என் மலர்tooltip icon

    கார்

    மஹிந்திரா நிறுவன வாகனங்களின் விலை இந்த தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன் படி விலை உயர்வு ஜனவரி 1, 2021 முதல் அமலாக இருக்கிறது. விலை உயர்வு பயணிகள் வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கும் பொருந்தும்.

    உதிரிபாகங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு கட்டணம் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. வெவ்வேறு மாடல்களின் புதிய விலை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    கடந்த நிதியாண்டு வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் பல்வேறு சலுகைகள் மற்றும் கவர்ச்சிகர தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்தது. இதுதவிர டிசம்பர் 2020 முதல் ஆன்லைன் மூலம் விற்பனையாகும் அக்சஸரீக்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கி வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் இந்திய முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட் நிறுவனம் புதிய ஐ20 மாடல் காரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 6 ஏர்பேக், 7 ஸ்பீக்கர் அடங்கிய மியூசிக் சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய மேப் வசதி உள்பட சொகுசு வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்கு வந்தது.

    புதிய ரக ஹூண்டாய் ஐ20 கார் முதற்கட்டமாக 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதுதொடர்பாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட் நிறுவனத்தின் (விற்பனை, மார்க்கெட்டிங், சர்வீஸ்) இயக்குனர் தருண் கார்க் கூறியதாவது:-

     ஹூண்டாய் ஐ20

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் 3 வகையான என்ஜின் வடிவமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு சொகுசு மற்றும் நவீன வசதிகள் கொண்ட இந்த கார், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

    குறிப்பாக இளம்வயதினரின் மனதை ஈர்த்துள்ளது. எனவே கார் அறிமுகம் செய்யப்பட்ட 40 நாட்களில், இதுவரையில் 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் டிஆர்டி மாடல் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் டிஆர்டி மாடலின் இந்திய விற்பனையை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பார்ச்சூனர் டிஆர்டி மாடல் லிமிடெட் எடிஷன் எஸ்யுவி ஆகும். இது பல்வேறு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்களை கொண்டிருந்தது.

    தற்சமயம் டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் டிஆர்டி மாடலை தனது வலைதளத்தில் இருந்து நீக்கி உள்ளது. அடுத்த ஆண்டு புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் டிஆர்டி லிமிடெட் எடிஷன் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பார்ச்சூனர் டிஆர்டி மாடலில் டூயல் டோன் ரூஃப், ரக்கட் சார்கோல் பிளாக் ஆர்18 அலாய் வீல்கள், 360 டிகிரி பானரோமிக் வியூ மாணிட்டர், ஆட்டோ ஃபோல்டு ஒஆர்விஎம், டூயல் டோன் டேஷ்போர்டு மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃபிள் பிளேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லிமிடெட் எடிஷன் டொயோட்டா கார் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    ஸ்கோடா நிறுவன கார் மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவன விற்பனையாளர்கள் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து வழங்குகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த சலுகை ஸ்கோடா ரேபிட் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் வேரியண்ட்களுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் ரைடர் வேரியண்ட் விற்பனை நிறுத்தியது. 

     ஸ்கோடா ரேபிட்

    இதுதவிர அடுத்த ஆண்டு ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்கோடா விஷன் இன் எஸ்யுவி, நான்காவது தலைமுறை ஆக்டேவியா, பெட்ரோல் என்ஜின் கொண்ட கோடியக் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    போர்ஷே நிறுவனத்தின் கயென் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்ஷே கயென் எஸ்யுவி மாடல் உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. மைல்கல் எட்டிய யூனிட் ஸ்லோவேகியா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த மாடல் கார்மைன் ரெட் நிறம் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் இந்த மாடல் ஜெர்மனியை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டது. 2002 பாரிஸ் மோட்டார் விழாவில் போர்ஷே கயென் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் போர்ஷே கயென் மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

     போர்ஷே கயென்

    இந்திய சந்தையில் போர்ஷே கயென் மாடல் துவக்க விலை ரூ. 1.19 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்சமயம் இந்த மாடல் கயென், கயென் இ ஹைப்ரிட் மற்றும் கயென் டர்போ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    போர்ஷே கயென் மாடல் இந்திய வேரியண்ட் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல், 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    ஜனவரி 2021 முதல் கார் மாடல்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

    மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. கார் உற்பத்தி செலவீன கட்டணம் உயர்ந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    விலை உயர்வு வெவ்வேறு மாடல்களின் வேரியண்ட்கள் அளவில் வேறுபடும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை ஆல்டோ (ரூ. 2.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) துவங்கி எக்ஸ்எல்6 (ரூ. 9.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

