என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பென்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்திய முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
பென்லி இந்தியா நிறுவனம் சமீபத்தில் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கியது. இந்நிலையில் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க இதுவரை 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் பென்லி நிறுவனத்தின் வெற்றிகர மோட்டார்சைக்கிளாக இம்பீரியல் 400 இருக்கிறது.

ரெட்ரோ வடிவமைப்பில் பாரம்பரிய ஸ்டைலிங் கொண்டிருக்கும் பென்லி இம்பீரியல் 400 மாடலில் குரோம் சரவுண்ட் கொண்ட ஹெட்லேம்ப், ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியர்-டிராப் ஃபியூயல் டேன்க், அகலமான ஹேன்டில்பார் மற்றும் ஸ்ப்லிட் சீட்கள் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
இந்த மோட்டார்சைக்கிளில் 374சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.6 பி.ஹெச்.பி. பவர் @5500 ஆர்.பி.எம்., 29 என்.எம். டார்க் @4500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த என்ஜின் பி.எஸ். 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் பி.எஸ்.6 ரக என்ஜின் எதிர்பார்க்கலாம்.
டாடா நிறுவனத்தின் கிராவிடாஸ் பி.எஸ்.6 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டாடா நிறுவனத்தின் கிராவிடாஸ் கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கார் டாடா ஹேரியர் மாடலில் உள்ள பி.எஸ். 6 2.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. ஸ்பை படங்களில் ஓட்டுனருக்கு புல்-அப் போன்ற ஆர்ம் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்7 என அழைக்கப்படும் புதிய கிராவிடாஸ் கார் ஏழு பேர் பயணிக்கக்கூடிய டாடா ஹேரியர் ஆகும். இந்த எஸ்.யு.வி. மாடல் 2017 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த எஸ்.யு.வி. மாடல் பஸ்ஸார்டு என்ற பெயரில் விற்பனை செய்யப்படலாம்.
ஹேரியர் காரில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் என்ஜின் 138 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. கிராவிடாஸ் மாடலில் இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். டிரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.

கிராவிடாஸ் கார் ஹேரியர் மாடலை விட உயரமாக இருக்கிறது. எனினும், இதன் வீல்பேஸ் மற்றும் அகலம் மாற்றப்படவில்லை. கிராவிடாஸ் காரின் பின்புறம் பெரிதாக இருக்கிறது. இதனால் இந்த காரில் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் மூன்றாம் அடுக்கு இருக்கைகளுக்கும் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வெளியானதும் கிராவிடாஸ் கார் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆறுபேர் பயணிக்கக்கூடிய எம்.ஜி. ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
புகைப்படம் நன்றி: Rushlane
ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் புதிய எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் விலை ரூ. 44.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த செடான் கார்: எஸ் மற்றும் எஸ்.இ. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
முந்தைய மாடலை விட புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இதன் வடிவமைப்பு முந்தைய மாடலை விட அகலமாக இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் பின்புறம் கூர்மையான எல்.இ.டி. டெயில்லைட்களும் பக்கவாட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் வெளிப்புறத்தை மேம்படுத்தி ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
உள்புறம் இரட்டை தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் வசதியையும், மற்றொன்று கிளைமேட் கண்ட்ரோல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே 10.2 இன்ச் தொடுதிரை சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கிடைக்கிறது.
ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முந்தைய காரில் உள்ள என்ஜின்களே வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.0 லிட்டர் இன்ஜினியம் பெட்ரோல் மற்றும் 2.0 இன்ஜினியம் டீசல் யூனிட்களை கொண்டிருக்கிறது. எனினும், புதிய என்ஜின்கள் பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பி.எஸ்.6 எக்ஸ்.யு.வி.300 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எக்ஸ்.யு.வி.300 இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 கார் ஆகும்.
பி.எஸ். 6 எக்ஸ்.யு.வி.300 விலை ரூ. 8.3 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 11.84 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.300 பெட்ரோல் என்ஜினை மட்டுமே பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்துள்ளது. இதன் டீசல் மாடல் பி.எஸ்.4 ரகத்திலேயே இருக்கிறது. மற்ற மாடல்களை பி.எஸ். 6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் மஹிந்திரை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 ரக பெட்ரோல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர எக்ஸ்.யு.வி.300 கார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நவம்பர் 2019 விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நவம்பர் மாதத்தில் 4,03,223 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 4,06,930 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை 0.9 சதவீதம் குறைந்துள்ளது.
உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 11.5 சதவீதம் குறைந்து 2,07,775-ஆக இருக்கிறது. எனினும் ஏற்றுமதி (1,72,112-ல் இருந்து) 1,95,448-ஆக உயர்ந்து இருக்கிறது.

