என் மலர்
தொழில்நுட்பம்
- ஒப்போ/ஒன்பிளஸ்- ஹசெல்பிலாடு, விவோ-செய்ஸ் மற்றும் சியோமி-லெய்கா போன்ற கூட்டணிகள் இணைந்து செயல்படுகின்றன.
- ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் குறைவு.
ஸ்மார்ட்போன் மற்றும் கேமரா உற்பத்தியாளர்கள் இடையே கூட்டணி அமைப்பது மிகவும் சாதாரண விஷயம் தான். முன்னதாக இதுபோன்ற கூட்டணிகளை பல நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன. இந்த வரிசையில் வெய்போவில் ஓரளவுக்கு நம்பத்தகுந்த டிப்ஸ்டராக அறியப்படும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேனான் கேமரா பிராண்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒப்போ/ஒன்பிளஸ்- ஹசெல்பிலாடு, விவோ-செய்ஸ் மற்றும் சியோமி-லெய்கா போன்ற கூட்டணிகள் சந்தையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், ஆப்பிள், சாம்சங், ஹூவாய், அசுஸ், கூகுள், ரியல்மி, ஹானர், சோனி மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்கள் கேமரா உற்பத்தியாளர்களுடன் கூட்டணி அமைக்காமல் உள்ளன.
இவற்றில் ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் குறைவுதான். சோனி நிறுவனம் தனக்கென சொந்த கேமரா பிரிவை கொண்டிருக்கிறது. சீனாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருப்பதை அடுத்து, ரியல்மி, ஹானர் அல்லது ஹூவாய் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- பிக்சல் 8 ப்ரோ மாடலின் கேமரா பாரில் அனைத்து கேமரா லென்ஸ் மற்றும் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படுகிறது.
- சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.
கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் ஒட்டுமொத்த டிசைன் அதன் முந்தைய வெர்ஷனான பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும். எனினும், பிக்சல் 8 ப்ரோ மாடலின் கேமரா பாரில் அனைத்து கேமரா லென்ஸ் மற்றும் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படுகிறது.
இதில் உள்ள தெர்மோமீட்டர் சென்சார் மனிதர்கள் மட்டுமின்றி பொருட்களில் உள்ள வெப்பநிலையையும் துல்லியமாக கண்டறியும். இது பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படும். அந்த வகையில், பிக்சல் 8 மாடலில் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த அம்சம் எப்படி இயங்கும் என்பதை விளக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
Photo Courtesy: 91Mobiles
91மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் பிக்சல் 8 ப்ரோ மாடலின் தெர்மோமீட்டர் சென்சாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தங்களது உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ள பிக்சல் 8 ப்ரோ மாடலினை நெற்றியின் அருகில் வைக்க வேண்டும். ஆனால், மொபைலினை நெற்றியில் வைக்கக் கூடாது.
நெற்றியின் நடுவில் இருந்து, இடதுபுறமாக மொபைலை மெல்ல நகர்த்த வேண்டும். சுமார் ஐந்து நொடிகள் மொபைலை நெற்றியின் அருகில் வைத்தால், உடலின் வெப்பநிலை மொபைல் போன் திரையில் தெரியும்.
கூகுள் I/O 2023 நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் டேப்லட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. இதுதவிர ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.
- புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
- புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
சமூக வலைதள உலகில் மாற்றம் எப்போதும் மாறாத ஒன்று. முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், P92 அல்லது பிராஜக்ட் 92 பெயரில் புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய சமூக வலைதள சேவை உருவாக்கப்பட இருக்கிறது.
இந்த சமூக வலைதளம், "Instagram for your thoughts" எனும் டேக்லைன் கொண்டிருக்கிறது. இந்த வலைதளம் பிரத்யேக அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம் மெட்டா மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிரியேட்டர்களிடையே நடைபெற்ற ரகசிய உரையாடல்களை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த தளம் மாஸ்டோடான் போன்ற சேவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கும். இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு புதிய தளத்திலும் சைன்-இன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இன்ஸ்டாவில் உள்ள ஃபாலோயர்களை புதிய தளத்திலும் சின்க் செய்து கொள்ள முடியும்.
புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. மெட்டாவின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராமின் கிளை நிறுவனமாக புதிய வலைதளம் செயல்பட இருக்கிறது. இந்த வலைதளம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் தளத்தினை உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், டுவிட்டர் போன்று செய்திகளை பகிரும் நோக்கில், எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தின் ஆரம்பக்கட்ட சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத வாக்கில் இந்த வலைதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
புதிய வலைதளத்தில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் கொண்ட பதிவுகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் இணைய முகவரிகளை பகிர்வது, புகைப்படம் அல்லது ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மற்ற சமூகவலைதளங்களில் இருப்பதை போன்றே, இதிலும் லைக், ரிப்ளை மற்றும் ரிபோஸ்ட் போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது.
