search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிருதி இரானி"

    • மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு பீகார்.
    • கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு.

    இந்தியாவில் பீகார் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புகள் அறிவிக்கப்பட்டது. பீகார் அரசின் இந்த அறிவிப்பு அன்றைய காலத்தில் பெரும்புரட்சியாக பார்க்கப்பட்டது. மேலும் இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பீகார் பெற்றது.

    அதேபோல் ஜன 19, 2023 கேரள அரசு, உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. நாட்டிலேயே முதல்முறையாக கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுப்பு அறிவிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றது.

     


    இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா, பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்புகளை வழங்குவதற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது,

    'இன்றைய நிலையில் பெண்கள் அதிகளவிலான பொருளாதார வாய்ப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். இந்த விஷயத்தில் நான் எனது தனிப்பட்ட கருத்தை மட்டும் பதிவு செய்கிறேன். மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு அல்ல, அது ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தின் இயல்பான பகுதியாகும்.'

    'மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது தேவையற்றது'என்று அவர் கூறினார்.

    மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைக்கு ஒரு பெண் மத்திய அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது.

    குறிப்பாக இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக நீண்ட காலம் இருந்த அமேதி தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்வானார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதிஇரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் போட்டியிடுவார் என உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் கூறியிருந்தார். அதே நேரம் ஸ்மிருதிஇரானியும் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அமேதி தொகுதி மக்களுக்கு ஸ்மிருதிஇரானியும், ராகுல்காந்தியும் போட்டி போட்டு தீபாவளி பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். ஸ்மிருதிஇரானி அமேதி தொகுதி மக்களுக்கு செல்போன்கள், சுவர் கடிகாரங்கள், சேலைகள் வழங்கியுள்ளார்.

    இதேபோல ராகுல் காந்தி தனது பங்கிற்கு அமேதி தொகுதி மக்களுக்காக பேண்ட், சட்டைகள் மற்றும் இனிப்புகள் என பரிசுகளை வழங்கியுள்ளார்.

    ஸ்மிருதிஇரானி தரப்பில் தீபாவளி பரிசு வழங்கியதை உறுதிபடுத்திய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கோவிந்த்சவுகான் கூறுகையில், ஸ்மிருதி இரானியின் பரிசுகள் சமூகத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசுகள் தேவைப்படுபவர்களை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றார்.

    இதேபோல பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஸ்மிருதிக்கு வாக்களித்து பரிசுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பாரத தாய் கொலை செய்யப்பட்டதாக கூறிய ராகுலின் பேச்சை நாடு மன்னிக்காது.
    • காஷ்மீரில் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி தற்போது நடந்து வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் ஒருங்கிணைந்து இயங்க தொடங்கி உள்ளன. பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக "இந்தியா" கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முதல் நாள் விவாதம் நடைபெற்றது. மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்-மந்திரி பைரேன்சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள்.

    இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 2-வது நாள் விவாதம் நடந்தது. 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் வழக்கம் போல கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது கடும் கூச்சல் நிலவியதால் சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு 12 மணிக்கு சபை மீண்டும் கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

    நேற்றே பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ராகுல் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை பூர்த்தி செய்யும் வகையில் ராகுல்காந்தி எதிர்க்கட்சிகள் சார்பில் எழுந்து பேசினார். தொடக்கத்திலேயே அவரது பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    என்றாலும் கடும் கூச்சல்-குழப்பங்களுக்கு மத்தியில் ராகுல் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    என்னை மீண்டும் எம்.பி.யாக அமர்த்தியதற்கு முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடைசியாக நான் பேசிய போது அதானி பற்றி குறிப்பிட்டேன். இது உங்களை காயப்படுத்தி இருக்கலாம் உங்கள் மூத்த தலைவர் வேதனைப்பட்டு இருக்கலாம். அந்த வலி உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

    அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் உண்மையைத்தான் பேசினேன். தற்போது நான் அதானி பற்றி பேசமாட்டேன். இதனால் பா.ஜனதா உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம். மணிப்பூரை பற்றி தான் நான் பேசுவேன்.

    (அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பா.ஜனதா எம்.பி.க்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.)

    நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருங்கள். நான் எனது மனதில் இருந்துதான் பேசுகிறேன். நான் பேசத் தொடங்கியவுடன் சிலர் வெறுப்புடன் கோஷமிட்டனர்.

    நான் 130 நாட்கள் ஒற்றுமை இந்தியா என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டேன். ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு மக்களுடன் யாத்திரை செய்தேன். இந்த யாத்திரையில் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். யாத்திரையின் போதும், அதன் பிறகும் நிறைய பேர் என்னிடம் ஏன் யாத்திரை செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாட்டை புரிந்து கொள்வதற்காகவே யாத்திரையை தொடங்கினேன்.

