என் மலர்tooltip icon

    கார்

    சென்னையில் உள்ள ஆலையில் ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் எஸ்யுவி- கைகர் மாடலின் உற்பத்தியை சென்னை ஆலையில் துவங்கி இருக்கிறது. புதிய கைகர் மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரெனால்ட் கைகர் மாடலின் இந்திய விலை விவரங்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய கைகர் மாடல் வினியோகம் விரைவில் துவங்கலாம் என கூறப்படுகிறது.

     ரெனால்ட் கைகர்

    புதிய கைகர் மாடல் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக ரெனால்ட் தெரிவித்து உள்ளது. கைகர் மாடல் விற்பனைகத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய கைகர் மாடலில் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.
    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது 2021 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் மேம்பட்ட இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய 2021 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் துவக்க விலை ரூ. 21 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடல் எக்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 20,99,800 மற்றும் ரூ. 24,18,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் ஐஸ்மார்ட் சிஸ்டம் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     2021 எம்ஜி இசட்எஸ்

    இந்த தொழில்நுட்பம் 2021 ஹெக்டார் சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 35-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்களை புரிந்து கொண்டு பதில் அளிக்கிறது. மேலும் இதை கொண்டு காரின் பல்வேறு அம்சங்களை குரல்வழியே இயக்க முடியும். இத்துடன் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் முந்தைய மாடலை விட அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    2021 எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் மாடலில் 44.5 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 143 பிஹெச்பி பவர், 353 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஹை-டெக் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 419 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இசட்எஸ் எலெக்ட்ரிக் காருடன் 50 kW DC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது காரை 0 முதல் 80 சதவீத சார்ஜ் செய்ய 50 நிமிடங்களை எடுத்து கொள்கிறது. வழக்கமான ஸ்டான்டர்டு ஏசி சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஆறு முதல் எட்டு மணி நேரத்தை எடுத்து கொள்கிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 2021 ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி உள்ளது. முன்னதாக ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதன் விலை உயர்த்தப்பட்டது. கார் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    2021 எம்ஜி ஹெக்டார் பேஸ் வேரியண்ட்களான ஸ்டைல் மற்றும் சூப்பர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவை தொடர்ந்து ரூ. 12.90 லட்சம் மற்றும் ரூ. 13.89 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மிட் ரேன்ஜ் ஸ்மார்ட் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

     எம்ஜி ஹெக்டார்

    அதன்படி எம்ஜி ஹெக்டார் ஸ்மார்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 15.75 லட்சம் மற்றும் ரூ. 17.02 லட்சம் என மாறி இருக்கின்றன. டாப் எண்ட் ஷார்ப் வேரியண்ட்களின் விலையும் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஹெக்டார் பிளாஸ் ஸ்டைல் மற்றும் சூப்பர் வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் ஸ்மார்ட் எம்டி டீசல் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் ஷார்ப் வேரியண்ட் விலையும் ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட் எம்டி மற்றும் டீசல் எம்டி 7 சீட் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் 2021 பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர் மாடல்களின் முதல் மாத முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது புதிய பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர் மாடல்கள் 5 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா இந்தியாவில் 2021 பார்ச்சூனர் மாடல்களை ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் புதிய பார்ச்சூனர் மாதல் துவக்க விலை ரூ. 29.98 லட்சம் என்றும் டாப் எண்ட் லெஜண்டர் வேரியண்ட் விலை ரூ. 37.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர்

    2021 டொயோட்டா பார்ச்சூனர் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.

    பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 177 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 30 ஆயிரம் ஆகும். வாடிக்கையாளர்கள் டாடா வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று புதிய சபாரி மாடலை முன்பதிவு செய்யலாம்.

    இந்தியாவில் புதிய சபாரி மாடலுக்கான வினியோகம் பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய சபாரி மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

     டாடா சபாரி

    இந்த மாடலில் சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளது. உயரமான பொனெட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய சபாரி மாடல் 2 லிட்டர், 4 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இது 168 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கு சந்தையில் போட்டியாக எம்ஜி ஹெக்டார் பிளஸ் உள்ளது.
    இந்தியாவில் ஹோண்டா கார் மாடல்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அனைத்து மாடல்களின் விலையையும் இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஹோண்டா ஜாஸ், டபிள்யூஆர்-வி, அமேஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை சிட்டி போன்ற மாடல்கள் விலை உயர்ந்து உள்ளது.

    அதிகபட்சமாக கார் மாடல்கள் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது. இது ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும். கார் உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக ஹோண்டா கார்ஸ் தெரிவித்து இருக்கிறது.

     ஹோண்டா கார்

    ஹோண்டா ஜாஸ் மாடல் அனைத்து வேரியண்ட்களும் ரூ. 5 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தற்சமயம் இதன் துவக்க விலை ரூ. 7.55 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.79 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஹோண்டா அமேஸ் மாடல் டீசல் சிவிடி வேரியண்ட் தவிர மாற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது. அமேஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8.84 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 7.68 லட்சத்தில் துவங்கி ரூ. 9.99 லட்சம் என மாறி இருக்கிறது.

    ஹோண்டா டபிள்யூஆர்-வி பெட்ரோல் மாடல் புதிய விலை ரூ. 8.55 லட்சத்தில் துவங்கி ரூ. 9.75 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9.85 லட்சத்தில் துவங்கி ரூ. 11.05 லட்சம் என மாறி இருக்கிறது. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி என்ட்ரி லெவல் விலை ரூ. 10 ஆயிரமும், டாப் எண்ட் விலை ரூ. 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதன்படி புதிய ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் விலை ரூ. 10.99 லட்சத்தில் துவங்கி ரூ. 14.64 லட்சம் என மாறி இருக்கிறது. டீசல் வேரியண்ட் விலை ரூ. 12.49 லட்சத்தில் துவங்கி ரூ. 14.84 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனம் 2021 ஜனவரி மாத விற்பனை நிலவரத்தை வெளியிட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜனவரி 2021 மாதத்தில் மட்டும் 60,105 யூனிட்களை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்து இருக்கிறது. இவற்றில் 52,005 யூனிட்கள் உள்நாட்டிலும், 8100 யூனிட்கள் வெளிநாடு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை 23.8 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 42,002 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஏற்றுமதியை பொருத்தவரை 19 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது. 

     ஹூண்டாய் கார்

    விற்பனை அறிக்கை பற்றி ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் தருன் கார்க் கூறும் போது..,

    “2021 ஆண்டு துவக்கத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இரட்டை இலக்க வளர்ச்சியுடன் சிறப்பாக துவங்கி உள்ளது. புத்தம் புதிய கிரெட்டா, புதிய வெர்னா மற்றும் புதிய ஐ20 போன்ற மாடல்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.”

    “இந்தியாவில் உலகத்தரம் மிக்க தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் வெளிப்பாடாக ஹூண்டாய் பிராண்டு உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புள்ள கார்ப்பரேட்டாக இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த ஹூண்டாய் முயற்சி செய்யும்.”

    என தெரிவித்தார்.
    2021 ஜனவரி மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரம் வெளியாகி உள்ளது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2021 ஜனவரி மாதத்தில் 11,126 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 92 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரியில் டொயோட்டா நிறுவனம் 5,804 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தம் காரணமாக ஒட்டுமொத்த விற்பனை 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இருநிறுவனங்கள் கூட்டணியில் வெளியான முதல் மாடல் டொயோட்டா கிளான்ஸா மாருதியின் பலேனோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவானது. 

     டொயோட்டா கார்

    இதைத் தொடர்ந்து அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு மாடல்களும் டொயோட்டா நிறுவனம் புது பிரிவுகளில் களமிறங்க உதவியாக அமைந்தன. 

