என் மலர்
பைக்
- யமஹா நிறுவனம் தமிழ் நாட்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் இம்மாத இறுதிவரை வழங்கப்பட இருக்கின்றன.
இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கும் யமஹா மோட்டார் இந்தியா தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை சிறப்பு சலுகைகள் யமஹா FZ மற்றும் ஃபசினோ 125சிசி ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்டிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சலுகை விவரங்கள்:
யமஹா FZ மாடலை வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக், ரூ. 7 ஆயிரத்து 999 முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் குறைந்த மாத தவணை முறை மற்றும் 0 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
யமஹா ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் டிரம் மாடலை வாங்கும் போது ரூ. 1500 வரை கேஷ்பேக், ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் மாத தவணை, 0 சதவீத வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சலுகைகள் யமஹா விற்பனை மையங்களில் பெற முடியும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை யமஹா விற்பனை மையங்களில் அறிந்து கொள்ள முடியும்.
150சிசி யமஹா FZ சீரிசில் சக்திவாய்ந்த ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் 149சிசி, SOHC, 2 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
யமஹா ஃபசினோ ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் SOHC, இரண்டு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பிஎஸ் பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர ஏராளமான பயனுள்ள அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய 750சிசி மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- டிரான்சால்ப் 750 மாடலில் உள்ள என்ஜின் புதிய 750சிசி மாடலிலும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் GB750 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஜப்பானில் GB350, சர்வதேச சந்தையில் ஹைனெஸ் CB350 வடிவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதை போன்றே புது மாடலிலும் பழைய மோட்டார்சைக்கிள்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
அந்த வகையில் புது மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், குறைவான பாடிவொர்க், ஹை-ரைஸ் ஹேண்டில்பார்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் GB750 மாடலில் ரெட்ரோ-ஸ்டைல் பெயிண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை இந்த மாடலில் டிரான்சால்ப் 750 மற்றும் CB750 ஹார்னெட் மாடல்களில் உள்ள யூனிட் வழங்கப்படலாம்.
எனினும், இந்த மாடலில் பழைய பைக் போன்ற தோற்றத்தை கொடுக்கும் பாகங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், பின்புறம் கன்வென்ஷனல் ஃபோர்க்குகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஎஃப்டி டேஷ், ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
புதிய ஹோண்டா GB750 மாடல் பற்றி இதுவரை ஹோண்டா தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் கவாசகி Z650RS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புது தொழில்நுட்பம் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் பைக் என இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகிறது.
ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் அம்சம் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது. புது தொழில்நுட்பம் H ஸ்மார்ட் என அழைக்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய H-ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புது தொழில்நுட்பம் எதுபோன்ற வசதியை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனினும், இதற்கான டீசரில் இந்த தொழில்நுட்பம் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
ஹீரோ நிறுவனத்தின் iஸ்மார்ட் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், யமஹா நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் என பல்வேறு நிறுவனங்கள் அதிக மைலேஜ் வழங்கும் தொழில்நுட்பங்களை வழங்க துவங்கிவிட்டன. அந்த வகையில் ஹோண்டா ஏற்கனவே தனது வாகனங்களில் சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்தை வழங்கி இருக்கிறது. எனினும்,ஸ ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.
அந்த வகையில் புது தொழில்நுட்பம் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் ஹோண்டா CB300F மற்றும் ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ப்ளூடூத் மூலம் கனெக்டிவிட்டி வசதியை வழங்கும். இது ஹோண்டா வாகனங்களின் டிஜிட்டல் டேஷ்-இல் நோட்டிஃபிகேஷன் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.
- 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் யுலு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- பஜாஜ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது ஸ்கூட்டரில் அந்நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்பட இருக்கிறது.
யுலு நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 2023 நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பஜாஜ் டிசைன் மற்றும் உற்பத்தியில் புது இருசக்கர வாகனம் உருவாகி இருக்கிறது. யுலு நிறுவனத்தில் பஜாஜ் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறது.
முற்றிலும் புது எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் இந்த இருசக்கர வாகனத்தை பஜாஜ் உருவாக்கி இருக்கிறது. இதற்காக பஜாஜ் நிறுவனம் யுலு பைக்ஸ்-இடம் பல்வேறு கருத்துக்களை கேட்டுக் கொண்டு இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஸ்கூட்டரின் பல்வேறு வேரியண்ட்களை அறிமுகம் செய்ய யுலு திட்டமிட்டுள்ளது.

புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழில்நுட்ப விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாடல் அதிகளவு உள்நாட்டு பாகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருப்பதாக யுலு தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் ஸ்கூட்டரின் விலை குறைவாகவும், போட்டியை ஏற்படுத்தும் வகையிலும் நிர்ணயம் செய்ய முடியும். சரியான விலை நிர்ணயம் செய்வதன் மூலம் டெலிவரி ரைடர் உள்பட கனெக்டிவிட்டி ஆபரேட்டர்களை குறிவைக்கலாம்.
அடுத்த சில மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இவை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படாது என்றே தெரிகிறது.
- ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
- புது அப்டேட் படி ஏத்தர் ஸ்கூட்டர்கள் புது நிறங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கிடைக்கும்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பெங்களூரு நகரில் கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் ஏத்தர் கம்யுனிட்டி கடந்த முறையை விட இந்த ஆண்டு எந்த அளவுக்கு விசேஷமாக மாறி இருக்கிறது என்பதை தெரிவித்தது. கடந்த கம்யுனிட்டி நிகழ்வில் 6 ஆயிரம் பயனர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த முறை 80 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதுவரை ஏத்தர் வாகனங்கள் 500 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் ஒரு பில்லியன் கிலோமீட்டர்களை கடக்க முடியும் என ஏத்தர் எனர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுதவிர ஏத்தர்ஸ்டேக் 5.0 பெயரில் மென்பொருள் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பயனர்களுக்கு புது யூசர் இண்டர்ஃபேஸ் வழங்குகிறது.

புது யூசர் இண்டர்ஃபேஸ் சிறப்பான ஸ்வைப் மற்றும் டச் ரெகக்னிஷன் கொண்டுள்ளது. இது முன்பை விட அதிக சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதுதவிர ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற ஐகான்கள் மொபைல் போனில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. கூகுள் மேப்ஸ் சேவை கொண்ட உலகின் முதல் ஸ்கூட்டர் ஏத்தர் 450X ஆகும். தற்போது வெக்டார் மேப் சேவை வழங்கப்படுவதாக ஏத்தர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
ஏத்தர் 450X மற்றும் 450 பிளஸ் பயனர்களுக்கு நேரலை போக்குவரத்து விவரங்கள் வழங்கப்படுகிறது. இது மொபைலில் உள்ள கூகுள் மேப்ஸ் போன்றே செயல்படும். இவைதவிர ஆட்டோஹோல்டு எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இது வழக்கமான ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கும் மெக்கானிக்கல் பிரேக் லாக் வசதியை வழங்கும். இந்த அம்சம் கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது.
இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், கிரால் கண்ட்ரோல் மற்றும் மேம்பட்ட ரிஜென் போன்ற வசதிகளை வரும் மாதங்களில் வழங்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு வருகிறது. இதுவரை 900 ஃபாஸ்ட் சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை ஏத்தர் இன்ஸ்டால் செய்து இருக்கிறது. மேலும் மார்ச் 2023-க்குள் நாடு முழுக்க 1300 சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இவற்றில் 3.3 கிலோவாட் சர்வதேச ஏசி சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கார்களையும் சார்ஜ் செய்யும்.
450X மாடலுக்காக புது சீட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய சீட்-ஐ விட அதிக சவுகரியமாக இருக்கிறது. கம்யுனிட்டி டே நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் சீட் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இதுதவிர ஏத்தர் 450X மாடலுக்கு- லூனார் கிரே மற்றும் ரெட் அக்செண்ட்கள், காஸ்மிக் பிளாக் மற்றும் அக்வா புளூ அக்செண்ட்கள், ட்ரூ ரெட் மற்றும் வைட் அக்செண்ட்கள், சால்ட் கிரீன் மற்றும் ஆர்ஞ்சு அக்செண்ட்கள் என நான்கு புது நிறங்களில் கிடைக்கிறது.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து புது நிறங்களில் அறிமுகம் செய்தது.
- நிறம் தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய GS டிராஃபி எடிஷன் நிறங்களை தனது F 850 GS, R 1250 GS மற்றும் R 1250 GS அட்வென்ச்சர் போன்ற மாடல்களில் வழங்கி இருக்கிறது. மூன்று மோட்டார்சைக்கிள்களும் காஸ்மெடிக் முறையில் மாற்றப்பட்டு தற்போது புது நிறங்களில் கிடைக்கின்றன.
மூன்று பைக்-களிலும் புளூ, சில்வர் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறம் தவிர இவற்றின் அம்சங்கள், மெக்கானிக்கல் பாகங்கள் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் F 850 GS மாடலில் 850சிசி, டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 95ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பிஎம்டபிள்யூ டைனமிக் பேக்கேஜில் இருந்து குயிக்ஷிஃப்டர் பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. R 1250 GS மாடலில் 1254சிசி, பாக்சர் டுவின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 134.1 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது.
மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் எல்இடி இலுமினேஷன், ABS, ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹீடெட் க்ரிப்கள், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், மல்டி கண்ட்ரோலர், யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலிலும் அதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் உள்ளதை போன்ற சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்படுகிறது
- டுகாட்டி நிறுவனத்தின் புதிய டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வினியோகம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய டெசர்ட் எக்ஸ் மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்திய சந்தையில் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புது மாடலில் 937சிசி, L-ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட ஐந்து இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த மாடலில்- ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியுரோ என ஆறு வித ரைடிங் மோட்கள் உள்ளது.
இத்துடன் ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு பவர் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் கார்னெரிங் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் கூடுதலாக ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
டுகாட்டி இந்தியா நிறுவனம் 2023 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதில் பனிகேல் வி4 ஆர், மான்ஸ்டர் எஸ்பி, டயவெல் வி4, ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி2, மல்டிஸ்டிராடா வி4 ரேசி, ஸ்கிராம்ப்ளர் ஐகான் 2ஜி, ஸ்கிராம்ப்ளர் ஃபுல் திராட்டில் 2ஜி, ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிஃப்ட் 2ஜி மற்றும் ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 லம்போர்கினி உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.
- ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் நைடெக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன.
- இதுதவிர புதிதாக உற்பத்தி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய சந்தையில் பழமையான மற்றும் மிகப் பெரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக ஹீரோ எலெக்ட்ரிக் விளங்குகிறது. 2022 ஆண்டில் மட்டும் விற்பனையில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்து அசத்தியுள்ளது. நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவது வினியோக பிரிவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஹீரோ எலெக்ட்ரிக் விற்பனை வளர்ச்சி பெற்று இருக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில்- ஃபோடான் LP, ஆப்டிமா CX, NYX HS500ER மாடல்களை ஹை-ஸ்பீடு பிரிவிலும், லோ-ஸ்பீடு பிரிவில் NYX E5, அட்ரியா LX மற்றும் எடி என மொத்தத்தில் ஏழு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு 6 லட்சத்திற்கும் அதிக வாடிக்கையளர்கள் உள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. இதற்காக உற்பத்தி திறன், டீலர்ஷிப் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பயிற்சி அளிப்பது போன்ற பிரிவுகளில் முதலீடு செய்ய இருக்கிறது. இத்துடன் 25 ஆயிரம் மெக்கானிக்-களுக்கு பயிற்சி இளிக்கவும் ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சார்ஜிங் மையங்கள் பிரிவில் கவனம் செலுத்தும் வகையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 20 ஆயிரம் சார்ஜிங் நெட்வொர்க்குகளை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நைடெக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. நைடெக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்கள் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.
மத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டு இருக்கும் 75 நிறுவனங்களில் ஒன்றாக நைடெக் இருக்கிறது. உற்பத்தியை பொருத்தவரை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட லூதியானா ஆலை திறனை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலை 2012 வாக்கில் அமைக்கப்பட்டது. ஜூலை 2022 வாக்கில் ஆப்டிமா மற்றும் NYX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிதம்பூர் மஹிந்திரா நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசுடன் இணைந்து மாபெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஹீரோ எலெக்ட்ரிக் கையெழுத்திட்டது. இந்த ஆலையில் ஆண்டுக்கு இரண்டு மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இந்த ஆலை சலர்பூர் பகுதியில் சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த ஆலையில் உற்பத்தி துவங்க இருக்கிறது.
- கேடிஎம் நிறுவனத்தின் RC சீரிசில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
- புதிய RC சீரிஸ் மாடல்கள் சத்தமின்றி அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன.
கேடிஎம் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது சூப்பர்ஸ்போர்ட் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. கேடிஎம் RC 125, RC 200 மற்றும் RC390 மாடல்கள் தற்போது ஸ்மோக்டு வைசர் உடன் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மாடல் முதற்கட்டமாக GP எடிஷனுடன் கடந்த ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
ஸ்போக்டு வைசர் தவிர புது மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், அப்டேட் செய்யப்பட்ட RC சீரிஸ் மாடல்களில் அதே டிசைன், மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் அம்சங்கள் உள்ளன. மேலும் இவற்றின் விலையிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
விலை விவரங்கள்:
கேடிஎம் RC 125 ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 640
கேடிஎம் RC 200 ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 688
கேடிஎம் RC 390 ரூ. 3 லட்சத்து 16 ஆயிரத்து 070
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது RC சீரிசை கடந்த ஆண்டு அப்டேட் செய்து இருந்தது. அதன்படி RC சீரிஸ் டிசைன் பெருமளவு மாற்றப்பட்டு முற்றிலும் புது டிசைன் வங்கப்பட்டது. இத்துடன் என்ஜின் டுவீக் செய்யப்பட்டு, புது வீல்கள், பிரேக்கிங் செட்டப் மற்றும் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டது.
- கேடிஎம் நிறுவனத்தின் புது டியூக் 390 மாடல் ஏராளமான அம்சங்களுடன் உருவாகி வருகிறது.
- முற்றிலும் புது பாடிவொர்க், வீல்கள், பிரேக், ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை இந்த மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கும்.
கேடிஎம் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டியூக் 390 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது ஸ்பை படங்களில் 390 டியூக் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடலில் என்ஜின் மாற்றப்பட்டு இருக்கிறது. புது என்ஜின் கவர், ரி-ரூட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் பெரிய ரேடியேட்டர், டுவின்-ஃபேன் செட்டப் உள்ளது. இதன் காரணமாக புது பைக் தற்போதைய மாடலை விட அதிக செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர கூடுதல் ஃபேன் தற்போதைய என்ஜினை அதிகளவு குளிர்ச்சிப்படுத்தவும் வழங்கப்படலாம். டுவின்-ஃபேன் செட்டப் கொண்ட 390 அட்வென்ச்சர் மாடல் அதிகளவு வெப்பத்தை குறைப்பதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

புது பைக்கின் ஃபிரேமை சற்றி பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஃபிரேம் தோற்றத்தில் தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இது ரிவைஸ்டு ஸ்விங்-ஆர்ம், சற்றே வித்தியாசமான வடிவம் மற்றும் டிசைன் கொண்டிருக்கிறது. புது டியூக் மாடலில் சமீபத்திய RC390 மாடலில் உள்ளதை போன்ற வீல் மற்றும் பிரேக்குகள் வழங்கப்படலாம். சஸ்பென்ஷனிற்கு இந்த மாடலில் ஆஃப்செட் ரியர் மோனோஷாக் வழங்கப்படுகிறது.
மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்றாக முற்றிலும் புது பாடி வொர்க் உள்ளது. இந்த மாடலில் உள்ள அனைத்து பேனல்களும் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் புது டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தற்போதைய மாடலில் இருப்பதை விட அதிக கூர்மையாகவும், நீளமாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் புதிய ஹெட்லைட், சீட், மிரர் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன.
அம்சங்களை பொருத்தவரை 390 டியூக் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே, டூயல் சேனல் ஏபிஎஸ், பை - டைரெக்ஷனல் குயிக்ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதே அம்சங்கள் புது மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இவற்றுடன் IMU டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடல் 2023 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை தற்போதைய மாடலை விட சற்று அதிகமாகவே இருக்கும்.
Photo Courtesy: Instagram | adi60666
- இந்திய சந்தையில் விடா பிராண்டின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- முதற்கட்டமாக விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் பெங்களூரு நகரில் துவங்கி இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிராண்டு விடா இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் யூனிட் பெங்களூரு நகரில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரு நகரில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் உள்ள விடா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்பட்டன.
முதற்கட்டமாக பெங்களூரு நகரில் வினியோகம் துவங்கி இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் விடா V1 வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை நிறம், பேட்டரி திறன் மற்றும் பிக்கப் வேகம் உள்ளிட்ட பிரிவுகளில் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், விடா V1 ப்ரோ வேரியண்ட் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இதன் ப்ரோ வேரியண்ட் 3.94 கிலோவாட் ஹவர் பேட்டரியும், பிளஸ் வேரியண்டில் 3.44 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன.
இத்துடன் இகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் யூசர் கஸ்டமைசபில் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. விடா V1 பிளஸ் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் கிளாஸ் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ப்ரோ வேரியண்ட் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட், கிளாஸ் பிளாக் மற்றும் மேட் அப்ரக்ஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
- ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க ஏத்தர் பல்வேறு விஷயங்களில் விலை குறைப்பு செய்திருப்பதாக தெரிகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜனவரி 7, 2023 அன்று கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் புது வாகனத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி அதிக தகவல்கள் வெளியாகவில்லை. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தர் 450X மாடலின் குறைந்த விலை வெர்ஷனாகவோ அல்லது முற்றிலும் புது வெர்ஷனாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் 450 பிளஸ் மற்றும் 450X என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களும் சற்றே அதிக விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏத்தர் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் மிக எளிய உகபரணங்கள், அதாவது டியுபுலர் ஸ்டீல் பயன்படுத்தப்படலாம்.

சமீபத்தில் தான் ஏத்தர் நிறுவனம் புது வாகனத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. அதன்படி புது வாகனம் மேக்சி ஸ்கூட்டர் போன்று காட்சியளித்தது. சவுகரிய அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபிளாட் சீட் வழங்கப்படலாம். முந்தைய 450X மாடலில் ஸ்டெப்டு யூனிட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏத்தர் அறிமுகம் செய்யும் வாகனம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
அந்த வகையில், குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது முற்றிலும் புதிய ஸ்கூட்டர் தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 பிளஸ் அல்லது 450X மாடல்களின் புது நிறங்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இவை தவிர 450X சீரிஸ் 1 போன்றே புதிதாக லிமிடெட் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.
Photo Courtesy: Autocarindia






