என் மலர்
பைக்
- ஹாக் 11 மாடலுக்கான காப்புரிமையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது.
- ஹோண்டா ஹாக் 11 கஃபே ரேசர் மாடலில் 1082சிசி பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 4 பெரிய பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில் CB500X மாடல் சமீபத்தில் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் பட்டியலிடப்பட்டு தற்போது மற்றொரு முறை ஆஃப்லைனில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று CBR-1000RR-R ஃபயர்பிலேடு மாடல் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டு விட்டது. இவை தவிர CBR650-R, ஃபயர்பிலேடு, ஆப்ரிக்கா டுவின் மற்றும் கோல்டு விங் போன்ற மாடல்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.
விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹோண்டா பிங்விங் ஒற்றை பெரிய பைக் மாடலையும் விற்பனை செய்யவில்லை. பெரிய பைக் மாடல்கள் பிரிவில் போட்டி நிறுவனமான கவாசகி, தனது விலை காரணமாக மற்ற நிறுவனங்களை விட அதிக விற்பனையை பதிவு செய்து வருகிறது. இதுதவிர சுசுகி நிறுவனம் ஹயபுசா மற்றும் கட்டனா சீரிசில் தன்பங்கிற்கு முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் புதிய பெரிய பைக் மாடலை இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. புது பெரிய பைக் ஆப்ரிக்கா டுவின் போன்றே 1082சிசி பேரலல் டுவின் பிளாட்பார்ம் கொண்ட ஹாக் 11 ஆகும். ஹாக் 11 நியோ ரெட்ரோ-தீம் கொண்ட கஃபே-ரேசர் மோட்டார்சைக்கிள் ஆகும். முன்னதாக 2022 ஒசாகா மோட்டார்சைக்கிள் விழாவில் இந்த கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.
இந்திய சந்தையில் புதிய ஹாக் 11 மாடலுக்கான காப்புரிமையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சரியாக நான்காவது மாதத்தில் இந்த காப்புரிமை விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புது ஹோண்டா மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது இந்தியாவுக்காக தயாராகி வருகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் காப்புரிமை பெற்ற பல மாடல்கள் அறிமுகம் செய்யப்படாமலேயே உள்ளது. அந்த வரிசையில், இந்த மாடலும் இணைந்து கொள்ளலாம் அல்லது சந்தையில் தேவை ஏற்படும் பட்சத்தில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகளும் உண்டு. ஹாக் 11 கஃபே ரேசர் மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், ORVMகள், க்ளிப்-ஆன் ஹேண்டில் பார்கள், முன்புறம் யுஎஸ்டி ஃபோர்க்குகள், முன்புறம் டூயல் டிஸ்க், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன.
ஹோண்டா ஹாக் 11 கஃபே ரேசர் மாடலில் 1082சிசி பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
Photo Courtesy: Rushlane
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Xoom ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- புதிய ஹீரோ Xoom ஸ்கூட்டரின் விலை ரூ. 68 ஆயிரத்து 599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 110சிசி ஸ்கூட்டர் Xoom முன்பதிவை துவங்கி இருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ Xoom வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹீரோ Xoom மாடல்- LX, VX மற்றும் ZX என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் LX விலை ரூ. 68 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விலை விவரங்கள்:
ஹீரோ Xoom LX ரூ. 68 ஆயிரத்து 999 என்றும் Xoom VX ரூ. 71 ஆயிரத்து 799 என்றும் ஹீரோ Xoom ZX ரூ. 76 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் ஹோண்டா டியோ மற்றும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் SmartXonnect வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது.

முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் ஹீரோ Xoom 110 மாடலில் முன்புறம் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல், H வடிவ எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர புது ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஷாக், 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள அலாய் வீல் டிசைன் விடா V1 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் LX வேரியண்ட் டிரம் பிரேக்குகளையும், VX மற்றும் ZX வேரியண்ட்களில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் பைபிர் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹீரோ Xoom 110 மாடலிலும் 110.9சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.15 பிஎஸ் பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹீரோ i3S தொழில்நுட்பம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.
- ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக உள்ளது.
- இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி, தனது உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு லட்சமாவது யூனிட்டாக ஜென் 3 450X மாடல் ட்ரூ ரெட் நிற வேரியண்ட் அமைந்தது. உற்பத்தி மைல்கல் மட்டுமின்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் மாத விற்பனையில் அசத்தி இருக்கிறது.
ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற ஏத்தர் கம்யுனிட்டி டே நிகழ்வில் ஜென் 3 ரக ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி அறிமுகம் செய்தது. மேலும் ஜனவரி மாதத்தில் ஏத்தர் எனர்ஜி இந்திய சந்தையில் விற்பனை செய்த மொத்த வாகனங்கள் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி வருடாந்திர அடிப்படையில் ஏத்தர் எனர்ஜி வாகன விற்பனை 330 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 2 ஆயிரத்து 825 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 12 ஆயிரத்து 149 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 9 ஆயிரத்து 324 யூனிட்கள் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஏத்தர் வாகனங்கள் விற்பனை 32.24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஆகஸ்ட் 2022 வாக்கில் ஏத்தர் எனர்ஜி உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது.
ஏத்தர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைப்பதை அடுத்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை திறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்த நிதியாண்டின் இறுதியில் இந்த ஆலை முழுமையாக பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. ஓசூரில் புதிதாக திறக்கப்பட இருக்கும் உற்பத்தி ஆலை மூலம் ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும்.
- கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- கவாசகி மோட்டார்சைக்கிள்களுக்கான சலுகைகள் இந்த மாத இறுதி வரை வழங்கப்படுகிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில மாடல்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதில் குட் டைம்ஸ் வவுச்சர் சலுகையின் கீழ் கவாசகி இந்தியா தனது குறைந்த விலை நின்ஜா 300 மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது.
இத்துடன் ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் முறையே Z650 மற்றும் W800 மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் குட் டைம்ஸ் வவுச்சரை மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சலுகை இன்று (பிப்ரவரி 1) துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. இதோடு மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களின் ஸ்டாக் இருப்புக்கு ஏற்றவாரு சலுகைகள் வழங்கப்படும். கவாசகி நின்ஜா 300 எக்ஸ்-ஷோரூம் மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் என துவங்குகிறது.
கவாசகி Z650 மற்றும் W800 மாடல்களின் விலை முறையே ரூ. 6 லட்சத்து 43 ஆயிரம் மற்றும் ரூ. 7 லட்சத்து 33 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த மாதம் கவாசகி இந்தியா நிறுவனம் நின்ஜா 400, நின்ஜா 1000 SX மற்றும் நின்ஜா ZX-10R மாடல்களின் விலையை மாற்றியமைத்தது.
- ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புது 100சிசி பைக்கை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
- புது ஹோண்டா 100சிசி பைக் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புது 100சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஹோண்டா பைக் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
புது பைக் உருவாகி வருவதை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குனர் அடுஷி ஒகாடா உறுதிப்படுத்தி இருந்தார். தற்போது ஹோண்டாவின் புது பைக் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் டிசைன் காப்புரிமை விண்ணப்பத்தில் இருந்து புது ஹோண்டா பைக் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

விண்ணப்பத்தின் படி ஹோண்டா இதனை 2020 வாக்கில் விண்ணப்பித்து இருந்தது தெரியவந்துள்ளது. எனினும், இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுவரை இந்த காப்புரிமை ஹோண்டா நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. புது பைக் டிசைன் ஹோண்டா உருவாக்கி வரும் 100சிசி பைக் போன்று இருக்கும் என்றே தெரிகிறது.