    இதுதவிர டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.
    கியா மோட்டார்ஸ் இந்தியா 17 மாதங்களில் இரண்டு லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.


    கியா கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா, கார் உற்பத்தியில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2020 ஜூலை மாதத்தில் ஒரு லட்சம் யூனிட்டுகள் என்னும் கார் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த பிறகு, அடுத்த 6 மாத காலத்திற்குள் 2 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை எட்டியுள்ளது.

    செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகியவற்றின் உற்பத்தியாளரான இந்நிறுவனம், நாட்டில் விற்பனை நடவடிக்கைகள் தொடங்கி 17 மாதங்களுக்குள் 2 லட்சம் கியா வாகனங்களை இந்தியா முழுவதும் அதன் டீலர்ஷிப்களுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது.

     கியா கார்

    டாப்-எண்ட் வேரியண்ட்கள், அதாவது செல்டோஸ் மற்றும் சொனெட்டு மாடல்களின் ஜிடிஎக்ஸ் மற்றும் கார்னிவல் லிமோசின் வேரியண்ட் ஆகியவை மொத்த கார்களில் 60 சதவீதம் விற்பனைக்கு பங்களித்துள்ளன. கியா இந்திய ஆட்டோமொபைல் துறையில் முதல் 5 வாகன உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வருகிறது. 

    விற்பனை பட்டியலில் செல்டோஸ் 149,428 யூனிட்டுகளுடன், 2020 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் 45,195 யூனிட்களும், கார்னிவல் மொத்தம் 5409 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன.
    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் எஸ்யுவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ரெனால்ட்' நிறுவனத்தின் டஸ்டர், க்விட், டிரைபர் வரிசையில் தற்போது ரெனால்ட் கைகர் என்ற நவீன எஸ்யுவி ரக கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரக கார் ஸ்போர்ட்டியான மற்றும் வலிமையை எடுத்துக்காட்டும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இந்த கார் இயக்கப்படுகிறது. காரை இயக்குபவருக்கு ஏற்றபடி நெகிழ்வுத்தன்மையை வழங்கும் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகளை இந்த மாடல் கொண்டிருக்கிறது. 

     ரெனால்ட் கைகர்

    மேலும் காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.

    இதுகுறித்து ரெனோ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான வெங்கட்ராம் மாமிலப்பல்லே கூறும் போது..,

    “இந்தியாவில் தொடர்ந்து ரெனால்ட் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது. ரெனால்ட் கைகர் காரை அறிமுகம் செய்வதின் மூலம் இந்தியாவில் மற்றொரு முக்கிய நிலையை நாங்கள் எட்டியுள்ளோம். இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் ஆசைகள் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை'', 

    என தெரிவித்தார்.
    ஜீப் நிறுவனத்தின் புதிய 2021 காம்பஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.


    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி துவக்க விலை ரூ. 16.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் அப்டேட்டகள் செய்யப்பட்டுள்ளன.

    2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி ஸ்போர்ட், லாங்கிடியூட், லிமிடெட் மற்றும் மாடல் எஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் மாடல் எஸ் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 24.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     2021 ஜீப் காம்பஸ்

    புதிய ஜீப் காம்பஸ் நான்கு வேரியண்ட்கள் தவிர ‘80th Anniversary Edition' மாடல் ரூ. 22.96 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்படப்பட்டு இருக்கிறது. 2021 ஜீப் காம்பஸ் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் புதிய காம்பஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. 

    2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி, 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் 35 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2, 2020 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் மேக்னைட் மாடல் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும்.

     நிசான் மேக்னைட்

    முன்னதாக நிசான் மேக்னைட் விலையில் ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டது. எனினும், இந்த விலை உயர்வு மேக்னைட் பேஸ் மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. விலை உயர்வு காரணமாக நிசான் மேக்னைட் துவக்க விலை தற்சமயம் ரூ. 5.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

    எனினும், இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் தொடர்ந்து குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யுவி ஆக இருக்கிறது. நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ×