என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

    ரியல்மி நிறுவனம் மே 18 ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுக தேதி பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரியல்மி நிறுவனத்தின் டெக்லைஃப் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

     ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100

    இதில் 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளே, ஸ்கின் மற்றும் பாடி டெம்பரேச்சர் மாணிட்டர், இதய துடிப்பு டிராக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ரியல்மி நிறுவனம் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்த ரியல்மி டெக்லைஃப் S100 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது.

    புதிய ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100 மாடல் இரண்டு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் இத்துடன் செவ்வக வடிவம் கொண்ட டையல், பக்கவாட்டில் நேவிகேஷன் பட்டன், 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு பில்ட் இன் அம்சங்களான ரிமைண்டர்கள், காலண்டர் மற்றும் வானிலை சார்ந்த அப்டேட்கள் வழங்கப்படுகிறது. 

    மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டெலிகாம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை பற்றிய புது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.


    மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய டெலிகாம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 11.6 கோடியாக அதிகரித்து இருக்கிறது என டிராய் (மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.2 கோடியும், வயர்லைன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 24 கோடியாகவும் இருக்கிறது.

    வயர்லெஸ் சந்தாதாரர்கள் வளர்ச்சி 0.05 சதவீதமும், வயர்லைன் சந்தாதாரர்கள் வளர்ச்சி 1.31 சதவீதமும் பதிவாகி உள்ளது. டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் பெரும்பாலானவை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் சேர்த்துள்ளன. இரு நிறுவனங்களும் வயர்லெஸ் மற்றும் வயர்லைன் பிரிவுகளில் புது வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளன. 

     டிராய்

    இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பிப்ரவரி மாத வாக்கில் 1,66.05 மில்லியனில் இருந்து மார்ச் மாதத்தில் 1,166.93 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது. இதில் நகர பகுதிகளில் டெலிகாம் பயனர்கள் எண்ணிக்கை 64.77 கோடியில் இருந்து 64.71 கோடியாக சரிந்துள்ளது. ஊரக பகுதிகளில் டெலிகாம் பயனர்கள் எண்ணிக்கை 51.82 கோடியில் இருந்து 51.98 கோடியாக அதிகரித்துள்ளது.

    மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.2 கோடியில் இருந்து 114.15 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பங்கும் உள்ளடக்கியது ஆகும். ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாதத்தில் 22.55 லட்சம் புது பயனர்களையும், ஜியோ நிறுவனம் 12.6 லட்சம் புது பயனர்களையும் எட்டியுள்ளது. 

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 28.18 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் முறையே 1.27 லட்சம் மற்றும் 3 ஆயிரத்து 101 பயனர்களை இழந்துள்ளன. 
    இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி வெளியீடு எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், பி.எஸ்.என்.எல். 5ஜி வெளியீடு பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.


    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றன. திட்டமிட்டப்படி அனைத்து பணிகளும் நடைபெறும் பட்சத்தில் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி உள்ளிட்டவை இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைகளை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். 

    இந்தியாவில் 5ஜி சேவைகள் வெளியாக முட்டுக் கட்டையாக இருப்பது ஸ்பெக்ட்ரம் ஏலம் மட்டும் தான். மத்திய அரசு சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான சரியான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. முன்னதாக டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

     5ஜி

    எதுவாயினும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இவை அனைத்தும் அதி வேகமாக நடைபெற்று விடும். இதே நிலை மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டும் பொருந்தாது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்னமும் தனது பயனர்களுக்கு 4ஜி சேவையை வழங்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 4ஜி சேவைகளை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கனவே 4ஜி கோர் உருவாக்கி விட்டது. இதனை உருவாக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய டெலிமேடிக்ஸ் வளர்ச்சி மையம், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த 128GB ஐபோன் 13 மாடல் இந்தியாவில் ரூ. 79 ஆயிரத்து 990 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டிற்கு அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி 128GB ஐபோன் 13 விலை தற்போது ரூ. 69 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. இந்த விலை அமேசான் தளத்தில் மட்டும் அமலாகி இருக்கிறது. ஆப்பிள் இந்தியா இ-ரிடெயில் விலையை விட இது ரூ. 10 ஆயிரம் குறைவு ஆகும். விலை குறைப்பு மட்டுமின்றி எக்சேன்ஜ் சலுகையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரத்து 800 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஐபோன் 13 விலை ரூ. 59 ஆயிரத்து 100 விலையிலேயே வாங்க முடியும்.

