search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி அருகே ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு
    X

    ஏர்வாடி அருகே ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு

    • சம்பவத்தன்று சதிஷ்குமார் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார்.
    • ஆனந்த் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அவர் ஏர்வாடியில் உள்ள டோனாவூர் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, பெருமளஞ்சியை சேர்ந்த சுடலைமுத்துக்குமார் மகன் அன்பு ஆனந்த் (22) ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.

    இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பு ஆனந்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×