என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சென்னை ஆலையில் ரெனால்ட் கைகர் உற்பத்தி துவக்கம்
Byமாலை மலர்10 Feb 2021 8:40 AM GMT (Updated: 10 Feb 2021 8:40 AM GMT)
சென்னையில் உள்ள ஆலையில் ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் எஸ்யுவி- கைகர் மாடலின் உற்பத்தியை சென்னை ஆலையில் துவங்கி இருக்கிறது. புதிய கைகர் மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் கைகர் மாடலின் இந்திய விலை விவரங்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய கைகர் மாடல் வினியோகம் விரைவில் துவங்கலாம் என கூறப்படுகிறது.
புதிய கைகர் மாடல் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக ரெனால்ட் தெரிவித்து உள்ளது. கைகர் மாடல் விற்பனைகத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
புதிய கைகர் மாடலில் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X