ஒட்டுமொத்த அளவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 0.8 சதவீதம் குறைந்து 3,43,446-ஆக உள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 59,777-ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அது 60,386-ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்கு ரூ.3,161-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.3,269-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.3,261.35-ல் நிலைகொண்டது. இது, திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 3.20 சதவீத ஏற்றமாகும்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.500 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 எக்ஸ்.யு.வி.500 கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் எக்ஸ்.யு.வி.500 கார் முழுமையாக மறைக்கப்பட்டு, பி.எஸ். 6 சோதனை உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்பை படங்களின் படி புதிய கார் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. அந்தவகையில் முன்புறம் ஆறு செங்குத்தான ஸ்லேட்கள் கொண்ட புதிய கிரில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் முழுமைபெறாத ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆடம்பர கார் கதவுகளில் வழங்கப்படுவதை போன்ற கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் புதிய ஃபிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் மற்றும் ஆடியோ கண்ட்ரோல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புதிய எஸ்.யு.வி. மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் எம்.ஐ.டி., பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய காரில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த கார் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியானதும் இந்த கார் டாடா கிராவிடாஸ் மற்றும் ஏழு பேர் பயணிக்கக்கூடிய எம்.ஜி. ஹெக்டார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
புகைப்படம் நன்றி: Lemon Green Studios
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.சி. கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 ஜி.எல்.சி. எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 52.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்.யு.வி.: ஜி.எல்.சி. 200 மற்றும் ஜி.எல்.சி. 220டி 4மேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 57.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வடிவமைப்பை பொருத்தவரை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. மாடல் பார்க்க முந்தைய ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் முன்புறம் புதிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட எல்.இ.டி. டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய கார் மெர்சிடிஸ் பென்ஸ் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் தொழில்நுட்பம் கொண்ட முதல் கார் ஆகும். இந்த தொழில்நுட்பம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டீரிங் வீல், வாய்ஸ் மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற அம்சங்களை கொண்டுடிருக்கிறது.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கார்: 255 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 192 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் 2019 நவம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 50.34 சதவீதம் சரிந்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 2019 நவம்பர் மாதத்தில் 50.34 சதவீதம் சரிந்துள்ளது. உள்நாட்டில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மொத்தம் 6,459 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 50 சதவீத சரிவாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 13,006 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2018-19-ஆம் நிதி ஆண்டில், ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,83,787-ஆக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 1,70,026-ஆக இருந்தது.

ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் தற்சமயம் சிட்டி, அமேஸ், ஜாஸ், டபுள்யூ.ஆர்.-வி, சிவிக் மற்றும் சி.ஆர்.-வி போன்ற வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை 3.2 சதவீதம் சரிந்துள்ளது. 2019 நவம்பர் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 1,41,400 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது. நவம்பர் 2019-ல் இந்நிறுவனம் மொத்தம் 44,600 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
நவம்பர் 2019-ல் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மொத்தம் 105 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது நவம்பர் 2018 உடன் ஒப்பிடும் போது 80.66 சதவீதம் சரிவாகும். நவம்பர் 2018-ல் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மொத்தம் 534 யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்தது.
இந்தியா முழுக்க சுமார் 200 நகரங்களில் பைக் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக உபெர் தெரிவித்துள்ளது.
வாடகை டாக்சி, ஆட்டோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கென்று உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் செல்போன் ஆப் வழியாக சென்று இதற்கு பதிவு செய்தால் உடனடியாக காரோ அல்லது ஆட்டோவோ அந்த இடத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்லும்.
நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த சேவையை குறிப்பிட்ட நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. தற்போது கார் மற்றும் ஆட்டோ சேவை மட்டுமே பெரும்பாலான நகரங்களில் கிடைக்கிறது. இதில், உபெர் நிறுவனம் மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டரில் பயணிகளை ஏற்றி சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் பைக் டாக்சி முறையை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். இதற்கும் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு 200 நகரங்களுக்கு விரிவுபடுத்த இருக்கிறது. இந்த திட்டத்தை செயல் படுத்த அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது.

