என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் புது மினி எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய என்ட்ரி லெவல் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மினி எஸ்யுவி மாடல் பையான் என அழைக்கப்படுகிறது. இது ஹூண்டாய் கோனா, டக்சன், சேன்டா எப்இ மற்றும் நெக்சோ மாடல்களின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.

    புதிய மினி எஸ்யுவி மாடல் ஒற்றை கிரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள், முக்கோண வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இந்த மாடல் 16 அல்லது 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் அம்பு வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், சிவப்பு நிற ஸ்டிரைப், பிளாக்டு-அவுட் டெயில் கேட் உள்ளது. 
     

     ஹூண்டாய் பையான்

    உற்புறம் புது மினி எஸ்யுவி மாடலில் 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8-இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வயர்லெஸ் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் கேபின் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் பையான் மாடலில் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது 100 பிஹெச்பி அல்லது 120 பிஹெச்பி திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி அல்லது 6 ஸ்பீடு ஐஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.

    இதுதவிர 1.2 லிட்டர் என்ஜினும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்  பிஹெச்பி திறன் கொண்டது ஆகும். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்குகிறது.
    சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது சி5 ஏர்கிராஸ் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகங்களில் மேற்கொள்ளலாம்.

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு பராமரிப்பு சேவை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதன் வினியோகம் ஜூன் 30 ஆம் தேதி துவங்குகிறது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    சி5 ஏர்கிராஸ் மாடலில் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டான்ஸ், ட்வின்-ஸ்லாட் முன்புற கிரில், டூயல் பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லேம்ப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், குரோம் பாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இத்துடன் பியல் வைட், குமுலஸ் கிரே, டிஜூசா புளூ மற்றும் பெர்லா நெரா பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி நிறுவனம் 2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் பேஸ்லிப்ட் விலை ரூ. 5.73 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய ஸ்விப்ட் மாடல் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களை பெற்று இருக்கிறது.

    தற்சமயம் புதிய ஸ்விப்ட் மாடல் விற்பனையகம் வந்துள்ளதை உறுதிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் புது ஸ்விப்ட் மாடல் தற்சமயம் மேம்பட்ட முன்புற கிரில் கொண்டுள்ளது. இதன் மாற்றங்கள் காருக்கு புது தோற்றம் வழங்குகிறது. 

     2021 மாருதி சுசுகி ஸ்விப்ட்

    உள்புறம் குரூயிஸ் கண்ட்ரோல், தானாக மடிந்து கொள்ளும் ORVMகள், ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4.2 இன்ச் MID நிற டிஎப்டி ஸ்கிரீன், 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலில் புதிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கே12 சீரிஸ் டூயல் ஜெட் டூயல் விவிடி யூனிட் ஆகும். இது மேனுவல் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 23.20 கிலோமீட்டரும், ஏஎம்டி கியர்பாக்சில் லிட்டருக்கு 23.76 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. செயல்திறனும் முன்பை விட அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய என்ஜின் 89 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் கைகர் துவக்க விலை ரூ. 5.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ரெனால்ட் கைகர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரெனால்ட் கைகர் வினியோகம் மார்ச் 3 ஆம் தேதி துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

     ரெனால்ட் கைகர்

    இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஐஸ் கூல் வைட், பிளானெட் கிரே, மூன்லைட் கிரே, மஹோகனி பிரவுன், கேஸ்பியன் புளூ மற்றும் ரேடியன்ட் ரெட் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது.

    ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 72 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் மாடல் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 50 ஆயிரமாவது யூனிட் வதோதரா ஆலையில் உள்ள பெண்கள் குழுவினர் உற்பத்தி செய்தனர். தற்சமயம் எம்ஜி மோட்டார் நிறுவனம் மொத்த ஊழியர்களில் 33 சதவீதம் பெண்களை நியமித்து உள்ளது.  எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. 

    எம்ஜி நிறுவனம் மேம்பட்ட ஹெக்டார் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 12.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    புது மாடலில் ட்வீக் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், 18 அங்குல அலாய் வீல்கள், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கை, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்ப்பட்டு இருக்கிறது.

     எம்ஜி ஹெக்டார்

    இத்துடன் ஹெக்டார் மாடலின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் சிவிடி டிரான்ஸ்மிஷனை அறிமுகம் செய்தது. இந்த என்ஜின் 141 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இதே என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது. இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    நிசான் இந்தியா நிறுவனம் மேக்னைட் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு 40 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. புதிய மைல்கல் இம்மாத துவக்கத்தில் எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்திய சந்தையில் புதிய மேக்னைட் எஸ்யுவி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. உற்பத்தியை வேகப்படுத்த ஆயிரம் ஊழியர்கள் கொண்ட ஆலையில் மூன்றாவது ஷிப்ட் துவங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. 

     நிசான் மேக்னைட்

    இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    ஜீப் நிறுவனத்தின் ராங்கலர் மாடல் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது 2021 ஜீப் ராங்லர் மாடலுக்கான உற்பத்தி ரங்கூன் ஆலையில் துவங்கிவிட்டதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ராங்லர் மாடல் இந்தியாவில் உற்பத்தியாகும் ஜீப் நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி மாடல் ஆகும். புதிய ஜீப் ராங்லர் இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    உற்பத்தி தவிர, 26 ஜீப் விற்பனையாளர்கள் புதிய ராங்லர் மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளனர். புதிய ஜீப் ராங்லர் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வரும் மாதத்தில் தெரியவரும். முன்னதாக 2019 வாக்கில் ராங்லர் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டு வரப்பட்டது. 

    ஜீப் ராங்கலர்

    உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்-ரோடு எஸ்யுவி மாடலின் விலையை குறைக்க ஜீப் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. ராங்லர் மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில்கேட் மீது கூடுதல் சக்கரம் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 5.73 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹேட்ச்பேக் மாடல் LXi, VXi, ZXi, ZXi+ மற்றும் ZXi+ டூயல் டோன் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஸ்விப்ட் மாடல் பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் சாலிட் பயர் ரெட், பியல் மிட்நைட் பிளாக் ரூப் மற்றும் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் வைட் ரூப் போன்ற டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டூயல் டோன் ஆப்ஷன் ZXi+ வேரியண்ட்டில் மட்டும் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் ப்ரோஜக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், அலாய் வீல்கள், புளோட்டிங் ரூப் எபெக்ட் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. உள்புறம் 4.2 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே கொண்ட ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. 

     2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் பேஸ்லிப்ட்

    புதிய ஸ்விப்ட் மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சம், ஆட்டோ-போல்டு வசதி கொண்ட ORVMகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பிற்கு டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன்புறம் சீட் பெல்ட் ரிமைன்டர், ISOFIX பாயிண்ட்கள் வழங்கப்படுகின்றன. 

    2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலில் புதிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கே12 சீரிஸ் டூயல் ஜெட் டூயல் விவிடி யூனிட் ஆகும். இது மேனுவல் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 23.20 கிலோமீட்டரும், ஏஎம்டி கியர்பாக்சில் லிட்டருக்கு 23.76 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. செயல்திறனும் முன்பை விட அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய என்ஜின் 89 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்எனி எஸ்யுவி மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் மாருதி சுசுகியின் ஜிம்னி மாடல் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. எனினும், மாருதி சுசுகி தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், ஜிம்னி மாடலை இந்திய சந்தையில் வெளியிடுவது குறித்து பிரீசலனை செய்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஷாங் ஸ்ரீவஸ்தவா முதலீட்டாளர்கள் கூட்டம் ஒன்றில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

     மாருதி சுசுகி ஜிம்னி

    2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானதும் ஜிம்னி மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. புதிய மாடலை எப்படி விளம்பரப்படுத்துவது, இந்தியாவில் எப்போது வெளியிடலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார் என கூறப்படுகிறது.

    முன்னதாக மாருதி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜிம்னி யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது. இந்தியாவில் உற்பத்தியான முதற்கட்ட எஸ்யுவிக்கள் கொலம்பியா மற்றும் பெரு போன்ற லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 சபாரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா சபாரி விலை ரூ. 14.69 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி அட்வென்ச்சர் பெர்சோனா எனும் பெயரில் புதிய ஸ்பெஷல் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 20.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சபாரி பெயரை கிராவிடாஸ் கான்செப்ட் காருக்கு சூட்ட இருப்பதாக தெரிவித்தது. அதன்படி இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தன்று புதிய சபாரி அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு நாடு முழுக்க நடைபெற்று வருகிறது.

     2021 டாடா சபாரி

    2021 டாடா சபாரி மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளது. உயரமான பொனெட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த மாடலில் நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.
    ரெனால்ட் நிறுவனம் ஐந்து புதிய விற்பனை மையங்களை தெலுங்கானாவில் திறந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக ஐந்து விற்பனை மையங்களை திறந்துள்ளது. இவை எல்பி நகர், கொம்பள்ளி, மலக்பெட், வாரங்கல் மற்றும் நிசாம்பாத் போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன. இதுதவிர மேலும் ஏழு புதிய விற்பனை மையங்களை திறக்க ரெனால்ட் முடிவு செய்துள்ளது. 

    தெலுங்கானா மாநிலத்தின் புதிய விற்பனை மையங்களை பிபிஎஸ் மோட்டார்ஸ் எனும் தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் விற்பனை மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் வீட்டு வாசலில் சேவை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. 

     ரெனால்ட் கார்

    முன்னதாக ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைகர் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய ரெனால்ட் கைகர் மாடல் விலை ரூ. 5.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் ஆகும். 

    இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய ரெனால்ட் கைகர் மாடல் இரண்டு வித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள், நான்கு வேரியண்ட்கள் மற்றும் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் புதிய பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ் எஸ்யுவி மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய இசட்எஸ் பெட்ரோல் மாடல் ஆஸ்டர் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புது வேரியண்ட் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெயினுக்கு மாற்றாக பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கிறது. புதிய மாடல்- 111பிஎஸ்/160 என்எம் டார்க் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட், 120பிஎஸ்/150 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 160பிஎஸ்/230என்எம் டார்க் வழங்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    என்ஜின் மட்டுமின்றி புதிய மாடலில் மேம்பட்ட கிரில், எல்இடி ஹெட்லேம்ப், ஆங்குலர் டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை விட வித்தியாசமாக உள்ளது. அலாய் வீல், டெயில் லேம்ப் மற்றும் இதர பாகங்களில் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய எம்ஜி இசட்எஸ் மாடல் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. மேலும் இது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
    ×