என் மலர்tooltip icon

    கார்

    டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா பி.எஸ். 6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ். 6 கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



    டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா பி.எஸ்.6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ்.6 மாடல்களுக்கான முன்பதிவு ஜனவரி 6-ம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்க இருக்கிறது. எனினும், இரு கார்களுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூனேவை சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் இரு கார்களுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

    டொயோட்டா இன்னோவா

    புதிய கார்களுக்கான விநியோகம் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ துவங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுக்க பி.எஸ்.6 ரக எரிபொருள் கிடைப்பதற்காக டொயோட்டா நிறுவனம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களின் பி.எஸ்.4 வெர்ஷன்களை விற்பனையாளர்கள் ஏற்கனவே விற்றுவிட்டதாக தெரிகிறது. இரு கார்களும் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இரு கார்கள் மட்டுமின்றி யாரிஸ் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் துவங்கிவிட்டனர்.

    இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்களாக இருக்கின்றன. ஏப்ரல் 2020 முதல் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் என தெரிகிறது.
    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் கார் விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை சந்தித்துள்ளது.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் 2019 மாத்திற்கான வாகன விற்பனை விவரம் வெளியாகியுள்ளது. அதில் எம்.ஜி. ஹெக்டார் கார் மொத்தம் 3,021 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றது. இந்தியாவில் ஜூலை 2019-ல் வெளியான ஹெக்டார் கார் இதுவரை 15,930 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    நவம்பர் மற்றும் அக்டோபர் 2019-ல் முறையே 3239 மற்றும் 3536 ஹெக்டார் கார்களை எம்.ஜி. மோட்டார் விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முதல் காராக ஹெக்டார் இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானதும் அமோக வெற்றி பெற்ற ஹெக்டார் கார் துவக்க கால விற்பனையில் அசத்தியது.

    எம்.ஜி. ஹெக்டார்

    இதைத் தொடர்ந்து எம்.ஜி. மோட்டார் இந்தியா ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் உற்பத்தியை உயர்த்துவதாக அறிவித்தது. தற்சமயம் ஹெக்டார் காரை முன்பதிவு செய்தால், மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. 

    இந்தியா முழுக்க எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மொத்தம் 150 மைங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 250 வரை படிப்படியாக உயர்த்த எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது.

    விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமின்றி எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இசட்.எஸ். இ.வி. காரை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    டேட்சன் நிறுவனம் மேக்னைட் எனும் பெயரில் புதிதாக கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    டேட்சன் நிறுவனம் மேக்னைட் எனும் பெயருக்கு காப்புரிமை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பெயரினை டேட்சன் தனது காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் டேட்சன் நிறுவனம் புதிதாக எஸ்.யு.வி. மாடல் ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஹெச்.பி.சி. எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    டேட்சன்

    புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் ஹெச்.பி.சி. உற்பத்தி மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் சி.எம்.எஃப். ஏ பிளஸ் பிளாட்ஃபார்ம் மற்றும் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் கார்கள் ஒரே ஆலையில் உருவாக்கப்படுகின்றன. 

    இதனால் என்ஜின் மற்றும் ஒரே பிளாட்ஃபார்மில் கார்களை உருவாக்குவது சாதாரண விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் டீசல் மாடல்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க இருப்பதாக ரெனால்ட் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்நவகையில் புதிய மேக்னைட் கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய கார் இந்தியாவில் வெளியானதும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, ஹோண்டா டபுள்யூ.ஆர்.-வி, கியா கியூ.வை.ஐ., மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மற்றும் டாடா நெக்சான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.
    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் தெரிவித்தார்.

    ஸ்போர்ட் தோற்றம் கொண்ட ரெனால்ட் டிரைபர் காரில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. 1.0 லிட்டர் டி.சி.இ டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் 99 பி.ஹெச்.பி. பவர், 160 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் இந்த என்ஜின் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய டிரைபர் ஸ்போர்ட் மாடலின் விலை தற்சமயம் விற்பனையாகும் வேரியண்ட்டை விட ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெனால்ட் டிரைபர்

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் எஸ்.சி.இ. பி.எஸ்.4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 72 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் பி.எஸ். 6 அப்டேட் வழங்கும் பணிகளில் ரெனால்ட் ஈடுபட்டுள்ளது. 

    இந்த என்ஜின் விரைவில் 5-ஸ்பீடு ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்பட இருக்கிறது. பி.எஸ். 6 அப்டேட் பெறும் பட்சத்தில் ரெனால்ட் டிரைபர் காரின் விலை உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் பி.எஸ்.6 செடான் காரின் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பி.எஸ்.6 யாரிஸ் செடான் காரை இந்தியாவில் அறிமுகம் இருக்கிறது. இந்தியாவில் புதிய செடான் பி.எஸ்.6 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

    மேம்பட்ட டொயோட்டா யாரிஸ் பி.எஸ்.6 மாடலின் விலை ரூ. 11,000 வரை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய யாரிஸ் காருக்கான முன்பதிவுகளும் துவங்கி இருக்கிறது. மேம்பட்ட செடான் மாடலை வாடிக்கையாளர்கள் ரூ. 50,000 கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம்.

    டொயோட்டா யாரிஸ்

    புதிய யாரிஸ் மாடல்: ஜெ ஆப்ஷனல், ஜெ, ஜி ஆப்ஷனல், ஜி, வி, வி ஆப்ஷனல் மற்றும் வி.எக்ஸ். என மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களும் பி.எஸ். 6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. மேம்பட்ட பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயலதி்றன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் சி.வி.டி. கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    அனைத்து வேரியண்ட்களும் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பல்வேறு அம்சங்கள் இந்த பிரிவு வாகனங்களில் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய யாரிஸ் காரை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்ட்ரோஸ் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.



    இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு துவங்கியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. முன்பதிவு துவங்கியதை புதிய வீடியோ டீசர் மூலம் டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.

    டாடா அல்ட்ரோஸ் கார் ஆன்லைன் அல்லது நாடு முழுவதிலும் இயங்கி வரும் விற்பனை மையங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ் விற்பனை இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா அல்ட்ரோஸ்

    இந்தியாவில் டாட் நிவறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    டாடா நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் காரை நேரடியாக பி.எஸ். 6 விதகளுக்கு பொருந்தும் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அல்ட்ரோஸ் காரின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.

    இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
    மஹிந்திரா நிறுவன கார் மாடலுக்கு ரூ. 4 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனம் தனது அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. மாடலை வாங்குவோருக்கு ரூ. 4 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் சலுகை விற்பனையாளரை பொருத்து வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து மராசோ மாடலுக்கு ரூ. 1.71 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக மராசோ இருக்கிறது. மேலும் 4 ஸ்டார் குளோபல் NCAP பெறும் மஹிந்திராவின் முதல் வாகனமாக இது இருக்கிறது. அந்த வகையில் இந்த பிரிவு வாகனங்களில் பாதுகாப்பான மாடலாக இது இருக்கிறது.

    மஹிந்திரா டி.யு.வி. 300

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 மாடலுக்கு ரூ. 84,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு புதிய எக்ஸ்.யு.வி.500 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதேபோன்று மஹிந்திரா டி.யு.வி.300 மாடலுக்கு ரூ. 75,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 70,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 60,000 வரையிலும், பொலிரோ மாடலுக்கு ரூ. 47,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள மாடல்களில் மஹிந்தியா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் வேரியண்ட் மட்டும் இடம்பெறவில்லை.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செடான் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை கியா ஆப்டிமா செடான் காரை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘கே5’ என பெயர் சூட்டியுள்ளது. சொகுசு மாடல் கார்களுக்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

    இதன் முன்பகுதி திமிங்கலத்தின் மூக்கு முனை போன்று உள்ளது. முன்புற கிரில் புலியின் முகம் போன்று உள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும்போது காருக்கு கம்பீரமான தோற்றம் கிடைக்கிறது. 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. 10.5 இன்ச் தொடுதிரை மற்றும் 8 இன்ச் ஹெட் அப் டிஸ்பிளே ஆகியன உள்ளன. 

    போதிய அளவு வெளிச்சம், வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி மற்றும் 12 போஸ் ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளது. இந்த கார் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டுள்ளது. 1.6 லிட்டர் முதல் 2.5 லிட்டர் வரை திறன் கொண்டதாக என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு என்ஜின் 286 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 

     கியா ஆப்டிமா

    8 ஸ்பீடு டியூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியோடு வந்துள்ளது. அனைத்து சக்கர சுழற்சி கொண்ட மாடலும் சில வேரியன்ட்களில் கிடைக்கின்றன. புத்தாண்டில் அறிமுகமாக உள்ள இந்த காரில் ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்யவும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

    பாதுகாப்புக்கு வசதியாக இதில் 9 ஏர்பேக்குகள் உள்ளன. மேம்பட்ட டிரைவர் உதவி (ஏ.டி.ஏ.எஸ்.) மற்றும் ரிமோட் மூலம் பார்க் செய்யும் (ஆர்.எஸ்.பி.ஏ.) வசதி கொண்டது. இதன் மூலம் வெளியிலிருந்தபடியே காரை பார்க் செய்யவும், பார்க் செய்த இடத்திலிருந்து கொண்டு வரவும் முடியும். 

    இந்த காரை ஸ்டார்ட் செய்து 6.6 விநாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிடமுடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இந்த காரை செயல்படுத்தும் வசதி உள்ளது. டெல்லியில் புத்தாண்டில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்படுகிறது.
    மாருதி சசுகி நிறுவனத்தின் டிசையர் கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. முழு விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி டிசையர் கார் இந்திய சந்தையில் காம்பேக்ட் செடான் பிரிவில் கடந்த பல ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. 

    2019-20 முதல் எட்டு மாதங்களில் மாருதி சுசுகி டிசையர் கார் சுமார் 1.2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்ட்டத்தில் அதிகம் விற்பனையான காராகவும் டிசையர் இருக்கிறது. இந்திய சந்தையின் காம்பேக்ட் செடான் பிரிவில் டிசையர் மட்டும் 60 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

    மாருதி சுசுகி டிசையர்

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி டிசையர் கார் சமீபத்தில் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் டிசையர் காரின் பி.எஸ். 6 வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் பி.எஸ். VI ரக டிசையர் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.82 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.9.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. எம்.ஜி. இசட்.எஸ். முன்பதிவுகள் முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, ஆமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பை என ஐந்து நகரங்களில் நடைபெறுகிறது.

    முன்பதிவுகளை வாடிக்கையாளர்கள் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஆன்லைன் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நடைபெறுகிறது. எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் எம்.ஜி. இசட்.எஸ். காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, குஜராத் மாநிலத்தின் ஹலோல் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது. எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    எம்.ஜி. இசட்.எஸ்.

    இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

    காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மாருதி சுசுகி எர்டிகா கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்தியாவில் விற்பனை துவங்கியது முதல் எர்டிகா கார் இதுவரை சுமார் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் மாருதி சுசுகி எர்டிகா கார் அறிமுகமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது.

    இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எம்.பி.வி. கார் மாடல்களில் ஒன்றாக எர்டிகா கார் இருக்கிறது. முதல் தலைமுறை எர்டிகா கார் ஏழு ஆண்டுகளில் 4,18,128 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அடுத்த 13 மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மாருதி சுசுகி எர்டிகா

    மாருதி எர்டிகா கார் இந்திய சந்தையில் எம்.பி.வி. ரக மாடல்களில் 50.3 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. இதனால் மாருதி நிறுவன விற்பனை 25.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    மாருதி எர்டிகா மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. 

    இத்துடன் டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ஆல்டோ 800 VXI+ காரை அறிமுகம் செய்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ஆல்டோ VXI+ காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆல்டோ காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில் புதிய ஆல்டோ VXI+மாடலில் மாருதியின் அதிநவீன ஸ்மார்ட்பிளே 2.0 ஏழு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் 2019 வேகன்ஆர் மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

    மாருதி ஆல்டோ 800 VXI+

    புதிய ஸ்மார்ட்பிளே 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கஸ்டமைஸ் செய்யும் வசதியும், பயனுள்ள கிராஃபிக்கல் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. மாருதி நிறுவனம் ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் புதிய பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்யும் அம்சங்களை கொண்டிருந்தது.

    புத்தம் புதிய ஆல்டா VXI+ மாடலிலும் 796சிசி, 3 சிலிண்டர் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த என்ஜின் முந்தைய பி.எஸ். 4 என்ஜினை விட 25 சதவீதம் குறைவான நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும் என கூறப்படுகிறது. 

    புதிய மாருதி ஆல்டோ 800 VXI+ மாடலில் டிரைவர் சைடு ஏர்பேக், ஏ.பி.எஸ், இ.பி.டி. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலெர்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
    ×