search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க பிரத்யேக குழுக்களை நியமித்து இருக்கிறது.
    • இந்த குழுவில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி இடம்பெற்று இருக்கிறார்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனக்கென சொந்த எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி உமேஷ் கிரிஷ்னப்பாவை நியமித்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக குழு இந்தியா மற்றும் லண்டனில் செயல்பட்டு வருகிறது என்றும் இந்த குழு எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது குறித்த திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 100 முதல் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

    இந்த முதலீட்டின் மூலம் பிரத்யேக பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் தற்போதைக்கு L என நிறுவனத்திற்குள் அழைக்கப்படுகிறது. சர்வதேச வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் ஏராளமான வாகனங்களை உருவாக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் சந்தையில் களமிறங்குவதில் இருந்து ஆண்டுக்கு 1.2 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 1.8 லட்சம் வாகனங்களை உள்ளடக்கிய வியாபாரம் செய்ய ராயல் என்பீல்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு புது பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த 12 மாதங்களில் இந்த பிளாட்பார்மிற்கான ப்ரோடோடைப் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாகனத்தை தயார்படுத்தி, அடுத்த ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×