என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கூல்பேட் நிறுவனத்தின் புதிய கூல் பேஸ் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    கூல்பேட் நிறுவனம் இந்திய சந்தையின் ஆடியோ அக்சஸரி பிரிவில் களமிறங்கி இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் கூல் பேஸ் பட்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

    இந்த இயர்பட்சில் டீப் பேஸ் டிரைவர்கள், ப்ளூடூத் 5, டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூல் பேஸ் பட்ஸ் மாடலில் 13 எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை சிறப்பான பேஸ் மற்றும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. 

     கூல் பேஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்

    மேலும் இதில் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இது சீரான மற்றும் வேகமான கனெக்டிவிட்டியை வழங்குகிறது. எடை குறைந்த டால்பின் டிசைன் 2.0 கொண்டிருக்கும் கூல் பேஸ் பட்ஸ் 49 கிராம் எடை கொண்டிருக்கிறது. 

    இதன் சார்ஜிங் கேஸ் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது பேட்டரி அளவை காண்பிக்கிறது. இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 40mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளன.

    இவை 4.5 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் இந்த இயர்பட்ஸ் 20 மணி நேரம் பயன்படுத்தலாம். இந்த இயர்பட்ஸ் குவிக் சார்ஜ் வசதி கொண்டிருக்கிறது. இதனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

    புதிய கூல்பேட் கூல் பேஸ் பட்ஸ் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் மட்டும் ரூ. 200 கோடி ஈட்டியதாக தெரிவித்து உள்ளது.


    சியோமி இந்தியா தனது புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் மட்டும் ரூ. 200 கோடி வருவாய் ஈட்டி இருப்பதாக அறிவித்து உள்ளது. இது அனைத்து தளங்களில் நடைபெற்ற விற்பனையை உள்ளடக்கிய தொகை ஆகும்.

    புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரைம் சந்தாதாரர்களுக்கு ஜனவரி 7 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி எம்ஐ வலைதளம், எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டூடியோஸ் போன்ற தளங்களில் விற்பனைக்கு வந்தது.

    இந்தியாவில் சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அமேசான் இந்தியா தளத்தில் அனைத்து பிரிவுகளில் அதிகம் விற்பனையான பொருட்கள் பட்டியலில் எம்ஐ 10ஐ இடம்பெற்று இருக்கிறது.

    புதிய சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     சியோமி எம்ஐ 10ஐ

    சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4820 எம்ஏஹெச் பேட்டரி
    - 33வாட் பாஸ்ட் சார்ஜிங்

    ஐகூ பிராண்டின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஐகூ பிராண்டின் ஐகூ 7 பிளக்ஷிப் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, OIS, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 13 எம்பி போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     ஐகூ 7

    ஐகூ 7 சிறப்பம்சங்கள்

    - 6.62 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர்
    - அட்ரினோ 660 GPU
    - 8 ஜிபி LPDDR5 ரேம் / 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR5 ரேம் / 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒரிஜின் ஒஎஸ்
    - டூயல் சிம் 
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், OIS + EIS
    - 13 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.46, OIS
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 
    - யுஎஸ்பி டைப் சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ்  சார்ஜிங் 

    ஐகூ 7 ஸ்மார்ட்போன் பிளாக்லேண்ட், லேடென்ட் புளூ மற்றும் லெஜண்டரி எடிஷன் மாடல் வைட் நிறத்திலும் திடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 43,065 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 47,620 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    எல்ஜி நிறுவனத்தின் புதிய ரோலபில் டிவி சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    எல்ஜி நிறுவனம் டிரான்ஸ்பேரன்ட் 55-இன்ச் OLED டிவியை அறிமுகம்  செய்து இருக்கிறது. ரோலபில் டிவி என்பதால் இதன் ஸ்கிரீன் தேவைப்படும் போது முழுமையாக வெளியில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த டிவி 40 சதவீத டிரான்ஸ்பேரன்சி தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த டிவியின் பேனலில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இருப்பதாக எல்ஜி தெரிவித்து உள்ளது. இந்த டிவியினை பயனர்கள் வீட்டின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும்.

    டிரான்ஸ்பேரன்ட் OLED தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. மேலும் இது அடுத்த தலைமுறை டிஸ்ப்ளேவாக உருமாறி தற்போதைய டிஸ்ப்ளே நுட்பத்திற்கு மாற்றாக அமையும், என எல்ஜி டிஸ்ப்ளே நிறுவன மூத்த துணை தலைவர் மற்றும் வர்த்தக பிரிவு தலைவர் ஜாங்-சன் பார்க் தெரிவித்தார்.

    ஒவ்வொரு நாட்டின் கொரோனாதொற்று அபாயம் காரணமாக புதிய எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என எல்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    புதிய 65-இன்ச் டிவியின் ஸ்கிரீன் சிறு பெட்டியில் இருந்து மேல்புறமாக சுழன்று எழும்பும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஒவ்வொருத்தர் வீட்டின் உள்புறத்திற்கு ஏற்ப பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
    ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    விவோ நிறுவனம் தனது வை51ஏ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் புது விவோ ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     விவோ வை51ஏ

    விவோ வை51ஏ சிறப்பம்சங்கள்

    - 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD 20:9 ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 8 ஜிபி LPDDR4X ரேம் 
    - 128 ஜிபி UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 சார்ந்ச பன்டச் ஒஎஸ் 11
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், EIS
    - 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    விவோ வை51ஏ ஸ்மார்ட்போன் டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு மத்தியில் அந்நிறுவனம் ஏழு வரியில் விளக்கம் அளித்து இருக்கிறது.


    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்தது. மேலும் இதன் மூலம் வாட்ஸ்அப் விவரங்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசிக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியதோடு, பலரும் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில், வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்து உள்ளது. 

     வாட்ஸ்அப்

    - வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.

    - குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் அழைப்பை மேற்கொள்வது யார் என்பதை வாட்ஸ்அப் கண்காணிக்காது.

    - வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் லொகேஷனை பார்க்க முடியாது.

    - வாட்ஸ்அப் பயனரின் காண்டாக்ட்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.

    - வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.

    - குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    - பயனர் தங்களின் டேட்டாவை டவுன்லோட் செய்ய முடியும்.

    இவ்வாறு வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக அதேபோன்ற அம்சங்களை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் உலகின் பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. எனினும், சமீபத்திய பிரைவசி பாலிசி மாற்றம் காரணமாக வாட்ஸ்அப் செயலி மீது பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய பிரைவசி பாலிசிக்கு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் அந்த செயலிக்கு மாற்றாக அதே போன்ற அம்சங்கள் கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்..,

    டெலிகிராம்

    டெலிகிராம்

    டெலிகிராம் ஆப் பல ஆண்டுகளாக இருந்து வரும் அசத்தலான ஒன்று ஆகும். இது வாட்ஸ்அப் செயலிக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. வாட்ஸ்அப் செயலி தற்சமயம் வழங்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த செயலியிலும் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.

    சிக்னல்

    வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் மற்றொரு சிறந்த செயலி சிக்னல். வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் சேவையை வழங்குவது சிக்னல் பவுன்டேஷன் நிறுவனம் தான். இதன் சொந்த படைப்பான சிக்னல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. சிக்னல் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது.

    டிஸ்கார்டு

    டிஸ்கார்டு

    கேமிங் மட்டுமின்றி டிஸ்கார்டு தளத்தில் சாட் அம்சமும் கிடைக்கிறது. இதை கொண்டு தனிப்பட்ட குறுந்தகவல், ஜிப் பைல்கள், புகைப்படங்கள் மற்றும் டாக்யூமென்ட் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்அப் போன்றே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.

    வைபர்

    குறுந்தகவல் செயலிகளில் பிரபலமான ஒன்றாக வைபர் விளங்குகிறது. இந்த செயலியும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை கொண்டிருக்கிறது. மேலும் வைபர் பயனர்கள் சர்வதேச அழைப்புகளை வைபர் செயலியை பயன்படுத்தாவர்களுக்கும் மேற்கொள்ளும் வசதி இதில் வழங்கப்படுகிறது.

    பிரிட்ஜிபை

    ஆப்லைனிலும் இயங்கும் குறுந்தகவல் செயலியாக பிரிட்ஜிபை (Bridgefy) இருக்கிறது. இணைய வசதி இல்லாத நேரத்திலும் சாட் செய்யும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. இது ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க் மற்றும் வைபை டைரக்ட் சார்ந்த நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதை கொண்டு அருகாமையில் உள்ள நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் எஸ்இ, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் எஸ்இ மற்றும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஜப்பான் நாட்டு வலைதளம் ஒன்றில் இருந்து வெளியாகி இருக்கிறது.

    இம்முறை வெளியீடு தவிர இரு சாதனங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இரு சாதனங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

     ஐபோன் எஸ்இ

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ 2020 மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக 2019 அக்டோபர் மாதத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்போனினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. 2020 ஐபோன் எஸ்இ மாடல் தோற்றத்தில் ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் அம்சங்கள் ஐபோன் 11 மாடலில் இருந்ததை போன்றே இருக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ வெளியானது முதல் இதற்கான பிளஸ் வேரியண்ட் ஐபோன் 8 பிளஸ் தோற்றத்தில் வெளியாகும் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    இதுவரை 2021 ஐபோன் எஸ்இ மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் பற்றி ஆப்பிள் சார்பில் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 
    2021 சிஇஎஸ் நிகழ்வில் நான்கு புது ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கிறது.


    2021 சிஇஎஸ் (சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா) நிகழ்வில் மோட்டோரோலா நிறுவனம் புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. 

    அதன்படி மோட்டோ ஜி சீரிசில் 2021 மோட்டோ ஜி பிளே, மோட்டோ ஜி பவர், மோட்டோ ஜி ஸ்டைலஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. மோட்டோரோலா ஒன் சீரிசில் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி பிளே 2021 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பிளே 2021 மாடல் மிஸ்டி புளூ மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 12500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     2021 மோட்டோ ஜி பிவர்

    மோட்டோ ஜி பவர் 2021 மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 3ஜிபி / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 5000எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பவர் 2021 மாடல் குளோவிங் புளூ, போலார் சில்வர் மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 14600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடல் அரோரா பிளாக் மற்றும் அரோரா வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 22100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ்

    மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் 6.7 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர், 4ஜிபி / 64 ஜிபி மெமரி மற்றும், 6 ஜிபி / 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடலிலும் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வொல்கானிக் கிரே மற்றும் பிராஸ்டெட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 29300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் பிட்னஸ் பேண்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் மாடலில் 1.1 இன்ச் AMOLED கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 3 பிரத்யேக உடற்பயிற்சி மோட்கள், ஐபி 68 + 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ரியல்-டைம் இதய துடிப்பு டிராக்கிங் வசதி, எஸ்பிஒ2 சென்சார் மற்றும் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் 100 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

     ஒன்பிளஸ் பேண்ட்

    ஒன்பிளஸ் பேண்ட் சிறப்பம்சங்கள்

    - 1.1 இன்ச் 126x294 பிக்சல் AMOLED கலர் டச் ஸ்கிரீன்  டிஸ்ப்ளே
    - நோட்டிபிகேஷன் வசதி
    - மியூசிக் கண்ட்ரோல், கேமரா ஷட்டர் கண்ட்ரோல்
    - இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங்
    - ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
    - உடற்பயிற்சி மோட்கள்
    - 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப்
    - ப்ளூடூத் 5
    - ஐபி68+ 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 110 எம்ஏஹெச் பேட்டரி

    ஒன்பிளஸ் பேண்ட் மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    விவோ நிறுவனம் வி20 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவோ எக்ஸ்50 ப்ரோ மற்றும் வி20 ப்ரோ போன்ற மாடல்களுக்கு கடந்த மாதம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது.

    தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் இதர விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

     விவோ

    அதன்படி இம்மாத இறுதியில் விவோ வி19, விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன்களுக்கும் மார்ச் மாத இறுதியில் விவோ வி17, வி17 ப்ரோ, வி15 ப்ரோ மற்றும் விவோ எஸ்1 போன்ற மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் விவோ எஸ்1 ப்ரோ, இசட்1எக்ஸ், இசட்1 ப்ரோ போன்ற மாடல்களுக்கும் ஜூன் மாத இறுதியில் விவோ வி15 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்குவதாக விவோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    முதற்கட்டமாக பீட்டா அப்டேட் பேட்ச்களாக வெளியிடப்பட்டு அதன்பின் ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என விவோ அறிவித்து உள்ளது. மேற்கண்ட பட்டியலில் விவோ வை சீரிஸ், யு சீரிஸ் மற்றும் சில வி சீரிஸ் மாடல்கள் இடம்பெறவில்லை. இவற்றுக்கு புது ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 200 MHz பேண்டில் 5 MHZ ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பெக்டரத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் மும்பை உள்பட 20 வட்டாரங்களில் பயன்படுத்தி வருகிறது. எனினும், இந்த சேவை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் வழங்கப்படவில்லை.

     கோப்புப்படம்

    முன்னதாக டெல்லி மற்றும் ராஜஸ்தான் வட்டாரங்களில் 850 MHz-இல் 5 MHz மற்றும் 1800 MHz-இல் 10 MHz ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்பெக்ட்ரம் 2040 வரை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் 900 MHz மற்றும் 1800 MHz பயன்படுத்தி 2ஜி சேவைகளை வழங்கி வருகிறது.

    தற்போதைய  தகவல்களின் படி நோக்கியா, எரிக்சன், தேஜஸ் நெட்வொர்க், டிசிஎஸ், டெக் மஹிந்திரா என பல்வேறு நிறுவனங்கள் 4ஜி நெட்வொர்க்குகளை கட்டமைக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
    ×