என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகியின் கார் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்விப்ட் மாடலை 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் ஸ்விப்ட் மாடல் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் எனும் பெருமையை பெற்றது.

    தற்சமயம் இந்திய விற்பனையில் மாருதி சுசுகி ஸ்விப்ட் 23 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. அறிமுகமான 15 ஆண்டுகளில் ஸ்விப்ட் மாடல் மூன்று தலைமுறை அப்கிரேடுகளை பெற்று இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமான ஐந்து ஆண்டுகளில் ஸ்விப்ட் மாடல் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. 

     மாருதி சுசுகி ஸ்விப்ட்

    பின் 2013 ஆம் ஆண்டில் ஸ்விப்ட் மாடல் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதைத் தொடர்ந்து 2016-இல் 15 லட்சம் யூனிட்களை கடந்தது. அந்த வரிசையில் இந்த ஆண்டு 23 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்புக்கு மத்தியில் 1,60,700 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. 

    “எங்களின் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும், ஸ்விப்ட் பிராண்டு மீது நம்பிக்கை வைப்பதற்கு இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதே ஆதரவு, நம்பிக்கை கொண்டு எதிர்காலத்தில் பல்வேறு மைல்கல் எட்டுவோம் என நம்புகிறேன்.” என மாருதி சுசுகி நிறுவனத்தின் சஷாங் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் ஐ டர்போ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 7.73 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய அல்ட்ரோஸ் டர்போ சார்ஜ் வேரியண்டிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.

    டாடா அல்ட்ரோஸ்

    தோற்றத்தில் டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வேரியண்ட் ஸ்டான்டர்டு மாடல் போன்றே காட்சியளிக்கிறது. இதன் அம்சங்கள் மற்றும் உபகரணங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் இந்த கார் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், எல்இடி டெயில் லைட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

    புதிய காரில் ஐ டர்போ பேட்ஜிங் மற்றும் ஹார்பர் புளூ எனும் நிறத்தில் கிடைக்கிறது. இவை தவிர ஸ்டான்டர்டு வேரியண்ட் போன்றே ஹை ஸ்டிரீட் கோல்டு, டவுன்டவுன் ரெட், மிட்-டவுன் கிரே மற்றும் அவென்யூ வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

    டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 140 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் துவக்க விலை ரூ. 51.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய லிமோசின் வெர்ஷன் ஸ்டான்டர்டு 3 சீரிஸ் சலூன் மாடலின் நீண்ட வீல்-பேஸ் கொண்ட வேரியண்ட் ஆகும். 3 சீரிஸ் ஸ்டான்டர்டு மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கிரான் லிமோசின் மாடல் 2 பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 53.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கிரான் லிமோசின் மாடலுக்கான முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

     பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின்

    புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 258 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.6 நொடிகளில் எட்டிவிடும். இரு என்ஜின்களுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் மாடல் புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ரெனால்ட் கைகர் மாடல் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. டீசரில் புதிய மாடல் ஹெட்லேம்ப் டிசைன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    டீசரின் படி 2021 ரெனால்ட் கைகர் மாடலில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடல் ஹெட்லேம்ப் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இது சி வடிவ ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     ரெனால்ட் கைகர்

    இந்த மாடலில் டோ-ஸ்லாட் கிரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரெனால்ட் லோகோ எல்இடி டெயில் லைட்களின் கீழ் பொருத்தப்படுகிறது. புதிய ரெனால்ட் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 76 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் நிசான் மேக்னைட், கியா சொனெட், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் குரூயிசர், டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்யுவி300 மற்றும் போர்டு இகோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.  

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தி இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 34 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படுகிறது.

    ஆல்டோ, செலரியோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விப்ட், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது. மாருதி டூர் எஸ் மாடலின் விலையில் ரூ. 5061 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 7 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     மாருதி சுசுகி கார்

    ஸ்விப்ட் மற்றும் எர்டிகா போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்படு இருக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா, ஆல்டோ, டிசையர் மற்றும் வேகன் ஆர் போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 10 ஆயிரம், 12,500, ரூ. 14 ஆயிரம் மற்றும் ரூ. 23 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.

    முன்னதாக டிசம்பர் 2020 மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது விலையை உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. அதன்படி விலை உயர்வு தற்சமயம் அமலாகி இருக்கிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலை இம்மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்த மாடல் துவக்க விலை ரூ. 29.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய பேஸ்லிப்ட் மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் கணிசமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. தற்சமயம் 2021 பார்ச்சூனர் மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இந்த மாடல் ஸ்டான்டர்டு மற்றும் லெஜண்டர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     பார்ச்சூனர்

    டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.

    பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 177 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் 2021 சூப்பர்ப் மாடல் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட சூப்பர்ப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 சூப்பர்ப் மாடல் துவக்க விலை ரூ. 31.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 34.99 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2021 ஸ்கோடா சூப்பர்ப் மாடல் தோற்றத்தில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் உள்ள மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்களுடன், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவே இன்டிகேட்டர்களாகவும் செயல்படுகின்றன.

     2021 ஸ்கோடா சூப்பர்ப்

    காரின் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட இன்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் வாய்ஸ் கமாண்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சூப்பர்ப் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய டிபிஎக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சர்வதேச சந்தையை தொடர்ந்து புதிய டிபிஎக்ஸ் சூப்பர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் விலை ரூ. 3.82 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் முதல் பெர்பார்மன்ஸ் எஸ்யுவி மாடலாக இது வெளியாகி உள்ளது.

    புதிய டிபிஎக்ஸ் புல்-சைஸ் 5-சீட் எஸ்யுவி மாடல் ஆகும். இதன் முன்புறம் கிளாம்ஷெல் பொனெட், டூயல் ஏர் வென்ட்களுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழக்கமான டிபி முன்புற கிரில் வழங்கப்பட்டு உள்ளது. பம்ப்பரின் கீழ்புறத்தில் எல்இடி டிஆர்எல்கள் வழஹ்கப்பட்டு இருக்கிறது.

    ஆஸ்டின் மார்டின் டிபிஎக்ஸ்

    இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. பின்புற டெயில் லைட் வேண்டேஜ் மாடலில் இருந்ததை போன்று காட்சியளிக்கிறது. இத்துடன் ரூப்-மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், பவர்டு டெயில் கேட் மற்றும் ட்வின் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. 
    2020 ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடலாக நெக்சான் இவி காரை 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் 2020 ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது.

    2020 ஆண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2529 நெக்சான் இவி மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் நெக்சான் இவி மட்டும் 63.2 சதவீத பங்குகளை பெற்று உள்ளது. டாடா நெக்சான் இவி மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     டாடா நெக்சான் இவி

    கவர்ச்சிகர விலை, சிறந்த செயல்திறன், நீண்ட தூரம் பயணிக்கும் வசதி மற்றும் இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் என பல்வேறு காரணங்களால் இதன் விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மாடல் துவக்க விலை ரூ. 13.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ இந்தியா புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 40.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய 220ஐ மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டீரிங் வீலில் பேடிள் ஷிப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்

    பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. தோற்றத்தில் இந்த மாடல் பார்க்க இதன் டீசல் வேரியண்ட்டை போன்று காட்சியளிக்கிறது. 

    இத்துடன் புதிய காரில் பிஎம்டபிள்யூ பாரம்பரிய கிட்னி கிரில், பிரேம்லெஸ் டோர், எல்இடி ஹெட்லைட்கள், டெயில்-லைட் யூனிட்கள், ஸ்லோப்பிங் ரூப்லைன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 17 இன்ச் டபிள் ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய சி5 ஏர்கிராஸ் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் தனது சி5 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் இது சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும்.

    தற்போதைய தகவல்களின் படி புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் ஓசூரில் உள்ள சிட்ரோயன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. 

    தற்சமயம் சிட்ரோயன் நிறுவனம் தனது விற்பனை மையங்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் அறிமுகமானதும் விற்பனைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது டஸ்டர், டிரைபர் மற்றும் க்விட் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. கார் மாடல் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக ரெனால்ட் இந்தியா தெரிவித்து உள்ளது.

    விலை உயர்வின் படி ரெனால்ட் க்விட் துவக்க விலை ரூ. 3,12,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5,31,200 என மாறி இருக்கிறது. ரெனால்ட் க்விட் மாடல் விலை ரூ. 18,500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் மாடல் விலை ரூ. 5.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.50 லட்சம் என மாறி இருக்கிறது. அதன்படி டிரைபர் மாடல் விலை ரூ. 16 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டஸ்டர் எஸ்யுவி விலை ரூ. 28 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெனால்ட் டஸ்டர் மாடல் விலை ரூ. 9.57 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.87 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ×