என் மலர்tooltip icon

    பைக்

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து புது நிறங்களில் அறிமுகம் செய்தது.
    • நிறம் தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய GS டிராஃபி எடிஷன் நிறங்களை தனது F 850 GS, R 1250 GS மற்றும் R 1250 GS அட்வென்ச்சர் போன்ற மாடல்களில் வழங்கி இருக்கிறது. மூன்று மோட்டார்சைக்கிள்களும் காஸ்மெடிக் முறையில் மாற்றப்பட்டு தற்போது புது நிறங்களில் கிடைக்கின்றன.

    மூன்று பைக்-களிலும் புளூ, சில்வர் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறம் தவிர இவற்றின் அம்சங்கள், மெக்கானிக்கல் பாகங்கள் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் F 850 GS மாடலில் 850சிசி, டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 95ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பிஎம்டபிள்யூ டைனமிக் பேக்கேஜில் இருந்து குயிக்ஷிஃப்டர் பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. R 1250 GS மாடலில் 1254சிசி, பாக்சர் டுவின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 134.1 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது.

    மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் எல்இடி இலுமினேஷன், ABS, ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹீடெட் க்ரிப்கள், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், மல்டி கண்ட்ரோலர், யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலிலும் அதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் உள்ளதை போன்ற சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்படுகிறது

    • டுகாட்டி நிறுவனத்தின் புதிய டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வினியோகம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய டெசர்ட் எக்ஸ் மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்திய சந்தையில் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புது மாடலில் 937சிசி, L-ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட ஐந்து இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த மாடலில்- ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியுரோ என ஆறு வித ரைடிங் மோட்கள் உள்ளது.

    இத்துடன் ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு பவர் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் கார்னெரிங் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் கூடுதலாக ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் 2023 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதில் பனிகேல் வி4 ஆர், மான்ஸ்டர் எஸ்பி, டயவெல் வி4, ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி2, மல்டிஸ்டிராடா வி4 ரேசி, ஸ்கிராம்ப்ளர் ஐகான் 2ஜி, ஸ்கிராம்ப்ளர் ஃபுல் திராட்டில் 2ஜி, ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிஃப்ட் 2ஜி மற்றும் ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 லம்போர்கினி உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    • ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் நைடெக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன.
    • இதுதவிர புதிதாக உற்பத்தி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் பழமையான மற்றும் மிகப் பெரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக ஹீரோ எலெக்ட்ரிக் விளங்குகிறது. 2022 ஆண்டில் மட்டும் விற்பனையில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்து அசத்தியுள்ளது. நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவது வினியோக பிரிவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஹீரோ எலெக்ட்ரிக் விற்பனை வளர்ச்சி பெற்று இருக்கிறது.

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில்- ஃபோடான் LP, ஆப்டிமா CX, NYX HS500ER மாடல்களை ஹை-ஸ்பீடு பிரிவிலும், லோ-ஸ்பீடு பிரிவில் NYX E5, அட்ரியா LX மற்றும் எடி என மொத்தத்தில் ஏழு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு 6 லட்சத்திற்கும் அதிக வாடிக்கையளர்கள் உள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. இதற்காக உற்பத்தி திறன், டீலர்ஷிப் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பயிற்சி அளிப்பது போன்ற பிரிவுகளில் முதலீடு செய்ய இருக்கிறது. இத்துடன் 25 ஆயிரம் மெக்கானிக்-களுக்கு பயிற்சி இளிக்கவும் ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சார்ஜிங் மையங்கள் பிரிவில் கவனம் செலுத்தும் வகையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 20 ஆயிரம் சார்ஜிங் நெட்வொர்க்குகளை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நைடெக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. நைடெக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்கள் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.

