என் மலர்tooltip icon

    கார்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியணட்டிற்கான டீசர் வெளியிட்டு உள்ளது. டீசர் வீடியோவில் புதிய அல்ட்ரோஸ் மெரினா புளூ எனும் புதிய நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் டிசிடி யூனிட் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். தற்போதைய அல்ட்ரோஸ் மாடல் 1.2 லிட்டர் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய டாடா அல்ட்ரோஸ் மாடல் ஹூண்டாய் ஐ20, போக்ஸ்வேன் போலோ, ஹோண்டா ஜாஸ், மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
    இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகமானதில் டாப் 5 சிறந்த கார்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2020 ஆண்டு சிறப்பான ஒன்றாக அமைந்து இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் துவங்கி, பிஎஸ்6 விதிகள் அமலானது, கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் என பல்வேறு ஏற்ற தாழ்வுகள் நிறைந்து இருந்தது.

    இவற்றுக்கும் மத்தியில் பல்வேறு கார் மாடல்கள் புதிதாகவும், பழைய மாடல்களின் பேஸ்லிப்ட் வேரியண்ட்கள் என ஏராளமான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில், 2020 ஆண்டு அறிமுகமான கார்களின் பத்து சிறந்த மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் ஐ20

    ஹூண்டாய் ஐ20

    ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஐ20 கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.23 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    மஹிந்திரா தார்

    இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் இது மிக குறுகிய காலக்கட்டத்தில் 20 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளது.

    கியா சொனெட் 

    இந்திய சந்தையில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் விலை ரூ. 6.71 லட்சத்தில் துவங்குகிறது. இந்த மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இது ஆறு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    நிசான் மேக்னைட்

    நிசான் மேக்னைட்

    ரூ. 4.99 லட்சம் என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் 15 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. 

    எம்ஜி குளோஸ்டர்

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பெரிய எஸ்யுவி மாடலாக எம்ஜி குளோஸ்டர் மாடலாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்து இருக்கிறது.

    டாடா நெக்சான் இவி

    இவை தவிர இந்த ஆண்டு ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி, டாடா அல்ட்ரோஸ், இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா, டாடா நெக்சான் இவி, எம்ஜி இசட்எஸ் இவி, மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி, டொயோட்டா அர்பன் குரூயிசர், கியா கார்னிவல், ஸ்கோடா கரோக், ஃபோக்ஸ்வேகன் டி ராக், லேண்ட் ரோவர் டிபென்டர் போன்ற மாடல்கள் அறிமுகமாகின.

    இத்துடன் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ எம்8, 8 சீரிஸ் கிரான் கூப், ஆடி ஏ8எல், ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், ஆடி ஆர்எஸ் கியூ8, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் என ஆடம்பர நிறுவனங்களின் கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.


    நிசான் நிறுவனம் தனது மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய நிசான் மேக்னைட் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக இந்த மாடல் விநியோகம் துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஜனவரி 2021 முதல் நிசான் மேக்னைட் பேஸ் மாடல் விலை ரூ. 55 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை எவ்வளவு உயர்த்தப்பட இருக்கிறது என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

     நிசான் மேக்னைட்

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் 6 சீட் வேரியண்ட் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறது.


    மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடலின் 6 சீட் வேரியண்ட் விற்பனையை நிறுத்திவிட்டது. 6 சீட் வேரியண்ட் மாடல்கள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. 

    மஹிந்திரா தார் 6 சீட் வேரியண்ட் மொத்தம் மூன்று ட்ரிம்களில் கிடைத்து வந்தது. தற்சமயம் இந்த மாடல் பிரத்யேகமாக 4 சீட் வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 11.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 

    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் தனது ஏ4 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஏ4 பேஸ்லிப்ட் கார் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

     ஆடி ஏ4

    இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்திய சந்தையில் அறிமுகமானதும் புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    டெஸ்லா நிறுவனத்தின் புதிய மாடல் 3 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இன்க் இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகிறது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது என்ட்ரி லெவல் மாடல் 3, மாடலை முதற்கட்டமாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

    டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடு பற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் முதல் கார் மாடல் ஜூன் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     டெஸ்லா மாடல் 3

    மேலும் டெஸ்லா மாடல் 3 முன்பதிவு ஜனவரி 2021 வாக்கில் துவங்கலாம் என தெரிகிறது. முன்னதாக 2016 ஆண்டு வாக்கில் மாடல் 3 முன்பதிவு துவங்கியது. எனினும், எலெக்ட்ரிக் வாகன விதிமுறை மற்றும் இறக்குமதி வரி விவகாரங்கள் காரணமாக வெளியீடு தாமதமானது.

