என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tariff hike"

    • வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மறு பரிசீலனை செய்து உதவ வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

    ஈரோடு, 

    தமிழகத்தில் சமீபத்தில் சிறு,குறு தொழில் நிறு வனங்களுக்கு மின் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் எம்.பி. அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் விடி யல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் வைப்பு தொகை 3 மடங்கு உயர்வு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சில ஆண்டு கால மாகவே கொரோனா தொற்று, மழை,டெங்கு போன்ற பல்வேறு சிர மங்களில் உள்ள மக்களை தமிழக அரசு மென்மேலும் சுமைகளை ஏற்றி வருகிறது.

    ஆகவே அரசு பொது மக்கள் மீது சுமத்தியுள்ள சுமைகளை மறு பரிசீலனை செய்து உதவ வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

    மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் டி.சந்திரசேகர், மாநில துணைத் தலைவர் ஆறு முகம், தெற்கு மாவட்ட தலைவர் சண்முகம், கதிர்வேலு, ரபீக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் மீண்டும் சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

    நிறுவனங்கள் சார்பில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (ARPU) அதிகப்படுத்தும் முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் தங்களது சலுகைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

     ஏர்டெல்

    விலை உயர்வு அமலுக்கு வந்தாலும், மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. புது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த விலை உயர்வை கொண்டு மூன்று முன்னணி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான கோபால் விட்டல், இந்த ஆண்டு டெலிகாம் சேவை கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். எனினும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என அவர் தெரிவித்து இருந்தார்.
    ×