    மத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டு இருக்கும் 75 நிறுவனங்களில் ஒன்றாக நைடெக் இருக்கிறது. உற்பத்தியை பொருத்தவரை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட லூதியானா ஆலை திறனை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலை 2012 வாக்கில் அமைக்கப்பட்டது. ஜூலை 2022 வாக்கில் ஆப்டிமா மற்றும் NYX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிதம்பூர் மஹிந்திரா நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசுடன் இணைந்து மாபெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஹீரோ எலெக்ட்ரிக் கையெழுத்திட்டது. இந்த ஆலையில் ஆண்டுக்கு இரண்டு மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இந்த ஆலை சலர்பூர் பகுதியில் சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த ஆலையில் உற்பத்தி துவங்க இருக்கிறது.

    • கேடிஎம் நிறுவனத்தின் RC சீரிசில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
    • புதிய RC சீரிஸ் மாடல்கள் சத்தமின்றி அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன.

    கேடிஎம் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது சூப்பர்ஸ்போர்ட் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. கேடிஎம் RC 125, RC 200 மற்றும் RC390 மாடல்கள் தற்போது ஸ்மோக்டு வைசர் உடன் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மாடல் முதற்கட்டமாக GP எடிஷனுடன் கடந்த ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

    ஸ்போக்டு வைசர் தவிர புது மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், அப்டேட் செய்யப்பட்ட RC சீரிஸ் மாடல்களில் அதே டிசைன், மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் அம்சங்கள் உள்ளன. மேலும் இவற்றின் விலையிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    விலை விவரங்கள்:

    கேடிஎம் RC 125 ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 640

    கேடிஎம் RC 200 ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 688

    கேடிஎம் RC 390 ரூ. 3 லட்சத்து 16 ஆயிரத்து 070

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது RC சீரிசை கடந்த ஆண்டு அப்டேட் செய்து இருந்தது. அதன்படி RC சீரிஸ் டிசைன் பெருமளவு மாற்றப்பட்டு முற்றிலும் புது டிசைன் வங்கப்பட்டது. இத்துடன் என்ஜின் டுவீக் செய்யப்பட்டு, புது வீல்கள், பிரேக்கிங் செட்டப் மற்றும் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டது.

    • கேடிஎம் நிறுவனத்தின் புது டியூக் 390 மாடல் ஏராளமான அம்சங்களுடன் உருவாகி வருகிறது.
    • முற்றிலும் புது பாடிவொர்க், வீல்கள், பிரேக், ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை இந்த மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கும்.

    கேடிஎம் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டியூக் 390 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது ஸ்பை படங்களில் 390 டியூக் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடலில் என்ஜின் மாற்றப்பட்டு இருக்கிறது. புது என்ஜின் கவர், ரி-ரூட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் பெரிய ரேடியேட்டர், டுவின்-ஃபேன் செட்டப் உள்ளது. இதன் காரணமாக புது பைக் தற்போதைய மாடலை விட அதிக செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர கூடுதல் ஃபேன் தற்போதைய என்ஜினை அதிகளவு குளிர்ச்சிப்படுத்தவும் வழங்கப்படலாம். டுவின்-ஃபேன் செட்டப் கொண்ட 390 அட்வென்ச்சர் மாடல் அதிகளவு வெப்பத்தை குறைப்பதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

    புது பைக்கின் ஃபிரேமை சற்றி பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஃபிரேம் தோற்றத்தில் தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இது ரிவைஸ்டு ஸ்விங்-ஆர்ம், சற்றே வித்தியாசமான வடிவம் மற்றும் டிசைன் கொண்டிருக்கிறது. புது டியூக் மாடலில் சமீபத்திய RC390 மாடலில் உள்ளதை போன்ற வீல் மற்றும் பிரேக்குகள் வழங்கப்படலாம். சஸ்பென்ஷனிற்கு இந்த மாடலில் ஆஃப்செட் ரியர் மோனோஷாக் வழங்கப்படுகிறது.

    மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்றாக முற்றிலும் புது பாடி வொர்க் உள்ளது. இந்த மாடலில் உள்ள அனைத்து பேனல்களும் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் புது டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தற்போதைய மாடலில் இருப்பதை விட அதிக கூர்மையாகவும், நீளமாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் புதிய ஹெட்லைட், சீட், மிரர் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை 390 டியூக் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே, டூயல் சேனல் ஏபிஎஸ், பை - டைரெக்ஷனல் குயிக்ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதே அம்சங்கள் புது மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இவற்றுடன் IMU டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடல் 2023 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை தற்போதைய மாடலை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

    Photo Courtesy: Instagram | adi60666

    • இந்திய சந்தையில் விடா பிராண்டின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • முதற்கட்டமாக விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் பெங்களூரு நகரில் துவங்கி இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிராண்டு விடா இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் யூனிட் பெங்களூரு நகரில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரு நகரில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் உள்ள விடா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்பட்டன.

    முதற்கட்டமாக பெங்களூரு நகரில் வினியோகம் துவங்கி இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் விடா V1 வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை நிறம், பேட்டரி திறன் மற்றும் பிக்கப் வேகம் உள்ளிட்ட பிரிவுகளில் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

    விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், விடா V1 ப்ரோ வேரியண்ட் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இதன் ப்ரோ வேரியண்ட் 3.94 கிலோவாட் ஹவர் பேட்டரியும், பிளஸ் வேரியண்டில் 3.44 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன.

    இத்துடன் இகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் யூசர் கஸ்டமைசபில் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. விடா V1 பிளஸ் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் கிளாஸ் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ப்ரோ வேரியண்ட் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட், கிளாஸ் பிளாக் மற்றும் மேட் அப்ரக்ஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. 

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க ஏத்தர் பல்வேறு விஷயங்களில் விலை குறைப்பு செய்திருப்பதாக தெரிகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜனவரி 7, 2023 அன்று கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் புது வாகனத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி அதிக தகவல்கள் வெளியாகவில்லை. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தர் 450X மாடலின் குறைந்த விலை வெர்ஷனாகவோ அல்லது முற்றிலும் புது வெர்ஷனாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தற்போது ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் 450 பிளஸ் மற்றும் 450X என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களும் சற்றே அதிக விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏத்தர் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் மிக எளிய உகபரணங்கள், அதாவது டியுபுலர் ஸ்டீல் பயன்படுத்தப்படலாம்.

    சமீபத்தில் தான் ஏத்தர் நிறுவனம் புது வாகனத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. அதன்படி புது வாகனம் மேக்சி ஸ்கூட்டர் போன்று காட்சியளித்தது. சவுகரிய அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபிளாட் சீட் வழங்கப்படலாம். முந்தைய 450X மாடலில் ஸ்டெப்டு யூனிட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏத்தர் அறிமுகம் செய்யும் வாகனம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    அந்த வகையில், குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது முற்றிலும் புதிய ஸ்கூட்டர் தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 பிளஸ் அல்லது 450X மாடல்களின் புது நிறங்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இவை தவிர 450X சீரிஸ் 1 போன்றே புதிதாக லிமிடெட் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    Photo Courtesy: Autocarindia

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக S1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூவ் ஒஎஸ் 2 வெளியிட்டது.
    • 2023 ஆண்டு இந்திய சந்தையில் மேலும் புது வாகனங்களை அறிமுகப்படுத்த ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டு வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு புது மைல்கல்களை இந்த ஆண்டு எட்டியது. முன்னதாக ஒலா S1 ஏர் பெயரில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூவ் ஒஎஸ் 2 அப்டேட்டை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டது. இதுதவிர இந்திய விற்பனையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது. சமீபத்தில் மூவ் ஒஎஸ் 3 அப்டேட்டை ஒலா எலெக்ட்ரிக் தற்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்கு வந்துவிட்ட நிலையில், ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் 2023 ஆண்டுக்கான ஒலா எலெக்ட்ரிக் நிறுவன திட்டங்கள் பற்றி தெரிவித்து இருக்கிறார். இது குறித்த பதிவில், புது எலெக்ட்ரிக் வாகனங்களை 2023 ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மாஸ் மார்கெட் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மற்றும் பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவைகளை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    "இருசக்கர வாகன உற்பத்தி சீராக நடைபெற்று வருவது, மிக முக்கிய எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்கள், மென்பொருள், எலெக்டிரானிக்ஸ், பேட்டரி மற்றும் பவர்டிரெயின் உள்ளிட்ட பிரிவுகளில் அதிக போட்டியை ஏற்படுத்தும் வாய்ப்பை கொடுக்கும். இதன் மூலம் உலக தரம் மிக்க நான்கு சக்கர வாகனங்களை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலை பிரிவில் அறிமுகம் செய்ய வழி வகுக்கும்," என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    இதுதவிர புது எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீட்டு காலம் பற்றியும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். அதில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2027 இறுதியில் ஆறு வெவ்வேறு வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்திருக்க ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. புது வாகனங்கள் மட்டுமின்றி, ஒலா எலெக்ட்ரிக் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகள் பற்றியும் தெரிவித்துள்ளார்.

    • கைனெடிக் நிறுவனத்தின் புதிய லூனா மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • இதற்காக இரு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    லூனா பிராண்டு இந்திய சந்தையில் ரி எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்முறை லூனா மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கைனெடிக் நிறுவனம் எலெக்ட்ரிக் லூனா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்காக இரு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. கைனெடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யுஷன்ஸ் சார்பில் இந்த ஸ்கூட்டர் வெளியிடப்பட இருக்கிறது. இதனை அசெம்பில் செய்யும் பணிகளை கைனெடிக் என்ஜினியரிங் லிமிடெட் மேற்கொள்ள இருக்கிறது. புது எலெக்ட்ரிக் வாகனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் நடைபெறும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் லூனா மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இது மொபெட் போன்ற மாடலாக இருக்கும் என்றும் இது குறைந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் லூனா பிராண்டு மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கியது.

    எனினும், இந்த மாடல் நிலை நிறுத்தப்பட்ட பிரிவு பெருமளவு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. அந்த வகையில் இந்த மாடலின் வெற்றி பெறுமா என்பது எதிர்கால நடவடிக்கைகளை பொருத்தே அமையும்.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனையில் ஹண்டர் மற்றும் கிளாசிக் 350 மாடல்கள் அமோக வரவேற்பை பெற்றன.
    • இது தவிர பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ராயல் என்பீல்டு ஈடுபட்டு வருகிறது.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புது மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் 350சிசி மற்றும் 650சிசி மாடல்கள் விரிவுப்பட இருக்கிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் 450சிசி பிரிவில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக 2022 நவம்பர மாதத்தில் சூப்பர் மீடியோர் 650 மாடலை இத்தாலியில் காட்சிப்படுத்தி இருந்தது.

    இதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ரைடர் மேனியா நிகழ்விலும் சூப்பர் மீடியோர் 650 மாடலை காட்சிப்படுத்தியது. புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலின் விலை அடுத்த மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது. வினியோகம் 2023 பிப்ரவரி மாத வாக்கில் துவங்குகிறது. ஃபிளாக்‌ஷிப் குரூயிசர் மாடலான சூப்பர் மீடியோர் 650 மாடலை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய 350 சிசி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி 2023 மத்தியில் புதிய தலைமுறை புல்லட் 350 மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. முற்றிலும் புதிய புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், இந்த மாடல் கிட்டத்தட்ட உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாகவே தெரிகிறது. எனினும், இதன் ப்ரோடக்‌ஷன் வெர்ஷனில் மாற்றங்கள் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

