என் மலர்tooltip icon

    கார்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இருக்கிறது. டாடா நெக்சான் இவி அந்நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். 

    இந்திய சந்தையில் பத்து மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் 2 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் மொத்தமாக 2200 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

     நெக்சான் எலெக்ட்ரிக்

    முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. அடுத்த மூன்று மாதங்களில் மற்றொரு ஆயிரம் யூனிட்கள் விற்பனைாகி இருக்கின்றன. இந்த வளர்ச்சி கொண்டு நெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளலாம். 

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரிவில் நெக்சான் இவி மாடல் 74 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. நெக்சான் இவி மாடலில் 95kW எலெக்ட்ரிக் மோட்டார், 30.20kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பவர்டிரெயின் 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹோண்டா நிறுவன வாகனங்களுக்கு இந்தியாவில் ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வருடாந்திர சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறு வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    அதன்படி ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. 

     ஹோண்டா கார்

    கடந்த மாதம் ஹோண்டா அமேஸ் சிறப்பு மற்றும் பிரத்யேக எடிஷனை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் ரூ. 12 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடல் ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும், ஹோண்டா சிவிக் பெட்ரோல் மாடல் ரூ. 1 லட்சமும், டீசல் மாடல் ரூ. 2.50 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் முன்பதிவில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை ஐ20 மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இதன் முன்பதிவு துவங்கப்பட்டது. தற்சமயம் புதிய தலைமுறை ஐ20 மாடல் முன்பதிவில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது. 

     ஹூண்டாய் ஐ20

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் துவக்க விலை ரூ. 6.80 லட்சம் என துவங்குகிறது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் விலை இந்திய சந்தையில் மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடல் விலையை உயர்த்துகிறது. ஏற்கனவே மஹிந்திரா தார் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால், விலை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் புதிய மஹிந்திரா தார் மாடல் அக்டோபர் 2 ஆம் தேதி ரூ. 9.8 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் பேஸ் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக புதிய தார் துவக்க விலை ரூ. 11.9 லட்சமாக மாறியது. எனினும், இந்த விலை நேற்று வரை முன்பதிவு செய்தவர்களுக்கானது ஆகும்.

     மஹிந்திரா தார்

    அந்தவகையில் இன்று (டிசம்பர் 1) முதல் புதிய தார் மாடலை முன்பதிவு செய்வோர் சற்றே அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. புதிய தார் மாடலை ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அறிமுக விலையில் வாங்கிடலாம்.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய நிசான் மேக்னைட் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

    புதிய நிசான் மேக்னைட் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    பிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 1.94 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் விற்பனையகத்திற்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம். புதிய காரை இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்சலன்ஸ் கிளப் வடிவமைத்த பிரத்யேக சேவை வழங்கப்படுகிறது. 

     பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன்

    பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலில் 4.4 லிட்டர் எம் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 625 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த மாடல் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் இந்திய வெளியீட்டு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராவிடாஸ் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் விற்பனை பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என கூறப்பட்டது. 

    எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கிராவிடாஸ் மாடல் வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. டாடா நிறுவனத்தின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்யுவி மாடல் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என தெரிகிறது.

     டாடா கிராவிடாஸ்

    புதிய கிராவிடாஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது ஹேரியர் மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. டாடா கிராவிடாஸ் வெளியீடு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    டாடா கிராவிடாஸ் மாடல் அந்நிறுவனத்தின் ஹேரியர் மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷன் ஆகும். இது 63 எம்எம் நீளமாகவும், 80 எம்எம் அகலமாகவும், 2741 எம்எம் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 172 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது மாடல்களின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில டொயோட்டா விற்பனையாளர்கள் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி வெர்ஷன் லீக் ஆகி உள்ளது.

     பார்ச்சூனர் பேஸ்லிப்ட்

    டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. மேலும் இதே மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய பேஸ்லிப்ட் மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    சர்வதேச சந்தையில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 204 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் இதே என்ஜின் 175 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    வால்வோ நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடலை நவம்பர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. 

    இந்தியாவில் மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடல் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது டாப் எண்ட் ஆர் டிசைன் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இதில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. 

     வால்வோ எஸ்60

    இதே என்ஜின் வெவ்வேறு செயல்திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்படுகிறது. இது குறைந்தபட்சம் 190 ஹெச்பி துவங்கி அதிகபட்சம் 390 ஹெச்பி வரையிலான செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய வால்வோ எஸ்60 மாடல் இந்திய சந்தையில் பிஎம்டபியூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடி ஏ4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலான எக்ஸ்சி40 ரீசார்ஜ் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.

    அந்த வகையில் வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடலை இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வால்வோ படிப்படியாக கம்பஷன் என்ஜின் வாகனங்களுக்கு மாற்றாக முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

     வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ்

    வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடல் அந்நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது கம்பஷன் என்ஜின் மற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் பார்க்க ஸ்டான்டர்டு எக்ஸ்சி40 போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரில் இரண்டு 150 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 78 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இதனால் இந்த கார் 402 பிஹெச்பி பவர், 659 என்எம் டார்க் செயல்திறன் வங்கும் திறன் பெற்று இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.  
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் விற்றுத்தீர்ந்ததை தொடர்ந்து புதிய விலை பட்டியலுடன் முன்பதிவு துவங்கி இருக்கிறது.


    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இது சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் மாடல் விலை அக்டோபர் 31 ஆம் தேதி அல்லது முதல் 20 ஆயிரம் முன்பதிவுகளுக்கு ரூ. 28.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அறிமுகமானது முதல் இந்த கார் 2020 ஆண்டுக்கான யூனிட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     எம்ஜி குளோஸ்டர்

    அந்த வகையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் புதிய விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவை அறிமுக விலையை விட ரூ. 1 லட்சம் வரை அதிகம் ஆகும். 

    எம்ஜி குளோஸ்டர் மிட்-லெவல் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்கள் விலை முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வரை அதிகமாகி இருக்கிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் கார் 20 நாட்கள் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐ20 மாடல் முன்பதிவு துவங்கிய 20 நாட்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

    இந்தியாவில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் ரூ. 6,79,900, எக்ஸ்-ஷோரூம் என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் சுமார் 4 ஆயிரம் யூனிட்களை டெலிவரி செய்ததாக அறிவித்தது. முன்பதிவில் 85 சதவீத யூனிட்கள் ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) ட்ரிம்கள் என ஹூண்டாய் அறிவித்து இருக்கிறது.

    புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் ஆறு சிங்கிள் டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும் இது கிடைக்கிறது. 
    ×