என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீலீலா"

    • அந்த உடையின் விலை மட்டுமே ரூ.2¼ லட்சம் என்று கூறப்படுகிறது.
    • ஸ்ரீலீலாவின் ரசிகர்கள் பதில் கருத்துகளை வீசி வருகிறார்கள்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் ஸ்ரீலீலா மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் அணிந்த உடை அனைவரையும் ஈர்த்தது. இடுப்பில் கூடை அணிந்தது போன்று காணப்பட்ட அந்த உடை இருந்தது. அந்த உடையின் விலை மட்டுமே ரூ.2¼ லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் 'கோவில்' படத்தில் இடுப்பில் கூடையை வைத்து வடிவேலு நடக்கும் புகைப்படத்தையும், ஸ்ரீலீலாவின் தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு சில குறும்புக்கார ரசிகர்கள் 'கமெண்ட்' அடித்து வருகிறார்கள். ஸ்ரீலீலாவின் ரசிகர்கள் பதில் கருத்துகளை வீசி வருகிறார்கள். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 'D55' படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
    • 'D55' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்

    தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்திற்கு `D55' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி `D55' படத்தை பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், 'D55' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டது.

    இந்நிலையில், 'D55' படத்தின் சாய் பல்லவி நடிக்கிறார் என்று படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 9 அன்று வெளியானது.

    இப்படத்தில் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்டோரும் இதில் சிறப்பாக நடித்துள்ளனர்.

    இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

    பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேலும் 2 நாட்களில் ரூ.51 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் பராசக்தி திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நடிகர் ரவி மோகன் நன்றி கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், "பல நல்ல உணர்வுகளை இப்போது அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் 'திரு' கதாபாத்திரத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது.

    உங்களையெல்லாம் மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருகிறேன்.

    2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் தியேட்டர் சென்று படம் பார்த்த வீடியோவையும் ரவி பகிர்ந்துள்ளார். 

    • பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா , ஷாலினி அஜித்குமார் ஆகியோர் சென்னை சத்யம் தியேட்டரில் பராசக்தி படத்தை பார்க்க வந்தனர். அண்மையில் மலேசியாவில் அஜித்குமாரை நடிகை ஸ்ரீலீலா சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பராசக்தி டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
    • பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 5 வெளியானது. இதுவரை இந்த டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

    ஜனவரி 10 ஆம் தேதி பராசக்தி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    கேரளாவில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் ப்ரோமோஷன் பணிகளில் பராசக்தி படக்குழு ஈடுபட்டது. அப்போது மாணவர்களிடம் பேசிய நடிகை ஸ்ரீலீலா இங்கு எத்தனை டாக்டர் உள்ளனர் என்று கேட்டுள்ளார். கலைக்கல்லூரியில் எத்தனை டாக்டர் உள்ளனர் என்று ஸ்ரீலீலா கேட்டதால் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது. சிவகார்த்திகேயனும் அதர்வாவும் இதனை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.

    • இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி.

    சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 5 வெளியானது. இதுவரை இந்த டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா குரலில் பராசக்தியின் இடம்பெற்ற சேனைக் கூட்டம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    • அஜித்தை சந்தித்த நடிகை ஸ்ரீலீலா அவருடன் செல்பி எடுத்து கொண்டார்.
    • பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஸ்ரீலீலா ஈடுபட்டுள்ளார்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

    இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றது. அப்போது அஜித்தை சந்தித்த நடிகை ஸ்ரீலீலா அவருடன் செல்பி எடுத்து கொண்டார்.

    இந்நிலையில் பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலீலா நடிகர் அஜித்குமாரின் குறித்து பேசியுள்ளார்.

    நேர்காணலில் பேசிய ஸ்ரீலீலா, "நான் அஜித்குமாரின் வெறித்தனமான ரசிகை. அவர் அற்புதமான மனிதர். எனக்கும் ரேஸிங்கில் ஆர்வம் உண்டு'' என்று தெரிவித்தார்.

    இதனிடையே, ஏகே 64 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    • தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்ததான், சிக்கலாக்க அல்ல.
    • தொழில்நுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    தவறான முறையில் ஏஐ பயன்பாடு இருப்பதாக நடிகை ஸ்ரீலீலா வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகை ஸ்ரீலீலா கூறியதாவது:-

    AI-ஆல் உருவாக்கப்படும் தவறான விஷயங்களை ஆதரிக்க வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    தொழில்நுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்ததான், சிக்கலாக்க அல்ல.

    என்னுடைய வேலையில் கவனம் செலுத்தியதால் என்னால் இணையத்தில் நடந்தவற்றை மற்றவர்களின் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது.

    ஆனால் இது அருவருப்பாக உள்ளது. அனைவரும் எங்களுக்காக துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பவனுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார்.
    • தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த முழு பாடலும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார்.

    இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்தில் பவன் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், பவனுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார்.

    இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷால் தத்லானி இதை பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த முழு பாடலும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

    • சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் பராசக்தி படம் உருவாகி உள்ளது.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து 'பராசக்தி' படத்தின் 2-வது பாடலான 'ரத்னமாலா' தற்போது வெளியாகியுள்ளது.

    • சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.
    • ‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், 'பராசக்தி' படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தனது திரைப்பயணத்தின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இது இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.  

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது.
    • அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது. பராசக்தி என பெயரிடப்பட்ட இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ளது.

    படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.

    அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ×