என் மலர்
கணினி
இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை வழங்கும் பணிகளில் மும்முரம் காட்டுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #WhatsApp
ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை விரைவில் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். ஃபேஸ்புக் நிறுவன வருவாய் விளக்கக் கூட்டத்தில் பேசிய மார்க், சர்வதேச சந்தைக்கான பேமண்ட்ஸ் சேவையை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
வாட்ஸ்அப் பே சேவையை இயக்கும் போது தகவல்களை உள்நாட்டிலேயே சேமிக்க வேண்டும் என இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பீட்டா சோதனை சுமார் பத்து லட்சம் பயனர்களிடையே கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
"இந்திய வாட்ஸ்அப் செயலியில் சோதனை நடைபெறுகிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவையை துவங்குவோம் என நம்புகிறோம், எனினும் இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றி தற்போதைக்கு கூற முடியாது. ஆனால் சேவை தொடர்பான பணிகள் நடைபெறுகிறது" என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார்.

"இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஷாப்பிங் மற்றும் மார்கெட் பிளேஸ் அம்சங்கள் இருக்கின்றன. இவற்றை கொண்டு பல லட்சம் பேர் வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டுகின்றனர். இவ்வாறானவர்கள் புதிய வழிகளில் பணம் செலுத்த புதிய சேவை வழி வகுக்கும்.
குறுந்தகவல் சேவையை பயன்படுத்தும் போது அனைவருக்கும் தனியுரிமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அனைவரும் உரையாடல் மற்றும் பரிமாற்றங்களை மேற்கொள்ள தனிமையை விரும்புகின்றனர் என அவர் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் சேவையை தினமும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
இந்திய பொது தேர்தலையொட்டி ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Twitter
ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை கண்டறிந்து தெரிவிக்க மேலும் ஓர் புதிய வசதியை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த அம்சம் இந்தியா முழுக்க நடைபெறும் பொது தேர்தல் மற்றும் ஐரோப்பிய தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள் வாக்களிப்பது பற்றி தவறாக உள்ளது (It’s misleading about voting) என்றும் ரிபோர்ட் ட்விட் “Report Tweet” என அழைக்கப்படுகிறது.
ட்விட்டரில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், மற்றபடி விதிகளை மீறாமல் இருக்கும் நோக்கில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டரை பயனர்கள் உரையாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் கருதுகிறது.

இந்திய பொது தேர்தல் 2019 மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தல் காலத்தில் மக்களுக்கு இந்த அம்சங்கள் வழங்கப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு இதர நாடுகளிலும் இந்த அம்சம் தேர்தல் சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பது பற்றி தவறான விவரங்களை ட்விட்டர் பயனர்கள் பதிவிட முடியாது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. வாக்களிப்பது பற்றி எவ்வித தகவலையும் அவர்களால் பதிவிட முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரஙகளை தவறாக பதிவிடுவதும் ட்விட்டர் தகவல் விதிகளுக்கு எதிரானது ஆகும்.
புதிய அம்சங்கள் ட்விட்டர் டெஸ்க்டாப் பதிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது. புதிய அம்சங்கள் பற்றிய விவரம் ஏற்கனவே ட்விட்டர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுல்ளது என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், ட்விட்டர் சி.இ.ஒ.-வை அழைத்து டோஸ் விட்டார் டொனால்டு டிரம்ப். #DonaldTrump
ட்விட்டரில் தனது ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அதிருப்தியடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் சமூக வலைதளத்தின் போக்கு பற்றி டிரம்ப் சாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
"வெள்ளை மாளிகையில் ட்விட்டரில் இருந்து ஜாக் டார்சியை சந்தித்தேன். எங்களுக்குள் ட்விட்டர் தளம் மற்றும் சமூக வலைதள உலகம் பற்றி பொதுவான உரையாடல் அரங்கேறியது." என டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இத்துடன் ஜாக் டார்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்திக்காத ஜாக் டார்சி, அதிபர் டிரம்ப்பின் ட்வீட்டிற்கு பதில் அளித்தார். அதில் "தங்களது நேரத்திற்கு நன்றி. பொதுப்படையான கருத்து பரிமாற்றங்களுக்காகவே ட்விட்டர் இயங்குகிறது. அந்த வகையில் தளத்தை ஆரோக்கியமாகவும், அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடியதாக மாற்றவே விரும்புகிறோம். இதுபற்றிய உரையாடலுக்கு நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்தது பற்றி கவலை தெரிவித்த டிரம்ப்பிற்கு டார்சி பதில் அளித்துள்ளார். அதில், போலி மற்றும் தீங்கு விளைவிக்கும் அக்கவுண்ட்களை நீக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதன் காரணமாக எனது ஃபாலோவர்களும் குறைந்துள்ளனர் என தெரிவித்தார்.
முன்னதாக ட்விட்டர் தனக்கு பாரபட்சம் காட்டுகிறது, இதனால் எனது ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சிகள் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களை பயன்படுத்திய விவகாரம் வெளியானதும், ட்விட்டர் சந்தேகத்திற்குரிய அக்கவுண்ட்களை நீக்கும் பணிகளை துவங்கியது.
இந்நிலையில், கீஹோல் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டொனால்டு டிரம்ப் சுமார் 2,04,000 ஃபாலோவர்களை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. என மூன்று சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #RelianceJio
ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் அதிகபட்சம் 40 சாதனங்களை ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ.1,000 கட்டணத்தில் இணைக்க முடியும் என கூறப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.
தற்சமயம் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 எனும் ஒருமுறை பாதுகாப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு மாதம் 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட்-லேண்ட்லைன்-டி.வி. என மூன்று சேவைகளை ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 தொலைகாட்சி சேனல்கள் மற்றும் 100Mbps வேகத்தில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் தொலைகாட்சி சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
காம்போ சேவைகளை இயக்க ரிலையன்ஸ் ஜியோ ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ரவுட்டரை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரவுட்டர் கொண்டு 40 முதல் 45 சாதனங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டி.வி.க்கள், லேப்டாப்கள் மற்றும் கனெக்ட்டெட் சாதனங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் விரைவில் புதிய எமோஜி ஸ்டைல் வழங்கப்பட இருக்கிறது. #WhatsApp
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய எமோஜி ஸ்டைல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எமோஜிக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் சேர்க்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
எனினும், இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு தற்சமயம் வரை செயலிழக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் பற்றிய தகவல் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்சமயம் எமோஜி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்கிரீன்ஷாட்களை முடக்குவதற்கான வசதியை வழங்க இருப்பது பற்றிய விவரமும் வெளியானது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 வெர்ஷனில் பயனர்களுக்கு புதிய எமோஜி ஸ்டைல் டூடுள் பிக்கர் மூலம் கிடைக்கும். புதிய எமோஜி ஏற்கனவே செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் எமோஜிக்களுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எமோஜி ஸ்டைல் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின வழக்கமான சாட்களில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது.

புதிய எமோஜி ஸ்டைல் பற்றிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எமோஜி ஸ்டைல் வழக்கமாக வாட்ஸ்அப் சாட்களில் காணப்படும் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது. ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் வழங்கப்பட்டிருப்பதால் இது வழக்கமான சாட்களில் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
புகைப்படம் நன்றி: WABetaInfo
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் என தெரியவந்துள்ளது. #TRAI
இந்திய டெலிகாம் சந்தையில் பிப்ரவரி 2019 மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 29.72 கோடியாக இருந்தது. இது ஜனவரியில் இருந்ததை விட 77.93 லட்சம் அதிகம் ஆகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 8.99 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11.62 கோடியாக இருக்கிறது.

சமீபத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை 118.36 கோடியாக இருக்கிறது. பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 57.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அந்த வகையில் வோடபோன் ஐடியா பயனர் எண்ணிக்கை தற்சமயம் 40.93 கோடியாகும்.
இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனமும் 49,896 வாடிக்கையாளர்களை இழந்து, பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் 34.03 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook
அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கொண்ட சாதனங்களை உருவாக்கி வருகின்றன. சிரி, கூகுள் அசிஸ்டண்ட், கார்டனா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் நம்மிடையே பிரபலமாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளில் ஆர்வம் செலுத்தாமல் இருந்தன.
அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி குழுவினர் 2018 ஆம் ஆண்டு முதல் செயற்கை நுண்ணறி சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கி வருகின்றன.

ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை உருவாக்கி அவற்றில் ஃபேஸ்புக்கின் சொந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை போர்டல் ஸ்மார்ட் டிய்ப்ளே, ஆகுலஸ் ஹெட்செட்கள் மற்றும் எதிர்கால ஆக்மென்டெட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களில் வழங்கப்படம் என தெரிகிறது. முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் எம் அசிஸ்டண்ட் சேவையை மெசஞ்சரில் அறிமுகம் செய்தது.
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். #TikTok
இந்தியாவில் டிக்டாக் செயலியை ஏற்கனவே பல கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.
எனினும், செயலி நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பிரபல வீடியோ தளமாக அறியப்படும் டிக்டாக் செயலியில் ஆபாசம் பரவுவதாக பலதரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.
இதன் காரணமாகவே அரசு கோரிக்கையை ஏற்று செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. செயலி தடை செய்யப்பட்டு விட்டதால் அது பலனளிக்கும் என கூறிவிட முடியாது.

ஏற்கனவே டிக்டாக் செயலியை பயன்படுத்துவோர் அதனை ஷேர் இட் போன்ற செயலியை கொண்டு மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனை தரவிறக்கம் செய்து மற்றவரும் புதிய பயனராக பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் பிரச்சனையை எதிர்கொள்ள தெளிவான அணுகுமுறை அவசியமாகும், இதனை தொழில்நுட்பத்தாலோ அல்லது மற்ற சட்டங்களை கொண்டு சரி செய்து விட முடியாது என டெக் ஆர்க் எனும் சைபர் நிறுவன நிறுவனர் ஃபைசல் கவூசா தெரிவித்தார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் டிக்டாக் செயலியை நீக்க உத்தரவிட்டது. டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 3 ஆம் தேதி பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. #Apple
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இருநிறுவனங்களும் ஒருவரையொருவர் எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க இருநிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன. புதிய முடிவில் ஆப்பிள் ஒப்பந்தம் செய்த உற்பத்தியாளர்களுக்கு எதிரான வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக குவால்காம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் மற்றும் குவால்காம் இடையேயான இந்த திடீர் முடிவிற்கு ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவனத்திற்கு ஒருமுறை செலுத்தக் கூடிய தொகை ஒன்றை வழங்க இருப்பதாக தெரிகிறது. எனினும், குவால்காம் நிறுவனத்திற்கு ஆப்பிள் எவ்வளவு தொகை வழங்குகிறது என்பது பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலானது. இந்த ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும்.
இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தத்தின் படி குவால்காம் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குவால்காம் நிறுவனத்தின் வியாபாரம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என குவால்காம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வந்தது. ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு காப்புரிமை கட்டணங்களை செலுத்துவதை நிறுத்திவிட்டு, புதிய ஐபோன் மாடல்களில் குவால்காம் சிப்களை வழங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டது.
இதைத் தொடர்ந்து குவால்காம் நிறுவனம் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனாவில் ஐபோன் இறக்குமதிக்கு தடை விதிக்க வழக்கு பதிவு செய்தது. தற்சமயம் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தாகியிருக்கும் புதிய ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த ஆண்டு ஐபோன்களில் குவால்காமின் 5ஜி மோடெம்களை எதிர்பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்படுகிறது. #JioTV
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீடியா செயலிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக பி.ஐ.பி. மோட் இருக்கிறது. இந்த ஆப்ஷன் கொண்டு வீடியோ பார்த்து கொண்டே மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.
ஜியோ டி.வி. செயலி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும். மேம்படுத்தப்பட்ட ஜியோ டி.வி. ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. பிக்சர் இன் பிக்சர் மோட் கொண்டு வீடியோக்களை சிறிய திரையில் பார்த்து கொண்டே ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை இயக்கலாம்.

ஜியோ டி.வி. ஆண்ட்ராய்டு வெர்ஷனின் சேஞ்ச்லாகில் புதிய அம்சம் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. ஜியோ டி.வி. செயலியில் நேரலை தொலைகாட்சி நிகழ்சிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த செயலியில் சுமார் 600-க்கும் அதிக தொலைகாட்சி சேனல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இத்துடன் நிகழ்சிகளை பதிவு செய்யும் வசதி, வீடியோக்களை பாஸ் (pause) செய்து பார்க்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயனர்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, மலையாளம், அசாமீஸ், ஒடியா, உருது உள்ளிட்ட மொழிகளில் நிகழ்சிகளை கொண்டிருக்கிறது.
தற்சமயம் ஜியோ டி.வி. ஆப் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. விரைவில் இந்த செயலி கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வடிவில் வெளியாகும் என ஜியோ தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 500-க்கும் அதிக போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன. #SocialMedia
தேர்தல் விதிகளை மீறியதாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 503 பதிவுகள் தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 500 பதிவுகள் ஃபேஸ்புக்கில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இயக்குனர் ஜெனரல் திரேந்திர ஓஜா தெரிவித்தார்.
இரண்டு பதிவுகள் ட்விட்டரில் இருந்தும், ஒன்று வாட்ஸ்அப் செயலியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஃபேஸ்புக்கில் எட்டு குற்றச்சாட்டுகளும், ட்விட்டரில் 39 குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தேர்தல் சமயத்தில் விதிகளை மீறும் பதிவுகளை 48 மணி நேரத்திற்குள் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டிருந்தன. இதற்கென தேர்தல் ஆணையம் மற்றும் சமூக வலைதள நிறுவன அதிகாரிகளிடையே சந்திப்பு நடைபெற்றது.
தேரதலையொட்டி சமூக வலைதளங்களின் மீது இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையைகும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோ நியூஸ் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியை 12-க்கும் அதிக மொழிகளில் பயன்படுத்தலாம். #JioNews
இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நேரலை டி.வி., வீடியோக்கள், செய்திகளை பார்ப்போர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
செய்தி சேவையின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ நியூஸ் செயலியை துவங்கியிருக்கிறது. இது செயலி மற்றும் இணையம் என இருவிதங்களில் கிடைக்கிறது.
ஜியோ நியூஸ் சேவையில் உடனடி செய்திகள், நேரலை டி.வி., வீடியோக்கள், நாளேடு, பத்திரிகை உள்ளிட்டவற்றை ஒரே தளத்தில் இயக்க முடியும். இந்தியாவில் பொது தேர்தல், ஐ.பி.எல். 2019 கிரிகெட் தொடர், உலக கோப்பை 2019 மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க நடைபெற இருக்கும் நிலையில், ஜியோ தனது நியூஸ் சேவையை துவங்கியிருக்கிறது.

ஜியோ நியூஸ் சேவையில் பயனர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க கிடைக்கும் சுமார் 150-க்கும் அதிக நேரலை செய்தி சேனல்கள், 800-க்கும் அதிக பத்திரிகைகள், 250-க்கும் அதிக நாளேடுகள், பிரபல வலைபக்கங்கள் மற்றும் செய்தி வலைதளங்களை 12-க்கும் அதிக இந்திய மொழிகளில் இருந்து தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
மேலும் பயனர் விருப்பம்படி ஹோம்பேஜில் தோன்றும் தரவுகளில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வியாபாரம், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, அழகியல், வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், ஜோதிடம், வணிகம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் அவரவர் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளலாம்.
கூடுதலாக இந்த சேவையில் டிரெண்டிங் வீடியோக்களையும் பார்க்கலாம். இத்துடன் வெவ்வேறு தலைப்புகளில் இருந்து சுமார் 800-க்கும் அதிக பத்திரிகைகளை வாசிக்க முடியும்.






