என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
அசுஸ் ரோக் போன் 5 மார்ச் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. கடந்த வாரம் சர்வதேச வெளியீட்டை உறுதிப்படுத்திய நிலையில் தற்சமயம் ரோக் போன் 5 இந்தியாவிலும் மார்ச் 10 ஆம் தேதியே அறிமுகமாகும் என அசுஸ் தெரிவித்து இருக்கிறது.
முந்தைய ரோக் போன் போன்றே புதிய மாடலும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் ரோக் போன் 5 விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் ASUS_I005DA எனும் மாடல் நம்பருடன் வெளியாகி இருந்தது. இதில் புது ஸ்மார்ட்போனின் பின்புறம் ROG லோகோவில் டாட் மேட்ரிக்ஸ் ஔரா லைட்டிங் செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரோக் போன் 5 மாடலில் 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி / 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் என மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 4800 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.
சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நூற்றுக்கணக்கான அக்கவுண்ட்களை நீக்கியிருக்கிறது. இதற்கான காரணம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ட்விட்டர் நிறுவனம் 337 அக்கவுண்ட்களை நீக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த அக்கவுண்ட்கள் அர்மீனியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 238 அக்கவுண்ட்கள் ஈரானில் இருந்து செயல்பட்டதாகவும், இவை அந்நிறுவன வழிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து உள்ளது.
100 அக்கவுண்ட்கள் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ட்விட்டர் தெரிவித்தது. இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனை குறிவைத்து செயல்படுவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. அர்மீனியாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக 35 அக்கவுண்ட்களும் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது.
337 அக்கவுண்ட்களும் விதிகளை மீறியதாக கூறி ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அந்நிறுவன வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில், புதிய நோட் 10 சீரிஸ் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் குவால்காமுடன் இணைந்துள்ளது.
விரைவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர்கள் வழங்கப்படலாம். மூன்று நோட் மாடல்களிலும் முறையே ஸ்னாப்டிராகன் 720ஜி, 765ஜி மற்றும் 768ஜி சிப்செட்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
குவால்காம் பிராசஸர் மட்டுமின்றி புதிய மாடல்களில் பெரிய பேட்டரி, டிஸ்ப்ளே மற்றும் குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ரெட்மி வெளியிட்டு உள்ள தகவல்களின்படி புதிய நோட் 10 சீரிஸ் மாடல்களில் அதிக ரிப்ரெஷ் ரேட், IP52 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, பிரீமியம் பில்டு கொண்டிருக்கும் என்றும், ஹை-ரெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ப்ரோ வேரியண்ட் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களின் படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 64 எம்பி குவாட் கேமரா, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 5050 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டது.
அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
அமேசான் இந்தியா வலைதளத்தில் Fab Phones Fest எனும் பெயரில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி வட்டியில்லா மாத தவணை வசதி, எக்சேன்ஜ் சலுகை, உடனடி தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
சிறப்பு விற்பனையில் சாம்சங், சியோமி, ஒன்பிளஸ், விவோ, ரியல்மி மற்றும் பல்வேறு இதர நிறுவன மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. புதிய மாடல்கள் மட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி மாடல் ரூ. 47,999 விலையில் கிடைக்கிறது. இதில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி கூப்பன், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி 9 பவர் சீரிஸ் ரூ. 10,499 துவக்க விலையில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ரூ. 21,749 துவக்க விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி மாடல் ரூ. 36,999 விலையிலும், ஐபோன் 12 மினி ரூ. 64,990 துவக்க விலையில் கிடைக்கின்றன. இந்த மாடல்களுக்கு தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் ரூ. 11,990 விலையிலும், ஹானர் 9ஏ மாடல் ரூ. 7,999 விலையிலும் கிடைக்கின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி கூப்பன், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ. 7 ஆயிரம் உடனடி தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஐபோன் 11 பரோ ரூ. 82,900 முதல் துவங்குகிறது. ஒப்போ ரெனோ 5 ப்ரோ மாடல் ரூ. 35,990 துவக்க விலையில் கிடைக்கிறது. இதேபோன்று எம்ஐ 10டி ப்ரோ 5ஜி, சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா, எல்ஜி விங் போன்ற மாடல்களும் சிறப்பு விலையில் கிடைக்கின்றன.
போக்கோ பிராண்டின் சமீபத்திய எம்3 ஸ்மார்ட்போன் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
போக்கோ நிறுவனம் சமீபத்தில் எம்3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. விற்பனை துவங்கியது முதல் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நடைபெற்ற விற்பனையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 2,50,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ப்ளிப்கார்ட் தளத்தில் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை இன்று நடைபெற்றது. தற்போதைய 2.5 லட்சம் யூனிட்கள் இன்றைய ( பிப்ரவரி 23) விற்பனையை சேர்க்காமல் எடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஹூவாய் நிறுவனம் மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி போல்டு போன்று உள்புறம் மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் OLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், வெளிப்புறம் 6.45 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மேக்னெட்ரான் நானோ-ஆப்டிக்கல் பிலிம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் கிரீஸ் பகுதியை பெருமளவு மறைக்கிறது. இதன் ஹின்ஜ் பகுதி பைபர் மற்றும் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தை மாடலில் உள்ளதை விட உறுதியாக இருக்கிறது.
ஹூவாய் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 11 ஒஎஸ் கொண்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் ஹார்மனி ஒஎஸ் அப்டேட் பெறும் என ஹூவாய் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் இது ஹார்மனி ஒஎஸ் பெறும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி RYYB பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்பி RYYB 3x டெலிபோட்டோ மற்றும் 8 எம்பி 10எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 16 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் கிரின் 9000 5ஜி பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் வையர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூவாய் மேட் எக்ஸ்2 பிளாக், வைட், க்ரிஸ்டல் புளூ மற்றும் க்ரிஸ்டல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை 17,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2,01,705 என்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை 18,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2,12,970 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் பிரீமியம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது. புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் 360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்பம், குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஸ்பாடிபை கனெக்ட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. புதிய ஸ்பீக்கர் இந்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்கும் என சோனி தெரிவித்து உள்ளது.
புதிய SRS-RA3000 ஸ்பீக்கரின் SRS-RA5000 மாடலின் சிறு வெர்ஷன் ஆகும். இந்த ஸ்பீக்கரில் உள்ள 360 டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்பம்3 பரிணாம ஆடியோக்களை இயக்க வழி செய்கிறது. இது அறை முழுக்க தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இதில் உள்ள ஆட்டோ-வால்யூம் அம்சம் அடுத்து வரும் பாடல் அல்லது இசைக்கு ஏற்ப சத்தத்தை மாற்றிமைக்கிறது. இதனை கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்சா செயலி கொண்டு ஸ்பீக்கர் குரூப்பில் சேர்த்து மல்டி-ரூம் ஆடியோ போன்றும் பயன்படுத்தலாம்.
சோனியின் புதிய SRS-RA3000 நாடு முழுக்க அனைத்து சோனி விற்பனை மையங்கள், அமேசான் மற்றும் இதர முன்னணி வலைதளங்களில் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் புதிய W41 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் W41, W41 பிளஸ் மற்றும் W41 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த W31 சீரிசின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
எல்ஜியின் புதிய LG W41 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளன.

எல்ஜி W41, W41 பிளஸ் மற்றும் W41 ப்ரோ அம்சங்கள்
- 6.55 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி (W41)
- 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (W41 பிளஸ்)
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (W41 ப்ரோ)
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
எல்ஜி W41, W41 பிளஸ் மற்றும் W41 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மேஜிக் புளூ மற்றும் லேசர் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 13,490, ரூ. 14,490 மற்றும் ரூ. 15,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் லேப்டாப் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது வணிகம் மற்றும் கல்வி சார்ந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லேப்டாப் இன்டெல் கோர் ஐ7 11th gen பிராசஸர், 1 டிபி எஸ்எஸ்டி, மேம்பட்ட விண்டோஸ் ஹார்டுவேர் செக்யூரிட்டி அம்சங்களுடன் கிடைக்கிறது.
புதிய சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் இன்டெல் கோர் ஐ3 துவங்கி ஐ7 வரை 11th Gen இன்டெல் கோர் சிபியு உடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்எஸ்டி கொண்டிருக்கிறது. இதனை 32 ஜிபி ரேம், 1 டிபி எஸ்எஸ்டி வரை கான்பிகர் செய்யலாம்.

இத்துடன் புதிய லேப்டாப் எல்டிஇ கனெக்டிவிட்டி வசதி கொண்டுள்ளது. எனினும், இது இன்டெல் ஐ5 மற்றும் அதற்கும் அதிக சிபியு வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,58,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
லேப்டாப் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் 85 இன்ச் சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 4K பிக்சல்-சென்ஸ் டச் மற்றும் இன்க் டிஸ்ப்ளே, மைக்ரோசாப்ட் டீம்ஸ் சான்று பெற்ற ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் விலை ரூ. 2,14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போன் மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய எஸ் சீரிஸ் மாடலாக இருக்கும்.
புதிய விவோ எஸ்9 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகும் விவோ எஸ்9 அதன்பின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ எஸ்9 மாடல் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இத்துடன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், டூயல் செல்பி கேமராக்கள் வழங்கப்படலாம். மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்படும் பட்சத்தில், இது 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும். இவைதவிர 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் இயர்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. 16 வாட் திறன் கொண்ட ப்ளூடூத் ஸ்பீக்கரில் ப்ளூடூத் 5.0, டூயல் EQ மோட், மைக்ரோபோன், வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் IPX7 வாட்டர் ப்ரூப் வசதி, அதிகபட்சம் 13 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. பேப்ரிக் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஸ்பீக்கர் கைகளில் இருந்து நழுவாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2600 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. இது சியோமியின் முதல் ANC வசதி கொண்ட நெக்பேண்ட் இயர்போன் ஆகும். மேலும் இதில் அழைப்புகளுக்கு ENC வசதி, ப்ளூடூத் 5, 10எம்எம் பேஸ் டிரைவர், லோ-லேடென்சி ஆடியோ மற்றும் 20 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது.
இத்துடன் மேக்னெடிக் இயர்பட்ஸ், ஆன்டி-வாக்ஸ் இயர்டிப்கள் வழங்கப்பட்டுள்ளன. வாய்ஸ் அசிஸ்டண்ட், வால்யூம்/மியூசிக் மற்றும் அழைப்புகளை ஏற்க/நிராகரிக்கும் வசதி கொண்ட பட்டன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த இயர்போனில் IPX5 தர ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 150 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் 1 ஆம் தேதி முதல் அமேசானில் துவங்குகிறது. எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் மாடல் படங்கள் மற்றும் ரென்டர்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக இதன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ரென்டர்கள் சீனாவை சேர்ந்த வலைதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது.
தற்போதைய ரென்டர்களின் படி மூன்றாம் தலைமுறை ஆப்பிள் ஏர்பாட்ஸ் விலை உயர்ந்த ஏர்பாட்ஸ் ப்ரோ போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய மாடல் இன்-இயர் ரகம் கொண்டுள்ளது. இத்துடன் சிறிய ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர்-டிப்களை கொண்டிருக்கிறது.

புதிய ஏர்பாட்ஸ் முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே டச் கண்ட்ரோல் வசதியை பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், பிரெஷர் ரிலீப் சேம்பர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை புதிய ஏர்பாட்ஸ் ஐந்து மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கலாம்.
புதிய ஏர்பாட்ஸ் வெளியீடு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மார்ச் 16 ஆம் தேதி நிகழ்வு ஒன்றை நடத்த இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய ஏர்பாட்ஸ் இந்த நிகழ்விலேயே அறிமுகம் செய்யப்படலாம்.






