என் மலர்
கார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 30 ஆயிரம் ஆகும். வாடிக்கையாளர்கள் டாடா வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று புதிய சபாரி மாடலை முன்பதிவு செய்யலாம்.
இந்தியாவில் புதிய சபாரி மாடலுக்கான வினியோகம் பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய சபாரி மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இந்த மாடலில் சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளது. உயரமான பொனெட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.
புதிய சபாரி மாடல் 2 லிட்டர், 4 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இது 168 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கு சந்தையில் போட்டியாக எம்ஜி ஹெக்டார் பிளஸ் உள்ளது.
இந்தியாவில் ஹோண்டா கார் மாடல்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அனைத்து மாடல்களின் விலையையும் இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஹோண்டா ஜாஸ், டபிள்யூஆர்-வி, அமேஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை சிட்டி போன்ற மாடல்கள் விலை உயர்ந்து உள்ளது.
அதிகபட்சமாக கார் மாடல்கள் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது. இது ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும். கார் உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக ஹோண்டா கார்ஸ் தெரிவித்து இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் மாடல் அனைத்து வேரியண்ட்களும் ரூ. 5 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தற்சமயம் இதன் துவக்க விலை ரூ. 7.55 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.79 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஹோண்டா அமேஸ் மாடல் டீசல் சிவிடி வேரியண்ட் தவிர மாற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது. அமேஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8.84 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 7.68 லட்சத்தில் துவங்கி ரூ. 9.99 லட்சம் என மாறி இருக்கிறது.
ஹோண்டா டபிள்யூஆர்-வி பெட்ரோல் மாடல் புதிய விலை ரூ. 8.55 லட்சத்தில் துவங்கி ரூ. 9.75 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9.85 லட்சத்தில் துவங்கி ரூ. 11.05 லட்சம் என மாறி இருக்கிறது. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி என்ட்ரி லெவல் விலை ரூ. 10 ஆயிரமும், டாப் எண்ட் விலை ரூ. 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன்படி புதிய ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் விலை ரூ. 10.99 லட்சத்தில் துவங்கி ரூ. 14.64 லட்சம் என மாறி இருக்கிறது. டீசல் வேரியண்ட் விலை ரூ. 12.49 லட்சத்தில் துவங்கி ரூ. 14.84 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் 2021 ஜனவரி மாத விற்பனை நிலவரத்தை வெளியிட்டு இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜனவரி 2021 மாதத்தில் மட்டும் 60,105 யூனிட்களை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்து இருக்கிறது. இவற்றில் 52,005 யூனிட்கள் உள்நாட்டிலும், 8100 யூனிட்கள் வெளிநாடு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை 23.8 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 42,002 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஏற்றுமதியை பொருத்தவரை 19 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது.

விற்பனை அறிக்கை பற்றி ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் தருன் கார்க் கூறும் போது..,
“2021 ஆண்டு துவக்கத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இரட்டை இலக்க வளர்ச்சியுடன் சிறப்பாக துவங்கி உள்ளது. புத்தம் புதிய கிரெட்டா, புதிய வெர்னா மற்றும் புதிய ஐ20 போன்ற மாடல்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.”
“இந்தியாவில் உலகத்தரம் மிக்க தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் வெளிப்பாடாக ஹூண்டாய் பிராண்டு உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புள்ள கார்ப்பரேட்டாக இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த ஹூண்டாய் முயற்சி செய்யும்.”
என தெரிவித்தார்.
2021 ஜனவரி மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரம் வெளியாகி உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2021 ஜனவரி மாதத்தில் 11,126 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 92 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரியில் டொயோட்டா நிறுவனம் 5,804 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தம் காரணமாக ஒட்டுமொத்த விற்பனை 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இருநிறுவனங்கள் கூட்டணியில் வெளியான முதல் மாடல் டொயோட்டா கிளான்ஸா மாருதியின் பலேனோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவானது.

இதைத் தொடர்ந்து அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு மாடல்களும் டொயோட்டா நிறுவனம் புது பிரிவுகளில் களமிறங்க உதவியாக அமைந்தன.
இதுதவிர டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.
கியா மோட்டார்ஸ் இந்தியா 17 மாதங்களில் இரண்டு லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
கியா கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா, கார் உற்பத்தியில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2020 ஜூலை மாதத்தில் ஒரு லட்சம் யூனிட்டுகள் என்னும் கார் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த பிறகு, அடுத்த 6 மாத காலத்திற்குள் 2 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை எட்டியுள்ளது.
செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகியவற்றின் உற்பத்தியாளரான இந்நிறுவனம், நாட்டில் விற்பனை நடவடிக்கைகள் தொடங்கி 17 மாதங்களுக்குள் 2 லட்சம் கியா வாகனங்களை இந்தியா முழுவதும் அதன் டீலர்ஷிப்களுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது.

டாப்-எண்ட் வேரியண்ட்கள், அதாவது செல்டோஸ் மற்றும் சொனெட்டு மாடல்களின் ஜிடிஎக்ஸ் மற்றும் கார்னிவல் லிமோசின் வேரியண்ட் ஆகியவை மொத்த கார்களில் 60 சதவீதம் விற்பனைக்கு பங்களித்துள்ளன. கியா இந்திய ஆட்டோமொபைல் துறையில் முதல் 5 வாகன உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வருகிறது.
விற்பனை பட்டியலில் செல்டோஸ் 149,428 யூனிட்டுகளுடன், 2020 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் 45,195 யூனிட்களும், கார்னிவல் மொத்தம் 5409 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் எஸ்யுவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட்' நிறுவனத்தின் டஸ்டர், க்விட், டிரைபர் வரிசையில் தற்போது ரெனால்ட் கைகர் என்ற நவீன எஸ்யுவி ரக கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரக கார் ஸ்போர்ட்டியான மற்றும் வலிமையை எடுத்துக்காட்டும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இந்த கார் இயக்கப்படுகிறது. காரை இயக்குபவருக்கு ஏற்றபடி நெகிழ்வுத்தன்மையை வழங்கும் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகளை இந்த மாடல் கொண்டிருக்கிறது.

மேலும் காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.
இதுகுறித்து ரெனோ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான வெங்கட்ராம் மாமிலப்பல்லே கூறும் போது..,
“இந்தியாவில் தொடர்ந்து ரெனால்ட் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது. ரெனால்ட் கைகர் காரை அறிமுகம் செய்வதின் மூலம் இந்தியாவில் மற்றொரு முக்கிய நிலையை நாங்கள் எட்டியுள்ளோம். இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் ஆசைகள் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை'',
என தெரிவித்தார்.
ஜீப் நிறுவனத்தின் புதிய 2021 காம்பஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி துவக்க விலை ரூ. 16.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் அப்டேட்டகள் செய்யப்பட்டுள்ளன.
2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி ஸ்போர்ட், லாங்கிடியூட், லிமிடெட் மற்றும் மாடல் எஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் மாடல் எஸ் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 24.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் நான்கு வேரியண்ட்கள் தவிர ‘80th Anniversary Edition' மாடல் ரூ. 22.96 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்படப்பட்டு இருக்கிறது. 2021 ஜீப் காம்பஸ் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் புதிய காம்பஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.
2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி, 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் 35 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் புதிய நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2, 2020 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் மேக்னைட் மாடல் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும்.

முன்னதாக நிசான் மேக்னைட் விலையில் ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டது. எனினும், இந்த விலை உயர்வு மேக்னைட் பேஸ் மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. விலை உயர்வு காரணமாக நிசான் மேக்னைட் துவக்க விலை தற்சமயம் ரூ. 5.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.
எனினும், இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் தொடர்ந்து குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யுவி ஆக இருக்கிறது. நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகியின் கார் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்விப்ட் மாடலை 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் ஸ்விப்ட் மாடல் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் எனும் பெருமையை பெற்றது.
தற்சமயம் இந்திய விற்பனையில் மாருதி சுசுகி ஸ்விப்ட் 23 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. அறிமுகமான 15 ஆண்டுகளில் ஸ்விப்ட் மாடல் மூன்று தலைமுறை அப்கிரேடுகளை பெற்று இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமான ஐந்து ஆண்டுகளில் ஸ்விப்ட் மாடல் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

பின் 2013 ஆம் ஆண்டில் ஸ்விப்ட் மாடல் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதைத் தொடர்ந்து 2016-இல் 15 லட்சம் யூனிட்களை கடந்தது. அந்த வரிசையில் இந்த ஆண்டு 23 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்புக்கு மத்தியில் 1,60,700 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
“எங்களின் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும், ஸ்விப்ட் பிராண்டு மீது நம்பிக்கை வைப்பதற்கு இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதே ஆதரவு, நம்பிக்கை கொண்டு எதிர்காலத்தில் பல்வேறு மைல்கல் எட்டுவோம் என நம்புகிறேன்.” என மாருதி சுசுகி நிறுவனத்தின் சஷாங் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் ஐ டர்போ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 7.73 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய அல்ட்ரோஸ் டர்போ சார்ஜ் வேரியண்டிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.

தோற்றத்தில் டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வேரியண்ட் ஸ்டான்டர்டு மாடல் போன்றே காட்சியளிக்கிறது. இதன் அம்சங்கள் மற்றும் உபகரணங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் இந்த கார் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், எல்இடி டெயில் லைட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
புதிய காரில் ஐ டர்போ பேட்ஜிங் மற்றும் ஹார்பர் புளூ எனும் நிறத்தில் கிடைக்கிறது. இவை தவிர ஸ்டான்டர்டு வேரியண்ட் போன்றே ஹை ஸ்டிரீட் கோல்டு, டவுன்டவுன் ரெட், மிட்-டவுன் கிரே மற்றும் அவென்யூ வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.
டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 140 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் துவக்க விலை ரூ. 51.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய லிமோசின் வெர்ஷன் ஸ்டான்டர்டு 3 சீரிஸ் சலூன் மாடலின் நீண்ட வீல்-பேஸ் கொண்ட வேரியண்ட் ஆகும். 3 சீரிஸ் ஸ்டான்டர்டு மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கிரான் லிமோசின் மாடல் 2 பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 53.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கிரான் லிமோசின் மாடலுக்கான முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 258 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.6 நொடிகளில் எட்டிவிடும். இரு என்ஜின்களுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் மாடல் புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ரெனால்ட் கைகர் மாடல் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. டீசரில் புதிய மாடல் ஹெட்லேம்ப் டிசைன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
டீசரின் படி 2021 ரெனால்ட் கைகர் மாடலில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடல் ஹெட்லேம்ப் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இது சி வடிவ ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மாடலில் டோ-ஸ்லாட் கிரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரெனால்ட் லோகோ எல்இடி டெயில் லைட்களின் கீழ் பொருத்தப்படுகிறது. புதிய ரெனால்ட் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 76 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் நிசான் மேக்னைட், கியா சொனெட், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் குரூயிசர், டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்யுவி300 மற்றும் போர்டு இகோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






