.இ. பெட்ரோல் என்ஜின் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் யூனிட் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 367 ஹெச்.பி. @5500-6100 ஆர்.பி.எம். செயல்திறனையும் 500 என்.எம். டார்க் @1600-4500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். அனைத்து என்ஜின்களும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
    சொகுசு கார்களை தயாரிக்கும் லெக்சஸ் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல். எனும் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    சொகுசு கார்கள் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் தனது புதிய மாடல் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல். மாடலை அறிமுகம் செய்தது. புதிய கார் இதில் மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது செல்ப் சார்ஜிங் ஹைபிரிட் மாடல் காராகும். 

    இந்தியாவில் இதன் விலை ரூ.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் பேட்டரியில் ஓடக் கூடியது. இதில் 3.5 லிட்டர் என்ஜின் உள்ளது. இது பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்டுள்ளது.

    இந்த காரில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம், தொடுதிரை என பிரீமியம் காருக்குரிய தொழில்நுட்பங்கள்  வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் அளிக்கப்பட்டு 10 ஏர் பேக்குகளை வைத்துள்ளது இந்நிறுவனம்.

    லெக்சஸ் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல்.

    இத்துடன் ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், இ.எஸ்.சி., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட், அசிஸ்ட் ஆக்டிவ் கார்னரிங் அசிஸ்ட், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார், ரியர் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன.

    பிரீமியம் மாடலில் வந்துள்ள ஹைபிரிட் எஸ்.யு.வி.க்கு வசதி படைத்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்பது நிச்சயம். இந்தியாவில் இந்த கார் ஆடி கியூ 7, பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5, மெர்சிடஸ் ஜி.எல்.இ. உள்ளிட்ட பிரீமியம் கார்களுக்குப் போட்டியாக களமிறங்கி உள்ளது.
    ×