search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jio GigaFiber"

    ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. என மூன்று சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் அதிகபட்சம் 40 சாதனங்களை ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ.1,000 கட்டணத்தில் இணைக்க முடியும் என கூறப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.

    தற்சமயம் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 எனும் ஒருமுறை பாதுகாப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.



    ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு மாதம் 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட்-லேண்ட்லைன்-டி.வி. என மூன்று சேவைகளை ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 தொலைகாட்சி சேனல்கள் மற்றும் 100Mbps வேகத்தில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் தொலைகாட்சி சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    காம்போ சேவைகளை இயக்க ரிலையன்ஸ் ஜியோ ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ரவுட்டரை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரவுட்டர் கொண்டு 40 முதல் 45 சாதனங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டி.வி.க்கள், லேப்டாப்கள் மற்றும் கனெக்ட்டெட் சாதனங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது.
    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்துள்ளது. ஜியோ காலாண்டு முடிவு வெளியீட்டின் போது இந்த அறிவிப்பு இடம்பெற்று இருக்கிறது.

    ஜியோ காலாண்டு வருவாய் ரூ.9,240 கோடியாக என ஜியோ அறிவித்துள்ளது. இதுமுந்தைய காலாண்டை விட 14 சதவிகிதம் வரை அதிகம் ஆகும். இதில் மொத்த லாபம் மட்டும் ரூ.681 கோடியாகும். வருவாய் அறிவிக்கையோடு ஹேத்வே மற்றும் டேட்டாகாம் நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வாங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.


    கோப்பு படம்

    செப்டம்பர் 30, 2018 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஜியோ சேவையில் சுமார் 25.23 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பதாகவும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருவாய் மட்டும் ரூ.131.7 என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 11 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி வருகின்றனர்.

    சராசரி வாய்ஸ் கால் பயன்பாட்டை பொருத்த வரை வாடிக்கையாளர் மாதம் 761 நிமிடங்கள் பயன்படுத்துகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கைாயளர்கள் மொத்தம் 771 கோடி ஜி.பி. டேட்டாவும், 53,379 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் பயன்படுத்தி இருக்கின்றனர். இது மாதம் 410 கோடி மணி நேரங்கள் ஆகும்.

    ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை பொருத்த வரை இந்தியா முழுக்க 1,100-க்கும் அதிக நகரங்களில் இருந்து பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவு ஆகஸ்டு 15ம் தேதி துவங்கியது.
    ஜியோ ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பாரதி ஏர்டெல் நிறுவன பிராட்பேன்ட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ பிராட்பேன்ட் சேவைகளில் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்பட இருக்கும் நிலையில், பிராட்பேன்ட் சந்தையில் சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி சூழல் ஏற்பட இருக்கிறது.

    ஐதராபாத் வட்டாரத்தில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய மாற்றங்களை தொடர்ந்து ஐதராபாத் நகரில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும். இதே போன்ற சலுகைகள் ஐதராபாத் தவிர மற்ற நகரங்களில் ஏர்டெல் பிராட்பேன்ட் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படவில்லை. சென்னையில் ரூ.999 விலைக்கு 300 ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.



    ஐதராபாத்தில் ரூ.349 பிராட்பேன்ட் சேவையை தேர்வு செய்வோருக்கு 8Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.1,299 சேவையில் அதிகபட்சம் 100Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இத்தகைய வேகத்தை கொண்டு மின்னஞ்சல், ஆடியோ அல்லது வீடியோ தரவுகளை டவுன்லோடு செய்யவும், இணையத்தில் பிரவுசிங் செய்யவும் முடியும்.

    எனினும் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான முன்பதிவுகள் இந்தியா முழுக்க 1,100 நகரங்களில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

    ஏர்டெல் சேவைகளில் அன்லிமிட்டெட் டேட்டா சீரான வேகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், இவற்றில் உண்மையில் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் வணிகமில்லா பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாதம் 3000 ஜிபி-க்கும் அதிக டேட்டா பயன்படுத்தப்படுவதை வணிக ரீதியிலானவை என ஏர்டெல் குறிப்பிடுகிறது.

    அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் ஏர்டெல் நிறுவனம் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்குவோருக்கு 20% தள்ளுபடி வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது. இதேபோன்று ஆறு மாதத்திற்கு கட்டணம் செலுத்துவோருக்கு 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை நாட்டில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேன்ட் சேவையான ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிராட்பேன்ட் சேவை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஃபைபர் டு ஹோம் பிராட்பேன்ட் (FTTH) சேவை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

    ஜியோவின் பிராட்பேன்ட் சேவைகள் நாடு முழுக்க 1,100 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் ஜிகாஃபைபர் ரவுட்டர், ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த செட்-டாப் பாக்ஸ் கொண்டு மற்ற ஜிகா டிவி சாதனம் மற்றும் அனைத்து நெட்வொர்க் மொபைல் இணைப்புகளிலும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

    ஜியோ ஜிகாஃபைபர்

    பீட்டா முறையில் சோதனை செய்யப்படுவதை தொடர்ந்து ஜிகாஃபைபர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. நொடிக்கு அதிகபட்சம் 1 ஜிபி வேகம் (1Gbps) வழங்கும் புதிய பிராட்பேன்ட் சேவையானது உலகின் மிகப்பெரிய பசுமைவழி பிராட்பேன்ட் சேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயனர்கள் தங்களின் வி.ஆர். ஹெட்செட்களை ஜியோ ஜிகாஃபைபர் நெட்வொர்க்கில் இணைத்து தகவல்களை 4K ரெசல்யூஷனில் 360 கோணங்களில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தைலவர் கிரன் தாமஸ் தெரிவித்தார்.



    ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்குகிறது. பயனர்கள் மைஜியோ செயலி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான முன்பதிவுகளை பெறும் அடிப்படையில் சேவைகள் வழங்கப்பட இருக்கிறது.

    ஜிகா டிவி சேவையை பொருத்த வரை சந்தாதாரர்கள் வாய்ஸ் கமான்ட் வசதி கொண்ட டிவி ரிமோட் மூலம் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும். ஜியோஃபைபர் இணைப்பு பெற்றிருக்கும் மற்ற டிவிக்களுக்கு கால் செய்ய முடியும் என இஷா அம்பானி தெரிவித்தார். இது ஜியோ நெட்வொர்க்-இன் தலைசிறந்த அனுபவமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ சேவை துவங்கிய 22 மாதங்களில் சுமார் 21.5 கோடி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோபோன் சாதனத்தை சுமார் 2.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
    ×