search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே ரூ.19.27 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள்-மார்க்கண்டேயன்  எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    அங்கன்வாடி மையத்தினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.

    விளாத்திகுளம் அருகே ரூ.19.27 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • முத்துப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 9.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் (கிழக்கு ), மும்மூர்த்தி (மேற்கு ), மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஊராட்சி தலைவர் மகாலட்சுமி கண்ணன், புதூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வெற்றிவேல், ஒன்றிய துணை செயலாளர் கொப்பையா, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ், கிளை செயலாளர்கள் பாண்டிய ராஜன், வடிவேல்ராஜ், கருப்பசாமி, செல்லபாண்டியன் ஒன்றிய பொறியாளர் தமிழ் செல்வன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×