என் மலர்
தொழில்நுட்பம்
- பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளானை பெற 1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
- ஜியோ 336 நாள் பிளான்க்கு 1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியதால், பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு பெரும்பாலான செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டை மாற்றினர். மாற்றி வருகின்றனர். அவர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தனியார் நொட்வொர்க் நிறுவனங்களுக்கு இணையைாக 4ஜி நெட்வொர் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அளித்து வருகிறது.
தற்போது 336 நாள் ரீசார்ஜ் பிளான் ஜியோவை விட பி.எஸ்.என்.எல்.-லில் குறைந்த விலையாகும்.
பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளான்
1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 336 நாட்கள் அன்லிமிடெட் அழைப்பு, டெல்லி மற்றும் மும்பையில் எம்.டி.என்.எல். நெட்வொர்க் ரோமிங் ப்ரீ. 24 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ. இந்த பிளானிற்காக ஒரு நாளைக்கு சராசரியாக 4.5 ரூபாய் வாடிக்கையாளர்கள் செலவிட வேண்டும்.
ஜியோ 336 நாள் பிளான்
1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 336 நாட்கள் அன்லிமிடெட் கால் வசதி, 24 ஜிபி டேட்டா, மொத்தம் 3,600 எஸ்.எம்.எஸ். ப்ரீ. சந்தாதாரர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை எளிதாக பெறலாம். இந்த பிளானிற்காக வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு சராசரியாக 5.65 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.
மேலும் ஜியோவில் 448 ரூபாய், 449 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஒரு ரூபாய் வித்தியாசத்தில் இரண்டு பிளான்களை அறிவித்துள்ளது.
448 ரூபாய் திட்டத்தில் 28 நாளைக்கு தினந்தோறும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை பெறலாம். அத்துடன் அன்லிமிடெட் கால். 100 எஸஎம்எஸ் ப்ரீ். சோனிலைவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், காஞ்கா லங்கா, பிளானெட் மராத்தி, ஜியோ டி.வி. ஆகியவற்றை இலவசமாக பெறலாம்.
449 ரூபாய் பிளானில் 28 நாளைக்கு தினந்தோறும் 3 ஜிபி அதிகவே டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை மட்டும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
- இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.
- ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது
மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் முதல் பாதியில் [ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில்] இந்த வளர்ச்சியானது ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 நிதியாண்டின் தொடக்கத்தில் எட்டிய வளர்ச்சியை விட இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.
இந்த வளர்ச்சியில் ஐபோன்களின் ஏற்றுமதியே முன்னிலையில் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது. அதவாது, 6.5 பில்லியன் டாலரில் ஐபோன் ஏற்றுமதியின் பங்கு 70 சதவீதம் ஆகும். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ஆன்லனில் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. இதற்கு முந்திய மாடல்களில் இருந்து அதிக அப்கிரேடுகளுடன் இவை தயாரிக்கடுவதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

- வாட்ஸ்அப் செயலி உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.
- பயனர் தேவையை பூர்த்தி செய்ய வாட்ஸ்அப் அடிக்கடி புது அம்சங்களை வழங்குகிறது.
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். உலகளவில் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியில் பயனர்களுக்கு பயன்தரும் வகையில், அடிக்கடி புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அம்சம் விரைவில் வழங்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் வெளியிட உள்ளது.
இந்த அப்டேட், ஆங்கிலம் மொழியில் குரல் பதிவாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் இனி மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த அம்சம் ஆங்கிலம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.
- சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிஸ்னஸ் கைமாறுகிறது
இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன் லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பரிவர்த்தனையால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடைப்பட்ட காலத்தில் 12 மாதங்களுக்கு மட்டும் பே.டி.எம். செயலியிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன் 97 நிறுவனம் மற்றும் பே.டி.எம். நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
அதன்படி சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிசினஸ் கைமாறுகிறது. டிஜிட்டல் யுகத்தில் அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக ஆன்லன் டிக்டிங் தொழில் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தத்க்கது.
- ஐகூ TWS 1e இயர்பட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
- ஐகூ TWS 1e மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் TWS 1e என அழைக்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் தீப்பொறியை பிரதிபலிக்கும் டிசைன் அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் 11 மில்லிமீட்டரில் அதிக ரெசல்யூஷன் கொண்ட ஸ்பீக்கர் டிரைவர் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆடியோ கோல்டன் ஆடியோ இயர் அகௌஸ்டிக்ஸ் குழுவினர் டியூன் செய்துள்ளனர். இதோடு டீப் எக்ஸ் 3.0 ஸ்டீரியோ சவுண்ட் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

புதிய ஐகூ இயர்பட்ஸ் மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மான்ஸ்டர் சவுண்ட் அம்சம் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ் லோ லேடன்சி மோட் வசதி கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 42 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். மேலும் டூயல் டிவைஸ் கனெக்ஷன் வசதி உள்ளது. இதில் ப்ளூடூத் 5.3, கூகுள் பாஸ்ட் பேர், கூகுள் அசிஸ்டண்ட், வியரிங் டிடெக்ஷன், பைன்ட் மை இயர்போனஸ், டச் கண்ட்ரோல் வசதி உள்ளது.
ஐகூ TWS 1e மாடலின் விலை ரூ. 1,899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் ஃபிளேம் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி துவங்குகிறது.
- எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி சமீபத்தில் தான் மாற்றப்பட்டது.
- பல சமூக வலைதளங்களில் துப்பாக்கி எமோஜி மாற்றப்பட்டு இருக்கிறது.
உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்திய பதிவு ஒன்றில் எலான் மஸ்க் துப்பாக்கி எமோஜி சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன என்பதை விளக்குகிறது.
இது தொடர்பாக அவர் துப்பாக்கி எமோஜி கடந்த 2013 முதல் தற்போதைய 2024 ஆண்டு வரை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்பதை விளக்கும் படமும், அத்துடன் "துப்பாக்கி எமோஜிக்கள் மாறிக் கொண்டே வருவது தூக்கத்தை கெடுக்கும் மூளை வைரஸுடன் ஒத்துப்போகிறது, ஒரு முக்கிய கோட்பாடு போலியான தீங்கை உண்மையான தீங்குடன் சமன்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்-இன் இந்த பதிவுக்கு ஒருத்தர், "துப்பாக்கி எமோஜியை நீக்கிவிட்டு, அதிபயங்கர ஆயுதங்களுடன் வெடி குண்டு எமோஜியை அவர்கள் மாற்றிய விதம் எனக்கு பிடித்திருந்தது," என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவவர், "நவீனத்துவத்தை தவிர்த்துவிட்டு, பழைய பாரம்பரியத்திற்கு திரும்ப வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி ஆரஞ்சு நிற தண்ணீர் துப்பாக்கியாக இருந்து உண்மையான கைப்பாக்கியாக கடந்த ஜூலை மாதம் தான் மாற்றப்பட்டது. திடீரென ஏன் இப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து எக்ஸ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
- டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்கியது.
- ஐபோன் தயாரிப்பதற்கான 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம்.
டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன் இணைந்து இந்தியாவில் ஐபோன் தயாரிக்க இருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம். தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் தொழிற்சாலை தயாராகி வருகிறது.
இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து செல்போன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஐபோன் உருவாக்கப்படும் (Assembly). இதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- மீடியாடெக் 6300 பிராசசர், 50 மெகா பிச்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் போர்ட்ரைட் கேமரா, 32 மொகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதிகளும் கொண்டது.
- 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியுடன் இயங்கக் கூடியதாகும்.
Oppo ஸ்மார்ட்போன் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் எஃப் சீரிஸ் போன்கனை இந்தியாவில் வெளியிட்டது. இந்த நிலையில் நாளை F27 போன் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8GB ரேம், 256GB ரேம் ஸ்டோரேஜ் கொண்ட போன் 24,999 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் 22,999 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கலர்ஓஎஸ் (ColoreOS) 14 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 கொண்டதாகவும், 120HZ ரெப்ரெஷ் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் 6.67 இன்ச், Full-HD+ OLED டிஸ்பிளே வசதி கொண்டதாகவும் இருக்கலாம்.
மீடியாடெக் 6300 பிராசசர், 50 மெகா பிச்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் போர்ட்ரைட் கேமரா, 32 மொகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதிகளும் கொண்டது.
ஏஐ ஸ்டூடியொ, ஏஐ எரேசர் 2.0, ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 ஆகிய ஏஐ பீச்சர்ஸ் அம்சங்களையும் கொண்டுள்ளதாக இருக்கும் எனத் தெரிகிறது. 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியுடன் இயங்கக் கூடியதாகும். ஆம்பர் ஆரஞ்ச், எமரால்டு க்ரீன் ஆகிய கலர்களில் வர இருக்கிறது.
- சுதந்திர தினத்தை ஒட்டி விசேஷ டூடுல் வெளியிட்ட கூகுள்.
- பல்வேறு விசேஷ நாட்களில் டூடுல் வெளியிடுவதை கூகுள் வழக்கமாக கொண்டுள்ளது.
உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கும் நிறுவனம் கூகுள். உலக அளவில் விசேஷ நாட்களில் சிறப்பு டூடுலை தனது வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. டூடுலில் இந்திய பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட வண்ணங்கள் நிறைந்த கதவுகளில் கூகுள் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.
வழக்கம் போல விசேஷ டூடுலை க்ளிக் செய்ததும் இந்திய சுதந்திர தின சிறப்புகள், அதுபற்றிய வலைத்தள பதிவுகள் அடங்கிய சிறப்பு வலைப்பக்கம் திறக்கிறது.
- ஐடெல் ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.
- ஐடெல் A50 சீரிஸ் மாடல்களுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் A50 மற்றும் A50C என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ஐடெல் A50 மற்றும் A50C மாடல்களில் 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, யுனிசாக் டி603 ஆக்டா கோர் பிராசஸர், 8MP ஏஐ டூயல் கேமரா சென்சார்கள், 5MP செல்பி கேமரா, 3 ஜிபி, 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐடெல் A50C மாடலில் மட்டும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐடெல் A50 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இவற்றுடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களுக்கும் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.
ஐடெல் A50C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் A50 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,499 ஆகும். இரு மாடல்களின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது.
- இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம், வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும்.
- இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம் மற்றும் வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். இந்த எண்ணிக்கையை தற்போது 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியுள்ளது
இதன்மூலம் பயனாளர்கள் ஒரே பதிவில் 20 போட்டோக்கள் அல்லது வீடியோக்களை பதிவிட முடியும். இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
- ஐடெல் A50 ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கலாம்.
- ஐடெல் A50 ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார் கொண்டிருக்கும்.
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஐடெல் A50 என்ற பெயரில் உருவாகிறது. இது அந்நிறுவனத்தின் ஐடெல் A70 மாடலைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மெல்லிய டிசைன் டூயல் கேமரா சென்சார்கள், ஃபிளாஷ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ஐடெல் A70 மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, பிளாக், சில்வர் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வரிசையில், புதிய ஐடெல் மாடலும் இணைந்து கொள்ளும். புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொடுக்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த சலுகை பயனர்கள் ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் 100 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.






