search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AirPods"

    • ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சாதனங்களை உற்பத்தி செய்யும் பணிகளை அதிகப்படுத்தி வருகிறது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்த சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்களை எட்டியது.

    ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளரான ஜெபில் இன்க், இந்தியாவில் ஏர்பாட்ஸ் பாகங்களை உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிருந்து ஏர்பாட்ஸ்-க்கான பிளாஸ்டிக் பாடி அல்லது மூடிகளை சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

    ஏர்பாட்ஸ் பாகங்கள் உற்பத்தி குறித்து ஆப்பிள் மற்றும் ஜபில் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    தற்போது ஆப்பிள் நிறுவன சாதனங்களின் இந்திய உற்பத்தி 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. "ஆப்பிள், மற்றும் ஓர் வெற்றிக்கதை. அவர்களின் இந்திய உற்பத்தி ஏற்கனவே 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. நான் தவறாக கூறவில்லை எனில், அவர்கள் உற்பத்தியை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் சமீபத்திய சாதனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்." என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து இருக்கிறார்.

    முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்யும் சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 141 கோடியாக அதிகரித்து இருக்கிறது என டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் ஏர்பாட்ஸ் மாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • புது ஏர்பாட்ஸ் மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஏர்பாட்ஸ் அடுத்த ஆண்டு தான் அப்டேட் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் அடுத்த தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல் 2024 இரண்டாவது அரையாண்டு அல்லது 2025 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    அந்த வகையில், இந்த ஆண்டு ஏர்பாட்ஸ் மாடல் அப்டேட் செய்யப்படாது என்றே அர்த்தமாகும். மேலும் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் லைட் மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல்களின் வெளியீடு பற்றி மிங் சி கியோ தகவல் தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த தகவல்கள் ஏர்கனவே ஜெஃப் பு வெளியிட்ட தகவல்களை போன்றே இருக்கிறது. இருவரும் புது ஏர்பாட்ஸ் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து இருந்தனர்.

    குறைந்த விலை ஏர்பாட்ஸ் மாடல் 99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 065 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல் மூன்று ஆண்டுகளுக்கு பின் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக டிசம்பர் 2020 வாக்கில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனங்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிரிவில் போட்டி தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஆப்பிள் தனது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இடைவெளியை விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கும் என்றே கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ஆப்பிள் தனது மிக்சட்-ரியாலிட்டி ஹெட்செட்-ஐ இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவிலும் மேற்கொண்டு வருகிறது.
    • சமீபத்திய ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியும் இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவில் இருந்து மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், ஐபோன் உற்பத்தி சீனா மட்டுமின்றி இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் மற்றும் பீட்ஸ் உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய பீட்ஸ் ஹெட்போன்களின் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. சீன உற்பத்தியாளரான லக்ஸ்ஷேர் பிரெசிஷன் இண்டஸ்ட்ரி இந்தியாவில் ஏர்பாட்ஸ் உற்பத்தியை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இது தவிர ஃபாக்ஸ்கான் நிறுவனம் பீட்ஸ் ஹெட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக லக்ஸ்ஷேர் நிறுவனம் ஏர்பாட்ஸ் உற்பத்தியை வியட்நாமில் மேற்கொள்ள இருக்கிறது. அதன் பின் மெல்ல இந்தியாவிலும் ஏர்பாட்ஸ் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது. இந்த நிறுவனம் சீனாவில் இருந்து தனது உற்பத்தி ஆலையை மெல்ல மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளை துவங்கி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களின் உற்பத்திக்காக சீனாவை சார்ந்து இருக்கும் நிலையை மெல்ல மாற்றிக் கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே சீனாவை அடுத்து இந்தியா, மெக்சிகோ மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு வேரியண்ட் தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என என்றும் இவை புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதுகுறித்து மிங் சி கியூ வெளியிட்டிருக்கும் தகவல்களில் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் போன்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் மேம்பட்ட ஏர்பாட்ஸ் மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் சார்ந்து மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் 5.2 கோடிகளை கடக்கும் என தெரிகிறது. இது 2020 ஆம் ஆண்டில் 7.5 கோடியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.



    இதுதவிர ஆப்பிள் நிறுவனம் பவர்பீட்ஸ் ப்ரோ எனும் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 9 மணி நேரத்திற்கான பேக்கப், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் செக்யூர்-ஃபிட் இயர்ஹூக்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பவர்பீட்ஸ் ப்ரோ ஐவரி, பிளாக், மாஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249.95 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமெரிக்கா மற்றும் 20 நாடுகளில் விரைவில் துவங்க இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் இயர்பட்ஸ்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Microsoft



    சர்வதேச சந்தையில் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ்க்கு போட்டியாக சொந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

    சில நிறுவனங்கள் ஏற்கனவே வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சொந்தமாக இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்ஃபேஸ் பட்ஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.



    புதிய இயர்பட்ஸ்களை மைக்ரோசாஃப்ட் மொரிசன் என்ற பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சாதனங்களில் மைக்ரோசாஃப்ட் வானியல் சார்ந்த பெயர்களை சூட்டுவதை மைக்ரோசாஃப்ட் வாடிக்கையாக கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே ஆடியோ சாதனங்கள் சந்தையில் சர்ஃபேஸ் ஹெட்போன்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

    இதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருகிறது. இந்த இயர்பட்ஸ்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் கார்டணா வசதி நிச்சயம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வசதியை கொண்டு மொபைலில் தகவல்களை மிக எளிமையாக வாசிக்க முடியும்.

    சிரி, அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் இயர்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் மைக்ரோசாஃப்ட் சாதனத்தில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை எந்தளவு வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    புகைப்படம் நன்றி: thurrott
    அமேசான் நிறுவனம் அலெக்சா வசதியுடன் கூடிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் சொந்தமாக வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் இயர்போன்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. இது அமேசான் லேப் 126 ஹார்டுவேர் பிரிவின் மிகமுக்கிய திட்டமாக இருக்கலாம் என தெரிகிறது. 

    அமேசான் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான அலெக்சாவை பல்வேறு எக்கோ சாதனங்களில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் வயர்லெஸ் இயர்போன்களிலும் அலெக்சா சேவையை புகுத்த அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலெக்சா வசதி கொண்ட வயர்லெஸ் இயர்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகலாம்.



    தோற்றத்தில் அமேசானின் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கும் என்றும் இதில் சிறப்பான ஆடியோ தரத்தை புகுத்த அதன் பொறியாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் இயர்பட்ஸ் கொண்டு பயனர்கள் இசையை கேட்பது, பொருட்களை வாங்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பலவற்றை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் இசையை கேட்கும் போது அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்றவற்றை இயர்பட்களை தட்டியே செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இயர்போன்களில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க அலெக்சா என கூறினாலே போதுமானது என்றும் இது ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது.

    அமேசான் இயர்போன்களுடன் ஸ்டோரேஜ் கேஸ் ஒன்று வழங்கப்படும் என்றும் இதுவே இயர்போன்களை சார்ஜ் செய்யும் சார்ஜர் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. பயனர்கள் இதனை வழக்கமான யு.எஸ்.பி. கேபிள் கொண்டே சார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #AirPods



    ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ஆப்பிள் H1 ஹெட்போன் சிப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் இணைப்பு முந்தைய மாடலை விட சீராகவும், அதிவேகமாகவும் இருக்கும். 

    இத்துடன் ஹெ சிரி சேவையை பயன்படுத்தும் போது பாடல்கள், அழைப்புகள் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட் உள்ளிட்டவைகளை வேகமாக செயல்படுத்த முடியும். புதிய இயர்போனுடன் புதிய வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

    கியூ.ஐ. சார்ஜிங் வசதி வழங்கும் வயர்லெஸ் சார்ஜரின் முன்புறம் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்து சார்ஜிங் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஏர்பாட்ஸ் பயன்படுத்துவோரும் இந்த வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வாங்கி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    சார்ஜிங் கேஸ் உடன் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்படி புதிய இயர்பாட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரமும், 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யும் போது 3 மணி நேரத்திற்கும் பயன்படுத்த முடியும். 
     
    ஏர்பாட்ஸ் மற்றும் ஸ்டான்டர்டு சார்ஜிங் கேஸ் விலை ரூ.14,900 என்றும் வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் வாங்கும் போது ரூ.18,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மட்டும் வாங்கும் போது ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். புதிய இயர்போன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #wirelesscharging



    அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பவர்கள் காப்புரிமையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், வரைபடங்களை பார்க்கும் போது ஏர்பாட்ஸ் போன்ற வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் போன்று தெரிகிறது.

    இது ஏர்பவர் சார்ஜிங் மேட் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. சார்ஜிங் மேட்களை கொண்டு வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.  ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி ஏர்பாட்ஸ் கேசை ஏர்பவர் சாதனத்தின் மேல் வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம். 


    புகைப்படம் நன்றி: uspto

    ஏர்பாட்ஸ் போன்ற வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உருவாக்குவதற்கென பல்வேறு காப்புரிமைகளை ஆப்பிள் பெற்றிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஏர்பவர் மற்றும் கூடுதல் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சாதனங்களை அறிமுகம் செய்தது.

    2018 ஆம் ஆண்டு இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில், இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்பாட்ஸ் கடந்த ஆண்டு விற்பனைக்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகின. 

    சமீபத்தில் வெளியான தகவல்களில் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இவ்விழாவில் அந்நிறுவனம் சந்தா முறையிலான செய்தி சேவையை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×