search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமம் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி
    X

    எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமம் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி

    • பேரணியில் சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமங்களான தங்கப்பழம் மருத்துவ கல்லூரி, தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி, தங்கப்பழம் சட்ட கல்லூரி, தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தங்கப்பழம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாசுதேவநல்லூரில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

    இதில் தங்கப்பழம் கல்வி குழுமங்களை சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷமிட்டும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியானது வாசுதேவநல்லூர் நகர மைய பகுதியில் நிறைவு பெற்றது. பேரணியில் எஸ். தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×