என் மலர்
கார்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2019 நவம்பர் விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் 2019 நவம்பர் மாதத்திற்கான வாகனங்கள் விற்பனை விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி டொயோட்டா நிறுவனம் நவம்பர் 2019-ல் மொத்தம் 9,241 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆண்டு நவம்பர் மாதத்தில் டொய்ட்டா நிறுவனம் 11,390 கார்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு விற்பனை 19 சதவீதம் குறைந்துள்ளது.

அதாவது 10,721 கார்களில் இருந்து 8,312 கார்களை இந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்து இருப்பதால் உள்நாட்டில் இதன் விற்பனை 22 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் டொயோட்டா நிறுவனம் 929 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 669 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது.
அந்த வகையில் டொயோட்டாவின் ஏற்றுமதி 39 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்சமயம் வாகன விற்பனை சரிவை சந்தித்து இருந்தாலும், வரும் மாதங்களில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படலாம் என டொயோட்டா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பி.எஸ்.6 எக்ஸ்.யு.வி.300 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எக்ஸ்.யு.வி.300 இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 கார் ஆகும்.
பி.எஸ். 6 எக்ஸ்.யு.வி.300 விலை ரூ. 8.3 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 11.84 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.300 பெட்ரோல் என்ஜினை மட்டுமே பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்துள்ளது. இதன் டீசல் மாடல் பி.எஸ்.4 ரகத்திலேயே இருக்கிறது. மற்ற மாடல்களை பி.எஸ். 6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் மஹிந்திரை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 ரக பெட்ரோல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர எக்ஸ்.யு.வி.300 கார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் 2019 நவம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 50.34 சதவீதம் சரிந்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 2019 நவம்பர் மாதத்தில் 50.34 சதவீதம் சரிந்துள்ளது. உள்நாட்டில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மொத்தம் 6,459 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 50 சதவீத சரிவாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 13,006 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2018-19-ஆம் நிதி ஆண்டில், ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,83,787-ஆக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 1,70,026-ஆக இருந்தது.

ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் தற்சமயம் சிட்டி, அமேஸ், ஜாஸ், டபுள்யூ.ஆர்.-வி, சிவிக் மற்றும் சி.ஆர்.-வி போன்ற வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை 3.2 சதவீதம் சரிந்துள்ளது. 2019 நவம்பர் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 1,41,400 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது. நவம்பர் 2019-ல் இந்நிறுவனம் மொத்தம் 44,600 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
நவம்பர் 2019-ல் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மொத்தம் 105 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது நவம்பர் 2018 உடன் ஒப்பிடும் போது 80.66 சதவீதம் சரிவாகும். நவம்பர் 2018-ல் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மொத்தம் 534 யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்தது.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் இரண்டு கோடி கார்களை விநியோகம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை மொத்தம் இரண்டு கோடி வாகனங்களை இந்தியாவில் விநியோகம் செய்துள்ளது.
இரண்டு கோடி யூனிட்கள் என்பது ஒட்டுமொத்த விற்பனை விவரம் என்றபோதும், இத்தகைய மைல்கல்லை இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனமும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை மாருதி சுசுகி நிறுவனம் 37 ஆண்டுகளில் எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் கார் டிசம்பர் 1983 ஆண்டில் விற்பனை செய்யப்பட்டது.

இந்திய விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை எட்ட 27 ஆண்டுகளை மாருதி சுசுகி எடுத்துக் கொண்டது. பின் அடுத்த ஒரு கோடி யூனிட்களை கடக்க மாருதி சுசுகி நிறுவனம் வெறும் எட்டு ஆண்டுகளையே எடுத்துக் கொண்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் மாருதி 800 மாடலின் மூலம் இந்திய சந்தையில் களமிறங்கியது. இந்த கார் இன்றுவரை அதிக பிரபல மாடலாக விளங்கி வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் சிறிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் மாருதி நிறுவனம் சுமார் 50 எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சந்தையில் சிறப்பான எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அட்ரோஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் ஜனவரி 2020 வாக்கில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டாடா அல்ட்ரோஸ் முன்பதிவு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு டிசம்பர் 4-ம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் அறிவிப்பு புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய அல்ட்ரோஸ் காரினை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் முன்பதிவு செய்யலாம்.



டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ் காரின் விளம்பர நோட்டீஸ் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என லீக் ஆன அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாடா அல்ட்ரோஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் ஹேரியர் மற்றும் இதர வாகனங்களுடன் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது.
புகைப்படம் நன்றி: Team BHP
ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் செடான் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா கார் இந்தியாவில் டிசம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2020 வாக்கில் துவங்குகிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் ஏற்கனவே விற்பனையாகும் எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது.
புதிய ஆரா கார் ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் வெர்னா மாடல்களை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் மூன்று-பெட்டி வடிவமைப்பு, ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர காரின் இதர வடிவமைப்பு அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆரா காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டீசர் மற்றும் 1.0 லிட்டர் டைரக்ட் இன்ஜக்ஷன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஹூண்டாய் ஆரா கார் மாருதி சுசுகி டிசையர், ஃபோர்டு ஆஸ்பையர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.75 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செஸ்டோஸ் எஸ்.யு.வி. காரின் விலையை விரைவில் மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ் எஸ்.யு.வி. காரை ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. கியா செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ரூ. 9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கியா செல்டோஸ் காரின் விலையை ஜனவரி 1, 2020 முதல் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு வேரியணட்டிற்கு ஏற்ப மாறுபடும் என தெரிகிறது.
ஜனவரி 1, 2020 முதல் செல்டோஸ் காரை பெறும் வாடிக்கையாளர்கள் காருக்கு கூடுதல் கட்டணம் வேண்டியிருக்கும் என்றும் டிசம்பர் 31, 2019 வரை காரை பெறுவோர் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்யிருக்காது என கூறப்படுகிறது.

கியா செல்டோஸ் கார்: 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களும், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மொத்தம் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
செல்டோஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டிருக்கின்றன. இதுதவிர 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட்டில் சி.வி.டி., டீசல் மாடலில் ஐ.வி.டி. மற்றும் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் வசதிகளுடன் கிடைக்கிறது.
கியா செல்டோஸ் கார் ரெட், ஆரஞ்சு, கிளேசியர் வைட், க்ளியர் வைட், கிரே, சில்வர், புளு மற்றும் பிளாக் என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ-பேஸ் பேட்டரி எஸ்.யு.வி. கார் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா நிறுவனத்தின் அங்கமான ஜாகுவார் நிறுவனம் தயாரித்துள்ள ஐ-பேஸ் பேட்டரி கார்தான் இந்த ஆண்டில் மிகச்சிறந்த பேட்டரி எஸ்.யு.வி. காராகும். பேட்டரியில் இயங்கும் எஸ்.யு.வி. கார்களில் அதிக வேகம் செல்லும் காராகவும் இது விளங்குகிறது.
இந்த காரை ஸ்டார்ட் செய்து 4.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. ‘லிஸ்டர்’ என்ற பெயரில் அறிமுகமாகும் இந்தக் காரின் விலை சுமார் ரூ. 1.16 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் காரில் கார்பன் பைபர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதன் எடை 100 கிலோவாக குறைந்துள்ளது. இது வாகனத்தின் செயல்திறன் மேம்பட உதவியுள்ளது. டைட்டானிய உலோகத்தில் ஆன அலாய் சக்கரங்கள் மற்றும் செராமிக் பிரேக் ஆகியனவும் வாகனத்தின் எடையைக் குறைப்பதற்கு மிகவும் உதவியுள்ளன.
ஜாகுவார் நிறுவனம் இந்த எஸ்.யு.வி. பேட்டரி காரை கண்கவர் வண்ணங்களில் தயாரித்து அடுத்த ஆண்டில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது.
ஹோண்டா நிறுவன்த்தின் 2020 சிட்டி கார் தாய்லாந்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் மாடல் காரை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 ஹோண்டா சிட்டி செடான் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2020 ஹோண்டா சிட்டி தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலை விட நீளமாக இருக்கிறது. காரின் முன்புறம் அதிகளவு தடிமனான குரோம் ஸ்ட்ரிப் கொண்டிருக்கிறது. இது ஹோண்டா சிவிக் மற்றும் அமேஸ் மாடல்களில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
குரோம் ஸ்ட்ரிப் கீழ் மெல்லிய கிரில், நடுவே ஹோண்டா லோகோ இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் கூர்மையான எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் ராப்-அரவுண்ட் ஸ்டைல், டி.ஆர்.எல்.கள் மேல்புறம் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா காரில் 15 இன்ச் வீல்கள், புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெயில் லேம்ப்கள் எல்.இ.டி. ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. டெயில் லேம்ப்களை தவிர காரின் பின்புறம் எளிமையான வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
தற்சமயம் விற்பனையாகும் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஹோண்டா சிட்டி 100 எம்.எம். நீளமாகவும், 53 எம்.எம். அகலமாகவும் இருக்கிறது. இதன் உயரம் மற்றும் வீல்பேஸ் முறையே 28 எம்.எம். மற்றும் 11 எம்.எம். வரை குறைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் புதிய ஹோண்டா சிட்டி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 122 பி.ஹெச்.பி. பவர் 173 என்.எம். டார்க் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம்.
டெஸ்லா நிறுவனத்தின் சைபர்-டிரக் அறிமுகமான சில நாட்களில், அதனை வாங்க சுமார் 1.46 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனத்தின் சைர் டிரக் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான சில நாட்களிலேயே இதனை வாங்க 1,46,000 பேர் சைபர்-டிரக் வாகனத்தை வாங்க முன்பதிவு செய்து இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
புதிய டெஸ்லா சைபர்-டிரக் மாடல்களில் 42 சதவிகிதம் பேர் டூயல் மோட்டார் வேரியண்ட்டையும், 17 சதவிகிதம் பேர் ஒற்றை மோட்டார் வேரியண்ட்டை முன்பதிவு செய்துள்ளனர் என எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
முன்பதிவு துவங்கிய இரண்டு நாட்களில் டெஸ்லா நிறுவனம் சுமார் 1.46 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 104 கோடி) முன்பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்லாவின் புதிய சைபர்-டிரக் மொத்கம் மூன்று வெர்ஷன்கள்: 250 மைல், 300 மைல் மற்றும் 500 மைல் செல்லும் திறன்களில் கிடைக்கிறது.
புதிய டெஸ்லா சைபர்-டிரக் ஒற்றை மோட்டார் பின்புற வீல் டிரைவல் மாடல், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதில் அதிகபட்சம் 3400 கிலோவை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடிகளில் எட்டிவிடும்.

