என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு:தாம்பரம் ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு:தாம்பரம் ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார்.
    • கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் இரு மார்க்கங்களிலும் ரெயில் நிறுத்தம் வழங்கி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    நெல்லை - தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் (ரெயில் வண்டி எண் 06003/06004 ) சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. இது குறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரான ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். அதனை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் இரு மார்க்கங்களிலும் ரெயில் நிறுத்தம் வழங்கி உள்ளது.

    அதன்படி வரும் வருகிற நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கி ழமை) முதல் நெல்லை - தாம்பரம் ரெயிலும், 22-ந் தேதி தாம்பரத்தில் புறப்படும் தாம்பரம்- நெல்லை சிறப்பு ரெயிலும் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு சங்கரன்கோவில் பகுதி பொதுமக்கள், பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×