என் மலர்
- நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடை பெறுவது வழக்கம்.
- கொடிமரத்திற்கு 16 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.
நெல்லை:
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடை பெறுவது வழக்கம்.
ஆவணி திருவிழா
இந்த திருவிழாக்களில் ஆவணி மாதம் நடைபெறக்கூடிய மூலத் திருவிழா விமர்சையான ஒன்றாகும். மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று நடை பெற்றது.
இதனையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
கொடி பட்டம்
தொடர்ந்து கொடி பட்டம் பல்லக்கில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்திருக்கும் சின்ன தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிகர நிகழ்ச்சி
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தர் மானூர் அம்பலம் புறப்படும் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி யும், கரூவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் காட்சி கொடுத்து சாப நிவர்த்தி பெறும் நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதியும் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.
- ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.
நெல்லை:
ஆடி அமாவாசை நாளில் புண்ணிய தலங்களுக்கு சென்று நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.
நெல்லை
இதனால் ஆடி அமாவாசை நாளில் அதிகாலையிலேயே பொதுமக்கள் நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் செய்வார்கள். காசி நதிக்கு ஒப்பாக கருதப்படும் நெல்லை தாமிரபரணி நதியில் அமாவாசை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டும் ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர்.
தர்ப்பணம்
அவர்கள் படித்துறையில் அமர்ந்து வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.
இதற்காக குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் வந்திருந்தனர். ஏற்கனவே காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றதால் அங்கும் பஸ் போக்குவரத்து இருந்ததால் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
அதனை அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் சரி செய்தனர். இதேபோல் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.
இதனால் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் படித்துறை பகுதிகளில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்களும் முன்எச்சரிக்கையாக பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே அருவிக்கரைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மெயின் அருவியில் மிகவும் குறைந்த அளவே பாறையை ஒட்டியபடி தண்ணீர் விழுந்தது. ஆனாலும் குற்றாலம் அருவி கரையை சுற்றிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி, வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து தர்ப்பணம் செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆற்றில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்.
- கரையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.
- பெரும்பாலும் ரெயில்வே கேட் மூடப்பட்டே இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
நெல்லை:
தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், தமிழக அரசு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட கரையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு நெல்லை விதை ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கரில் உள்ளது. இங்குள்ள அமிர்தம்மாள் உயர்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் பணி நிமித்தமாக மதுரை சாலைக்கு வந்து தான் பஸ் ஏறவேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் ரெயில்வே தண்டவாளம் குறுக்காக உள்ளது. இந்த வழித்தடம் வழியாக சென்னை செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செல்கின்றன. இதனால் பெரும்பாலும் ரெயில்வே கேட் மூடப்பட்டே காட்சியளிக்கிறது.
இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அமிர்தம்மாள் பள்ளி அருகில் இருந்து தச்சநல்லூர் பைபாஸ் சாலைக்கு இணைப்பு சாலை அமைத்து கொடுத்தால் கரையிருப்பு, குறிச்சிகுளம், சுந்தராபுரம், செட்டிகுளம் கிராம மக்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
- கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தங்குவதற்கும், தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கும் வனத்துறை கடுமையான நிபந்தனைகள் விதித்தது.
- திருவிழா முடியும் வரை வனத்துறையினர் இதில் தலையிடகூடாது என்று வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதி இந்த கோவிலை தழுவி செல்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
சிறப்பு அதிகாரி நியமனம்
இந்த விழாவுக்காக நெல்லை, தென்காசி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கண க்கானோர் ஒரு வாரத்துக்கு முன்பே கோவிலுக்கு வந்து குடில் அமைத்து தங்குவார்கள். ஆடி அமாவாசை தினத்தன்று அவர்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் அங்கு வந்து தங்குவதற்கும், தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கும் வனத்துறை கடுமையான நிபந்தனைகள் விதித்து வந்ததால் ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்த ஆண்டு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறப்பு அதிகாரியாக நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியை நியமித்தார். மேலும் கோவில் திருவிழா முடியும் வரை வனத்துறையினர் இதில் தலையிட கூடாது என்றும் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.
திருவிழா கோலாகலம்
இந்நிலையில் இன்று காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதற்காக அம்பை அகஸ்தியர் பட்டி யில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் ஏறி பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கோவிலுக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. கோவில் முன்பு உள்ள பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர். ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல் இருப்பதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே நெல்லையில் இருந்து பேட்டை, கல்லூர், முக்கூடல் வழியாக பாபநாசம் செல்லும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறினர். ஆடி அமாவாசை யான இன்று ஏராளமான பக்தர்கள் பாபநாசம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.
இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் ஆடி திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய இயக்குனர் மாரிமுத்து, சிறப்பு அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தி, அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் ஆகியோர் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ் நிலையம், பாபநாசம் சோதனை சாவடி, சொரிமுத்தையனார் கோவில் ஆகிய இடங்களில் கூட்டாக ஆய்வு செய்தனர்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.
திசையன்விளை:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.
முதல்பரிசு
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெண்கள் இறுதி ஆட்டத்தில் வடக்கு ெரயில்வே மற்றும் சென்ட்ரல் ெரயில்வே அணிகள் மோதின.
இதில் 39-26 என்ற புள்ளிக்கணக்கில் வடக்கு ெரயில்வே அணி வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த சென்ட்ரல் ரெயில்வே அணி ரூ. 1 லட்சம் மற்றும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த சவுத் சென்ட்ரல் அணிக்கும், 4-வது இடம் பிடித்த கிழக்கு ரெயில்வே அணிக்கும் தலா ரூ. 75 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது.
சபாநாயகர் அப்பாவு
ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், கிரீன் ஆர்மி அணியும் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 41:30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.2 லட்சம் மற்றும் கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த கிரீன் ஆர்மி அணிக்கு ரூ.1½ லட்சம் மற்றும் கோப்பையும் 3-வது இடம் பிடித்த சென்னை வருமானவரித்துறை அணிக்கும், 4-வது இடம் பிடித்த பெங்களூர் பரோடா வங்கி அணிக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் வெற்றி கோப்பைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு கோப்பைகளை வி.எஸ்.ஆர். சுபாஷ் மற்றும் வி.எஸ்.ஆர்.சுரேஷ் ஆகியோர் வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல் பரிசை நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின், 2-வது பரிசை ராதாபுரம் யூனியன் துணைத் தலைவர் இளையபெருமாள், 3-வது பரிசை மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நம்பி, 4-வது பரிசை அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தாமகேஸ்வரன் மற்றும் மயோபதி குழும தலைவர் டாக்டர் ராமசாமி ஆகியோர் வழங்கினர்.
பரிசளிப்பு
பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார். 2-ம் பரிசு தொகையை ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் டென்னிசன், 3-வது பரிசு தொகையை உறுமங்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவலடி சரவணகுமார், கஸ்தூரிரங்கபுரம் பாலன் ஆகியோரும், 4-வது பரிசு தொகையை ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், சிதம்பராபுரம் பேபி முருகன், உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.
பரிசளிப்பு விழாவில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று சதிஷ்குமார் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார்.
- ஆனந்த் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அவர் ஏர்வாடியில் உள்ள டோனாவூர் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, பெருமளஞ்சியை சேர்ந்த சுடலைமுத்துக்குமார் மகன் அன்பு ஆனந்த் (22) ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.
இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பு ஆனந்தை தேடி வருகின்றனர்.
- கலெக்டர் கார்த்திகேயன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
- விழாவில் மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.27.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்பட்டது.
நெல்லை
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காலை 9.05 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வை யிட்டார். அப்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உடன் சென்றார். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதன்பின்னர் என்.சி.சி. மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். மாற்றுத்தி றனாளிகள் துறை, வேளாண்துறை உள்ளிட்ட 9 துறைகள் சார்பில் பயனாளி களுக்கு நலத்திட்டங்களை அவர் வழங்கினார். இலவச தையல் எந்திரம், தேய்ப்புபெட்டிகள், மரம் ஏறும் கருவி, மின்கல தெளிப்பான், மாற்றுத்தி றனாளி களுக்கான ஸ்கூட்டர், உதவித்தொகை என நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இவ்வாறாக மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.27.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகி யோரின் பிறந்தநாளை யொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகைகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி யவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 257 பேருக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கும் சிறப்பாக பணியாற்றியமைக்காக கலெக்டர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பொதுமக்கள் கேலரியில் அமர்ந்து கண்டுகளித்தனர். இதில் வடக்கு செழியநல்லூர், சந்திப்பு மீனாட்சிபுரம், கல்லணை அரசு பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 950 மாணவிகள் நடனம் ஆடினர். சுமார் 90 மாணவிகள் உட ற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
3 அடுக்கு பாதுகாப்பு
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்கு மார், உதவி கலெக்டர்கள் முகமது சபீர் ஆலம் (சேரன்மாதேவி), மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமார், போலீஸ் துணை கமிஷனர்கள் அனிதா, சரவணக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், பழைய பேட்டை ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அருளானந்தம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். சுதந்திர தின விழாவை யொட்டி பாளை யங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சுதந்திர தின விழாவையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள காந்தி, காமராஜர், வீர பாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் பாளை நீதிமன்றம் எதிரே உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபம், டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு ஜொலித்தன.

இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்து நின்ற மாணவ-மாணவிகள்.
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார்.
- கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
நெல்லை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார். இதில் அணுமின் நிலைய ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வளாக இயக்குனர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் முதல் அணு உலையில் 2022 -23 ஆண்டில் 14,226 மெட்ரிக் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ள்ளது . கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 638 நாட்கள் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணு மின் நிலையம் சாதனை படைத்துள்ளது.
கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
அணுமின் நிலையம் சார்பில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை அருகில் உள்ள கிராமங்களுக்கு ரூ.104 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்யப் பட்டு உள்ளன. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 193 பள்ளி களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அணுமின் நிலையம் சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜாமணி உடல் பிரேத பரிசோதனை முடிந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- உயிரிழந்த ராஜாமணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும்.
நெல்லை:
பாளை கீழநத்தம் வடக்கூரை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 31). இவர் கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி, தெற்கூரை சேர்ந்த இசக்கி உள்பட 3 பேர் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இது தொடர்பாக பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
உடலை வாங்க மறுப்பு
இந்நிலையில் ராஜாமணி உடல் பிரேத பரிசோதனை முடிந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கீழநத்தம் வடக்கூர் கிராமத்தில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உயிரிழந்த ராஜா மணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும், அவரது மனைவி பட்டதாரி என்பதால் அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த கொலையை செய்ய தூண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர்.
நெல்லை:
சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார்.
அதனை தொடர்ந்து கோவில் யானை காந்திமதி தேசிய கொடிக்கு மரியாதை செய்தது.தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
- சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதினம் மற்றும் கிராம உதயம் வெள்ளி விழா ஆண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் தனி அலுவலர் கணேசன், பேச்சியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நெல்லை:
கிராம உதயம் சார்பாக 77-வது சுதந்திர தினம் மற்றும் கிராம உதயம் 25-வது வெள்ளிவிழா தினத்தை முன்னிட்டு 250 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்ச்சி கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் நடைபெற்றது.
கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதினம் மற்றும் கிராம உதயம் வெள்ளி விழா ஆண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.
கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் தனி அலுவலர் கணேசன், பகுதி பொறுப்பா ளர்கள் முருகன், பாலசுப்பிர மணியன், மரியமிக்கேல் ஜீவா, பேச்சியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கிராம உதயம் 25-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கிராம உதயம் அனைத்து தன்னார்வ தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார்.
- 9-ம் திருவிழா அன்று பொத்தக்காலன்விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.
பணகுடி:
ராதாபுரம் அருகே உள்ள தோப்புவிளை பரலோக அன்னை ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கிறிஸ்தவ ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி மாலை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியை அர்ச்சித்து ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். திருவிழா நாட்களில் தினமும் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலையில் மறையுரை வழிபாடுகள் நடைபெற்றது.
9-ம் திருவிழா அன்று பொத்தக்காலன்விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக இரவு 11 மணிக்கு பரலோக மாதா தேரில் ரத வீதிகளில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக உப்பு மிளகு தூவி வழிபட்டனர்.
தேரோட்டத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.







