என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் உடலை வாங்க 3-வது நாளாக உறவினர்கள் மறுப்பு
    X

    நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் உடலை வாங்க 3-வது நாளாக உறவினர்கள் மறுப்பு

    • ராஜாமணி உடல் பிரேத பரிசோதனை முடிந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
    • உயிரிழந்த ராஜாமணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும்.

    நெல்லை:

    பாளை கீழநத்தம் வடக்கூரை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 31). இவர் கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி, தெற்கூரை சேர்ந்த இசக்கி உள்பட 3 பேர் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    இது தொடர்பாக பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    உடலை வாங்க மறுப்பு

    இந்நிலையில் ராஜாமணி உடல் பிரேத பரிசோதனை முடிந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கீழநத்தம் வடக்கூர் கிராமத்தில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உயிரிழந்த ராஜா மணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும், அவரது மனைவி பட்டதாரி என்பதால் அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த கொலையை செய்ய தூண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×