     ஐபோன் 13

    ஐபோன் 13 128GB மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 16 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஐபோன் 13 விலை ரூ. 58 ஆயிரத்து 900-க்கு கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அல்லது மாத தவணை முறையில் வாங்கும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    128GB மட்டுமின்றி 256GB மற்றும் 512GB மாடல்களுக்கும் அசத்தான விலை குறைப்பு, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 256GB மாடலுக்கு அமேசான் தளத்தில் ரூ. 10 ஆயிரத்து 410 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரத்து 800 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 13 256GB மாடலை ரூ. 68 ஆயிரத்து 690 விலையில் வாங்கிட முடியும்.

     ஐபோன் 13

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 256GB மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடியும், ரூ. 16 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகையாக வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது 256GB ஐபோன் 13 விலை ரூ. 68 ஆயிரத்து 690 என மாறி விடும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறையை தேர்வு செய்யும் போது ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    512GB ஐபோன் 13 மாடலுக்கு அமேசான் தளத்தில் ரூ. 5 ஆயிரத்து 910 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரத்து 800 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி 512GB ஐபோன் 13 விலை ரூ. 93 ஆயிரத்து 190 என மாறி விடும். ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஐபோன் வேரியண்டிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 16 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது 512GB ஐபோன் 13 விலை ரூ. 88 ஆயிரத்து 900 என மாறி விடும். 

    மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ரோலபில் ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய புது தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    மோட்டோரோலா நிறுவனம் சுழலும் (ரோலபில்) ஸ்கிரீன் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே எல்.ஜி. நிறுவனம் ரோலபில் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்குள் எல்.ஜி. நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை விட்டே வெளியேறி விட்டது.

    இதுதவிர ஒப்போ நிறுவனமும் ரோலபில் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் கான்செப்ட்-ஐ உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த கான்செப்ட் போனை 2020 ஆண்டிலேயே காட்சிப்படுத்தி இருந்தது. இதன் வர்த்தக மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. 

     ரோலபில் போன்
    கோப்புப்படம் 

    இந்த நிலையில் தான் மோட்டோரோலா நிறுவனமும் ரோலபில் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோலபில் ஸ்கிரீன் கொண்ட புது மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    இது உலகின் முதல் ரோலபில் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எல்.ஜி. மற்றும் ஒப்போ நிறுவனங்கள் ஏற்கனவே காட்சிப்படுத்தி இருந்த சாதனங்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் ஃபிளெக்சிபில் ஸ்கிரீனை கொண்டிருக்கும் என்றும் இதனை செங்குத்தாகவும் நீட்டிக்க முடியும் என கூறப்படுகிறது. காம்பேக்ட் மோடில் ஸ்கிரீனின் மூன்றில் ஒரு பகுதியை கீழ்வாக்கில் சுழற்ற முடியும். அந்த வகையில் மோட்டோரோலா பெலிக்ஸ் மாடல் பாக்கெட்களில் எளிதாக வைத்துக் கொள்ளக் கூடியதாகவே இருக்கும் என கூறப்படுகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய வெளியீட்டை உணர்த்தும் தகவல்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4, கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 மாடல்களின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதில் புதிய சாதனங்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

    எனினும், முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் EB-BF936ABY மற்றும் EB-BF937ABY மாடல் நம்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் பேட்டரிகள் EB-BF721ABY and EB-BR722ABY மாடல் நம்பர்களை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இவை தவிர புது சாதனங்கள் பற்றி வேறு எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 108MP பிரைமரி கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிக ரெசல்யூஷன் கொண்ட மேம்பட்ட அண்டர்-டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடியான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடலை இந்தியாவில் ரூ. 35 ஆயிரத்து 513 விலையில் வாங்கிட முடியும். ஐபோன் 13 ஆப்பிள் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த மாடல் ஆகும். இதில் மேம்பட்ட கேமரா, சிறிய நாட்ச் மற்றும் பல்வேறு அதிரடியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐபோன் 13 மாடலை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அதனை குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    ஐபோன் 13 பேஸ் வேரியண்ட் 128GB மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை வழக்கமாக ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இதனை ரூ. 44 ஆயிரத்து 477 வரையிலான தள்ளுபடியில் வாங்கிட முடியும். இவ்வாறு செய்ய பல்வேறு சலுகைகளை இணைக்க வேண்டி இருக்கும். 

     ஐபோன் 13 சலுகை

    ஆப்பிள் நிறுவன சாதனங்களை விற்பனை செய்யும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களில் ஒன்று மேபில் ஸ்டோர். இந்தியாவில் மேபில் ஸ்டோர் தற்போது ஐபோன் 13 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்து 387 வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும். இத்துடன் ஐபோன் 11 போன்ற பழைய சாதனங்களை எக்சேன்ஜ் செய்து கூடுதல் தள்ளுபடிகளை பெறலாம். இப்படியாக ஐபோன் 13 மாடலை ரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும். 

    கூடுதல் தள்ளுபடி வேண்டும் என்ற பட்சத்தில் ஐபோன் 13 மாடலுக்கு வழங்கப்படும் பைபேக் வேல்யூ சலுகையை கருத்தில் கொள்ளலாம். இதில் ஐபோன் 13 மாடலுக்கு ரூ. 24 ஆயிரம் வரை பைபேக் வேல்யூ வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து புதிய ஐபோன் 13 வாங்குவோருக்கு மேபில்ஸ்டோர் கூடுதலாக ரூ. 5 ஆயிரம் போனஸ் வவங்குகிறது. இவை அனைத்தையும் சேர்க்கும் போது ஐபோன் 13 மாடலை ரூ. 35 ஆயிரத்து 513 விலையில் வாங்கிட முடியும்.  
    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன், டி.வி. மற்றும் IoT சாதனங்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது.
     

    ஒன்பிளஸ் நிறுவனம் அமேசான் சம்மர் சேல், ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டேஸ் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் கீழ் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இவை ஒன்பிளஸ் 10R, புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் மற்றும் நார்ட் பட்ஸ் மாடல்களுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 10R மற்றும் 150W சூப்பர்வூக் எண்டியூரன்ஸ் எடிஷன் மற்றும் ஒன்பிளஸ் 10R 80W சூப்பர்வூக் மாடல்களின் விலை முறை ரூ. 41 ஆயிரத்து மற்றும் ரூ. 36 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வட்டியில்லா மாத தவணை மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளில் ரூ.2 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்களுக்கு முறையே ரூ. 17 ஆயிரம் மற்றும் ரூ. 14 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9RT ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் மாடலை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் நார்டு 2 மற்றும் PAC-MAN எடிஷன்களுக்கு முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 6 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்து ரூ. 1000 தள்ளுபடி பெற முடியும்.

     ஒன்பிளஸ் டி.வி.

