என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
    • மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் வெளியானது.

    மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல கட்டங்களாக நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கையில் உலகம் முழுக்க பணியாற்றி வந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்பித்து இருக்கிறது. இதில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டு உள்ளது என்ற விவரங்களை மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மெட்டா நிறுவனம் பணிநீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செலவீனங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி) செலவாகும் என்று அறிவித்து இருக்கிறது.

    மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இதில் பணிநீக்க ஊதியம், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட இதர பலன்களும் அடங்கும்.

    பணிநீக்க நடவடிக்கைக்கு பெரும் தொகை செலவிடப்பட்டு இருக்கும் நிலையிலும், மெட்டா நிறுவன வருவாயில் இது நல்ல பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கைகள் காரணமாக 2023 முதல் காலாண்டில் மட்டும் மெட்டா நிறுவன வருவாய் 28.65 பில்லியன் டாலர்கள் ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று சதவீதம் அதிகம் ஆகும். வருடாந்திர அடிப்படையில் இது ஆறு சதவீதம் அதிகம் ஆகும்.

    "2022 ஆண்டில் நிறுவனத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் வியாபார கவனம் உள்ளிட்டவைகளை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் 2022 பணிநீக்க நடவடிக்கைகளை நிறைவு செய்து, டேட்டா செண்டர் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்," என்று மெட்டா தெரிவித்து உள்ளது.

    • வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கின்றன.
    • முன்னதாக குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது.

    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை WABetainfo தெரிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் யூசர்நேம் (Whatsapp Username) மற்றும் ரிடிசைன்டு செட்டிங்ஸ் இண்டர்ஃபேஸ் உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது.

    சமீபத்தில் தான் அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி மற்றும் சாட் லாக் போன்ற அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி இருந்தது.

    வாட்ஸ்அப் யூசர்நேம்:

    புதிய வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்ள செய்கிறது. இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ப்ரோஃபைல் ஆப்ஷன்களில் இயக்க முடியும்.

    இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் காண்டாக்ட்களை அறிந்து கொள்வதற்கு மாற்றாக யூசர்நேம் மூலம் அறிந்து கொள்ள செய்கிறது. பயனர்கள் தாங்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் யூசர்நேமை செட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் இல்லாமல், காண்டாக்டை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும்.

    ரிடிசைன்டு செட்டிங்ஸ்:

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.11.16 மற்றும் 2.23.11.18 வெர்ஷன்களில் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கம் உள்ளது. இதில் மூன்று ஷாட்கட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஷாட்கட்-ஐ க்ளிக் செய்ததும், பயனர்கள் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கத்தை பார்க்க முடியும். தற்போது இந்த பக்கத்தில் ப்ரோஃபைல் போட்டோ மற்றும் கியூஆர் கோடுகளை பார்க்க முடியும்.

    மேம்பட்ட இண்டர்ஃபேசில்: ப்ரோஃபைல், பிரைவசி மற்றும் காண்டாக்ட்கள் உள்ளன. வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பக்கத்தில் ஸ்டார்டு மெசேஞ்சஸ் ஷாட்கட் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் செட்டிங்ஸ் பகுதியில் சிறு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • நத்திங் போன் (2) மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
    • நத்திங் போன் (2) மாடல் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நத்திங் போன் (2) விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் (2) மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனர் கார்ல் பெய் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முந்தைய நத்திங் போன் (1) மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய நத்திங் போன் (2) மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம். நத்திங் போன் (1) மாடல் விற்பனையில் இதுவரை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. நத்திங் போன் (1) விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஸ்மார்ட்போனில் முதல்முறை அம்சங்களை வழங்குவதோடு, பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கவே நத்திங் நிறுவனம் முன்னுரிமை அளிப்பதாக கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    பென்ச்மார்க் விவரங்களின் படி நத்திங் போன் (2) மாடலில் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    நத்திங் போன் (2) மாடல் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நத்திங் போன் (1) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை நத்திங் போன் (2) மாடல் அமெரிக்க சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் நத்திங் போன் (2) மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    • புதிய கையடக்க சாதனம் “பிராஜக்ட் கியூ” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் உள்ளது.

    சோனி நிறுவனம் கையடக்க பிளே ஸ்டேஷன் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பிளே ஸ்டேஷன் 5 கேம்களின் அக்சஸபிலிட்டியை மேம்படுத்த முடியும். பிளே ஸ்டேஷன் ஷோகேஸ் நிகழ்வில் புதிய சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புதிய கையடக்க சாதனம் "பிராஜக்ட் கியூ" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்த சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60fps-இல் கேம்களை வைபை மூலம் இயக்கும் திறன் கொண்ட எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் அடாப்டிவ் ட்ரிகர்கள், ஹேப்டிக் ஃபீட்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    பிளே ஸ்டேஷன் 5 கன்சோலில் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்களை மட்டுமே புதிய கியூ சாதனத்தில் விளையாட முடியும். தனித்துவம் மிக்க கேமிங் சாதனமாக இல்லாமல், இது பிளே ஸ்டேஷன் 5 உடன் வழங்கப்படும் சாதனமாக இருக்கும் என்றே தெரிகிறது. முதற்கட்டமாக இந்த சாதனம் கேம் ஸ்டிரீமிங் மற்றும் கிளவுட் கேமிங் சேவைகளை சப்போர்ட் செய்யாது.