    முன்னதாக டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாருதி சியாஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற மாடல்களுக்கு ரூ.. 51 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடலுக்கான சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கான சந்தா விலையை தற்காலிகமாக குறைத்து உள்ளது. அதன்படி டாடா நெக்சான் இவி சந்தா மாதம் ரூ. 29,500 முதல் துவங்குகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரண்டாவது முறையாக விலை குறைக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக நெக்சான் இவி சந்தா விலை செப்டம்பர் மாதத்தில் ரூ. 41,500 இல் இருந்து ரூ. 34,900 ஆக குறைக்கப்பட்டது. இந்த விலை நெக்சான் இவி 36 மாதங்களுக்கான சந்தா திட்டத்திற்கு டெல்லி பகுதியில் மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

     நெக்சான் இவி

    டாடா நெக்சான் இவி சந்தா விலை ஒவ்வொரு நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. பெங்களூரு, ஐதராபாத், பூனே மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் நெக்சான் இவி கிடைக்கிறது. டாடா நெக்சான் இவி சந்தா முறை 12, 24 அல்லது 36 மாதங்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 மாடல் விற்பனை அடுத்த ஆண்டு நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிரீமியம் எஸ்யுவி மாடல் விற்பனை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அல்டுராஸ் ஜி4 மாடல் இரண்டாம் தலைமுறை சங்யாங் ரெக்ஸ்டான் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

    இந்தியாவில் அல்டுராஸ் ஜி4 மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட்டு இங்குள்ள மஹிந்திரா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு காரணங்களால் மஹிந்திரா மற்றும் சங்யாங் நிறுவனங்களிடையே உள்ள ஒப்பந்தம் முடிவுக்கு வர இருகிறது.

     மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

    தற்சமயம் சுமார் 500 யூனிட்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களை மஹிந்திரா வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்பின் கூடுதல் யூனிட்களை மஹிந்திரா இறக்குமதி செய்யாது என்றே கூறப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 மாடலை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 28.69 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புது ஆக்டேவியா மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஸ்கோடா நிறுவனம் தனது நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடலை சமீப காலமாக சோதனை செய்து வருகிறது. புதிய ஆக்டேவியா மாடல் என்ஜின் விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதன்படி நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடல் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.

    இந்த மாடலில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஎஸ் பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. புது ஆக்டேவியா மாடலில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லேம்ப்கள், பட்டர்பிளை கிரில், 17 இன்ச் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் பெரிய ஃபுளோட்டிங் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அனைத்து பட்டன்கள் மற்றும் நாப்களில் டச் சார்ந்த கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. இதில் 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    நிசான் நிறுவனம் கடந்த வாரம் புதிய மேக்னைட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நிசான் மேக்னைட் மாடல் விலை இந்தியாவில் ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    அறிமுகமானதும் முன்பதிவு துவங்கிய நிலையில், நிசான் மேக்னைட் மாடல் ஐந்து நாட்களில் 5 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிசான் மேக்னைட் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    நிசான் மேக்னைட்

    புதிய நிசான் மேக்னைட் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.35 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இவை அறிமுக விலை தான் என்றும் டிசம்பர் 31, 2020 ஆம் தேதிக்கு பின் இந்த விலை மாற்றப்படும்.

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


    ரெனால்ட் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் பிஎஸ்6 க்விட், டஸ்டர் மற்றும் டிரைபர் போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ. 70 ஆயிரம் வரையும், மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 60 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளன.

     ரெனால்ட் டஸ்டர்

    ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 43 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், ஏஎம்டி வேரியண்ட்களுக்கு ரூ. 10 கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது. 

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று ஒவ்வொரு கார் மாடலுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவைகளாக பிரித்து வழங்கப்படும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் மாடல் புதிய மைல்கல் எட்டி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஜி கிளாஸ் மாடல் உற்பத்தியில் 4 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 1979 ஆண்டுகளில் முதலில் அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் தற்சமயம் ஆஸ்த்ரியாவில் உள்ள கிராஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    2017 ஆம் ஆண்டில் ஜி கிளாஸ் 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தியை கடந்தது. இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடல் ஜி63 ஏஎம்தி மற்றும் ஜி 350டி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது.

     மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ்

    இதுதவிர ஜி கிளாஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடல் இகியூ சப் பிராண்டின் அங்கமாக இருக்கும் என தெரிகிறது.
    ×