என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • வெற்றிவேல் கட்டிட தொழிலுக்காக ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
      • நேற்று காலை வீட்டை விட்டு சென்ற வெற்றிவேல், மாலையில் சிதம்பரபுரம் பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.

      களக்காடு:

      களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகர் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது32). தொழிலாளி. இவர் கட்டிட தொழிலுக்காக ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.

      இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு சென்ற வெற்றிவேல், மாலையில் சிதம்பரபுரம் பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெற்றி வேலுக்கு மரகதநேசமணி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

      • அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.
      • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

      செங்கோட்டை:

      மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள அக்கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.

      இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர செயலாளர் கணேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. உறுப்பினர் மதன் செய்திருந்தார்.

      • ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது.
      • சப்பர பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

      செங்கோட்டை:

      செங்கோட்டை வல்லம் ரோடு அனுமன் நதிக்கரையில் உள்ள ஸ்ரீசெல்வவிநாயகா், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது. விழாவையொட்டி செல்வவிநாயகா், இருக்கன்குடி மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடந்தது. மேலும் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜைகள் நடந்தது.

      முக்கிய நிகழ்ச்சியான கொடைவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்று காலை குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், பால்குடம், அக்னிச்சட்டி, அக்னிகாவடி, பூந்தட்டு மற்றும் அலகுகுத்தி ஊர்வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னா் அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம், இரவில் இருக்கன்குடி மாரியம்மன் சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 12-ந் தேதி காலை முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு ஆராட்டு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளா்கள் செய்திருந்தனா்.

      • நவீன சாலை சூழ்நிலை, வாகன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஓட்டுனர் பயிற்சியின் தரத்தை மேம்படுத்தி அமல்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
      • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

      தென்காசி, ஆக. 14-

      தமிழ்நாடு ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜெயபாரத் முரளி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தென்காசி வைகை குமார், பொருளாளர் ராம்குமார், மாநில துணை தலைவர் செல்வராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கூட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாகவும், இன்றைய நவீன சாலை சூழ்நிலை, வாகன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஓட்டுனர் பயிற்சியின் தரத்தை மேம்படுத்தி வழங்குவதற்கான முறையினை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

      அனைத்து வாகனங்களு க்கான ஓட்டுனர் உரிமங்களை பெறுவதற்கு முன் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் மூலம் ஓட்டுநர் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்துவது, ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி சலுகை வழங்க அரசை வலியுறுத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

      மேலும் மாநில தலைவராக ஜெயபாரத் முரளிதரன், மாநில செயலாளராக தென்காசி வைகை குமார், மாநில பொருளாளராக ராம்குமார், மூத்த துணை தலைவராக ஈரோடு ராஜா ஆகியோர் தொடர்ந்து அதே பொறுப்பில் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

      நிகழ்ச்சியில் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

      • ஆலங்குளம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
      • ஆலங்குளம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

      ஆலங்குளம்:

      தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு, ஆலங்குளம் வந்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியம், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

      அப்போது அவரிடம், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், தரம் உயர்த்தப்பட்ட ஆலங்குளம் அரசு வட்டார தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

      அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

      • பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வழங்கப்பட்டது.
      • மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் புளியங்குடி திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன், புளியங்குடி மருதம் மாடசாமி கலைவாணி தொண்டு அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தியது.

      முகாமிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து துறை சுந்தர் ராஜ், மருதம் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் முகேஷ் சிங் மாடசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கணேஷ், புளியங்குடி தொழிலதிபர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வருவாய் துறை அதிகாரி அருண்குமார் வரவேற்று பேசினார்.

      சிறப்பு அழைப்பாளராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வழங்கப்பட்டது. இதில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் மருதம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருதம் தொண்டு நிறுவன நிர்வாகி கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

      • மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது.
      • ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும்.

      ஆலங்குளம்:

      பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 15-வது நிதி குழு சுகாதார மானியத் திட்டம் 2021-22 மற்றும் தேசிய நகர சுகாதார மையம் 2021-22 நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமார், தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் வாழ்த்தி பேசினார்.

      மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார கட்டிடம், கரிவல ம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார கட்டிடம், மடத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலக் கடையநல்லூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலப்பாவூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம், பொட்டல்புதூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம் உள்ளிட்ட மொத்தம் ரூ.3.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசினார்.

      அப்போது அவர் பேசியதாவது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடி, நாய்க்கடி மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிற்கான மருந்துகளை எப்போதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் அரசு மருத்துவ மனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும் என்றார்.

      தொடர்ந்து பெண்க ளுக்கு சஞ்சீவி பெட்டகம், பேறுகால ஊட்டசத்து பொருள்கள் வழங்கினார். முன்னதாக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் மருதபுரத்தில் சிறப்பாக அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்பு பஸ் நிலையத்தில் கழக கொடி யினை ஏற்றி வைத்தார்.

      நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வாணன், ஒப்பந்த தாரர் கணேஷ் பாண்டியன், மருத்துவர்கள் தண்டாயு தபாணி, குத்தால ராஜ், தேவி உத்தமி, சற்குணம், மோஹினா, அர்ச்சனா, சித்ரா, மாவட்ட நலக்கல்வி யாளர் ஆறுமுகம், மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, சித்த மருத்துவர்கள் ஜெபநேசம், சரஸ்வதி, தமிழ் முதல்வி, கமர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் மற்றும் செவிலி யர்கள், மருத்துவ பணியா ளர்கள், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, அன்பழகன், சீனிதுரை , சிவன் பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

      சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் வரவேற்றார். வட்டரா மருத்துவ அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

      • பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
      • பிடிபட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

      நெல்லை:

      நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

      ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 22 மூட்டைகளில் தலா 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து பிடிபட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காருடன் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

      இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடையம் செக்கடியூர் கீழத்தெருவை சேர்ந்த கனகராஜ்(வயது 29), கீழக்கடையத்தை சேர்ந்த நவநீதன்(41), சதீஷ்குமார்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

      • கை.முருகன் உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
      • ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் கை.முருகன் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

      ஆலங்குளம்:

      கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவரும், முன்னாள் தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான கை.முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி கல்லூத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

      கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன் தலைமை தாங்கினார். கை.முருகன் உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு, கை.முருகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவியினை நிர்வாகிகள் முன்னிலையில் கை.முருகன் குடும்பத்தினரிடம் வழங்கினார். பின்னர் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

      இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், துணை செயலாளர்கள் தமிழ்செல்வன், கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், அழகு சுந்தரம், ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பொன்செல்வன், சமுத்திரபாண்டி, முத்துராஜ், பழனிசாமி, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம். எஸ்.ராஜன், பெத்த நாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், இளைஞரணி கோமு,மாவட்ட இளைஞரணி கிருஷ்ணராஜ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி சிவராஜன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், குறும்பலாப்பேரி இளங்கோ, சுரேஷ் கண்ணா, தினேஷ், தங்கச்சாமி, தளபதி முருகேசன், தங்கேஸ்வரன், நாராயண சிங்கம், பாண்டி, காசிபாண்டி, சீனி நம்பியார், ராஜசேகர், ஜெகன், சீதாராமர், காளி முத்து, லிங்கம் திருமலைகுமார், அழகுதமிழ், மாறன், சுதன் ராஜா, ராம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை 12 கட்டங்களாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
      • மாணவர்களை எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைப்பதற்கான முறைகள் குறித்து சிறப்பு கருத்தாளர் ஆர்த்தி பயிற்சி அளித்தார்.

      சங்கரன்கோவில்:

      அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்துவதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை பலவிதமான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது.

      இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "ஜாலி போனிக்ஸ்" என்ற பெயரில் ஆங்கில ஒலிப்பு பயிற்சி மற்றும் ஒலியின் அடிப்படையில் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை எளிதில் வாசிக்க வைப்பது தொடர்பான பயிற்சி 2 நாட்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

      தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா வழிகாட்டுதலின்படி கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை 12 கட்டங்களாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

      முதல் கட்ட பயிற்சியானது சங்கரன்கோவில் வட்டார தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கரிவலம்வந்தநல்லூர் ஆ.ம.செ.அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. பயிற்சியினை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சீவலமுத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கங்கள் குறித்து பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் வரவேற்று பேசினார். மேலும், குழந்தை மைய வழிமுறையில் உச்சரிப்பு, ஒலி முறையின் அடிப்படையில் மாணவர்களை எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைப்பதற்கான முறைகள் குறித்து சிறப்பு கருத்தாளர் ஆர்த்தி பயிற்சி அளித்தார். பயிற்சியில் சங்கரன்கோவில் வட்டாரத்தை சேர்ந்த 79 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

      பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன், சங்கரன்கோவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துச்செல்வி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்து வருகின்றனர்.

      • பேரணியில் சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
      • போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமங்களான தங்கப்பழம் மருத்துவ கல்லூரி, தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி, தங்கப்பழம் சட்ட கல்லூரி, தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தங்கப்பழம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாசுதேவநல்லூரில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

      இதில் தங்கப்பழம் கல்வி குழுமங்களை சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷமிட்டும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியானது வாசுதேவநல்லூர் நகர மைய பகுதியில் நிறைவு பெற்றது. பேரணியில் எஸ். தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

      • ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
      • அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களை பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

      ஆலங்குளம்:

      தென்காசி மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையான மக்கள் தொகை கொண்டது ஆலங்குளம். மேற்கு பகுதியில் தாசில்தார் அலுவலகம் தொடங்கி அதனையொட்டி, கிழக்கு வரிசையில் சார்பதிவாளர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டி.எஸ்.பி. அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, அரசுக் கருவூலம், பீடித் தொழிலாளர் நல மருத்துவமனை பஸ் நிலையம் என சுமார் 500 மீட்டர் தொலைவுக்குள் 15-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

      இந்த அலுவகங்களை யொட்டியும், அருகிலும் ஓடை செல்கிறது. மழைநீர் ஓடையாக இருந்து இது தற்போது கழிவு நீரோடையாக மாறிவிட்டது.

      இந்நிலையில் இந்த ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும் அனைத்து அலுவக வளாகத்திலேயே சுற்றித் திரிகிறது.

      குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே பழைய வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் மற்றும் கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் சுற்றித்திரிவதால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. முக்கிய பணிக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களை இப்பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துவதாக புகார் கூறுகின்றன.

      இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, பன்றிகளை அப்புறப்படுத்தி அவற்றை வளர்ப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் பன்றிகள் வளர்ப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

      இதனால் ஆலங்குளத்தின் மேற்குப்பகுதி துர்நாற்றத்து டனேயே காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

      ×