    டெஸ்லா மாடல் 3 விநியோகம் 2021-22 முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 55 லட்சத்தில் துவங்கி ரூ. 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் இதன் விற்பனை நேரடியாக டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் நிறுவனம் தனது புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விநியோகத்தை துவங்கி இருக்கிறது. நிசான் மேக்னைட் மாடல் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் களமிறங்கி இருக்கும் புதிய மாடல் ஆகும். மேலும் இது இந்த பிரிவில் கிடைக்கும் குறைந்த விலை மாடல் ஆகும்.

    முதற்கட்டமாக நிசான் மேக்னைட் விநியோகம் டெல்லியில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் நிசான் மேக்னைட் எக்ஸ்வி வேரியண்ட் ஆகும். புதிய நிசான் மேக்னைட் மாடல் எட்டு வித நிறங்களில் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் இந்திய சந்தையில் 13 ஜனவரி, 2021, தேதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு பற்றி டாடா மோட்டார்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    எனினும், இவ்விழாவில் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட அல்ட்ரோஸ் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் டாடா அல்ட்ரோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    அந்த வகையில் விரைவில் இரண்டு வகை என்ஜின்களை டாடா மோட்டார்ஸ் இந்த மாடலில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினாக இருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

     டாடா அல்ட்ரோஸ்

    இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் டிசிடி யூனிட் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய டர்போ என்ஜின் உயர் ரக மாடல்களில் மட்டுமே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடல் புதிய ஹூண்டாய் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் போக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய மாடல் மரினா புளூ நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது.

    யமஹா நிறுவனத்தின் புதிய 2021 எம்டி125 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    யமஹா நிறுவனம் தனது எம்டி ஸ்டிரீட்பைட்டர் சீரிசில் சிறிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 2021 எம்டி125 என அழைக்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ஸ்டாம் புளுயோ நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஐகான் புளூ, டெக் பிளாக் போன்ற நிறங்களிலும் இந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது.

    புதிய நிறங்கள் தவிர 2021 யமஹா எம்டி125 மோட்டார்சைக்கிளில் 11 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

     யமஹா எம்டி125

    சஸ்பென்ஷனிற்கு முன்புறம் இன்வெர்ட் செய்யப்பட்ட போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. புதிய யமஹா எம்டி125 இந்திய சந்தையில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலை மாற்றத்திற்கு தேதி குறித்து இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா தனது வாகனங்கள் விலையை 2021, ஜனவரி 4 ஆம் தேதி முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவீதம் வரை அதிகரிக்க இருக்கிறது. உற்பத்தி பணிகளில் செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    தற்சமயம் பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னை ஆலையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்1, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மற்றும் மினி கண்ட்ரிமேன் மாடல்களை உற்பத்தி செய்கிறது.

     பிஎம்டபிள்யூ கார்

    இவை தவிர பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ எக்ஸ்6, பிஎம்டபிள்யூ இசட்4, பிஎம்டபிள்யூ எம்2 காம்படீஷன், பிஎம்டபிள்யூ எம்5 காம்படீஷன், பிஎம்டபிள்யூ எம்8கூப், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் உள்ளிட்ட மாடல்களை சிபியு முறையில் கொண்டுவருகிறது.

    இத்துடன் மினி 3 டோர், மினி 5 டோர், மினி கன்வெர்டிபில், மினி கிளப்மேன் மறஅறும் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஹேட்ச் உள்ளிட்டவை இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலான காம்பஸ் எஸ்யுவி-க்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஆண்டு இறுதியை முன்னிட்டு ஜீப் காம்பஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இவை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப மாறுபடும்.

    இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஸ்போர்ட் பிளஸ், லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட்ட பிளஸ், நைட் ஈகிள் மற்றும் ஹார்டுகோர் டிரெயில்ஹாக் என ஆறுவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் டாப் எண்ட் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் அக்சஸரீ உள்ளிட்ட வகைகளில் வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்குவோருக்கு சலுகைகள் வெவ்வேறு வகைகளில் வழங்கப்படுகின்றன.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஏ4 பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவை துவங்கி உள்ளது. முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி இந்தியா வலைதளம் மற்றும் விற்பனையகங்களுக்கு சென்று மேற்கொள்ள முடியும்.

    இந்தியாவில் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்யும் அனைவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கான சிறப்பு சர்வீஸ் பேக்கேஜ் வழங்குவதாக ஆடி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     ஆடி ஏ4

    புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அறிமுகமானதும் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸஇ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    ×