என் மலர்tooltip icon

    கார்

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் எஸ்யுவி மாடலை ஜனவரி 28 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. முன்னதாக இந்த மாடல் கான்செப்ட் வெர்ஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. 

    புதிய ரெனால்ட் கைகர் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல்கள், ஸ்ப்லிட் டெயில் லேம்ப் டிசைன், ஸ்கப் பிளேட்கள், ரூப் ரெயில்கள், டூயல் டோன் அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

     ரெனால்ட் கைகர்

    அந்த வகையில் சமீபத்திய ஸ்பை படங்களில், புது ரெனால்ட் கைகர் மாடல் சன்ரூப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ரெனால்ட் கைகர் பிளாட்பார்ம் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் எஸ்யுவியில் வழங்கப்பட்டதை போன்றே உள்ளது.

    புதிய கைகர் மாடலின் உள்புறம் பல்வேறு புது அம்சங்கள், மேம்பட்ட கனெக்டிவிட்டி மற்றும் சவுகரிய வசதிகள் வழங்கப்படுகிறது. இந்த கார் மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், மவுன்டெட் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தைக்கென ஜீப் நிறுவனம் போடும் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    பியட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் தனி பிராண்டு ஜீப் இந்தியாவில் நான்கு புது மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. இவை 2022 ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகிவிடும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் அப்டேட் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து மிட்-சைஸ் மூன்று அடக்கு இருக்கை கொண்ட எஸ்யுவி மாடல், பின் ராங்ளர், கிராண்ட் செரோக்கி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    இவற்றில் ராங்ளர் மற்றும் கிராண்ட் செரோக்கி மாடல்கள் ரங்கூனில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கென ஜீப் நிறுவனம் சுமார் 180 கோடிகளை முதலீடு செய்வதாக அறிவித்து உள்ளது. 

    இந்திய சந்தையில் புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிட்ப் மாடல் ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் ரூ. 42.34 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஆடி இந்தியா நஇறுவனம் 2021 ஏ4 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 42.34 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

     ஆடி ஏ4 பேஸ்லிப்ட்

    புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.8 நொடிகளில் எட்டிவிடுகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய ஆடி ஏ4 மாடலில் ஒற்றை பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட எல்இடி டெயில் லைட்கள், 5 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மேட் இன் இந்தியா ஹூண்டாய் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது மேட்-இன்-இந்தியா ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு தென் ஆப்பிரிக்கா, பெரு மற்றும் சிலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

    மத்திய அரசின் ஆத்மனிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் தனது மாடலை இந்தியாவில் இருந்து மற்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு முதல் தனது ஐ20 மாடலை ஏற்றுமதி செய்து வருகிறது.

     ஹூண்டாய் ஐ20

    நவம்பர் 2020 வரை மட்டும் ஹூண்டாய் நிறுவனம் பழைய ஐ20 மாடல்களில் 5.16 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை ஏற்றுமதி செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 30 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 

    ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க 88 நாடுகளுக்கு தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளராகவும் ஹூண்டாய் இருக்குகிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் பிளஸ் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.


    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஏழு பேர் பயணிக்கும் வேரியண்ட் விற்பனையகம் வர துவங்கியுள்ளது. 

    புதிய ஹெக்டார் கார் முன்புறம் மேம்பட்ட கிரில், டைமண்ட் ஸ்டட் ஸ்டைலிங் வழங்கப்படுகிறது. பம்ப்பரின் கீழ்புறம் ஹெட்லைட் யூனிட் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இந்த காரில் 18-இன்ச் அளவில் 5-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

     எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    காரின் பின்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், இதன் டெயில் லேம்ப்கள் இடையே கிளாஸ் பிளாக் ஸ்ட்ரிப் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்க் நிற தீம் கொண்டுள்ளது. இந்த கார் இரண்டாம் அடுக்கு இருக்கை பென்ச் வடிவம் கொண்டிருக்கிறது.

    புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது.
    டிசம்பர் 2020 வாக்கில் டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டிசம்பர் 2020 மாதத்தில் மட்டும் 7487 யூனிட் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 14 சதவீதம் வளர்ச்சி ஆகும். 

     டொயோட்டா கார்

    கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு விற்பனையை ஒப்பிடும் போது 2020 காலாண்டில் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 2019 டிசம்பர் மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 6544 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலை செய்தது. இதுதவிர புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் டிசம்பர் 2020 விற்பனையில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் டிசம்பர் 2020 மாதத்தில் மட்டும் 1,60,226 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மாருதி சுசுகி 20.2 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 

     மாருதி கார்

    மொத்த விற்பனையில் உள்நாட்டில் மட்டும் 1,46,480 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 9,938 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. இதுதவிர 3808 யூனிட்களை மற்ற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து வழங்கி இருக்கிறது.

    2020-2021 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 4,95,897 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 13.4 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கியது. 

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் ஏப்ரல் முதல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் வெளியீட்டை தொடர்ந்து ஸ்கார்பியோ வெளியீடு நடைபெறும் என தெரிகிறது.

    புதிய எக்ஸ்யுவி500 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுகின்றன. மேலும் இதில் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியணட்டிற்கான டீசர் வெளியிட்டு உள்ளது. டீசர் வீடியோவில் புதிய அல்ட்ரோஸ் மெரினா புளூ எனும் புதிய நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் டிசிடி யூனிட் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். தற்போதைய அல்ட்ரோஸ் மாடல் 1.2 லிட்டர் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய டாடா அல்ட்ரோஸ் மாடல் ஹூண்டாய் ஐ20, போக்ஸ்வேன் போலோ, ஹோண்டா ஜாஸ், மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
    இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகமானதில் டாப் 5 சிறந்த கார்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2020 ஆண்டு சிறப்பான ஒன்றாக அமைந்து இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் துவங்கி, பிஎஸ்6 விதிகள் அமலானது, கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் என பல்வேறு ஏற்ற தாழ்வுகள் நிறைந்து இருந்தது.

    இவற்றுக்கும் மத்தியில் பல்வேறு கார் மாடல்கள் புதிதாகவும், பழைய மாடல்களின் பேஸ்லிப்ட் வேரியண்ட்கள் என ஏராளமான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில், 2020 ஆண்டு அறிமுகமான கார்களின் பத்து சிறந்த மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் ஐ20

    ஹூண்டாய் ஐ20

    ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஐ20 கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.23 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    மஹிந்திரா தார்

    இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் இது மிக குறுகிய காலக்கட்டத்தில் 20 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளது.

    கியா சொனெட் 

    இந்திய சந்தையில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் விலை ரூ. 6.71 லட்சத்தில் துவங்குகிறது. இந்த மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இது ஆறு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    நிசான் மேக்னைட்

    நிசான் மேக்னைட்

    ரூ. 4.99 லட்சம் என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் 15 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. 

    எம்ஜி குளோஸ்டர்

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பெரிய எஸ்யுவி மாடலாக எம்ஜி குளோஸ்டர் மாடலாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்து இருக்கிறது.

    டாடா நெக்சான் இவி

    இவை தவிர இந்த ஆண்டு ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி, டாடா அல்ட்ரோஸ், இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா, டாடா நெக்சான் இவி, எம்ஜி இசட்எஸ் இவி, மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி, டொயோட்டா அர்பன் குரூயிசர், கியா கார்னிவல், ஸ்கோடா கரோக், ஃபோக்ஸ்வேகன் டி ராக், லேண்ட் ரோவர் டிபென்டர் போன்ற மாடல்கள் அறிமுகமாகின.

    இத்துடன் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ எம்8, 8 சீரிஸ் கிரான் கூப், ஆடி ஏ8எல், ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், ஆடி ஆர்எஸ் கியூ8, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் என ஆடம்பர நிறுவனங்களின் கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.


    நிசான் நிறுவனம் தனது மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய நிசான் மேக்னைட் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக இந்த மாடல் விநியோகம் துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஜனவரி 2021 முதல் நிசான் மேக்னைட் பேஸ் மாடல் விலை ரூ. 55 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை எவ்வளவு உயர்த்தப்பட இருக்கிறது என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

     நிசான் மேக்னைட்

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் 6 சீட் வேரியண்ட் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறது.


    மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடலின் 6 சீட் வேரியண்ட் விற்பனையை நிறுத்திவிட்டது. 6 சீட் வேரியண்ட் மாடல்கள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. 

    மஹிந்திரா தார் 6 சீட் வேரியண்ட் மொத்தம் மூன்று ட்ரிம்களில் கிடைத்து வந்தது. தற்சமயம் இந்த மாடல் பிரத்யேகமாக 4 சீட் வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 11.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 

    ×