என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஐடெல் A50 ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கலாம்.
    • ஐடெல் A50 ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார் கொண்டிருக்கும்.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஐடெல் A50 என்ற பெயரில் உருவாகிறது. இது அந்நிறுவனத்தின் ஐடெல் A70 மாடலைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மெல்லிய டிசைன் டூயல் கேமரா சென்சார்கள், ஃபிளாஷ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ஐடெல் A70 மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, பிளாக், சில்வர் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வரிசையில், புதிய ஐடெல் மாடலும் இணைந்து கொள்ளும். புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொடுக்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த சலுகை பயனர்கள் ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் 100 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    • ஜனவரி மாதம் வெளியாகும்போது இதன் விலை 74,999 ரூபாய் ஆகும்.
    • அமேசானில் 26 சதவீதம் தள்ளுபடியுடன் 55 ரூபாய்க்கு கிடைக்கிறது.

    அமேசான் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவெல் (Great Freedom Festival) விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 6-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி (நாளை) வரை நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஸ்டார்ட்போன்களுக்கு மிகப்பெரிய அளவில் தள்ளுபடி வழங்குகிறது.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 55 ஆயிரம் ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம்.

    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் கடநத் ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியானது. சுமார் 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஆஃபரை வழங்குகிறது. அறிமுகம் ஆனபோது இதன் விலை 74,999 ரூபாயாக இருந்தது.

    எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி S24 உயர்செயல்பாட்டுடன் கூடிய Exynos 2400 பிராசசர் கொண்டதாகும். 8ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 6.2-inch FHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே கொண்டது. ரெப்ரேஷ் ரேட் 120Hz வரை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

    50எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா, 10எம்பி டெலிபோட்டோ கேமரா உடன் 12எம்பி செல்பி கேமரா கொண்டதாகும். 25W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் 4,000 mAh பேட்டரி கொண்டது. wireless சார்ஜிங் வசதியும் உண்டு. 

    • ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும்.
    • சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது.

    சுதந்திர தினம் அன்று (ஆகஸ்ட் 15) ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற பல ஆன்லைன் வலைதளங்கள் பெரிய விற்பனை நிகழ்வை நடத்தும். அதேபோல் சியோமி தனது அதிகாரப்பூர்வ Mi.com இணையதளத்தில் இதேபோன்ற விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது.

    மேலும் இந்த தளத்தில் கிடைக்கும் சலுகைகள் மற்ற ஆன்லைன் தளங்களிலும் (அமேசான் போன்றவை) வழங்கப்படும். சுதந்திர தின விற்பனை இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கும் சியோமி என்று அறிவித்துள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும். இதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி மாடல் ரூ.27,999 விற்பனையாகிறது.

    அதேசமயம் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படும். 512ஜிபி வேரியண்ட் வாங்க விரும்புவோர் ரூ.31,999 செலவழிக்க வேண்டும்.

    உங்கள் பட்ஜெட் ரூ. 15,000க்கு குறைவாக இருந்தால், சியோமி அதன் பட்ஜெட் ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை வழங்குகிறது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.14,499 என்றும் மாறி இருக்கிறது.

    கூகுள் டிவி மூலம் இயங்கும் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் சிறப்பு சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. சியோமி 55X ஜிடிவி 55 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.34,999-க்கு விற்பனையாகிறது.

    சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது. இந்த டிவிக்களில் 4K ரெசல்யூஷன், டால்பி விஷன், HDR10 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    அமேசானில் ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி 12 5ஜி, நோட்13 ப்ரோ+, சியோமி 14 மற்றும் பல அமேசான் சுதந்திர தின (Amazon Great Freedom Festival) விற்பனையின்போது தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
    • ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும்.

    ஆப்பிள் அடுத்த மாதம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை அறிமுகப்படுத்த உள்ளது. இவை டிஸ்ப்ளே, செயல்திறன் மற்றும் கேமரா அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 சீரிசின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

    புது ஐபோன் மாடல்கள் ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் சீரிஸ் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைக் கொண்டுவரும் என்று தெரிகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மாடல் அளவில் பெரிய மற்றும் பிரகாசமான ஸ்கிரீன், சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று பெரிய OLED டிஸ்ப்ளேக்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் 6.7 இன்ச் திரையில் இருந்து அதிகரித்துள்ளது. கூடுதலாக, இரண்டு மாடல்களும் மெலிதான பெசல்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் உள்ளது.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும். இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட A17 ப்ரோ சிப்பை விட கணிசமான செயல்திறன் மேம்பாடுகளை உறுதியளிக்கும்.

    கூடுதலாக, ஆப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கேமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் சமீபத்திய வைபை 7 தரநிலையை ஆதரிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இது வேகமான மற்றும் நம்பகமான இணைய இணைப்புகளை வழங்குகிறது.

    விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைய வெர்ஷன்களைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது
    • Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது

    ஐ-போன்கள், ஐ-பாட்கள் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆப்பிள் சாதனங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது, Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது, ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் bypass செய்து தகர்க்கப்பட வாய்ப்புள்ளது, சேவை மறுப்பு எனப்படும் Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும், பாதுகாப்பைக் தகர்க்கும் spoofing தாக்குதல் மூலமும் ஆப்பிள் சாதனங்கள் எளிதில் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஆப்பிள் மென்பொருள்களான, 17.6 and 16.7.9 க்கு முந்தைய iOS and iPadOS வெர்ஷன்கள்,13.6.8 க்கு முந்திய macOS Ventura வெர்ஷன்கள்,12.7.6 க்கு முந்திய macOS Monterey வெர்ஷன்கள், 10.6 க்கு முந்திய watchOS வெர்ஷன்கள்,17.6 க்கு முந்திய tvOS வெர்ஷன்கள், 1.3 க்கு முந்தைய visionOS வெர்ஷன்கள், 17.6 க்கு முந்தைய Safari வெர்ஷன்கள் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும் சாதனங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த எச்சரிக்கை குறித்து ஆப்பிள் நிறுவனத்தில் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக கடந்தவாரம்தான் ஆப்பிள் சாதனங்களில் செக்கியூரிட்டி அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது குறிபிடத்தக்கது. 

    • கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன.
    • முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு.

    ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புது விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்தை சேர்ந்த பலர் இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.

    பத்து நிமிடங்கள் ஓடும் புது விளம்பர வீடியோ கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது "Apple at Work – The Underdogs" சீரிசின் கீழ் வெளியாகி இருக்கும் ஐந்தாவது வீடியோ ஆகும்.

     


    வீடியோவில் நான்கு கதாபாத்திரங்கள் "அன்டர்டாக்ஸ்" என்று காட்டப்படுகின்றன. இவை பணியாற்றும் இடங்களில் ஆப்பிள் சாதனங்கள் மற்றும் மென்பொருள் மூலம் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சமீபத்திய வீடியோவில், கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன. இது தொடர்பாக காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் ரெயில் மற்றும் டக்டக் வண்டிகளில் பயணம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இவை தாய்லாந்தின் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த வீடியோவில், தாய்லாந்தின் தொழில்நுட்ப வளர்ச்சி, இன்றைய கால சூழல் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இதற்கு தாய்லாந்தை சேர்ந்த பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    • தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது.
    • அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது அதிக பொய் சொல்லும்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஏஐ தொழில்நுட்பம் பற்றி தொடர்ச்சியாக கருத்து பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில், அவர் ஏஐ ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் பற்றி மனம்திறந்துள்ளார்.

    சமீபத்திய பேட்டியில், "ஏஐ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. சின்ன விஷயங்களில் கூட பொய் சொல்லும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் அறிவூட்டப்பட்டு இருக்கிறது."

    "தற்போது சின்ன விஷயங்களாக இருப்பவை, நாளடைவில் பெரிதாக மாறும். மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது இன்னும் அதிகளவு பொய் சொல்லும்," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "கடந்த கால வரலாறுகளின் குழந்தை பிறப்பு குறைவதே நாகீரக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது," என்றார்.

    • ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.
    • ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது.

    ரியல்மி (Realme) இந்தியாவில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்றது.

    அந்த வகையில் புதிய ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்களை வாங்க 6 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்டர் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது நம்பர் சீரிஸ் வரலாற்றில் ரியல்மிக்கு ஒரு புதிய சாதனை ஆகும்.

     

    ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G 6.7-இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7s Gen 2 பிராசஸர், 12 GB வரை ரேம் மற்றும் 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இத்துடன் 50MP Sony LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ 8GB + 12GB மாடலின் விலை ரூ.26,999 என்றும், 8GB + 256GB விலை ரூ.28,999 என்றும் 12GB + 512GB மாடலின் விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 8GB + 256GB மாடலின் விலை ரூ.32,999 என்றும், 12GB + 256GB மாடலின் விலை ரூ.34,999 என்றும் 12GB + 512GB மாடல் விலை ரூ.36,999 என நிர்ணிக்கப்பட்டு இருக்கிறது.

    • இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.
    • பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது.

    கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஆகஸ்ட் 14-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உட்பட ஒன்றல்ல, நான்கு பிக்சல் சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

    கூகுள் பிக்சல் 9 சீரிசில் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 14-ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவை பிளிப்கார்ட்டில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய வெளியீடு ஆகஸ்ட் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறுகிறது.

    இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பளபளப்பான பிரேம்களை மேட்-டெக்சர்டு பேனல்களைக் கொண்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் கேமரா ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும். ப்ரோ மாடல்களில் மூன்று லென்ஸ்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான பிக்சலில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் உள்ள கேமரா பம்ப் செவ்வக வடிவில் வட்டமான மூலைகளுடன் உள்ளது. அதேசமயம் பிக்சல் 9 ஆனது நீள்வட்ட வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும்.

    பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சாதனங்கள் AI திறன்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் என்பது கூகுளின் 2-வது மடிக்கக்கூடிய ஸ்மார்போனாகவும், இந்தியாவிற்கு வரும் கூகுளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்போனாகவும் இருக்கும். இந்த புதிய ஸ்மார்போன் அதன் முந்தைய கூகுள் ஃபோல்டுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும்.
    • விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது.

    விவோ வி30 சீரிசை அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு விவோ அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் விவோ வி40 சீரிசை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவோ வி40 மாடல் 8ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

    இந்த மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1260x2800 பிக்சல் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் வழங்கப்படுவதால் மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் கேம்பிளேவுக்கு உதவுகிறது.

    விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும். இதில் இரு 50 எம்பி பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. ஒரு வைட் ஆங்கிள் மற்றும் ஒரு அல்ட்ராவைட் அடங்கும். இதன் முன்புறம் 50 எம்பி கேமரா உள்ளது. இது உயர்தர செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது.

    முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 4K வீடியோ தெளிவான வீடியோக்களை உறுதி செய்கின்றன. விவோ வி40 5500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். கூடுதலாக, 80W வேகமான சார்ஜிங் மூலம், தேவைப்படும்போது விரைவாக பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.

    விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது. இந்த போனின் பின்புறம் மினரில் கிளாஸ் பேக் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் சில்வர் மற்றும் நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    இந்த போன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 5, ப்ளூடூத் v5.4, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி ஆகியவை வழங்கப்படுகின்றன. விவோ வி40 மாடலில் பாதுகாப்பிற்காக திரையில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

    • செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும்.
    • 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்.

    "Nothing Phone 2a Plus" இந்தியா உள்பட உலகளவில் வருகிற 31-ந்தேதி ரிலீஸ் ஆகும் என நத்திங் (Nothing) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புதிக சிறப்பம்சங்கள் இருக்கும் என துணை-நிறுவனர் கார்ல் பெய் உறுதி அளித்துள்ளார்.

    செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும். முன்னதாக 32 மெகா பிக்சல் கொண்டதாக இருந்தது. இந்த பிளஸ் மாடல் 50W சற்று கூடுதல் சார்ஜிங் ஸ்பீடு கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீடியாடெக் டைமென்சிட்டி 7350 சிப்செட்டால் (MediaTek Dimensity 7350 chipset) இயக்கப்படும். 12GB ரேம் வரை ஒத்துழைக்கக் கூடி கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்

    8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்புடன் கருப்பு மற்றம் கிரே கலரில் கிடைக்கும்.

    ×