என் மலர்tooltip icon

    பைக்

    • ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஆக்டிவா இருக்கிறது.
    • ஆக்டிவா மாடலை வாங்குவோருக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவோருக்கு குறுகிய கால சலுகை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா உள்ளது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சதவீதம் கேஷ்பேக் (அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம்) வழங்கப்படுகிறது.

    எனினும், இந்த கேஷ்பேக் சலுகை எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்போர் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் குறைந்த பட்ச பரிவர்த்தனை தொகை ரூ. 40 ஆயிரம் ஆக இருக்க வேண்டும். மற்ற பலன்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு குறைந்த முன்பணம் ரூ. 3 ஆயிரம், 7.99 சதவீதம் வட்டியில் கிடைக்கிறது.

    இந்த சலுகை மார்ச் 31, 2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இரண்டு சலுகைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சலுகை தவிர ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா மாடலின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இது பற்றி ஹோண்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • டிவோட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பெரும்பாலான பாகங்கள் உள்நாட்டு பாகங்களை கொண்டுள்ளது.
    • புது டிவோட் மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், கீலெஸ் சிஸ்டம், ஆண்டிதெஃப்ட், டைப் 2 சார்ஜிங் பாயிண்ட் உள்ளது.

    ஜோத்பூரை சேர்ந்த டிவோட் மோட்டார்ஸ் நிறுவனம் ப்ரோடக்ஷன் ரெடி ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. டிவோட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை பிரிட்டனில் கட்டமைத்து இருக்கிறது. இந்த நிறுவனத்தின் டெவலப்மெண்ட் செண்டர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் உள்ள 9.5 கிலோவாட் மோட்டார் அதிவேக அக்செலரேஷன் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த ஆண்டே டிவோட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    புதிய டிவோட் மோட்டார்சைக்கிளில் டிஎப்டி ஸ்கிரீன், கீலெஸ் சிஸ்டம், டைப் 2 சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்படுகிறது. சார்ஜிங்கை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளை ஒரு மணி நேரத்திற்கு சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இதில் உள்ள ஸ்மார்ட் இண்டர்ஃபேஸ் மூலம் ஸ்பீடு மோட்களும் வழங்கப்படுகிறது. எனினும், இதுபற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    டிவோட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் லித்தியம் LFP பேட்டரி பயன்படுத்துகிறது. இத்துடன் ஆன்போர்டு சார்ஜர், சார்ஜிங் ப்ரோடெக்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பேட்டரி பேக் உடன் ஸ்மார்ட் பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டெம்பரேச்சர் கண்ட்ரோல், ரிஜெனரேஷன் போன்ற அம்சங்கள் உள்ளது. 

    • யமஹா நிறுவனத்தின் புதிய FZ-X மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • 2023 யமஹா FZ-X மாடலில் புது விண்ட்ஸ்கிரீன், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    யமஹா நிறுவனம் 2023 FZ-X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது FZ-X மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது மாடலின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது. இத்துடன் புது விண்ட்ஸ்கிரீன், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியுபுலர் ஸ்டீல் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

    இதன் முன்புறம் ஹை-மவுண்ட் ஃபெண்டர் வழங்கப்படுகிறது. இதுதவிர 2023 FZ-X மாடல் புது நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிகிறது. ஸ்பை படங்களில் உள்ள மாடல் கோல்டன் நிற அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதே போன்ற கோல்டு நிற ரிம்கள் FZS 25 போன்ற மாடல்களிலும் யமஹா ஏற்கனவே வழங்கி இருக்கிறது.

    இவற்றுடன் புதிய யமஹா 2023 FZ-X மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. அந்த வகையில், இந்த பைக் 149சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும்.

    இது 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் புதிய யமஹா FZ-X மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் எல்இடி ஹெட்லைட் கொண்ட ஒற்றை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் இது ஆகும்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் சூப்பர் மீடியோர் 650 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சூப்பர் மீடியோர் 650 ஆஸ்ட்ரல் வேரியண்ட் விலை ரூ. 3 லட்சத்து 48 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இண்டர்ஸ்டெல்லார் மற்றும் செலஸ்டியல் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 300 மற்றும் ரூ. 3 லட்சத்து 78 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூன்றாவது பிரீமியம் மோட்டார்சைக்கிள் ஆகும். சூப்பர் மீடியோர் 650 மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட், பெரிய டிரான்ஸ்பேரண்ட் வைசர், ஸ்ப்லிட் சீட் மற்றும் ஒற்றை சீட் செட்டப் வேரியண்டிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இத்துடன் பேக்ரெஸ்ட், க்ரோம் அம்சங்களை கொண்டுள்ளது.

    இந்த மாடலில் 648சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதே யூனிட் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மாடலின் முன்புறம் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரீலோடு மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. சூப்பர் மீடியோர் 650 முன்புறம் 16 இன்ச் பின்புறம் 19 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. எல்இடி இலுமினேஷன் தவிர இந்த பைக்கில் டூயல் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளது. பெரிய டயலில் ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஃபியூவல் லெவல் ரீடிங் உள்ளது.

    சிறிய யூனிட்-இல் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலில் மிரர்கள், டூரிங் சீட்கள், பேக்ரெஸ்ட்கள், ஹார்டு கேஸ் பேனியர்கள், என்ஜின் கார்டு மற்றும் பல்வேறு அக்சஸரீக்களை கொண்டுள்ளது.

    இந்த மாடல் ஆஸ்ட்ரல் பிளாக், ஆஸ்ட்ரல் புளூ, ஆஸ்ட்ரல் கிரீன், இண்டர்ஸ்டெல்லார் கிரே, இண்டர்ஸ்டெல்லார் கிரீன், செலஸ்டியல் ரெட் மற்றும் செலஸ்டியல் புளூ என ஏழுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • இந்தியாவில் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா அப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது டெசர்ட் எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் வினியோகத்தை துவங்கி விட்டது. ஆஃப் ரோட் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புது டூரிங் மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடலில் 937சிசி, L-ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட ஐந்து இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த மாடலில்- ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியுரோ என ஆறு வித ரைடிங் மோட்கள் உள்ளது.

    இத்துடன் ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு பவர் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் கார்னெரிங் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் கூடுதலாக ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஜாய் இ பைக் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நான்கு வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • புதிய ஜாய் மிஹோஸ் வினியோகம் படிப்படியாக துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜாய் இ பைக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜாய் மிஹோஸ் என அழைக்கப்படும் புது ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வதோதராவில் உள்ள வார்டுவிசார்டு R&D குழுவினரால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், வட்ட வடிவம் கொண்ட ரியர் வியூ மிரர்கள், முன்புற இண்டிகேட்டர்கள் அப்ரானில் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் வளைந்த பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ-ரிவர்சபில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் உள்ளது.

    பாதுகாப்பிற்கு சைடு ஸ்டாண்டு சென்சார், ஹைட்ராலிக் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் பேட்டரி ஸ்டேட்டஸ் ரிமோட் அக்சஸ் வசதி, ரிவர்ஸ் மோட், ஜிபிஎஸ், ஆண்டி-தெஃப்ட் மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1500 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை ஏழு நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஜாய் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 74V40Ah லி-அயன் சார்ந்த பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. நான்கு மணி நேரத்தில் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஜாய் மிஹோஸ் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மெட்டாலிக் புளூ, சாலிட் பிளாக் கிளாசி, சாலிட் எல்லோ கிளாசி மற்றும் பியல் வைட் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் குஜராத் மாநிலத்தின் வதோதரா உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. வினியோகம் நாடு முழுக்க படிப்படியாக துவங்க இருக்கிறது.

    • எல்எம்எல் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிப்படுத்தப்பட்டது.
    • ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

    எல்எம்எல் (லொஹியா மெஷினரி லிமிடெட்) நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. எல்எம்எல் ஸ்டார் மாடல் அதிநவீன டிசைன் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் 2022 வாக்கில் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எதிர்கால டிசைன், முன்புறம் ஃபுளோடிங் இன்சர்டில் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கூட்டரை முதல் முறையாக பொது மக்களுக்கு காட்சிப்படுத்தியதோடு எல்எம்எல் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்களை அறிவித்தது. அந்த வகையில், இந்த ஸ்கூட்டரில் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், இண்டராக்டிவ் ஸ்கிரீன், போடோசென்சிடிவ் ஹெட்லைட் உள்ளது.

