என் மலர்tooltip icon

    கார்

    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் தனது ஏ4 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஏ4 பேஸ்லிப்ட் கார் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

     ஆடி ஏ4

    இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்திய சந்தையில் அறிமுகமானதும் புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    டெஸ்லா நிறுவனத்தின் புதிய மாடல் 3 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இன்க் இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகிறது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது என்ட்ரி லெவல் மாடல் 3, மாடலை முதற்கட்டமாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

    டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடு பற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் முதல் கார் மாடல் ஜூன் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     டெஸ்லா மாடல் 3

    மேலும் டெஸ்லா மாடல் 3 முன்பதிவு ஜனவரி 2021 வாக்கில் துவங்கலாம் என தெரிகிறது. முன்னதாக 2016 ஆண்டு வாக்கில் மாடல் 3 முன்பதிவு துவங்கியது. எனினும், எலெக்ட்ரிக் வாகன விதிமுறை மற்றும் இறக்குமதி வரி விவகாரங்கள் காரணமாக வெளியீடு தாமதமானது.

    டெஸ்லா மாடல் 3 விநியோகம் 2021-22 முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 55 லட்சத்தில் துவங்கி ரூ. 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் இதன் விற்பனை நேரடியாக டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் நிறுவனம் தனது புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விநியோகத்தை துவங்கி இருக்கிறது. நிசான் மேக்னைட் மாடல் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் களமிறங்கி இருக்கும் புதிய மாடல் ஆகும். மேலும் இது இந்த பிரிவில் கிடைக்கும் குறைந்த விலை மாடல் ஆகும்.

    முதற்கட்டமாக நிசான் மேக்னைட் விநியோகம் டெல்லியில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் நிசான் மேக்னைட் எக்ஸ்வி வேரியண்ட் ஆகும். புதிய நிசான் மேக்னைட் மாடல் எட்டு வித நிறங்களில் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் இந்திய சந்தையில் 13 ஜனவரி, 2021, தேதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு பற்றி டாடா மோட்டார்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    எனினும், இவ்விழாவில் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட அல்ட்ரோஸ் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் டாடா அல்ட்ரோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    அந்த வகையில் விரைவில் இரண்டு வகை என்ஜின்களை டாடா மோட்டார்ஸ் இந்த மாடலில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினாக இருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

     டாடா அல்ட்ரோஸ்

    இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் டிசிடி யூனிட் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய டர்போ என்ஜின் உயர் ரக மாடல்களில் மட்டுமே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடல் புதிய ஹூண்டாய் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் போக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய மாடல் மரினா புளூ நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது.

    யமஹா நிறுவனத்தின் புதிய 2021 எம்டி125 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    யமஹா நிறுவனம் தனது எம்டி ஸ்டிரீட்பைட்டர் சீரிசில் சிறிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 2021 எம்டி125 என அழைக்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ஸ்டாம் புளுயோ நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஐகான் புளூ, டெக் பிளாக் போன்ற நிறங்களிலும் இந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது.

    புதிய நிறங்கள் தவிர 2021 யமஹா எம்டி125 மோட்டார்சைக்கிளில் 11 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

     யமஹா எம்டி125

    சஸ்பென்ஷனிற்கு முன்புறம் இன்வெர்ட் செய்யப்பட்ட போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. புதிய யமஹா எம்டி125 இந்திய சந்தையில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலை மாற்றத்திற்கு தேதி குறித்து இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா தனது வாகனங்கள் விலையை 2021, ஜனவரி 4 ஆம் தேதி முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவீதம் வரை அதிகரிக்க இருக்கிறது. உற்பத்தி பணிகளில் செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    தற்சமயம் பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னை ஆலையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்1, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மற்றும் மினி கண்ட்ரிமேன் மாடல்களை உற்பத்தி செய்கிறது.

     பிஎம்டபிள்யூ கார்

    இவை தவிர பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ எக்ஸ்6, பிஎம்டபிள்யூ இசட்4, பிஎம்டபிள்யூ எம்2 காம்படீஷன், பிஎம்டபிள்யூ எம்5 காம்படீஷன், பிஎம்டபிள்யூ எம்8கூப், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் உள்ளிட்ட மாடல்களை சிபியு முறையில் கொண்டுவருகிறது.

