search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேங்கைவயல் விவகாரம்"

    • அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்
    • 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    சம்பவம் நடந்தபோது வாட்ஸ் அப் இல் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.

    இதனையடுத்து 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 3 பேரில் 2 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இதையடுத்து இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில், 3 பேர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

    • அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.
    • 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    சம்பவம் நடந்தபோது வாட்ஸ் ஆப் தளங்களில் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.

    இதனையடுத்து 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 3 பேரில் 2 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இதையடுத்து இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 38 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் மாதிரி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை.

    இந்த நிலையில் வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடியானது.

    தற்போது இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 3 பேரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • டி.என்.ஏ பரிசோதனை உட்பட பல வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    • வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக நேரடி விசாரணை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 147 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் டி.என்.ஏ பரிசோதனை உட்பட பல வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    சி.பி.சி.ஐ.டி-யும் பல மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் மந்தமான விசாரணை நடத்திவருவதாக, அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இறுதியாக வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

    இதனிடையே இதுநாள் வரை இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால் பாண்டி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

    புதிய விசாரணை அதிகாரி கல்பனா இன்று தனது விசாரணையை தொடங்கினார். சம்பவம் நடைபெற்ற குடிநீர் தொட்டி மற்றும் வேங்கை வயல் கிராமத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் உண்மை குற்றவாளி இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுவரை 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், புதிதாக மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த சோதனைக்கு 10 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் வேங்கைவயல் வழக்கு சிபிஐ வசம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கும் சூழ்நிலையில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    • சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
    • மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் உண்மை குற்றவாளி இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுவரை 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், புதிதாக மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த சோதனைக்கு 10 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    உடல் நலக்குறைவால் பால்பாண்டி நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்து வந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே புதுக்கோட்டை அருகே காவேரி நகரில் இருந்து முத்துக்காடு ஊராட்சிக்கு செல்லும் சாலையில் 2 இடங்களில் இறையூர் பகுதி மக்கள் சார்பில் தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பே னர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை அரசு வஞ்சிப்பதாகவும், அதனால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த வெள்ளனூர் போலீசார் விரைந்து சென்று பேனர்களை அகற்றினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
    • வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்நிலையில் வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால்பாண்டி மாற்றப்பட்டுள்ளார். புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா தத்தை நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    • 147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
    • அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனரகத்தில் புகார் மனு அளித்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இது தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனரகத்தில் புகார் மனு அளித்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் ரவி வர்மன் இன்று வேங்கைவயல் கிராமத்தில் விசாரணை நடத்தினார்.

    குடிநீர் மேல் நிலைத்தொட்டியை பார்வையிட்ட அவர், கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடத்திலும் அவர் விசாரணை நடத்தினார்.

    இந்த விசாரணையின்போது உடனிருந்த ஆதிதிராவிட நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் தாசில்தார்களிடமும், சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

    மேலும் இவ்வழக்கை விசாரணை செய்து வரும் காவல்துறையினரிடத்தில் எந்தெந்த வகையில் விசாரணை செய்யப்பட்டது என்பது குறித்து கலந்து ஆலோசித்தார்.

    • கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.
    • அடுத்த கட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் கோரிக்கை வைத்தன.

    இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமானவர்களாக கருதப்பட்ட 31 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை மாதிரிகள், மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், அடுத்த கட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர்.

    இதற்காக நீதிமன்ற அனுமதியை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெயந்தி 10 பேருக்கு தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி அடுத்த மாதம் 12-ந்தேதி முடிவு செய்யப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் விசாரணை நடத்தினர்.
    • நீதிமன்றம் அனுமதியுடன் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவை மாற்ற வேண்டும், இந்தக் குழு எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கை வயல் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. இவர், கடந்த ஆண்டு வேங்கை வயலுக்கு சென்று கள ஆய்வு செய்ததுடன், கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அந்த விசாரணை அறிக்கையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றம் அனுமதியுடன் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது. இந்நிலையில் 31 பேரின் டி.என்.ஏ. பரிசோதனை கடந்த பல நாட்களாக நடைபெற்று வந்தது.

    இந்த பரிசோதனை முடிவு இன்று கொடுக்கப்பட்டது. அதில் 31 பேரின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் விசாரணையில் மிகப்பெரிய பின்னடைவு பெற்றுள்ளது.

    • பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளிலும் இந்த அவலச்சம்பவம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட மக்களின் மீதான தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

    சென்னை :

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து ஓராண்டாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

    ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய கொடுஞ்செயலுக்கு காரணமான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருப்பதன் மூலம் வேங்கைவயல் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளிலும் இந்த அவலச்சம்பவம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று ஓராண்டைக் கடந்த நிலையிலும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் மீதான தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

    எனவே, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி வேங்கைவயல் கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இதுவரை 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
    • ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயலில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் கடந்த டிசம்பர் 26-ந் தேதி மனித மலம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்தும் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாமல் இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது அந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்த சம்பவத்தினை முதலில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குடிநீர் தொட்டி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தொடர்ச்சியாக அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தாமதமாகி வருகிறது. ஓராண்டை கடந்தும் இயல்பு நிலை இன்னமும் திரும்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

    எங்களுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை தேவை. இந்த சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தில் சாதிப்பிளவுகள் இன்னும் ஆழமாகியுள்ளன என வேதனை தெரிவித்தார்.

    சி.பி.சி.ஐ.டி. துணை போலி சூப்பிரண்டு பால்பாண்டி கூறும்போது, இந்த விவகாரத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால் அறிவியல் பூர்வமான முறையில் சோதனையும், அதன் அடிப்படையிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒருவர் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

    இவர்களில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்றார்.

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சி.கே.கனகராஜ் கூறுகையில், கடந்த வாரம் நாங்கள் வேங்கை வயல் கிராமத்திற்கு சென்றோம். ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த வழக்கினை திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக சந்தேகிக்கின்றோம்.

    இப்போதும் தலித் மக்கள் அதிக பயத்தில் இருக்கிறார்கள். நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தோம், ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தலித் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

    சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. முடிவு இல்லாத தொடர்கதை போல நீளும் வேங்கை வயல் வழக்கு விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்ப செய்யவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×