இந்த பைக் ஸ்லோபர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஹோண்டா டிரேட்மார்க் செய்த யூனிட் ஆகும். இந்த என்ஜின் ஹோண்டா சூப்பர்கப் C100EX மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்லோபர் என்ஜின் குறைந்த செலவில் உற்பத்தியை செய்து விட முடியும். புது 100சிசி மாடலில் ஸ்லோபர் என்ஜினை வழங்குவதன் மூலம் ஹோண்டா பைக் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: ZigWheels
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xoom 110 ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- புதிய ஹீரோ Xoom 110 ஸ்கூட்டரின் முன்பதிவு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Xoom 110 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடலின் ஸ்போர்ட் வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் LX, VX மற்றும் ZX என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹீரோ Xoom 110 விலை விவரங்கள்:
ஹீரோ Xoom LX ரூ. 68 ஆயிரத்து 999
ஹீரோ Xoom VX ரூ. 71 ஆயிரத்து 799
ஹீரோ Xoom ZX ரூ. 76 ஆயிரத்து 699
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் ஹோண்டா டியோ மற்றும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் SmartXonnect வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 68 ஆயிரத்து 625 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் ஹீரோ Xoom 110 மாடலில் முன்புறம் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல், H வடிவ எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர புது ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஷாக், 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள அலாய் வீல் டிசைன் விடா V1 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் LX வேரியண்ட் டிரம் பிரேக்குகளையும், VX மற்றும் ZX வேரியண்ட்களில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் பைபிர் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பிற்கு இந்த ஸ்கூட்டரில் இண்டகிரேட் செய்யப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், ஹீரோ லிங்கோ கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் கார்னர் பெண்ட் லேம்ப்கள், டிஜிட்டல் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரியல்-டைம் மைலேஜ் இண்டிகேட்டர், போன் பேட்டரி ஸ்டேட்டஸ், கால்/எஸ்எம்எஸ் அலெர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹீரோ Xoom 110 அண்டர்சீட் ஸ்டோரேஜில் எல்இடி லைட், ஓபன் குளோவ் பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புற ஃபியூவல் ஃபில்லர் கேப் வழங்கப்படவில்லை. மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 110.9சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 8.15 பிஎஸ் பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹீரோ i3S தொழில்நுட்பம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் இரு மோட்டார்சைக்கிள்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளது.
- பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு பிஎம்டபிள்யூ ரிகால் பற்றி தகவல் அனுப்பி வருகிறது.
பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் மற்றும் R 1250 RT மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட யூனிட்களை ரிகால் செய்கிறது. ரிகால் நடவடிக்கை வட அமெரிக்க சந்தையில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கியர்பாக்ஸ் இன்புட் ஷாஃப்ட் உடையும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால், மோட்டார்சைக்கிள்கள் ரிகால் செய்யப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட யூனிட்களில் உள்ள கியர்பாக்ஸ் இன்புட் ஷாஃப்ட் ஓவர்லோட் ஆகி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பின்பற சக்கரத்தை நிறுத்தி விடும். இதன் காரணமாக விபத்து மற்றும் காயம் ஏற்படும் அபாயம் அதிகம் ஆகும். இம்முறை 18 ஆயிரத்து 489 யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ R 1250 GS 6 ஆயித்து 812 யூனிட்கள்
பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் 9 ஆயிரத்து 401 யூனிட்கள்
பிஎம்டபிள்யூ R 1250 RT 2 ஆயிரத்து 276 யூனிட்கள்
குறிப்பு: பாதிக்கப்பட்ட யூனிட்கள் 2019 முதல் 2023-க்குள் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. மேலும் ரிகால் சர்வீஸ் செய்ய அருகாமையில் உள்ள பிஎம்டபிள்யூ விற்பனையாளரை தொடர்பு கொள்ளும் பிஎம்டபிள்யூ கேட்டுக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யூனிட்களில் பிஎம்டபிள்யூ விற்பனையாளர்கள் என்ஜின் கண்ட்ரோல் யூனிட் மென்பொருளை அப்டேட் செய்து வழங்க இருக்கிறது. இதுதவிர பிஎம்டபிள்யூ நிறுவனம் 2019 முதல் 2023 வரை உற்பத்தி செய்யப்பட்ட R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் மற்றும் R 1250 RTP மாடல்களின் விற்பனையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
- சுசுகி நிறுவனம் எட்டு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகிறது.
- சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக எலெக்ட்ரிக் அக்சஸ் மாடல் இருக்கலாம்.
சுசுகி நிறுவனம் 2030 ஆண்டு வரையிலான சர்வதேச செயல் திட்டம் மற்றும் வாகனங்கள் வெலியீடு திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் சில சுவாரஸ்யமான எலெர்ட்ரிக் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலை டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், அக்சஸ் எலெக்ட்ரிக் மாடலே சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

அக்சஸ் மாடல் சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும். மேலும் இது பர்க்மேன் ஸ்டிரீட் IC என்ஜின் வேரியண்டை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் இது சுசுகியின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும். இதோடு எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.
சுசுகியின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் 2030 ஆண்டிற்குள் மொத்தம் எட்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியாகும் போதிலும், தொடர்ந்து IC என்ஜின் வாகனங்கள் பிரிவிலும் சுசுகி கவனம் செலுத்த இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் IC என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முறையே 75:25 முறையில் அறிமுகமாகிறது.
மோட்டார்சைக்கிள் பிரிவில் சுசுகி நிறுவனம் எந்த மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஜிக்சர் சீரிஸ் தான் எலெக்ட்ரிக் வடிவம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
- ஹோண்டா நிறுவனத்தின் புது 100சிசி பைக் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புது 100சிசி பைக் ஹோண்டா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது முற்றிலும் புதிய 100சிசி மோட்டார்சைக்கிளை மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய 100சிசி மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருக்கும் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
ஏற்கனவே இந்த மாடலை உருவாக்கும் பணிகள் துவங்கிவிட்ட நிலையில், இது நேரடியாக ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100சிசி பைக் பற்றி தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது.
முன்னதாக 2021 வாக்கில் ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய 100சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அட்சுஷி ஒகாடா தெரிவித்து இருந்தார். தற்போது ஹோண்டா நிறுவனத்தின் ஷைன், SP125 மற்றும் யுனிகான் போன்ற மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடலாக CD 110 இருக்கிறது. இதன் விலை ரூ. 71 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 110சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8.7 ஹெச்பி பவர், 9.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
புதிய 100சிசி ஹோண்டா பைக் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் CD110 மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. புது 100சிசி பைக் மட்டுமின்றி ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வெளியாகிறது.
- ஹோண்டா நிறுவனம் நாடு முழுக்க பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2024 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகாடா தெரிவித்து இருக்கிறார்.
ஹோண்டா ஜப்பான் உடன் இணைந்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருவதாக ஒகாடா தெரிவித்து இருக்கிறார். மேலும் முதல் ஸ்கூட்டர் மாடல் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் தயாராகி விடும் என அவர் மேலும் தெரிவித்தார். ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆக்டிவா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதில் பிக்சட் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். இதே ஸ்கூட்டரின் அதிக செயல்திறன் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதில் எளிதில் கழற்றி மாட்டிக் கொள்ளும் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒரே ஆலையில் IC என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கு ஏற்ற வசதிகளை கொண்டு வர முதலீடுகள் செய்யப்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. மேலும் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரியை சந்தைக்கு ஏற்றவாரு மாற்ற முடிவு செய்துள்ளது. இத்துடன் இரண்டாவது மாடலை அறிமுகம் செய்யும் முன் 6 ஆயிரம் கஸ்டமர் டச்பாயிண்ட்களை அமைக்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
- ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.
- தற்போது ஹோண்டா ஆக்டிவா மாடல் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புது ஆக்டிவா மாடல் விலை ரூ. 80 ஆயிரத்து 537, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புது மாடலை தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா மாடல் - ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் அலாய் வீல் கொண்ட ஸ்மார்ட் கீ என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் கீ ஸ்கூட்டரில் கீலெஸ் வசதியை வழங்கி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஹேண்டில்பார் லாக் / அன்லாக், அண்டர் சீட் ஸ்டோரேஜ் மற்றும் ஃபியூவல் நிரப்பும் மூடியை திறப்பது உள்ளிட்டவைகளை சாவி இன்றி இயக்க முடியும்.

இத்துடன் ஆண்டி-தெஃப்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கூட்டரில் உள்ள நாப்-போன்ற ஸ்விட்ச் கொண்டு மேலே உள்ள அம்சங்களை இயக்கலாம். இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஸ்கூட்டரின் ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டிலும் 109.51சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஸ்ப்ரிங், டிரம் பிரேக் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
- டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தை விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் ஸ்கூட்டர் 140 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இது டிவிஎஸ் நிறுவனத்தின் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பலரும் விரும்பும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐகியூப் இருந்து வருகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் போது டிவிஎஸ் நிறுவனம் அதன் விற்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனினும், நாடு முழுக்க தனது விற்பனை மையங்கள் மூலம் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது டிவிஎஸ் ஐகியூப் மாடல்- ஐகியூப், ஐகியூப் S மற்றும் ஐகியூப் ST என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் முதல் இரு வேரியண்ட்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐகியூப் ST டாப் எண்ட் மாடலில் பெரிய பேட்டரி பேக் உள்ளது. இது 140 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
டிவிஎஸ் ஐகியூப் ST மாடலில் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், TPMS மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளது. அடுத்த சில மாதங்ளில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐகியூப் விற்பனையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.