    ஒன்பிளஸ் டி.வி. 43 இன்ச் Y1S ப்ரோ மாடல் ரூ. 26 ஆயிரத்து 499 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 43 இன்ச் 4K டி.வி. Y1S ப்ரோ மாடலை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி மற்றும் மூன்று மாதங்களுக்கான பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் டி.வி. Y1, Y1S சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் டி.வி. U1S சீரிஸ் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட்டில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் மற்றும் ஃபைல் ஷேரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


    வாட்ஸ்அப் செயலியில் பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த அம்சங்களில் ஒன்றாக மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் உள்ளது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களிடையே இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் வெளியீடு துவங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சம் ஸ்டேபில் மற்றும் பீட்டா பில்டுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    புது அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு எமோஜிக்கள் மூலம் பதில் அனுப்ப முடியும். இது மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் பிகரப்படும் ஃபைல் சைஸ் எண்ணிக்கையும் 2GB வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதன் அளவு 100MB-யாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இந்த இரு அம்சங்களும் விரைவில் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

     வாட்ஸ்அப்

    இந்த நிலையில், புது அம்சங்கள் பற்றிய அறிவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டு உள்ளது. இத்துடன் க்ரூப் சாட்களின் எண்ணிக்கையும் இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ரியாக்‌ஷன்ஸ் அம்சத்தில் முதற்கட்டமாக சில எமோஜிக்கள் மட்டும் வழங்கப்பட்டு, அதன்பின் அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருந்தது. இத்துடன் வாட்ஸ்அப் க்ரூப் சாட்களின் எண்ணிக்கை 256-இல் இருந்து 512 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் ஆறு எமோஜிக்களை பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும். இவற்றை பயன்படுத்த மெசேஜை அழுத்திப் பிடித்து, திரையின் மேல் தோன்றும் எமோஜிக்களில் ஒன்றை தேர்வு செய்தாலே போதுமானது. 
    டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் புது சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.



    டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 465 கோடி கொடுத்து வாங்குகிறார். எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை மேற்கண்ட தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்து இருப்பதை அடுத்து இந்த தகவல் வெளியானது. 

    இதை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் அரங்கேற இருக்கும் மாற்றங்கள், பணி நீக்க நடவடிக்கைகள் என டுவிட்டர் நிர்வாகம் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இது தவிர எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்து உலக பணக்காரர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த முன்னணி அதிகாரிகளும் தங்களின் கருத்துக்கள் மற்றும் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

    டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாக வாங்கப் போவதாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க இருப்பதை அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு மறு பரிசீலனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     டுவிட்டர்

    இது குறித்து அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த பரிவர்த்தனை குறித்து ஆழமான விசாரணை நடத்துவது பற்றி அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு அடுத்த மாதம் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த விசாரணை நடைபெறும் பட்சத்தில், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது மேலும் சில மாதங்கள் வரை தாமதமாகலாம். 

    இதுதவிர டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான பரிவர்த்தனை முழுமை பெறும் பட்சத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பதவி வகிப்பார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டர் நிலைமை மேலும் மோசம் அடையும் என பில் கேட்ஸ் தெரிவித்த கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.


    டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்க வாங்குகிறார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் விவகாரம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில், குறிப்பாக போலி தகவல்களை கையாளும் விதத்தில் டுவிட்டர் நிறுவன பிரச்சினைகள் எலான் மஸ்க் தலைமையின் கீழ் மேலும் மோசமாகும் என பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார். தி வால் ஸ்டிரீட் ஜர்னல் நடத்திய சி.இ.ஓ. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பில் கேட்ஸ் இது போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.

    கூட்டத்தில் கொடர்ந்து பேசிய பில் கேட்ஸ், ‘‘அவர் அதனை மேலும் மோசமானதாக மாற்றி விடலாம். அது அவரின் போக்கு கிடையாது - டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் அவரின் சாதனைகள் பெரியது. அந்தந்த துறைகளில் கைத்கேர்ந்த வல்லுனர்களை பணியில் அமர்த்தி இரு நிறுவனங்களில் அவர் வெற்றி பெற்று விட்டார். ஆனால் சமூக வலைதள துறையில் அப்படி வெற்றி பெற்று விட முடியாது. சமூக வலைதள சேவைகளை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு எலான் மஸ்க் எண்ணம் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்விக்குறி தான்" என்று தெரிவித்து இருக்கிறார். 

