என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஜீப் ராங்லர் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரம்
Byமாலை மலர்25 Feb 2021 7:13 AM GMT (Updated: 25 Feb 2021 7:13 AM GMT)
ஜீப் நிறுவனத்தின் ராங்கலர் மாடல் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது 2021 ஜீப் ராங்லர் மாடலுக்கான உற்பத்தி ரங்கூன் ஆலையில் துவங்கிவிட்டதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ராங்லர் மாடல் இந்தியாவில் உற்பத்தியாகும் ஜீப் நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி மாடல் ஆகும். புதிய ஜீப் ராங்லர் இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
உற்பத்தி தவிர, 26 ஜீப் விற்பனையாளர்கள் புதிய ராங்லர் மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளனர். புதிய ஜீப் ராங்லர் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வரும் மாதத்தில் தெரியவரும். முன்னதாக 2019 வாக்கில் ராங்லர் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டு வரப்பட்டது.
உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்-ரோடு எஸ்யுவி மாடலின் விலையை குறைக்க ஜீப் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. ராங்லர் மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில்கேட் மீது கூடுதல் சக்கரம் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X