search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஜீப் ராங்கலர்
    X
    ஜீப் ராங்கலர்

    ஜீப் ராங்லர் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரம்

    ஜீப் நிறுவனத்தின் ராங்கலர் மாடல் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது 2021 ஜீப் ராங்லர் மாடலுக்கான உற்பத்தி ரங்கூன் ஆலையில் துவங்கிவிட்டதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ராங்லர் மாடல் இந்தியாவில் உற்பத்தியாகும் ஜீப் நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி மாடல் ஆகும். புதிய ஜீப் ராங்லர் இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    உற்பத்தி தவிர, 26 ஜீப் விற்பனையாளர்கள் புதிய ராங்லர் மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளனர். புதிய ஜீப் ராங்லர் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வரும் மாதத்தில் தெரியவரும். முன்னதாக 2019 வாக்கில் ராங்லர் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டு வரப்பட்டது. 

    ஜீப் ராங்கலர்

    உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்-ரோடு எஸ்யுவி மாடலின் விலையை குறைக்க ஜீப் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. ராங்லர் மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில்கேட் மீது கூடுதல் சக்கரம் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×