என் மலர்tooltip icon

    கார்

    ஹோண்டா நிறுவன்த்தின் 2020 சிட்டி கார் தாய்லாந்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹோண்டா நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் மாடல் காரை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 ஹோண்டா சிட்டி செடான் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    2020 ஹோண்டா சிட்டி தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலை விட நீளமாக இருக்கிறது. காரின் முன்புறம் அதிகளவு தடிமனான குரோம் ஸ்ட்ரிப் கொண்டிருக்கிறது. இது ஹோண்டா சிவிக் மற்றும் அமேஸ் மாடல்களில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது.

    குரோம் ஸ்ட்ரிப் கீழ் மெல்லிய கிரில், நடுவே ஹோண்டா லோகோ இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் கூர்மையான எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் ராப்-அரவுண்ட் ஸ்டைல், டி.ஆர்.எல்.கள் மேல்புறம் பொருத்தப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி

    புதிய ஹோண்டா காரில் 15 இன்ச் வீல்கள், புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெயில் லேம்ப்கள் எல்.இ.டி. ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. டெயில் லேம்ப்களை தவிர காரின் பின்புறம் எளிமையான வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    தற்சமயம் விற்பனையாகும் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஹோண்டா சிட்டி 100 எம்.எம். நீளமாகவும், 53 எம்.எம். அகலமாகவும் இருக்கிறது. இதன் உயரம் மற்றும் வீல்பேஸ் முறையே 28 எம்.எம். மற்றும் 11 எம்.எம். வரை குறைக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்தில் புதிய ஹோண்டா சிட்டி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 122 பி.ஹெச்.பி. பவர் 173 என்.எம். டார்க் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம். 
    டெஸ்லா நிறுவனத்தின் சைபர்-டிரக் அறிமுகமான சில நாட்களில், அதனை வாங்க சுமார் 1.46 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.



    டெஸ்லா நிறுவனத்தின் சைர் டிரக் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான சில நாட்களிலேயே இதனை வாங்க 1,46,000 பேர் சைபர்-டிரக் வாகனத்தை வாங்க முன்பதிவு செய்து இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    புதிய டெஸ்லா சைபர்-டிரக் மாடல்களில் 42 சதவிகிதம் பேர் டூயல் மோட்டார் வேரியண்ட்டையும், 17 சதவிகிதம் பேர் ஒற்றை  மோட்டார் வேரியண்ட்டை முன்பதிவு செய்துள்ளனர் என எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

    முன்பதிவு துவங்கிய இரண்டு நாட்களில் டெஸ்லா நிறுவனம் சுமார் 1.46 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 104 கோடி) முன்பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்லாவின் புதிய சைபர்-டிரக் மொத்கம் மூன்று வெர்ஷன்கள்: 250 மைல், 300 மைல் மற்றும் 500 மைல் செல்லும் திறன்களில் கிடைக்கிறது.

    புதிய டெஸ்லா சைபர்-டிரக் ஒற்றை மோட்டார் பின்புற வீல் டிரைவல் மாடல், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதில் அதிகபட்சம் 3400 கிலோவை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடிகளில் எட்டிவிடும்.

    எலான் மஸ்க் ட்வீட் ஸ்கிரீன்ஷாட்

    இதன் விலை 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,64,524) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிலோமீட்டர் வரை செல்லும்.

    இதில் அதிகபட்சம் 4500 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை 49,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,82,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மூன்றாவது வேரியன்ட் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். இது போர்ஷ் 911 மாடலை விட அதிவேகமானதாகும்.

    இந்த வாகனத்தில் அதிகபட்சம் 6350 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விலை 69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 49,53,689) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெல்ஃபயர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது வெல்ஃபயர் மாடல் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 6 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு மாடல் காரை அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. 

    இந்த கார் முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட காராக (சி.பி.யு.) இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் ‘அல்பார்டு’ என்ற பெயரிலான காரை அறிமுகம் செய்திருந்தது. அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு ‘வெல்ஃபயர்’ என்ற பெயரில் அறிமுகமானது. இந்த ஆல்பார்டு மாடல் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 

    இது சில மாற்றங்களுடன் இந்தியாவில் வெல்ஃபயர் என்ற பெயரில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதில் ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்கு ஆகியன உள்ளன. பனியில் ஒளி வீசும் பாக் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடலாகும். 150 ஹெச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது.

    டொயோட்டா வெல்ஃபயர்

    இத்துடன் 143 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. இவை ஒன்றிணைந்து 145 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியவை. இதில் இரண்டு மேற்கூரை உள்ளன. இதனால் பின் வரிசையில் அமர்ந்திருப்போரும் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.

    இதன் பக்கவாட்டில் சாத்தக் கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவுல் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிகச் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.
     
    அதேபோல பின் இருக்கை பயணிகள் பொழுதைக் கழிக்க வசதியாக 10.2 அங்குல டி.வி.க்கள் உள்ளன. தொடக்கத்தில் 200 கார்களை இறக்குமதி செய்து இங்கு அறிமுகம் செய்து, சந்தை நிலவரத்துக்கேற்ப படிப்படியாக இறக்குமதி செய்வது அல்லது இங்கேயே தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பி.எஸ். 6 கார்களை விற்பனை செய்துள்ளது. 

    இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 வாகனம் ஏழு மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்குள் மாருதி சுசுகி நிறுவனம் சுமார் மூன்று லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அக்டோபர் 2019 மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் சுமார் ஒரு லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.

    மாருதி சுசுகி ஆல்டோ

    ஏப்ரல் 2019  மாதத்தில் மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஆல்டோ கார்களை பி.எஸ். 6 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இவை மத்திய அரசு விதித்த காலக்கெடு துவங்க ஒரு வருடம் இருக்கும் போதே சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.

    தற்சமயம் மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ். 6 வாகனங்கள் பட்டியலில்: ஆல்டா 800, வேகன் ஆர், எஸ் பிரெஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, எர்டிகா மற்றும் எக்ஸ்.எல். 6 போன்றவை இடம்பெற்றுள்ளன. பி.எஸ். 6 பெட்ரோல் கார்கள் காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு அளவுகளை 25 சதவிகிதம் வரை குறைக்கும்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ கார் நான்கு ஆண்டுகளில் சுமார் 6.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    மாருதி சுசுகி நிறுவனம் நான்கு ஆண்டுகளில் சுமார் 6.5 லட்சம் பலேனோ கார்களை விற்று இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தயாவில் அக்டோபர் 2015 ஆண்டு அறிமுகமான பலேனோ முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. பின் அடுத்த எட்டு மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையானது.

    இரண்டில் இருந்து மூன்று லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய மாருதி சுசுகி ஐந்து மாதங்களில் எட்டியது. அந்த வரிசையில் இந்த ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்து இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் பலேனோ கார் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. பின் ஐந்து மாதங்களில் 50,000 யூனிட்கள் விற்பனையானது.

    மாருதி சுசுகி பலேனோ

    இந்த ஆண்டு துவக்கத்தில் மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ காரை அப்டேட் செய்து பி.எஸ். 6 ரக என்ஜினை வழங்கியது. இது பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்ட மாருதியின் முதல் காராக அறிமுகமானது.

    தற்சமயம் இந்த காரில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் டூயல் விவிடி பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் பி.எஸ். 6 கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் பி.எஸ். 6 கார் சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 4.42 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வேகன் ஆர் பி.எஸ்.4 மாடலை விட ரூ. 8000 அதிகம் ஆகும்.

    பி.எஸ். 6 மாருதி வேகன் ஆர் 1.0 பார்க்க பி.எஸ். 4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பி.எஸ். 6 மாடலில் ARAI சான்று பெற்றிருக்கிறது. இதனால் காரின் மைலேஜை லிட்டருக்கு 22.5 கிலோமீட்டரில் இருந்து 21.79 கிலோமீட்டராக குறைந்துள்ளது.

    வேகன் ஆர்

    இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ் பிரெஸ்ஸோ மாடலை விட சிறிதளவு அதிகம் ஆகும். மாருதியின் புதிய காரில் 998சிசி, 3 சிலிண்டர் K10B என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 68 ஹெச்.பி. செயல்திறன் வழங்குகிறது.

    புதிய காரில் பி.எஸ். 6 தவிர எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மூன்றாம் தலைமுறை வேகன் ஆர் மாடல் முந்தைய கார்களை விட அதிக சக்திவாய்ந்ததாகவும், இடவசதி கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

    இந்த கார் மொத்தம் 14 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஆறு வெர்ஷன்களில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (மேனுவல் மற்றும் ஆட்டோ ஆப்ஷன்கள்), இரு மாடல்கள் பி.எஸ். 4 சி.என்.ஜி. திறன் கொண்ட என்ஜின் மற்றும் ஆறு வெர்ஷன்கள் பி.எஸ். 6 திறன் கொண்ட 1.2 லிட்டர் K12B பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் 80,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்தியாவில் 80,000 யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. இது விற்பனை துவங்கிய முதல் ஆறு மாதங்களுக்குள் ஹூண்டாய் எட்டியிருக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ கார் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    அறிமுகமானது முதல் இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ கார் விலை ரூ. 6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வென்யூ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் வென்யூ

    இந்த என்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ கார் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மற்றும் டாடா நெக்சான் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மாடல் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.



    ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் மாடல்: ஆக்டிவ் எம்.டி., ஆம்பிஷன் எம்.டி. மற்றும் இதர சில வேரியண்ட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகைகள் நவம்பர் மாதம் வரை மட்டும் வழங்கப்படுவதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.

    அதன்படி ஸ்கோடா ரேபிட் டீசல் ஆக்டிவ் எம்.டி. மாடலுக்கு ரூ. 1.6 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடியை தொடர்ந்து இந்த கார் ரூ. 9 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆம்பிஷன் எம்.டி. மாடலின் விலை ரூ. 1.30 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 10 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஸ்கோடா ரேபிட்

    ஸ்டைல் எம்.டி. மாடல் ரூ. 1.58 லட்சம் விலை குறைக்கப்படு ரூ. 12.74 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆம்பிஷன் எம்.டி. மாடலின் விலை ரூ. 1.14 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 12.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டைல் ஏ.டி. வேரியண்ட் விலை ரூ. 1.56 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 12.44 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
    ஜீப் நிறுவனம் காம்பஸ் மாடல் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.



    ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் காரின் வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்களுக்கு ஏற்ப ஜீப் காம்பஸ் மாடலுக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஜீப் காம்பஸ் என்ட்ரி லெவல் ஸ்போர்ட் ட்ரிம் 4x2 டீசல் மாடலை வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டை வாங்குவோருக்கு ரூ. 70,000 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. ஸ்போர்ட் பிளஸ் டீசல் மாடலை வாங்குவோருக்கு ரூ. 1.1 லட்சமும், பெட்ரோல் மாடலுக்கு ரூ. 50,000 பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஜீப் காம்பஸ்

    இதேபோன்று லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் ட்ரிம் டீசல் மேனுவல் 4x2 மாடலுக்கு ரூ. 1.4 லட்சம், லிமிட்டெட் மாடலுக்கு ரூ. 1.40 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் லிமிட்டெட் பிளஸ், லிமிட்டெட் பிளஸ் 4x4 மற்றும் டிரெயில்ஹாக் மாடல்களுக்கு பொருந்தாது.

    ஜீப் காம்பஸ் மாடல்: 173 ஹெச்.பி. செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல், 163 ஹெச்.பி. செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த பி.எஸ். 4 என்ஜின்களுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பி.எஸ். 6 வேரியண்ட் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் கொண்டிருக்கிறது.

    அடுத்த ஆண்டு வாக்கில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பி.எஸ். 6 டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டிரெயில்ஹாக் வேரியண்ட்களுக்கு 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இதேபோன்று 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கிறது.



    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. புதிய ஆரா மாடல் அடுத்த தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஆரா காரின் சோதனை ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. புதிய கார் பாலைவனங்கள், இமய மலை பகுதிகள் மற்றும் கிழக்கு கடலோர பகுதிகள் என இந்திய வானிலை மற்றும் சாலைகளில் தீவிர சோதனை செய்யப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    ஹூண்டாய் ஆரா

    ஏற்கனவே ஹூண்டாய் ஆரா காரின் ப்ரோடோடைப் மாடல்கள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், தற்சமயம் இந்த கார் இந்தியா முழுக்க சோதனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய ஆரா காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: TeamBHP
    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு இலவசமாக ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

    புதிய இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரில் 150 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டார், 44.5 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 335 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.

    இந்த பேட்டரியை 7 கிலோவாட் ஏ.சி. சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஏழு மணி நேரங்களும், 50 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. 

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி.

    இந்தியாவில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடலாக எம்.ஜி. இசட்.எஸ். வெளியாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இந்த காரை வாங்குவோருக்கு டி.சி. ஃபாஸ்ட் சார்ஜரை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.

    எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பல் செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த காரின் விலை ரூ. 22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம். 
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா காம்பேக்ட் செடான் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடல் கார் ஆரா எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் எக்ஸ்-சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. 

    புதிய ஹூண்டாய் ஆரா மாடல் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழவி உருவாகி இருக்கும் என்றும் இதன் வடிவமைப்புகள் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருப்பதை போன்று உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஹூண்டாயின் பிரபல கேஸ்கேடிங் கிரில், ஹணிகாம்ப் மெஷ் ஃபினிஷ், பகலில் எரியும் எல்.இ.டி. லைட்கள் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் ஆரா

    காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் ஆரா மாடலின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இதன் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்தியாவில் ஹூண்டாய் ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பையர், டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.
    ×