என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே தொழிலில் நஷ்டம் கடனை செலுத்த முடியாததால் தொழிலாளி தற்கொலை
- வெற்றிவேல் கட்டிட தொழிலுக்காக ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
- நேற்று காலை வீட்டை விட்டு சென்ற வெற்றிவேல், மாலையில் சிதம்பரபுரம் பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகர் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது32). தொழிலாளி. இவர் கட்டிட தொழிலுக்காக ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு சென்ற வெற்றிவேல், மாலையில் சிதம்பரபுரம் பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெற்றி வேலுக்கு மரகதநேசமணி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Next Story