    யாத்திரையின்போது விவசாயி ஒருவரிடம் பேசியபோது, அவரது இதயத்தில் இருந்த வலி என் இதயத்துக்கு இடம் மாறியது. அன்பை செலுத்தவே நடைபயணம் மேற்கொண்டிருப்பதை பிறகு புரிந்து கொண்டேன். என் யாத்திரை இன்னும் முடியவில்லை.

    நான் நம்பும் விஷயத்துக்காக உயிரை விடவும், பிரதமர் விரும்பினால் நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன். இதயத்தில் இருந்து பேசும் பேச்சு இதயங்களை சென்றடையும் என்பதால் இதயத்தில் இருந்து பேச போகிறேன்.

    மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் ஏன் செல்லவில்லை? ஆனால் நான் சென்றிருந்தேன். அங்கு முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் மணிப்பூர் நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் பிரதமர் அங்கு செல்லவில்லை. நிவாரண முகாமில் இருந்த பெண்ணிடம் பேசியபோது, தன் கண் முன்னே ஒரே மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

    மற்றொரு முகாமில் பெண்ணிடம் உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது அவர் பேச முடியாமல் மூர்ச்சை அடைந்தார். நினைத்து பார்க்கவே முடியாத பயங்கரமான சம்பவங்கள் பெண்களுக்கு நடந்துள்ளது.

    மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ஆனால் அதை செய்யவில்லை.

    இந்தியா என்ற சித்தாந்தத்தையே அரசு கொன்றிருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணமாகி உள்ளது.

    பாரத தாய் மணிப்பூரில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை நீங்கள் மணிப்பூரில் கொன்றிருக்கிறீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. நீங்கள் தேச துரோகிகள்.

    ராவணனின் அகங்காரத்தால் இலங்கை எரிந்தது. அரசின் அகங்காரத்தால் மணிப்பூர், அரியானா போன்ற மாநிலங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் பேச்சை ராவணன் கேட்டுக்கொண்டு இருந்தார். தற்போது அமித்ஷா மற்றும் அதானி பேச்சை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு இருக்கிறார். ராவணன்கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராகுல்காந்தி பேசிக் கொண்டிருந்தபோது பா.ஜனதா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பிய படியே இருந்தனர். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பா.ஜனதா உறுப்பினர்கள் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினார்கள். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ராகுல், ராகுல் என்று கோஷம் எழுப்பினர். அவர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தினார்.

    அதை தொடர்ந்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதாவது:-

    ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். மிக மோசமான பேச்சை நாம் இங்கு கேட்டோம். அதை கண்டிக்கிறேன்.

    நீங்கள் இந்தியா கிடையாது. ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ்தான். எதிர்க்கட்சியினர் ஊழலை பிரதிபலிக்கின்றனர் என்பதால் அவர்கள் இந்தியா அல்ல. ஊழலை பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை பாருங்கள்.

    பாரத தாய் கொலை செய்யப்பட்டதாக கூறிய ராகுலின் பேச்சை நாடு மன்னிக்காது. பாரத தாயை அவர் இழிவுப்படுத்தி விட்டார். மணிப்பூர் துண்டாடப்படவில்லை. அது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

    பாரத தாயை கொன்றதாக ராகுல் காந்தி பேசும் போது எதிர்க்கட்சியினர் மேஜையை தட்டி ஆமோதித்தனர். இதை ஏற்க முடியாது. மிகவும் கண்டனத்துக்குரியது.

    காஷ்மீர் பண்டிட்டுகளை காங்கிரஸ் புறக்கணித்தது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக காங்கிரஸ் என்ன செய்தது. காஷ்மீரின் உண்மையான நிலையை அறிந்து கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை.

    காஷ்மீரில் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது பெரும் கொடுமைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன. ராஜஸ்தானில் அநீதி இழைக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தான் செல்ல இருக்கிறார். அங்கு பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். பெண்களை பாதுகாக்க காங்கிரஸ் தவறி விட்டது.

    மேற்கு வங்காளத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். இந்த சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

    தி.மு.க. எம்.பி.க்கள் வட இந்தியாவை மட்டுமே இந்தியா என்று கூறுகின்றனர். அவர்களின் இந்த கருத்துக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. பா.ஜ.க. எம்.பி.க்களும், காங்கிரஸ் எம்.பி.க்களும் ஒருவர் மீது ஒருவர் பயங்கர குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால் பாராளுமன்றத்தில் அனல் பறந்தது.

    குறிப்பாக ராகுல் பேசும் போது ஆளும் கட்சி தரப்பில் கடும் அமளி ஏற்பட்டது. அதுபோல மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசும்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.

    • பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும்.
    • மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை. இந்திய தேசத்தை மணிப்பூர் சம்பவத்தின் மூலம் கொன்றுவிட்டது. பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டுமல்ல நாட்டையே மணிப்பூரில் கொன்றுவிட்டது என பேசினார்.

    ராகுல் காந்தி பேச்சுக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    * காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த பெண்கள் மீதான படுகொலைகளுக்கு பதில் அளிப்பீர்களா?.

    * பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும்.

    * பாரத மாதா கொலை என ராகுல் பேசிய போது அதை கைதட்டி வரவேற்கிறார்கள். பாரத் என்றால் வட இந்தியா என தமிழ்நாட்டு தலைவர் ஒருவர் கூறுகிறார்.

    * மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு விவாதம் நடைபெற்று வருகிறது.

    • மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 மாநாடு இன்று தொடங்கியது.
    • இந்த மாநாட்டை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள ரேடிசன் புளூபே ரிசார்ட்டில் ஜி 20 உச்சி மாநாட்டின் ஓர் அங்கமான, டபிள்யூ-20 மாநாட்டை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாட்டு பெண் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த மாநாட்டில் பெண்களின் நலன், பாதுகாப்பு, மருத்துவம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பெண்கள் நலன் குறித்து பல்வேறு கலந்துரையாடல் அமர்வுகள் நடந்தது.

    நாளையும் இதன் தொடர்ச்சியாக பல்வேறு துறைகள் சார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

    வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்பு கருதி மாநாடு நடைபெறும் நட்சத்திர ஹோட்டல் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.

    • 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • அமெரிக்காவில் ராகுல் காந்தியின் பேச்சுகள் குறித்தும் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.

    புதுடெல்லி :

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள திட்டமிட்டு வருகின்றன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக வருகிற 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா குறைகூறியுள்ளது.

    இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்க முடியாது என்பதால், தங்களுக்குள்ளேயே ஆதரவு பெறுவதற்கு விரும்புகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த இடத்துக்கு (பீகார்) செல்கின்றனர். ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கான அவர்களது விருப்பமும், அந்த பாலத்தைப்போலவே 2024-ல் இடிந்து விழும்' என்று தெரிவித்தார்.

    பீகாரில் கங்கை நதியின் குறுக்கே சுமார் ரூ.1,750 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாலம் சமீபத்தில் 2-வது முறையாக இடிந்து விழுந்தது. இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதைப்போல அமெரிக்காவில் ராகுல் காந்தியின் பேச்சுகள் குறித்தும் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார். அன்புக்கடை நடத்தி வருவதாக ராகுல் காந்தி கூறி வரும் நிலையில், இந்து தர்மத்தை அவமதித்தல், சீக்கிய படுகொலை, இந்திய எதிரிகளுடன் கைகோர்த்தல், இந்திய ஜனநாயகத்தை சிறுமைப்படுத்த வெளிநாட்டினரை இழுத்தல் போன்றவைதான் ராகுல் காந்தியின் அன்புக்கான அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஸ்மிருதி இரானி பட்டியலிட்டார்.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    • மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    டெல்லியில் மத்திய பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காண வில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகியிடம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கேள்வி கேட்க, அவர் தப்பி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது மத்திய பெண்கள், குழந்தைகள் நலன் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக ஸ்மிருதி இரானி, தாம் அமேதி தொகுதியில்தான் இருக்கிறேன் என்ற பதில் மட்டும் தராமல், முன்னாள் எம்பியை அமெரிக்காவில் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி இரானி.

    • ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • நீங்கள் புத்திசாலி, உங்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் கையாள முடியும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியான ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மாதவிடாய் பற்றி இரானி பேசுகிறார். 'மாதவிடாயை ஒரு நோய் என்று கருதும் கட்டுக்கதைகளை உடைத்து, அந்த 5 நாட்களும் எனக்கு மாதவிடாய் வருகிறது. அது ஒரு நோய் அல்ல. எல்லா பெண்ணுக்கும் அது உண்டு. நான், எனது அம்மா, நீங்கள் மற்ற மில்லியன் கணக்கான இந்திய பெண்கள் என அனைவருக்கும்.

    இப்போது நமக்கு உதவக்கூடியது விஸ்பர் சானிட்டரி பேடுகள். நீங்கள் புத்திசாலி, உங்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் கையாள முடியும். அப்படியென்றால் இந்த 5 நாட்கள்?' என்று கேட்டிருந்தார்.

    இந்த வீடியோவை பகிர்ந்த இரானி, '25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய நிறுவனத்துக்கான எனது முதல் விளம்பரம். இருப்பினும் தலைப்பு பேன்சியாக இல்லை. ஒரு சானிட்டரி பேட் விளம்பரம் சம்பந்தப்பட்ட மாடலின் கனவையே முடிவுக்கு கொண்டு வரக்கூடும். அதனால் பலர் இதுபோன்ற விளம்பரங்களை புறக்கணித்தனர். கேமிராவுக்கு முன்னால் என் வேலையை தொடங்க ஆவலுடன் நான் எஸ் சொன்னேன்! எல்லாவற்றிற்கும் மேலாக மாதவிடாய் சுகாதாரம் குறித்து பேசுவது ஏன் தடையாக இருக்க வேண்டும்?' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாட வாழ்க்கையில் புதுப்பிப்புகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.
    • வீடியோவில் ஸ்மிருதி இரானி சேலை அணிந்து நின்று கொண்டு ஸ்டிரைக்கரை கவனமாக விளையாடுவது தெரிகிறது.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேரம் விளையாடும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஒரு நகைச்சுவையான தலைப்பையும் சேர்த்துள்ளார். அதாவது 'அமைதியாக இருங்கள் மற்றும் கேரம்' விளையாடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் ஸ்மிருதி இரானி சேலை அணிந்து நின்று கொண்டு ஸ்டிரைக்கரை கவனமாக விளையாடுவது தெரிகிறது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ஏற்கனவே ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாட வாழ்க்கையில் புதுப்பிப்புகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.

    அந்த வகையில் சமீபத்தில் அவர் காசி சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.

    • அதானி குழும விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் 2 நாட்களாக பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
    • பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்து வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை.

    இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    எந்தவொரு விவாதத்துக்கும் தயார் என்று அரசு மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் அதைத் தொடங்க ஏன் அவர்கள் (காங்கிரஸ்) அனுமதிக்கக் கூடாது?

    எதிர்க்கட்சி எப்போதுமே ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் உரையை மட்டுமல்ல, நமது தற்போதைய வளத்தையும் காட்டும் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றி இருக்கிறார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    அந்த மதிப்பை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தர மறுக்கிறது? ஆனால் ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல் அவர்கள் அவருக்கு அளிக்கும் மரியாதையை மறுப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்மீது அவர்கள் கொண்டுள்ள பகைமையின் பிரதிபலிப்புதான் இது. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என தெரிவித்தார்.

    • 1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.
    • கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மாநிலங்களவையில், "ஒருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்த கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

    அந்த பதிலில் அவர் கூறி இருப்பதாவது:-

    கருத்தொருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    போக்சோ சட்டம், 2012, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகத்தான் இயற்றப்பட்டது. இந்த சட்டம், 18 வயதுக்கு கீழே உள்ள எந்த நபரையும் குழந்தை என்றுதான் வரையறை செய்துள்ளது.

    குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கவும், குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் 2019-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

    ஆனால் குழந்தையால் குற்றம் செய்யப்பட்டால் போக்சோ சட்டத்தின் பிரிவு 34, குழந்தையால் குற்றம் செய்யப்படுவது மற்றும் சிறப்பு கோர்ட்டால் வயதை நிர்ணயம் செய்வதற்கான நடைமுறையை வழங்குகிறது.

    ஒரு நபர் குழந்தையா, இல்லையா என்கிற கேள்வி, சிறப்பு கோர்ட்டில் எழுந்தால், அந்த நபரின் வயது தொடர்பாக திருப்தி அடைந்து, சிறப்பு கோர்ட்டே தீர்மானிக்கலாம். அப்படி தீர்மானிக்கிறபோது அதற்கான காரணங்களை கோர்ட்டு பதிவு செய்ய வேண்டும்.

    1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இது முதிர்ச்சி அடைவதற்கான வயது 18 என்று கூறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பால்ய விவாகம் என்று அழைக்கப்படுகிற குழந்தை திருமணம் பற்றிய மற்றொரு கேள்விக்கும் மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து வடிவில் பதில் அளித்துள்ளார்.

    அதில் அவர், "தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என காட்டுகின்றன. ஆனால் இது குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தொடர்பான அதிகரித்த விழிப்புணர்வு காரணமாக இந்தளவுக்கு குழந்தைகள் திருமணங்கள் நடந்திருப்பது புகார் செய்யப்பட்டு இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு 523 குழந்தை திருமணங்களும், 2020-ல் 785 குழந்தை திருமணங்களும், 2021-ம் ஆண்டு 1,050 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    ×