என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் அசுஸ் ரோக் போன் 5
Byமாலை மலர்24 Feb 2021 6:55 AM GMT (Updated: 24 Feb 2021 6:55 AM GMT)
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
அசுஸ் ரோக் போன் 5 மார்ச் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. கடந்த வாரம் சர்வதேச வெளியீட்டை உறுதிப்படுத்திய நிலையில் தற்சமயம் ரோக் போன் 5 இந்தியாவிலும் மார்ச் 10 ஆம் தேதியே அறிமுகமாகும் என அசுஸ் தெரிவித்து இருக்கிறது.
முந்தைய ரோக் போன் போன்றே புதிய மாடலும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் ரோக் போன் 5 விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் ASUS_I005DA எனும் மாடல் நம்பருடன் வெளியாகி இருந்தது. இதில் புது ஸ்மார்ட்போனின் பின்புறம் ROG லோகோவில் டாட் மேட்ரிக்ஸ் ஔரா லைட்டிங் செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரோக் போன் 5 மாடலில் 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி / 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் என மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 4800 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X