- டுவிட்டர் புளூ சந்தா முறையில், பயனர்களுக்கு ஏற்கனவே ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகிறது.
- இந்த அம்சம் டுவிட்டர் ஐஒஎஸ் வெர்ஷன் மற்றும் வலைதளத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.
டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க், தனது சமூக வலைதள சேவையில் புது வசதியை அறிமுகம் செய்து இருக்கிறார். இந்த வசதி டுவிட்டர் புளூ பயனர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா முறையில், பயனர்களுக்கு ஏற்கனவே ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் புதிய அம்சம் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பயனர்கள் 2 மணி நேரத்திற்கு ஓடும் அல்லது 8 ஜிபி வரையிலான அளவு கொண்ட வீடியோக்களை டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். தற்போது இந்த அம்சம் டுவிட்டர் ஐஒஎஸ் வெர்ஷன் மற்றும் வலைதளத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு சாதனஙகளில் டுவிட்டர் பயன்படுத்துவோர் பத்து நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும்.
டுவிட்டரில் அதிக நேரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்வது எப்படி?
டுவிட்டர் புளூ சந்தாதாரர்கள் அதிக நேரம் ஓடும் வீடியோக்களை பதிவற்றம் செய்ய கம்போஸ் (compose) பட்டனை க்ளிக் செய்து, சாதனத்தில் இருந்து பதிவேற்றம் செய்ய வேண்டிய வீடியோவை க்ளிக் செய்ய வேண்டும். இனி டுவிட் செய்யக்கோரும் பட்டனை க்ளிக் செய்தால், வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். ஒரு நாளில் எத்தனை வீடியோக்களை வேண்டுமானாலும் அப்லோடு செய்து கொள்ளலாம்.
முன்னதாக டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்கரினோ பதவியேற்க இருப்பதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். இவர் பதவியேற்ற பின், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவு தலைவராக பணியாற்ற இருக்கிறார்.
- நோக்கியா 106 மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- நோக்கியா 106 மாடலில் இன்பில்ட் MP3 பிளேயர், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி உள்ளது.
இந்திய சந்தையில் நோக்கியா 105 (2023) மற்றும் நோக்கியா 106 4ஜி மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா போன்களில் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷனின் 123PAY சப்போர்ட் உள்ளது. இதை கொண்டு யுபிஐ மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதில் வயர்லெஸ் எஃப்எம் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
நோக்கியா 105 மற்றும் நோக்கியா 106 4ஜி மாடல்களில் 1.8 இன்ச் QQVGA டிஸ்ப்ளே மற்றும் பாலிகார்போனேட் நானோ பில்டு கொண்டிருக்கிறது. இத்துடன் IP52 தரச் சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. நோக்கியா 105 மாடலில் 1000 எம்ஏஹெச் பேட்டரியும், நோக்கியா 106 மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் இயங்கும் எஃப்எம் ரேடியோ, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்பில்ட் யுபிஐ 123PAY சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் இணைய வசதி இல்லாமல், யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும்.
நோக்கியா 106 மாடலில் இன்பில்ட் MP3 பிளேயர், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, வாய்ஸ் ரெக்கார்டர், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியா 105 மாடலில் உள்ள 1000 எம்ஏஹெச் பேட்டரி, 12 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது. நோக்கியா 106 4ஜி மாடலில் உள்ள 1450 எம்ஏஹெச் பேட்டரி, 8 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது.
நோக்கியா 105 மாடல் சார்கோல், சியான் மற்றும் ரெட் டெரகோட்டா என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 106 4ஜி மாடல் சார்கோல் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 199 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
- இந்த இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
பிடிரான் பேஸ்பட்ஸ் என்கோர் மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்- பேஸ்பட்ஸ் நியோ என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் பயனர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அதிக சவுகரியமானதாகவும், அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் அதன் சார்ஜிங் கேஸ் உடன் எளிதில் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த இயர்பட்ஸ் அன்றாட பயன்பாடுகளுக்கும் சவுகிரயமானதாக இருக்கும். இதில் 13 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இத்துடன் ட்ரூ டாக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம், அழைப்புகளின் போது பின்னணியில் ஏற்படும் சத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் இதர ப்ளூடூத் மோடம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தலாம்.
பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்ஸ்-ஐ 150 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இத்துடன் போர்டபில் சார்ஜிங் கேஸ், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ்-ஐ மேலும் 35 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. டச் கண்ட்ரோல் வசதி மூலம் அழைப்புகள், மியூசிக் உள்ளிட்ட அம்சங்களை எளிதில் இயக்க முடியும்.
பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 899 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பிளாக், புளூ மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
- வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியில் சின்க் செய்யப்படுகிறது.
ஒபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வ சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலியை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் பிரபல ஏஐ சாட்பாட் சேவையை முன்பை விட எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி செயலி அதன் வெப் வெர்ஷன் சாட் ஹிஸ்ட்ரியை சின்க் செய்து வழங்குகிறது.
மேலும் ஒபன் ஏஐ நிறுவனத்தின் ஒபன்-சோர்ஸ் ஸ்பீச் ரெகஃனிஷன் மாடலான (Speech Recognition Model) விஸ்பர் மூலம் ஐஒஎஸ் ஆப் வாய்ஸ் இன்புட் வசதியை வழங்குகிறது. பயனர்கள் வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியிலும் சின்க் செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெப் வெர்ஷனில் இருந்த சாட்கள் செயலியிலும் பார்க்க முடியும்.

சாட்ஜிபிடி பிளஸ் சந்தாதாரர்கள் ஐஒஎஸ் செயலியில் பிரத்யேக பலன்களை பெற முடியும். இதில் ஜிபிடி-4 மேம்பட்ட திறன்கள், புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி, அதிவேகமாக பதில்களை பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சாட்ஜிபிடி செயலி உடனடி தீர்வுகள் மட்டுமின்றி, அறிவுரை, தொழில்முறை கருத்துக்கள் என்று பல்வித கேள்விகளுக்கு நேர்த்தியாக பதில் அளிக்கிறது.
புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் இந்த செயலி கிடைக்கிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த செயலி வெளியிடப்பட இருக்கிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷன் செயலியும் விரைவில் வெளியிடப்படும் என்று ஒபன்ஏஐ தெரிவித்துள்ளது.
- ரெட்மி A2 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ் உள்ளது.
- ரெட்மி A2 சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி A2 சீரிஸ்- ரெட்மி A2 மற்றும் ரெட்மி A2 பிளஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 6.52 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் ஹீலியோ G36 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 5MP செல்ஃபி கேமரா, லெதர் போன்ற பேக் பேனல், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி A2 பிளஸ் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி A2 மற்றும் A2 பிளஸ் அம்சங்கள்:
6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்
IMG PowerVR GE8320 GPU
2 ஜிபி, 3 ஜிபி, 4 ஜிபி ரேம்
32 ஜிபி, 64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) ஒஎஸ்
டூயல் சிம் ஸ்லாட்
8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
பின்புறம் கைரேகை சென்சார் (A2 பிளஸ்)
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி A2 மற்றும் ரெட்மி A2 பிளஸ் மாடல்கள் சீ கிரீன், அக்வா புளூ மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 299 என்றும் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 799 என்றும், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என்றும் நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.
ரெட்மி A2 பிளஸ் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை அமேசான், Mi வலைதளம், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் இதர ஆஃப்லைன் ஸ்டோர்களில் மே 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
அறிமுக சலுகை விவரங்கள்:
புதிய ரெட்மி A2 (2 ஜிபி, 32 ஜிபி மெமரி) மாடலுக்கு ரூ. 300, 4 ஜிபி, 64 ஜிபி மெமரி மாடல் வாங்குவோர் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 599 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
- காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும்.
- தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிரப்படும்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் சஞ்சர் சாதி (Sanchar Saathi) எனும் முனையம் துவங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மத்திய தகவல் தொடர்பு, ரெயில்வே மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்த முனையத்தை துவங்கி வைத்தார்.
இதில் பயனர்கள் பதிவு செய்யப்பட்ட இணைப்புகளை சரிபார்ப்பது, தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்புகளை சரிபார்ப்பது, தொலைந்து போன மொபைல் போன்களை பிலாக் செய்வது, IMEI நம்பர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்ற சேவைகளை பெற முடியும்.

சஞ்சர் சாதி முனையத்தின் மிக முக்கிய அங்கம் தான் மத்திய உபகரணங்கள் அடையாள பதிவு (CEIR). இதில் காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை வழங்கிய அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த தளத்தில் பதிவிடப்படும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
இந்த தகவல்கள் முழுமையாக ஆய்வு செய்தபின், திருடப்பட்ட மொபைல் போன்கள் இந்திய நெட்வொர்க்குகளில் இயங்க முடியாத அளவுக்கு மாற்றப்பட்டு விடும். சட்டத் துறை நிறுவனங்கள் திருடப்பட்ட சாதனத்தை டிராக் செய்யும். திருடப்பட்ட சாதனம் மீட்கப்பட்டதும், பயனர்கள் சஞ்சர் சாதி முனையத்தில் வைத்து, அதனை அன்லக் செய்துவிடும்.

திருடப்பட்ட மொபைல் போன்கள் மட்டுமின்றி, தவறான அல்லது ஃபோர்ஜ் செய்யப்பட்ட IMEI கொண்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை இந்த சிஸ்டம் தடுத்துவிடும். இத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் "Know Your Mobile" அம்சம் கொண்டு IMEI நம்பர் மூலம் மொபைல் சாதனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
திருடுபோன மொபைல் போனை டிராக் அல்லது பிலாக் செய்வது எப்படி?
- சஞ்சர் சாதி CEIR வலைதளம் செல்ல வேண்டும்.
- இனி Block Stolen/Lost Mobile ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- உங்களின் பெயர், மொபைல் நம்பர், IMEI நம்பர் மற்றும் சாதனத்தின் விவரங்களை பதிவிட வேண்டும். மொபைல் வாங்கியதற்கான இன்வாய்ஸ்-ஐ அப்லோடு செய்ய வேண்டும்.
- நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் சாதனம் தொலைந்து போன தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
- மொபைல் நம்பர் ஒடிபி மூலம் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
- இனி Submit பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகலாம்.
- ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆப்பிள் நிறுவனம் ஜூன் 5 ஆம் தேதி "சிறப்பு நிகழ்ச்சி" நடத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆப்பிள் WWDC 2023 டெவலப்பர் நிகழ்வின் அங்கமாக நடைபெற இருக்கிறது. 2023 ஆண்டிற்கான ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 5 ஆம் தேதி துவங்கி ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு நிகழ்ச்சி குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில் ஆப்பிள் ஹெட்செட்டும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட் மிகவும் சக்திவாய்ந்த XR ஹெட்செட் ஆக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் இதன் விலையும் பிரீமியம் பிரிவிலேயே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஹெட்செட் 4K மைக்ரோ OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் சோனி, டூயல் பிராசஸர்கள் TSMC, 12 கேமராக்கள் மற்றும் வெளிப்புற பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்செட்டில் இருந்தபடி ஆக்மெண்டெட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி மோட்களிடையே ஸ்விட்ச் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விலையை பொருத்தவரை ஆப்பிள் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விலை 3 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணைத்தில் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மாடல் உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான நார்டு 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக நார்டு 3 ஸ்மார்ட்போன் உருவாகி இருக்கிறது. புதிய நார்டு 3 மாடல் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 வெளியீடு, விலை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த வரிசையில், டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நார்டு 3 அம்சங்கள், இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர நார்டு 3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஏஸ் 2V போன்றே காட்சியளிக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.74 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் டிஸ்ப்ளே
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர்
12 ஜிபி, 16 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ்
50MP பிரைமரி கேமரா
8MP இரண்டாவது லென்ஸ்
2MP மூன்றாவது கேமரா
16MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 3 மாடலின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதன் வெளியீடு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ N53 மாடல் அளவில் 7.49mm தடிமனாக இருக்கிறது.
- புகைப்படங்களை எடுக்க நார்சோ N53 மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்சோ N சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. நார்சோ N53 என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட LCD ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இது மினி கேப்சியுல் கொண்ட மூன்றாவது ரியல்மி ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக ரியல்மி C55 மற்றும் ரியல்மி நார்சோ N55 மாடல்களில் மினி கேப்சியுல் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் விவரங்கள், பேட்டரி தீர்ந்து போவதை உணர்த்தும் நோட்டிஃபிகேஷன், டேட்டா பயன்பாடு, தினசரி நடக்கும் தூரம் பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் T612 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, ஃபிளாட் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார், கோல்டு கோட்டிங், கலிஃபோர்னியா சன்ஷைன் டிசைன், 90 டிகிரி பெசல் உள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் நார்சோ N53 மாடலில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ரியல்மி நார்சோ N53 அம்சங்கள்:
6.74 இன்ச் HD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
யுனிசாக் T612 பிராசஸர்
மாலி G57 GPU
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ T எடிஷன்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன் ஃபெதர் கோல்டு மற்றும் ஃபெதர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 24 ஆம் தேதி ஆஃப்லைன் தளங்களில் துவங்குகிறது. மே 22 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஆன்லைனில் மட்டும் சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது.
அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தி 4 ஜிபி ரேம் வெர்ஷனை வாங்கும் போது ரூ. 750, 6 ஜிபி ரேம் வெர்ஷனை வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள ஜியோ பலன்களும் வழங்கப்படுகிறது.