    இவைதவிர எல்எம்எல் ஸ்டார் மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட இண்டிகேட்டர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் ஃபேர்க் முன்புற சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பே எல்எம்எல் நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை துவங்கி விட்டது. குறிப்பாக இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் எதையும் எல்எம்எல் இதுவரை வசூலிக்கவில்லை. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

    • யமஹா நிறுவனம் தமிழ் நாட்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் இம்மாத இறுதிவரை வழங்கப்பட இருக்கின்றன.

    இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கும் யமஹா மோட்டார் இந்தியா தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை சிறப்பு சலுகைகள் யமஹா FZ மற்றும் ஃபசினோ 125சிசி ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்டிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சலுகை விவரங்கள்:

    யமஹா FZ மாடலை வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக், ரூ. 7 ஆயிரத்து 999 முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் குறைந்த மாத தவணை முறை மற்றும் 0 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

    யமஹா ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் டிரம் மாடலை வாங்கும் போது ரூ. 1500 வரை கேஷ்பேக், ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் மாத தவணை, 0 சதவீத வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சலுகைகள் யமஹா விற்பனை மையங்களில் பெற முடியும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை யமஹா விற்பனை மையங்களில் அறிந்து கொள்ள முடியும்.

    150சிசி யமஹா FZ சீரிசில் சக்திவாய்ந்த ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் 149சிசி, SOHC, 2 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    யமஹா ஃபசினோ ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் SOHC, இரண்டு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பிஎஸ் பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர ஏராளமான பயனுள்ள அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய 750சிசி மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • டிரான்சால்ப் 750 மாடலில் உள்ள என்ஜின் புதிய 750சிசி மாடலிலும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் GB750 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஜப்பானில் GB350, சர்வதேச சந்தையில் ஹைனெஸ் CB350 வடிவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதை போன்றே புது மாடலிலும் பழைய மோட்டார்சைக்கிள்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    அந்த வகையில் புது மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், குறைவான பாடிவொர்க், ஹை-ரைஸ் ஹேண்டில்பார்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் GB750 மாடலில் ரெட்ரோ-ஸ்டைல் பெயிண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை இந்த மாடலில் டிரான்சால்ப் 750 மற்றும் CB750 ஹார்னெட் மாடல்களில் உள்ள யூனிட் வழங்கப்படலாம்.

    எனினும், இந்த மாடலில் பழைய பைக் போன்ற தோற்றத்தை கொடுக்கும் பாகங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், பின்புறம் கன்வென்ஷனல் ஃபோர்க்குகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஎஃப்டி டேஷ், ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

    புதிய ஹோண்டா GB750 மாடல் பற்றி இதுவரை ஹோண்டா தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் கவாசகி Z650RS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது தொழில்நுட்பம் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் பைக் என இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் அம்சம் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது. புது தொழில்நுட்பம் H ஸ்மார்ட் என அழைக்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய H-ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புது தொழில்நுட்பம் எதுபோன்ற வசதியை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனினும், இதற்கான டீசரில் இந்த தொழில்நுட்பம் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    ஹீரோ நிறுவனத்தின் iஸ்மார்ட் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், யமஹா நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் என பல்வேறு நிறுவனங்கள் அதிக மைலேஜ் வழங்கும் தொழில்நுட்பங்களை வழங்க துவங்கிவிட்டன. அந்த வகையில் ஹோண்டா ஏற்கனவே தனது வாகனங்களில் சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்தை வழங்கி இருக்கிறது. எனினும்,ஸ ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

    அந்த வகையில் புது தொழில்நுட்பம் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் ஹோண்டா CB300F மற்றும் ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ப்ளூடூத் மூலம் கனெக்டிவிட்டி வசதியை வழங்கும். இது ஹோண்டா வாகனங்களின் டிஜிட்டல் டேஷ்-இல் நோட்டிஃபிகேஷன் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.

    • 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் யுலு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • பஜாஜ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது ஸ்கூட்டரில் அந்நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    யுலு நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 2023 நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பஜாஜ் டிசைன் மற்றும் உற்பத்தியில் புது இருசக்கர வாகனம் உருவாகி இருக்கிறது. யுலு நிறுவனத்தில் பஜாஜ் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறது.