குறிப்பாக மராட்டியம், கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்களில் கூட இந்த திட்டம் அமல் படுத்தப்படவில்லை. அதை எல்லா மாநிலங்களிலும் கொண்டு வரும் வகையில் பல்வேறு நகரங்களில் செயல்படுத்த உபெர் திட்டமிட்டிருக்கிறது.
நகரங்களில் குறுகிய தூரத்துக்கு செல்லும் வகையில் பைக் டாக்சி அறிமுகப்படுத்தப்படும். குறைந்தபட்சம் 20 நிமிட நேரத்தில் பயண இடத்தை சென்றடையும் வகையில் பைக் டாக்சி சேவை இருக்கும். இதில், பணியாற்றுபவர்கள் மாதம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.
இந்தியாவை பொறுத்த வரை சுமார் 20 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தோனேசியாவில் பைக் டாக்சி முறை பிரபலமாக உள்ளது. அங்கு வாரத்துக்கு 2 கோடி பேர் பைக் டாக்சியில் பயணம் செய்கிறார்கள். இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும் போது, இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 சதவீதம்தான் உள்ளது.
ஆனால், அங்கு பைக் டாக்சி தொழில் முன்னணி இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதே போல் ஆட்டோ சேவை திட்டமும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் முக்கிய நகரத்தில் இருந்து குறிப்பிட்ட நகரங்களுக்கு பஸ் சேவைகளை இயக்கும் திட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். என அவர் கூறினார்.
கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க கார் மெக்கானிக் ஒருவர் யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
இந்தோனேசியாவின் தலைநகராக உள்ள ஜகார்த்தா கடலில் மூழ்கி வருவதாக கூறி அந்த நாட்டு அரசு தலைநகரை மாற்றுவதாக அறிவித்து உள்ளது. இதை தவிர ஜகார்த்தாவில் உள்ள மற்றொரு முக்கிய பிரச்சினை போக்குவரத்து நெரிசல். வாகனங்களின் அதிகரிப்பால் அங்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஜகார்த்தாவை சேர்ந்த ஜுஜுன் ஜுனேடி (வயது 42) என்பவர் தனக்கென சொந்தமாக வீட்டிலேயே ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். கார் மெக்கானிக்கான இவர் ஹெலிகாப்டரை வடிவமைப்பது எப்படி என்பது குறித்து யூடியூப் மூலமாக வீடியோக்களை பார்த்து கற்று தேர்ந்தார்.

அதன்பிறகு தனது கார் பழுது பார்க்கும் பணிமனையில் இருந்து காரின் உதிரிபாகங்கள் மற்றும் பழைய என்ஜின்கள் உள்ளிட்டவற்றை எடுத்து ஹெலிகாப்டர் செய்ய பயன்படுத்தினார். சுமார் ஓர் ஆண்டுகால ஓயாத உழைப்புக்கு பின் இறுதியாக தனது கனவான ஹெலிகாப்டரை ஜுஜுன் ஜுனேடி உருவாக்கினார். இந்த ஹெலிகாப்டரை தயாரிக்க 2 ஆயிரத்து 138 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம்) செலவிட்டதாக ஜுஜுன் ஜுனேடி கூறுகிறார்.
மேலும், பெட்ரோல் மூலம் இயங்கும், 8 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஹெலிகாப்டரை உருவாக்க தனது இளம் மகனும், தனது நண்பரும் தனக்கு உதவியதாக அவர் கூறினார். அனைத்து பணிகளையும் முடித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஹெலிகாப்டரில் பறந்து செல்வேன் என்று ஜுஜுன் ஜுனேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இ.வி. கார் மும்பையில் டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. நெக்சான் இ.வி. காருக்கான புதிய டீசர்களை டாடா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் நெக்சான் இ.வி. கார் ஃபேஸ்லிஃப்ட் நெக்சான் எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என இதுவரை வெளியான டீசர்களில் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த கார் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பொனெட் மற்றும் முன்புற பம்ப்பர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள், மெல்லிய கிரில், டி.ஆர்.எல்.கள் கொண்ட ஹெட்லைட் யூனிட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய நெக்சான் கார் அக்டோபர் 2020 முதல் அமலாக இருக்கும் புதிய பாதசாரி பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.
புதிய காரில் அலாய் வீல் வடிவமைப்புகள், பின்புற ஸ்டைலிங் போன்றவை தற்சமயம் விற்பனையாகும் காரை விட வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்சான் இ.வி. கார் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையகங்களில் எதிர்பார்க்கலாம்.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய அளவு திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் இரண்டு கோடி கார்களை விநியோகம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை மொத்தம் இரண்டு கோடி வாகனங்களை இந்தியாவில் விநியோகம் செய்துள்ளது.
இரண்டு கோடி யூனிட்கள் என்பது ஒட்டுமொத்த விற்பனை விவரம் என்றபோதும், இத்தகைய மைல்கல்லை இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனமும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை மாருதி சுசுகி நிறுவனம் 37 ஆண்டுகளில் எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் கார் டிசம்பர் 1983 ஆண்டில் விற்பனை செய்யப்பட்டது.

இந்திய விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை எட்ட 27 ஆண்டுகளை மாருதி சுசுகி எடுத்துக் கொண்டது. பின் அடுத்த ஒரு கோடி யூனிட்களை கடக்க மாருதி சுசுகி நிறுவனம் வெறும் எட்டு ஆண்டுகளையே எடுத்துக் கொண்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் மாருதி 800 மாடலின் மூலம் இந்திய சந்தையில் களமிறங்கியது. இந்த கார் இன்றுவரை அதிக பிரபல மாடலாக விளங்கி வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் சிறிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் மாருதி நிறுவனம் சுமார் 50 எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சந்தையில் சிறப்பான எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.