    எனினும், கிளவுட் கேமிங் சேவையை வழங்குவதில் சோனி பெயர் பெற்ற நிறுவனம் ஆகும். இதே வசதி பிராஜக்ட் கியூ சாதனத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது சோனி நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்கும். கையடக்க கேமிங் சாதனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து சோனி, பிராஜக்ட் கியூ திட்டத்தை துவங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.

    • பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டுள்ளனர்.
    • மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

    மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

    சுமார் 5 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரியேட்டர் மார்கடிங் பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர் தெரிவித்துள்ளார். இவரது பதிவு மட்டுமின்றி, மேலும் பலர் வெளியிட்டு இருக்கும் பதிவுகளில் இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

    கடந்த மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார். செலவீனங்களை குறைக்கும் நோக்கில் இந்த கடின முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் அங்கமாகவே தற்போதைய பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்கடிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் 11 ஆயிரம் பேர், அதாவது 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் முதல் முறையாக அறிவித்து இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
    • கையில் இதய வடிவ மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த தம்பதி ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவம் (ஹார்டின்) மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

     

    முன்னாள் செய்தியாளரான லாரென் சன்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். எனினும், இதுபற்றிய தகவல்கள் 2019 ஆண்டு ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் இடையே விவாகரத்து நடக்கும் வரை வெளியில் தெரியாத ரகசியமாக இருந்து வந்தது.

    ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து வழங்குவதற்காக மெக்கன்சி 38 பில்லியன் டாலர்களை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் கேலக்ஸி A14 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A14 4ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி மாடல் வெளியிடப்பட்டதை அடுத்து, புதிய கேலக்ஸி A14 4ஜி வெர்ஷன் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.6 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், இன்ஃபினிட்டி வி நாட்ச், 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் எக்சைனோஸ் 850 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5 ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி A14 4ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    சாம்சங் கேலக்ஸி A14 4ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் FHD+ 2408x1080 பிக்சல் இன்ஃபினிட்டி வி LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்

    மாலி G52

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    5MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP சென்சார்

    13MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    15 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A14 4ஜி மாடல் லைட் கிரீன், பிளாக் மற்றும் சில்வர் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் விற்பனை சாம்சங் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளம், இதர முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது. புதிய கேலக்ஸி A14 4ஜி மாடல் வாங்கும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • தற்போது இந்த அம்சம் டெக்ஸ்ட் மெசேஞ்ச்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

    வாட்ஸ்அப் செயலியில் மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப்-இல் மெசேஞ்ச்களை அனுப்பிய 15 நிமிடங்களில் அவற்றை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த வசதி வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் போது, 'edited' என்று வார்த்தை இடம்பெற்று இருக்கும்.

    பயனர்கள் ஏற்கனவே அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் போது, அதற்கான நோட்டிஃபிகேஷன் தனியாக அனுப்பப்படாது. தற்போது இந்த அம்சம் மெசேஞ்ச்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இது புகைப்படம், வீடியோக்கள் மற்றும் இதர மீடியா அல்லது அவற்றுக்கான தலைப்பு (கேப்ஷன்) உள்ளிட்டவைகளுக்கு பொருந்தாது.

    வாட்ஸ்அப் மெசேஞ்ச்-ஐ எடிட் செய்வது எப்படி?

    - எடிட் செய்ய வேண்டிய மெசேஞ்ச்-ஐ அழுத்திப் பிடிக்க வேண்டும்

    - இனி ஆண்ட்ராய்டில் மோர் (More) ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

    - ஐபோனில் எடிட் (Edit) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

    - எடிட் செய்ய வேண்டிய மெசேஞ்சில் மெனு (Menu) - எடிட் மெசேஞ்ச் (Edit Message) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

    - எடிட் ஆப்ஷனில் மெசேஞ்ச்-ஐ அப்டேட் (Update) செய்யுங்கள்

    - மெசேஞ்ச்-ஐ அப்டேட் செய்து முடித்ததும், அதனை அப்டேட் செய்தால் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு விடும்.

    முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இன்று முதல் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, ஐபோன், டெஸ்க்டாப் தளங்களில் வரும் நாட்களில் வழங்கப்படும். 

    • இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு உள்ளது.
    • புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS+EIS, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    ஐகூ பிராண்டின் முற்றிலும் புதிய ஐகூ Z7s 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஐகூ Z7 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து புதிய Z7s மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.38 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கும் Z7s மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்பட இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS+EIS, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஐகூ Z7s அம்சங்கள்:

    6.38 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    6 ஜிபி, 8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13

    64MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி , டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ Z7s 5ஜி ஸ்மார்ட்போன் நார்வே புளூ மற்றும் பசிபிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ/ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, மீண்டும் செயல்பாட்டு வந்தது.
    • தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

    மெட்டாவினை தாய் நிறுவனமாக கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் உலகளவில் செயல்படாமல் முடங்கி போனது. இதனால் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். மேலும் இது பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சேவை முடங்கியதாக இன்ஸ்டாகிராம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "தொழில்நுட்ப குறைபாடு காரணமாக பலர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தாத நிலையை எதிர்கொண்டனர். இந்த குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைந்து பிரச்சினைகளை சரி செய்துவிட்டோம்," என்று மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தனயார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இது குறித்து முடங்கிய வலைதளங்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் டவுன்டிடெக்டர் வலைதளத்தில், இன்ஸ்டாகிராம் செயலி சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

    • சமீப காலங்களில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுப்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.
    • ஸ்மார்ட்போன் கேமிங், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குழந்தைகளின் வெளியுலக ஆர்வத்தை குறைக்கின்றன.

    ஸ்மார்ட்போன்கள் இன்று நம் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டன என்று கூறலாம். ஸ்மார்ட்போன்களால் ஏராளமான நன்மைகள் உண்டு என்று கூறினாலும், இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என்ற கேள்வி அனைவரின் ஆழ்மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். சமீப காலங்களில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுப்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.

    90-ஸ் கிட்ஸ் போன்றில்லாமல், இந்த காலத்து குழுந்தைகள் வெளியில் விளையாடுவதை தவிர்த்து ஸ்மார்ட்போன் பயன்படுத்தவே ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன்களில் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குழந்தைகளின் வெளியுலக ஆர்வத்தை குறைத்துவிடுகின்றன. குழந்தைகள் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, பெற்றோருக்கு மிகவும் கவலை தரும் செயலாகவே இருக்கிறது.


    இந்த நிலையில், சியோமி இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மனு குமார் ஜெயின் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிவிப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. லின்க்டு-இன் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவு, குழந்தைகளின் நன்மைக்காக பெற்றோர் செய்ய வேண்டிய மறுபரிசீலனைகளை கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் சியோமி. இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தான் மனு குமார் ஜெயின். இவரே ஸ்மார்ட்போனுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது லின்க்டு-இன் பதிவு, "குழந்தைகளிடம் உங்களின் ஸ்மார்ட்போன்களை கொடுப்பதை நிறுத்துங்கள்" எனும் தலைப்பு கொண்டுள்ளது.

     

    சேபியன் லேப்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நண்பர் ஒருவர் பகிர்ந்து இருக்கிறார். அதில், "குழந்தைகளிடம் இளம் வயதிலேயே ஸ்மார்ட்போன் ( மற்றும் டேப்லட்களை) கொடுப்பதால், அவர்களது இளமை காலம் பாதிக்கப்படுவதோடு, பெரியவர்கள் ஆகும் போது அவர்களுக்கு மனநிலை சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் வெளியாகி இருக்கும் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன."

    "பத்து வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்த துவங்கிய பெண்களில் 60 முதல் 70 சதவீதம் பேர், பெரியவர்கள் ஆனதும் மனநிலை சார்ந்த பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். ஆண்களில் இதுபோன்ற பாதிப்பு 45 முதல் 50 சதவீதம் பேருக்கு ஏற்பட்டுள்ளது," என்று மனு குமார் ஜெயின் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     

    இதன் காரணமாக பெற்றோர் தங்களது குழுந்தைகள் அழும் போது, உணவு சாப்பிடும் போது அல்லது பயணத்தின் போது ஸ்மார்ட்போன்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக பெற்றோர் குழந்தைகளை வெளியுலக செயல்களில் ஈடுபட வைக்கலாம். இது போன்ற செயல்பாடுகள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கச் செய்வதோடு, கல்வி மற்றும் சமூக உரையாடல்களில் அவர்களை அதிகளவில் ஈடுபட வைக்கும்.

    மனு குமார் ஜெயின் பதிவு, குழுந்தைகளை மனநல பாதிப்பில் சிக்காமல் பாதுகாக்க வேண்டிய பெற்றோரின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. அதிக நேரம் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவரது பதிவு எடுத்துரைக்கிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றும் மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

    தான் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட் போன்ற சாதனங்களுக்கு எதிரானவன் இல்லை என்றும், இவை நம் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை தானும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருவதாக மனு குமார் ஜெயின் தெரிவித்து இருக்கிறார். எனினும், இவற்றை குழந்தைகள் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது எச்சரிக்கை அவசியம் என்று மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். 

    • முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெர்ஷன் அம்சங்கள் ஏற்கனவே அறிந்ததே.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A14 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சாம்சங்கின் பட்ஜெட் விலை கேலக்ஸி A சீரிஸ் மாடல் ஆகும். புதிய கேலக்ஸி A14 பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெர்ஷன் அம்சங்கள் ஏற்கனவே அறிந்தது தான். இந்த மாடலில் 6.6 இன்ச் 1080x2408 பிக்சல் PLS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

     

    இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என்று இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 13 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    சாம்சங் கேலக்ஸி A14 அம்சங்கள்:

    மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A14 மாடலில் 6.6 இன்ச் 1080x2408 பிக்சல் PLS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.0 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் கேமரா, 13MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ×