search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா
    X

    முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    செங்கோட்டை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

    • ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • சப்பர பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வல்லம் ரோடு அனுமன் நதிக்கரையில் உள்ள ஸ்ரீசெல்வவிநாயகா், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது. விழாவையொட்டி செல்வவிநாயகா், இருக்கன்குடி மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடந்தது. மேலும் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜைகள் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான கொடைவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்று காலை குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், பால்குடம், அக்னிச்சட்டி, அக்னிகாவடி, பூந்தட்டு மற்றும் அலகுகுத்தி ஊர்வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னா் அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம், இரவில் இருக்கன்குடி மாரியம்மன் சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 12-ந் தேதி காலை முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு ஆராட்டு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளா்கள் செய்திருந்தனா்.

    Next Story
    ×