    இத்துடன் மினி 3 டோர், மினி 5 டோர், மினி கன்வெர்டிபில், மினி கிளப்மேன் மறஅறும் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஹேட்ச் உள்ளிட்டவை இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலான காம்பஸ் எஸ்யுவி-க்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஆண்டு இறுதியை முன்னிட்டு ஜீப் காம்பஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இவை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப மாறுபடும்.

    இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஸ்போர்ட் பிளஸ், லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட்ட பிளஸ், நைட் ஈகிள் மற்றும் ஹார்டுகோர் டிரெயில்ஹாக் என ஆறுவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் டாப் எண்ட் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் அக்சஸரீ உள்ளிட்ட வகைகளில் வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்குவோருக்கு சலுகைகள் வெவ்வேறு வகைகளில் வழங்கப்படுகின்றன.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஏ4 பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவை துவங்கி உள்ளது. முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி இந்தியா வலைதளம் மற்றும் விற்பனையகங்களுக்கு சென்று மேற்கொள்ள முடியும்.

    இந்தியாவில் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்யும் அனைவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கான சிறப்பு சர்வீஸ் பேக்கேஜ் வழங்குவதாக ஆடி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     ஆடி ஏ4

    புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அறிமுகமானதும் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸஇ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு துவங்கிய 15 நாட்களில் புதிய மைல்கல் கடந்துள்ளது.

    நிசான் இந்தியா நிறுவனம் மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவு துவங்கிய 15 நாட்களில் 15 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்த மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய நிசான் மேக்னைட் மாடல் எட்டு வித நிறங்களில் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

     நிசான் மேக்னைட்

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் கடந்த ஆண்டுகளில் அறிமுகமாகி இருக்கின்றன. இதில் அனைத்து மாடல்களையும் நினைவில் கொள்ள முடியாது என்றாலும், சில மாடல்கள் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகின்றன.

    அந்த வகையில் இன்றும் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் முதலிடம் பிடித்து இருக்கிறது. 2005 ஆம் ஆண்டு முதல் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் பட்டியலில் ஸ்விப்ட் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்த ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15,798 ஸ்விப்ட் யூனிட்களை மாருதி சுசுகி விற்பனை செய்து இருக்கிறது. மேலும் கடந்த ஆறு மாதங்களில் அதிகம் விற்பனையாகும் பத்து கார்களில் ஏழு மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தை சேர்ந்தவை ஆகும்.

    ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள விற்பனையாளர்கள் புதிய மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் 2021 குவான்சோ சர்வதேச மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி முன்புறம் புதுவித எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட்

    இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், பாக் லேம்ப், முற்றிலும் புது வடிவமைப்பு கொண்ட ஏர் இன்டேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. காரின் பக்கவாட்டுகளில் பெரும் மாற்றங்கள் இன்றி முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இது புதிய அலாய் வீல்கள், ட்வீக் செய்யப்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    2021 பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்சமயம் விற்பனையாகும் மாடலிலும் இதே என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்த என்ஜின்கள் முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

    இத்துடன் பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் யூனிட், டீசல் என்ஜின் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய எம்பிவி கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட முற்றிலும் புதிய எம்பிவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் புதிய கியா எம்பிவி மாடல் இந்திய சந்தையில் 2022 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய எம்பிவி மாடல் கார்னிவல் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என  தெரிகிறது. அளவில் புதிய கார் மஹிந்திரா மராசோ மாடலுக்கு இணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அளவில் இது மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களுக்கு நடுவில் இருக்கும் என தெரிகிறது.

    மேலும் இந்த மாடல் ஏழு பேர் பயணிக்கும் இருக்கைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இது கூர்மையான தோற்றம் மற்றும் ஸ்போர்ட் டிசைன் லைன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் டைகர் நோஸ் கிரில் வழங்கப்படும் என தெரிகிறது.

    கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 115 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. இந்த எம்பிவி மாடல் பல்வேறு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    ×