search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா சபாரி
    X
    டாடா சபாரி

    புதிய சபாரி மாடல் முன்பதிவு துவக்கம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 30 ஆயிரம் ஆகும். வாடிக்கையாளர்கள் டாடா வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று புதிய சபாரி மாடலை முன்பதிவு செய்யலாம்.

    இந்தியாவில் புதிய சபாரி மாடலுக்கான வினியோகம் பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய சபாரி மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

     டாடா சபாரி

    இந்த மாடலில் சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளது. உயரமான பொனெட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய சபாரி மாடல் 2 லிட்டர், 4 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இது 168 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கு சந்தையில் போட்டியாக எம்ஜி ஹெக்டார் பிளஸ் உள்ளது.
    Next Story
    ×