    முற்றிலும் புது எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் இந்த இருசக்கர வாகனத்தை பஜாஜ் உருவாக்கி இருக்கிறது. இதற்காக பஜாஜ் நிறுவனம் யுலு பைக்ஸ்-இடம் பல்வேறு கருத்துக்களை கேட்டுக் கொண்டு இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஸ்கூட்டரின் பல்வேறு வேரியண்ட்களை அறிமுகம் செய்ய யுலு திட்டமிட்டுள்ளது.

    புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழில்நுட்ப விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாடல் அதிகளவு உள்நாட்டு பாகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருப்பதாக யுலு தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் ஸ்கூட்டரின் விலை குறைவாகவும், போட்டியை ஏற்படுத்தும் வகையிலும் நிர்ணயம் செய்ய முடியும். சரியான விலை நிர்ணயம் செய்வதன் மூலம் டெலிவரி ரைடர் உள்பட கனெக்டிவிட்டி ஆபரேட்டர்களை குறிவைக்கலாம்.

    அடுத்த சில மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இவை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படாது என்றே தெரிகிறது.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
    • புது அப்டேட் படி ஏத்தர் ஸ்கூட்டர்கள் புது நிறங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கிடைக்கும்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பெங்களூரு நகரில் கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் ஏத்தர் கம்யுனிட்டி கடந்த முறையை விட இந்த ஆண்டு எந்த அளவுக்கு விசேஷமாக மாறி இருக்கிறது என்பதை தெரிவித்தது. கடந்த கம்யுனிட்டி நிகழ்வில் 6 ஆயிரம் பயனர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த முறை 80 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதுவரை ஏத்தர் வாகனங்கள் 500 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் ஒரு பில்லியன் கிலோமீட்டர்களை கடக்க முடியும் என ஏத்தர் எனர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுதவிர ஏத்தர்ஸ்டேக் 5.0 பெயரில் மென்பொருள் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பயனர்களுக்கு புது யூசர் இண்டர்ஃபேஸ் வழங்குகிறது.

    புது யூசர் இண்டர்ஃபேஸ் சிறப்பான ஸ்வைப் மற்றும் டச் ரெகக்னிஷன் கொண்டுள்ளது. இது முன்பை விட அதிக சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதுதவிர ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற ஐகான்கள் மொபைல் போனில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. கூகுள் மேப்ஸ் சேவை கொண்ட உலகின் முதல் ஸ்கூட்டர் ஏத்தர் 450X ஆகும். தற்போது வெக்டார் மேப் சேவை வழங்கப்படுவதாக ஏத்தர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    ஏத்தர் 450X மற்றும் 450 பிளஸ் பயனர்களுக்கு நேரலை போக்குவரத்து விவரங்கள் வழங்கப்படுகிறது. இது மொபைலில் உள்ள கூகுள் மேப்ஸ் போன்றே செயல்படும். இவைதவிர ஆட்டோஹோல்டு எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இது வழக்கமான ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கும் மெக்கானிக்கல் பிரேக் லாக் வசதியை வழங்கும். இந்த அம்சம் கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது.

    இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், கிரால் கண்ட்ரோல் மற்றும் மேம்பட்ட ரிஜென் போன்ற வசதிகளை வரும் மாதங்களில் வழங்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு வருகிறது. இதுவரை 900 ஃபாஸ்ட் சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை ஏத்தர் இன்ஸ்டால் செய்து இருக்கிறது. மேலும் மார்ச் 2023-க்குள் நாடு முழுக்க 1300 சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இவற்றில் 3.3 கிலோவாட் சர்வதேச ஏசி சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கார்களையும் சார்ஜ் செய்யும்.

    450X மாடலுக்காக புது சீட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய சீட்-ஐ விட அதிக சவுகரியமாக இருக்கிறது. கம்யுனிட்டி டே நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் சீட் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இதுதவிர ஏத்தர் 450X மாடலுக்கு- லூனார் கிரே மற்றும் ரெட் அக்செண்ட்கள், காஸ்மிக் பிளாக் மற்றும் அக்வா புளூ அக்செண்ட்கள், ட்ரூ ரெட் மற்றும் வைட் அக்செண்ட்கள், சால்ட் கிரீன் மற்றும் ஆர்ஞ்சு அக்செண்ட்கள் என நான்கு புது நிறங்களில் கிடைக்கிறது.

    ×