    2023 புல்லட் மாடலில் கிளாசிக், ஹண்டர் மற்றும் மீடியோர் மாடல்களில் பயன்படுத்தப்படும் புதிய டபுள் கிராடில் வழங்கப்படுகிறது. இது தற்போதைய மாடலில் உள்ளதை விட குறைந்த அதிர்வுகள் மற்றும் சிறந்த ஸ்டீரிங் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. புல்லட் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புது மாடல் எப்படி நிலைநிறுத்தப்படும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

    புதிய எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளில் 349சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புல்லட் 350 மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனம் ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் 450 சிசி அட்வென்ச்சர் டூரர் மாடலையும் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • யமஹா நிறுவனத்தின் புதிய அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் அறிமுகமாகி இருக்கிறது.
    • வாகனத்தை கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும் திறன் கொண்ட புது தொழில்நுட்பம் அதன் துவக்க கால உற்பத்தியில் உள்ளது.

    யமஹா நிறுவனம் இருசக்கர வாகன பாதுகாப்பை கருத்தில் கொண்டு புது தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் (AMSAS) என அழைக்கப்படும் புது தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் R3 டம்மி யூனிட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    எலெக்ட்ரிக் R3 மாடலின் தோற்றம் அதன் பெட்ரோல் மாடலை போன்றே ட்சியளிக்கிறது. எனினும், இதன் முன்புறம் இரண்டு மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. முன்புற சக்கரம் மற்றும் ஸ்டீரிங் ஹெட் உள்ளிட்டவைகளில் இவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. மோட்டார்சைக்கிளுக்கு இவற்றில் உள்ள ஆக்டுவேட்டர்கள் வாகனம் கீழே விழாமல் இருக்க வலது, இடது, முன்புறம் மற்றும் பின்புறம் என எந்த பக்கம் சாய வேண்டும் என்ற தகவலை வழங்குகிறது.

    இதில் உள்ள AMSAS பைக்கை பேலன்ஸ் செய்து அதிகபட்சம் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகம் வரை நிலையாக வைத்துக் கொள்கிறது. இதில் 6-ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது யமஹா நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும். முன்னதாக 2015 மோட்டோபாட் மற்றும் 2017 மோட்டோராய்டு நிகழ்வுகளில் இந்த தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

    தற்போதும் இந்த AMSAS தொழில்நுட்பம் அதன் துவக்க கட்டத்திலேயே உள்ளது. யமஹா மட்டுமின்றி ஹோண்டா நிறுவனமும் பாதுகாப்பை வழங்கும் சிஸ்டம்களை உருவாக்கி வருகிறது. ஹோண்டா நிறுவனம் செமி ஆட்டோனோமஸ் ரைடிங் மற்றும் ஏர்பேக் சிஸ்டம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே புது மோட்டார்சைக்கிள் மாடல்களை வெளியிட இருக்கிறது.
    • புது மாடல்கள் வெளியீட்டுக்கு முன் அவற்றின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2023 மோட்டார்சைக்கிள் மாடல்களை ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நைட்ஸ்டர் S மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் S மாடலும் நைட்ஸ்டர் மாடல் உருவான பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், புதிய நைட்ஸ்டர் S மாடலின் வெளிப்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அதன்படி புதிய நைட்ஸ்டர் S மாடலில் பில்லியன் சீட் மற்றும் பில்லியன் ஃபூட்ரெஸ்ட் வழங்கப்படுகிறது. நைட்ஸ்டர் ஸ்டாண்டர்டு எடிஷன் மாடலில் இவை இரண்டும் இடம்பெற்று இருக்காது. மேலும் புதிய நைட்ஸ்டர் S மாடல் சற்றே வித்தியாசமான வீல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த மாடல் கிலாஸ் பெயிண்ட் மற்றும் அசத்தலான கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. வெளிப்புறம் மாற்றப்பட்டு இருக்கும் நிலையில், நைட்ஸ்டர் S மாடலில் 975சிசி, வி ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 94 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

    Photo Courtesy: motorcycle.com

    ×