என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • 20 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
      • கணித தேர்வில் 14 பேர் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

      சங்கரன்கோவில்:

      திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 244 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 20 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல், 53 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல், 121 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். 226 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் கிஷோர், சிவ கணேஷ், ராகுல். 487 மதிப்பெண் அபிநயா என்ற மாணவி பெற்றுள்ளார். சங்கரேஸ்வரி, அர்ஷா, சஹானா, விஸ்வநாதன் ஆகிய மாணவர்கள் 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

      பாடவாரியாக தமிழ் 98 மதிப்பெண்கள் ஒரு நபர், ஆங்கிலம் 99 மதிப்பெண் 7 நபர், கணிதம் 100-க்கு100 மதிப்பெண் 14 நபர், அறிவியல் 100 மதிப்பெண் 1 நபர், சமூக அறிவியல் 98 மதிப்பெண் 2 நபர் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

      • தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
      • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ஜ.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தமிழகத்தில் தி.மு.க. அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தென்காசி மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில் மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செய லாளர் வளர்மதி முன்னிலை வகித்தார். பொருளாளர் மரகதம், தென்காசி நகர தலைவர் மந்திர மூர்த்தி வரவேற்புரை யாற்றினார். ஆர்ப்பாட்ட த்திற்கு சிறப்பு அழைப்பா ளர்களாக தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமரா ஜா, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

      • பொருநை அருங்காட்சியகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
      • ஆதிச்சநல்லூரில் உள்ளது உள்ளபடியே 'சைட் மியூசியம்' அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

      செய்துங்கநல்லூர்:

      ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மாநில அரசு சார்பில் அகழாய்வு செய்து கிடைத்த பொருள்களை நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியகம் மூலமாக காட்சிபடுத்த உள்ளனர்.

      ரூ. 33.2 கோடி செலவில்

      இதற்காக ரூ. 33.2 கோடி செலவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா கடந்த 18- ந்தேதி நடந்தது. இது போலவே மத்திய அரசு தொல்லியல் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருகிறது.இதற்காக இடம் தேர்வு உள்பட பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் பொதுமக்களிடம் இலவசமாக இடத்தினை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகம் முழுவதும் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு வந்து இங்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.

      சைட் மியூசியம்

      மேலும் ஆதிச்சநல்லூர் ஏ, பி, சி சைட் என 3 இடங்களில் அகழாய்வு செய்து அந்த இடங்களில் உள்ளது உள்ளபடியே 'சைட் மியூசியம்' அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. அருங்காட்சியக பணிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.

      இதற்காக மத்திய அமைச்சர் வருகை தரும் இடம், மேலும் மேடை அமையும் இடம், அடிக்கல் நாட்டும் இடம் உள்பட இடங்களை கலெக்டர் பார்வையிட்டார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் விளக்கம் அளித்தார்.

      கலெக்டர் ஆலோசனை

      மேலும் அருங்காட்சியக பணிகள் குறித்தும், தொல்லியல் துறையினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் மேல் கண்ணாடி மூலம் அமைய உள்ள சைட் மியூசியத்தை நேரில் பார்வை யிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் மூலமாக வெளியிடப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வரலாறு நூலை அருண்ராஜ், கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

      நிகழ்ச்சியில் நூலின் ஆசிரியரும், தொல்லியல் துறை அலுவலருமான யதீஸ்குமார், தொல்லியல் ஆய்வாளர் அறவாழி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
      • 8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

      கோவில்பட்டி:

      கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்ட ளையின் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

      11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறு கிறது.

      3-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கஸ்டம்ஸ் புனே அணியும், இந்தியன் பேங்க் சென்னை அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் கஸ்டம்ஸ் புனே அணி வெற்றி பெற்றது.

      8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

      9-வது லீக் ஆட்டத்தில் ரெயில் வீல் பேக்டரி பெங்களுரு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சென்னை அணியும், 10-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க், நியூ டெல்லி மற்றும் நிஸ்வாஸ் ஹாக்கி டீம் பாம்போஸ் அணிகளும் மோதுகின்றன.

      நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடை பெறும் இப்போட்டிகளின் தமிழ் நாடு போலீஸ் சென்னை- சாய்-எஸ்.டி.சி. பெங்களூரு அணிகள் மோதுகின்றன,

      இதேபோல் பெட்ரோ லியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோ மோஷன் போர்டு -சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணிகளும் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, நியூ டெல்லி - ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகளும், சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத் - இந்தியன் பேங்க் சென்னை அணிகளும் மோதுகின்றன.

      • முத்துப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
      • விழாவில் கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

      விளாத்திகுளம்:

      விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 9.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

      நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் (கிழக்கு ), மும்மூர்த்தி (மேற்கு ), மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஊராட்சி தலைவர் மகாலட்சுமி கண்ணன், புதூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வெற்றிவேல், ஒன்றிய துணை செயலாளர் கொப்பையா, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ், கிளை செயலாளர்கள் பாண்டிய ராஜன், வடிவேல்ராஜ், கருப்பசாமி, செல்லபாண்டியன் ஒன்றிய பொறியாளர் தமிழ் செல்வன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      • 10 நாட்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என கூறப்படுகிறது.
      • குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும்.

      தூத்துக்குடி:

      தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் இருந்து வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் கலியாவூர் நீர்த்தேக்கம் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

      கடந்த வருடம் பருவ மழை குறைவாக பெய்துள்ளதால் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பாபநாசம் அணை முழுமையாக நிரம்பவில்லை. கோடைகாலம் ஆரம்பமாகி உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை கொஞ்சம் இருந்து வருகிறது.

      இந்த சூழ்நிலையிலும் தூத்துக்குடி மாநகர 60 வார்டு பகுதி மக்களும் பாதிக்காத வகையில் குடிதண்ணீர் முறைப்படுத்தி சூழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

      இந்நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி வல்லநாடு, கலியாவூர் ஆகிய பகுதிகள் மட்டுமன்றி தாமிரபரணி நதிக்கரை பகுதியில் கிணறு அமைக்க ப்பட்டு அதன் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யும் முறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற் கொண்டார். அப் போது அவர் கூறுகையில்,

      தாமிரபரணி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அளவு குறைவாக இருப்ப தால் மழை குறைந்துள்ள தால் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என கூறப்படுகிறது. எனவே மக்கள் கூடுமானவரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      கோடைகாலம் ஆரம்பமாகி இருப்பதால் மக்களின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும். ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுபவர்களை உங்களுக்கு கொடுத்தி ருப்பது பதவி அல்ல மக்களுக்கு பணி செய்யும் பொறுப்பு என்று கூறியது மட்டுமின்றி எல்லோரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை கண்காணிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

      எனவே அதன் அடிப்படையில் மக்கள் பணியை நாங்கள் தொடர்ந்து செய்வதற்கான முயற்சி களை அதிகாரி களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.

      24 மணி நேரமும் தூத்துக்குடி மாநகர மக்கள் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் மக்கள் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அப்போது அவர் கூறினார்.

      • மேலலட்சுமிபுரம் கிராமத்தில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
      • நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ஓட்டப்பிடாரம்:

      ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலலட்சுமிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

      சண்முகையா எம்.எல்.ஏ.

      இதனை தொடர்ந்து மேலலட்சுமிபுரம் புதிய துணை மின் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார்.

      நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் யூனியன் தலைவர் ரமேஷ், துணை தலைவர் காசிவிஸ்வநாதன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர்கள் குருவம்மாள் (தூத்துக்குடி), பிரேமலதா (மதுரை)

      செயற்பொறியாளர்கள் கணேசன், சாமுவேல் சுந்தராஜ், ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெகதீசன், அருணாச்சலம் ராஜ்குமார், சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீத கிருஷ்ணன், கனக ரத்தினம் சுகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் இளைய ராஜா, அருண்குமார், முத்து மகாலட்சுமி உட்பட மின்சார வாரிய உதவி பொறியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      • தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதியாக கோவில்பட்டி திகழ்கிறது.
      • கோவில்பட்டி நகரில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

      கோவில்பட்டி:

      தூத்துக்குடி மாவட் டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகர மாகும். கோவில் பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கண க்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.

      கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, வடக்கு, தெற்கு திட்டக்குளம் மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டவ ர்மங்கலம், மந்திதோப்பு, தோணுகால், சாலைப்புதூர், ஆவல்நத்தம், அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளியங்குளம், பாறைப்பட்டி, கிருஷ்ணா நகர், சுபா நகர், கணேஷ் நகர், ராஜகோபால் நகர், பல்லக்கு ரோடு, சண்முக சிகாமணி நகர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 30 கிராம ங்களில் இருந்து தினசரி பல்லாயிரக் கணக்கான பொது மக்கள், வியா பாரிகள், மாணவ மாணவி கள் கோவில்பட்டி நகரு க்குள் வந்து செல்கின்றனர்.

      எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. கோவில்பட்டி நகரில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், போக்குவரத்து பிரிவு மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு என பல காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொது மக்களின் நலன் காத்திடவும், விபத்து மற்றும் குற்றச் செயல்களை தடுத்திடவும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல ர்களின் எண்ணி க்கையை உயர்த்த வேண்டும்.

      பெருகி வரும் வாகன போக்குவரத்தை கணக்கில் கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். அதேபோல் சமீப காலங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன்கருதி கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின் புதூர், கழுகுமலை, கயத்தார் உள்ளிட்ட காவல் நிலை யஙகளில் குற்றப்பிரி வுக்கென தனி இன்ஸ்பெ க்டர்கள் மற்றும் கோவி ல்பட்டி ஜனத்தொகை எண்ணி க்கை கணக்கில் கொண்டு அதிக காவலர்க ளை நியமிக்க வேண்டும். மேலும் போலீசார் இரவு நேரங்களில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

      • சர்வதேச அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
      • 713 விவசாயிகள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

      தென்காசி:

      பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் விவசாயம் சார்ந்த மாத வருமானமும், வேலை வாய்ப்பும் தரக்கூடிய ஒரு தொழில் ஆகும். சர்வதேச அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மத்திய பட்டு  வாரியம் மற்றும் தமிழக அரசு பட்டுத்தொழில் வளர்ச்சிக்கு குறிப்பாக வெண்பட்டு (பைவோல்டைன்) உற்பத்தியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

      பட்டுத்தொழில்

      தென்காசி மாவட்டம் தென்காசியை தலைமை யிடமாக கொண்டு உதவி இயக்குநர் அலுவலகமும் 4 தொழில்நுட்ப சேவை மையங்களும் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் பட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வருமானம் உயர்வடைவதற்கு உறுதுணை யாக இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தம் 1658.50 ஏக்கர் பரப்பளவில் 713 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்து பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதுடன் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

      உதவித்தொகை

      அதன்படி கடந்த 2022-2023-ம் ஆண்டில் மாநிலத்திட்டத்தில் நடவு மானியம் 160.00 ஏக்கர் 79 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 16.80 லட்சம், தனிபுழு வளர்ப்பு மனை அமைத்தல் 16 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 19.20 லட்சம் மற்றும் 10.50 மதிப்பில் புழு வளர்ப்பு தளவாடங்கள் 20 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

      மத்திய பகுதி திட்டத்தின்கீழ் நடவு மானியம் 2000 ஏக்கர் 20 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 7.73 லட்சம், தனிபுழு வளர்ப்பு மனை அமைத்தல் 20 பயனா ளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 61.80 லட்சம், 11.59 லட்சம் மதிப்பில் புழு வளர்ப்பு தளவாடங்கள் 20 பயனாளிகளுக்கும் மற்றும் 0.77 லட்சம் மதிப்பில் கிருமிநாசினிகள் 20 பயனாளி களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

      மேலும் பட்டுக்கூடு உற்பத்தியாளர்களே தொழில் முனைவர் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் அடைக்கலப்பட்டணம் ஊரை சேர்ந்த ஜேக்கப் என்ற பட்டு விவசாயினை இத்துறை மூலமாக பலமுனை பட்டு நூற்பு ஆலை அமைத்திட மானியம் வழங்கப்பட்டு தரமான பட்டு நூல்கள் உற்பத்தி செய்து கூடுதலான வருமானம் ஈட்டி வருகிறார்.

      நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நிஷாந்தி, பட்டு ஆய்வாளர் ஜெயந்தி, தொழில்நுட்ப உதவியாளர் பிரபு, உதவி பட்டு ஆய்வாளர்கள் ஆபேல்ராஜ் மற்றும் பலவேசம்மாள், இளநிலை பட்டு ஆய்வாளர்கள் சைமன் அருள்ஜீவராஜ், சங்கரன் மற்றும் காளிதாஸ் ஆகியோர்களுடன் ராமசுப்பிரமணியன் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.

      • இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் உண்டியல் சீலை அகற்றி பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்றனர்.
      • அடிப்படை வசதிகள் செய்து தந்த பின்னர்தான் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து செல்வோம் என உத்தரவாதம் அளித்திருந்தனர்.

      சிவகிரி:

      இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

      கோவில் உண்டியல்

      விடுமுறை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் திரளாக வருகை தந்து கிடா வெட்டி, முடி காணிக்கை செலுத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர். அதிகளவில் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, காணிக்கை செலுத்துவதால் இக்கோவில் உண்டியல் நிரம்பி விடுகிறது.

      இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கேசவராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகன், எழுத்தர் குமார் மற்றும் உண்டியல் பணத்தை எண்ணும் இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் ஆகியோர் காளியம்மன் கோவிலில் உள்ள உண்டியல் மீதுள்ள சீலை அகற்றி பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்றனர்.

      அடிப்படை வசதிகள்

      இது குறித்து தகவல் அறிந்த தேவிபட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. கிளைச்செயலாளர் முருகன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகனிடம், கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை, சுகாதாரமான குடிநீர் மற்றும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள், கோவிலை சுற்றிலும் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம்.

      அப்போது அடுத்த முறை அடிப்படை வசதிகள் செய்து தந்த பின்னர்தான் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து செல்வோம் என உத்த ரவாதம் அளித்திருந்தனர். இந்நிலையில் பக்தர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல், உண்டியல் பணத்தை எடுத்து செல்ல வந்துள்ளீர்கள்.

      எனவே உண்டியல் பணத்தை எண்ணக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

      இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் அகற்றிய உண்டியலின் மீது மீண்டும் சீல் வைத்தனர். இனிமேல் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் உண்டியல் பணத்தை எடுக்க வரமாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

      நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி மன்ற 12 வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      • ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார்.
      • கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் இரு மார்க்கங்களிலும் ரெயில் நிறுத்தம் வழங்கி உள்ளது.

      சங்கரன்கோவில்:

      நெல்லை - தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் (ரெயில் வண்டி எண் 06003/06004 ) சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. இது குறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரான ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். அதனை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் இரு மார்க்கங்களிலும் ரெயில் நிறுத்தம் வழங்கி உள்ளது.

      அதன்படி வரும் வருகிற நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கி ழமை) முதல் நெல்லை - தாம்பரம் ரெயிலும், 22-ந் தேதி தாம்பரத்தில் புறப்படும் தாம்பரம்- நெல்லை சிறப்பு ரெயிலும் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

      இதனையடுத்து ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு சங்கரன்கோவில் பகுதி பொதுமக்கள், பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

      • கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் மகளிர் குழுவில் சேமிப்பு செய்து வந்தனர்.
      • குழு தலைவி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் 19 பெண்கள் இணைந்து ஸ்டார் மகளிர் குழுவில் கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் சிறுக சிறுக சேமித்து வந்த நிலையில் அக்குழுவின் தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2018 முதல் சேமிப்பு நிறுத்தப்பட்டது.

      இந்நிலையில் மேற்படி குழு தலைவி மீதமுள்ள பணத்தை தங்களுக்கு தராமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி அறிவுறுத்தலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி விசாரணை செய்து மகளிர் குழுவின் சேமிப்பு பணம் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

      பணத்தை மீட்டுக் கொடுத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பணத்தைப் பெற்ற பெண்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

      ×