இதன் விலை 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,64,524) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிலோமீட்டர் வரை செல்லும்.
இதில் அதிகபட்சம் 4500 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை 49,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,82,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது வேரியன்ட் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். இது போர்ஷ் 911 மாடலை விட அதிவேகமானதாகும்.
இந்த வாகனத்தில் அதிகபட்சம் 6350 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விலை 69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 49,53,689) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெல்ஃபயர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது வெல்ஃபயர் மாடல் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 6 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு மாடல் காரை அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த கார் முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட காராக (சி.பி.யு.) இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் ‘அல்பார்டு’ என்ற பெயரிலான காரை அறிமுகம் செய்திருந்தது. அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு ‘வெல்ஃபயர்’ என்ற பெயரில் அறிமுகமானது. இந்த ஆல்பார்டு மாடல் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
இது சில மாற்றங்களுடன் இந்தியாவில் வெல்ஃபயர் என்ற பெயரில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்கு ஆகியன உள்ளன. பனியில் ஒளி வீசும் பாக் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடலாகும். 150 ஹெச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது.

இத்துடன் 143 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. இவை ஒன்றிணைந்து 145 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியவை. இதில் இரண்டு மேற்கூரை உள்ளன. இதனால் பின் வரிசையில் அமர்ந்திருப்போரும் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.
இதன் பக்கவாட்டில் சாத்தக் கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவுல் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிகச் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.
அதேபோல பின் இருக்கை பயணிகள் பொழுதைக் கழிக்க வசதியாக 10.2 அங்குல டி.வி.க்கள் உள்ளன. தொடக்கத்தில் 200 கார்களை இறக்குமதி செய்து இங்கு அறிமுகம் செய்து, சந்தை நிலவரத்துக்கேற்ப படிப்படியாக இறக்குமதி செய்வது அல்லது இங்கேயே தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பி.எஸ். 6 கார்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 வாகனம் ஏழு மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்குள் மாருதி சுசுகி நிறுவனம் சுமார் மூன்று லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அக்டோபர் 2019 மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் சுமார் ஒரு லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2019 மாதத்தில் மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஆல்டோ கார்களை பி.எஸ். 6 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இவை மத்திய அரசு விதித்த காலக்கெடு துவங்க ஒரு வருடம் இருக்கும் போதே சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.
தற்சமயம் மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ். 6 வாகனங்கள் பட்டியலில்: ஆல்டா 800, வேகன் ஆர், எஸ் பிரெஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, எர்டிகா மற்றும் எக்ஸ்.எல். 6 போன்றவை இடம்பெற்றுள்ளன. பி.எஸ். 6 பெட்ரோல் கார்கள் காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு அளவுகளை 25 சதவிகிதம் வரை குறைக்கும்.






