என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கும் என்று தகவல்.
    • இந்த மாடலில் 108MP பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    அதன்படி சாம்சங் நிறுவனத்தின் புதிய F54 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் எக்சைனோஸ் 1380 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டூயல் சிம் ஸ்லாட்கள், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5, 6.7 இன்ச் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மெமரியை பொருத்தவரை இந்த மாடல் 128 ஜிபி, 256 ஜிபி என்று இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    விலை விவரங்கள்:

    பிரபல டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி F54 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியா உள்பட மேலும் சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

    அந்த வரிசையில், ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் 5ஜி மாடல்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் பதிவு வெளியாகி இருக்கிறது. சர்வதேச சந்தையிலும் ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், ரியல்மி ப்ரோ மாடல்களுடன் ரியல்மி 11 அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

     

    ரியல்மி 11 ப்ரோ, ரியல்மி 11 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FUll HD+ வளைந்த AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜிபி, 12 ஜிபி ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

    ரியல்மி 11 ப்ரோ - 108MP பிரைமரி கேமரா, OIS

    2MP மேக்ரோ லென்ஸ், எல்இடி ஃபிளாஷ்

    ரியல்மி 11ப்ரோ பிளஸ் - 200MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    ரியல்மி 11 ப்ரோ - 16MP செல்ஃபி கேமரா

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் - 32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    ரியல்மி 11 ப்ரோ 67 வாட் சார்ஜிங்

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 100 வாட் சார்ஜிங் 

    • முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
    • பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது.

    பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஞ்ச் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

     

    இனி, டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதன்படி பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். புதிய வசதி மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது, எப்போதாவது பயணம் செய்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மெட்ரோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின் டோக்கன்கள் வரிசையில், ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில் தான் தற்போது வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. "கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டையை ரிசார்ஜ் செய்ய நேரமில்லாதவர்களும் அவசரத்திற்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • இந்த அம்சம் மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

    மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் சாட் லாக் பெயரில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.

    தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

     

    "இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை குடும்ப உறுப்பினரிடமோ அல்லது சந்தர்ப சூழல் காரணமாக மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று மெட்டா தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.

    வாட்ஸ்அப் சாட்-ஐ லாக் செய்யும் முன் பயனர்கள் குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும். சாட்களை மீண்டும் பார்க்க இன்பாக்ஸ்-ஐ கீழ்புறமாக ஸ்வைப் செய்தால், சாட்களின் மேல் லாக்டு ஃபோல்டர் இடம்பெற்று இருக்கும். லாக்டு ஃபோல்டருக்கான பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் மூலம் அன்லாக் செய்ய வேண்டும்.

    எதிர்காலத்தில் சாட் லாக் ஆப்ஷன்களில் பயனர்கள் இதர சாதனங்களில் உள்ள சாட்களை லாக் செய்யும் வசதியை வழங்குவது, பிரத்யேக பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்களை வழங்க மெட்டா திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து உள்ளது.

    • இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

    அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.

    இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவில் வேலையிழந்துள்ளனர்.

     

    ஒவ்வொரு பிரிவில் இருந்தும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜேசியின் ஆரம்பக்கட்ட பணிநீக்க திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

    பின் மார்ச் மாதத்தில் அமேசான் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆண்டு ஜேசி அறிவித்தார். சீரற்ற பொருளாதார நிலை காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

    • போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்- ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போட் லூனார் கனெக்ட் ப்ரோ மாடலின் வரிசையில் புதிய ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலில் 1.91 இன்ச் HD டிஸ்ப்ளே, 2.5D வளைந்த டிசைன், 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. சீம்லெஸ் மற்றும் மெட்டல் டிசைன் கொண்டிருக்கும் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படு இருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த வாட்ச் ஹார்ட் ரேட் மற்றும் உடலின் சுவாச அளவுகளை டிராக் செய்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் நேரலை கிரிகெட் ஸ்கோர்கள், வானிலை அப்டேட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கும் வசதி உள்ளது.

     

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் அம்சங்கள்:

    1.91 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்

    2.5D வளைந்த டிசைன், மெட்டாலிக் ஃபிரேம்

    ப்ளூடூத் 5.3

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    ENx மூலம் இரைச்சல் இல்லா அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி

    100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    உடல்நல டிராகிங் செய்யும் சென்சார்கள்

    IP68 டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    300 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

    ஸ்மார்ட் அலெர்ட்கள்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதிகரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிலாக், கூல் கிரே, டீப் புளூ மற்றும் மரூன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    • லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
    • இத்துடன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    லாவா நிறுவனத்தின் புதிய அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ dual curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கீழ்புறம் 2.3mm பெசல் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், 3rd Gen 2900mm² வேப்பர் சேம்பர் கூலிங் தொழில்நுட்பம், X ஆக்சிஸ் லீனியர் மோட்டார் ஹேப்டிக்ஸ், மேட் ஃபினிஷ் ரிடியன் நிறம் மற்றும் ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கிலாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.

     

    இத்துடன் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளது. 50MP குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் அக்னி 2 5ஜி மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    லாவா அக்னி 2 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13

    50MP பிரைமரி கேமரா

    அல்ட்ரா வைடு, டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா சென்சார்கள்

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    4700 எம்ஏஹெச் பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 24 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் முன்னணி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி பெறலாம்.

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய F23 5ஜி ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.
    • ஒப்போ F23 5ஜி மாடலில் 64MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய F23 5ஜி ஸ்மார்ட்போன் மிட்-ரேஞ்ச் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 6.72 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த பிரிவு ஸ்மார்ட்போனில் இத்தனை அப்டேட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

     

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 2MP மைக்ரோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ குளோ டிசைன் கொண்டிருக்கும் F23 5ஜி ஸ்மார்ட்போன் கைரேகைகளை பதிய விடாத டிசைன் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ F23 5ஜி மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வங்கப்பட்டு இருக்கிறது.

     

    ஒப்போ F23 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13.1

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்

    2MP டெப்த் கேமரா

    2MP மைக்ரோ லென்ஸ்

    32MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ F23 5ஜி ஸ்மார்ட்போன் போல்டு கோல்டு மற்றும் கூல் பிலாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான், ஒப்போ வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

    • ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நார்டு 3 பெயர் இடம்பெற்று இருக்கிறது.
    • புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று தகவல்.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் பெயரை ஒன்பிளஸ் வலைதள சோர்ஸ் கோடில் பார்த்ததாக தெரிவித்து இருக்கிறார். புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

     

    சமீபத்தில் தான், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி நார்டு 3 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். அம்சங்களை பொருத்தவரை புதிய நார்டு 3 மாடலில் 6.7 இன்ச் Full HD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 50MP சோனி IMX766 பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது லென்ஸ், 2MP டெரிடரி சென்சார் என மூன்று கேமரா லென்ஸ்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் அல்லது 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

    • லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி.
    • லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார்.

    டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை.

    இதைத் தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று கூறி ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

    "லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். லிண்டா யாக்கரினோ வியாபார பணிகளில் கவனம் செலுத்துவார். நான் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறேன்."

    "இந்த தளத்தை X-ஆக, எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்றும் நோக்கில் லிண்டாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்," என்று எலான் மஸ்க் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். என்பிசியுனிவர்சல் நிறுவனத்தில் இருந்து லிண்டா வெளியேறுவதாக அந்நிறுவனம் இன்று காலை அறிவித்து இருந்தது. எனினும், இதற்கு முன்பிருந்தே லிண்டா டுவிட்டர் நிறுவனத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    • லாவா அக்னி 2 அறிமுக நிகழ்வு யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
    • லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டு லாவா அடுத்த வாரம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    சமீபத்தில் தான், இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெளிவாக இடம்பெற்று இருந்தது.

    இந்த நிலையில், லாவா நிறுவனம் தற்போதைய அறிவிப்பில், லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. லாவா அக்னி 2 அறிமுக நிகழ்வு யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லாவா அக்னி 2 மாடலில் 6.5 இன்ச் HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP குவாட் கேமரா சென்சார், எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிரிசஸர் வழங்கப்படுகிறது.

    மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், இன் டிஸ்பளே கைரேக சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 5ஜி, ப்ளூடூத் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

    • ரெட்மி பிராண்டின் புதிய பட்ஜட் ரக ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி சியோமி நிறுவனம் பரிசு போட்டியை நடத்தி வருகிறது.

    சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி A2 பெயரில் விறப்னை செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக ரெட்மி A2 மற்றும் A2 பிளஸ் மாடல்கள் மார்ச் மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரெட்மி A2 பிளஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ரெட்மி A2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டுடன் சியோமி நிறுவனம் பரிசு போட்டியை நடத்தி வருகிறது. இதில் கலந்து கொண்டு பயனர்கள் சிறப்பு பரிசை வெல்ல முடியும்.

    ரெட்மி A2 அம்சங்கள்:

    6.52 இன்ச் LCD டிஸ்ப்ளே, 720x1600 பிக்சல் ரெசல்யூஷன்

    மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்

    2 ஜிபி, 3 ஜிபி ரேம்

    32 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

    8MP பிரைமரி கேமரா

    QVGA இரண்டாவது கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    டூயல் சிம் ஸ்லாட்

    4ஜி, வைபை, ப்ளூடூத்

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    ×