     பில் கேட்ஸ்

    ‘‘இந்த முறை அவர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது, ஆனால் எப்போதும் நாம் திறந்த மனதுடன் அனுக வேண்டும், எலான் மஸ்க்-ஐ குறைத்து மதிப்பிடவும் முடியாது," என அவர் மேலும் தெரிவித்தார்.  

    டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை பின்பற்றி வரும் பல கடுமையான திட்டங்களில் மாற்றம் செய்ய எலான் மஸ்க் உறுதி  அளித்து இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் டுவிட்டர் தளத்தில் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். கருத்து சுதந்திரத்திற்கான எலான் மஸ்க்-இன் அணுகுமுறை டுவிட்டர் தளத்தில் தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் அதிகளவில் பரவ வழி வகுக்கும் என பில் கேட்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

    இதோடு, “பருவ நிலை மாற்றத்திற்காக பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறேன். இந்த இலக்கை அடைவதில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் எலான் மஸ்க் பற்றி நல்ல விதமாக கூற என்னிடம் எதுவும் இல்லை.  அவர் டுவிட்டர் தளத்தை மோசமான ஒன்றாக மாற்றினால், அப்படியே செய்யட்டும். நான் அதை பற்றி நிச்சயம் பேசுவேன், ஆனால் இப்படித் தான் நடக்கும் என்று மட்டும் கூற மாட்டேன்" என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
    கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரோபோட் ஒன்றிற்கு உணவை சாப்பிட்டு பார்க்க பயிற்ச்சி அளித்து வருகின்றனர். ஏன் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரோபோட் செஃப் ஒன்றிற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, உணவு வகைகளை சாப்பிட்டு ருசி பார்க்க பயிற்சி அளித்து வருகின்றனர். உணவை சமைத்து முடித்து, அதில் எல்லா சுவைகளும் சரியாக உள்ளதா என்று மனிதர்கள் உணவை ருசி பார்ப்பதுண்டு. இதே வேளையை செய்யவே இந்த ரோபோட்-க்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உணவு வகைகளை சாப்பிட்டு ருசி பார்ப்பது மட்டுமின்றி, அதில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதையும் ரோபோட் விளக்குகிறது.

    வரும் ஆண்டுகளில் மனிதர்கள் இன்று செய்து வரும் சமையல் வேளையையும் ரோபோக்கள் பறித்துக் கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் இவை நாளடைவில் மனிதர்களை விட சிறப்பாக சமையல் செய்து விடுமோ என்ற அச்சம் மற்றும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இந்த ரோபோட்டே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்தனர். முதற்கட்டமாக ரோபோக்கள் முட்டை பொறியல் மற்றும் தக்காளியை வெவ்வேறு விதமாக மென்று சாப்பிட பயிற்சி அளிக்கப்பட்டது.

    ரோபேட் செஃப்

    மூன்று வெவ்வேறு நிலைகளில் மென்று சாப்பிடும் வழிமுறைகளை தொடர்ந்து ரோபோட் ஒன்பது விதமான முட்டை பொறியல் மற்றும் தக்காளிகளை சாப்பிட்டது. இவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு உணவிற்கான சுவையை ரோபோட் அறிந்து கொள்ளும். இதில் இருந்து கிடைக்கும் தரவுகளை கொண்டு ரோபோட் சமையில் கலையில் புகுத்தி, சிறப்பான சமையலை செய்திட வழிவகுக்கும்

    மனிதர்களை  போன்றே மென்று சாப்பிட்டு, சுவையை உணர வைக்கும் போது ரோபோக்களால் ஒருநாள் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு உணவு வகைகளை சிறப்பாக சமைக்க முடியும். மேலும் ஒவ்வொருத்தரின் விருப்பத்திற்கு ஏற்ப ருசியாகவும் சமைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ×