search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ
    X
    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

    இரண்டு கோடி கார்களை விநியோகம் செய்து அசத்திய மாருதி சுசுகி

    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் இரண்டு கோடி கார்களை விநியோகம் செய்துள்ளது.



    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை மொத்தம் இரண்டு கோடி வாகனங்களை இந்தியாவில் விநியோகம் செய்துள்ளது. 

    இரண்டு கோடி யூனிட்கள் என்பது ஒட்டுமொத்த விற்பனை விவரம் என்றபோதும், இத்தகைய மைல்கல்லை இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனமும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை மாருதி சுசுகி நிறுவனம் 37 ஆண்டுகளில் எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் கார் டிசம்பர் 1983 ஆண்டில் விற்பனை செய்யப்பட்டது.

    மாருதி சுசுகி செலரியோ

    இந்திய விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை எட்ட 27 ஆண்டுகளை மாருதி சுசுகி எடுத்துக் கொண்டது. பின் அடுத்த ஒரு கோடி யூனிட்களை கடக்க மாருதி சுசுகி நிறுவனம் வெறும் எட்டு ஆண்டுகளையே எடுத்துக் கொண்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் மாருதி 800 மாடலின் மூலம் இந்திய சந்தையில் களமிறங்கியது. இந்த கார் இன்றுவரை அதிக பிரபல மாடலாக விளங்கி வருகிறது.  

    மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் சிறிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் மாருதி நிறுவனம் சுமார் 50 எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சந்தையில் சிறப்பான எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×